வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

12.மில்டனின் மற்ற படைப்புகள்

Defensio pro Populo Anglicano -மில்டன் லத்தின் மொழியின் எழுதிய கவிதைகள். 1651ல் வெளியிடப்பட்டது. முதல் சார்லஸ் மன்னரின் மரண தண்டனை விதித்ததையும், அலிவர் க்ரம்வெல் பொது நல அரசை ஆதரித்தும் மில்டன் லத்தின் மொழியில் எழுதியிருந்தார்.

History of Britain- ஜாம் மில்டன் அவர்கள் இந்த படைப்பை 1670ல் எழுதினார். சிவில் யுத்ததின் நியாயங்களையும், சிவில் யுத்தம் நடத்திய வரலாறு குறித்தும் எழுயிருக்கிறார். இந்த நூலை எழுத மில்டன் 1649ல் தொடங்கியிருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் முதல் நான்கு அத்தியாயங்களை 1649லே எழுதினார். பிறகு 1650ல் மேலும் இரண்டு அத்தியாயங்கள் எழுதினார். இருபது வருடங்கள் முன் இந்த நூலை எழுத தொடங்கியிருந்தாலும், இந்த நூலில் முதல் பதிப்பு 1670ல் தான் வெளி வந்தது.

Of True Religion - 1673ல் இந்த நூலை வெளியிட்டார். மதங்களை பற்றிய தன் கருத்துகளையும், மதம் பெயர் திருசபையில் குருமார்க்கள் செய்தும் கொடுமைகளை பற்றியும் இந்த நூலில் கூறியுள்ளார்.

Samson Agonistes(1671) - பிரடைஸ் ரீகைன் வெளிவந்த அதே ஆண்டில் வெளிவந்தது. மில்டன் பொதுவாக நாடக கதைகளை பற்றி எழுதியதில்லை. ஆனால், இந்த முழுக்க முழுக்க நாடக கதையை தன் பாடல்கள் மூலம் எழுதியிருக்கிறார். இந்த கதையில் வரும் சாம்சன் ஒரு குருடன். கண் பார்வை இழந்து வேதனை இருந்த மில்டன் தன் சோகத்தை சாம்சன் கதாப்பாத்திரத்தில் கூறியிருக்கிறார். அதனாலையே சாம்சன் நாடக்கதை படிக்கும் போது நம்முக்கூட கண்ணீர் வரும் அளவிற்கு சோகத்தை கொட்டி இருப்பார் மில்டன். பிரடைஸ் ரீகைன் எழுதும் போதே இந்த நூலை எழுதினாலும், பிரடைஸ் ரீகைன் வெளி வந்த பிறகே சாம்சன் நூலை வெளியிட்டார்.

L'Allegro - 1631ல் எழுதியது. மில்டன் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான உற்சாகம் கொண்ட பாடல்களை எழுதியிருந்தார்.'L'Allegro ' லத்தின் மொழியில் மகிழ்ச்சியான மனிதன் என்பது பொருள்.

Il Penseroso - இது 1631ல் மில்டன் எழுதியது தான். 'L'Allegro ' நூலுக்கு எதிர்மதரையாக எழுதியுள்ளார்.

Tetrachordon - மில்டன் 1645ல் எழுதியது. Areopagitica பிறகு மில்டன் எழுதிய படைப்பு.

Colasterion - ' Tetrachordon ' நூலுடன் இந்த படைப்பை வெளியிட்டார். இரண்டு படைப்புகளும் விவாகரத்து பற்றி மில்டன் எழுதியது.

மில்டனின் கவிதைகள் - மில்டன் பல சூநிலையில் எழுதிய கவிதைகளை தொகுப்பாக இந்த நூலை அன்ரூ மார்வல் 1673ல் வெளியிட்டார். இந்த தோக்குப்பில் மில்டன் எழுதிய லத்தின் மற்றும் ஆங்கில மொழியில் எழுதிய கவிதைகள் இரண்டு தொகுக்க பட்டுள்ளது.கோமஸ், லிசிடஸ் நூலில் இருந்த சில கவிதைகள் இதைல் இடம் பெற்றன.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails