வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 28, 2008

மிருக கதை - 1

சமிபத்தில் ஒரு மின்னஞ்சலில் வந்த ஆங்கில மிருக கதையை தமிழாக்கம் செய்துள்ளேன். இந்த கதையில் வந்த செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அதிகாலை வேளை சூரியன் சுடும் நேரத்தில் ஒரு சிங்கம் தன் குகையில் உறங்கிக் கொண்டு இருக்கும் போது அந்த வழியாக நரி ஒன்று வந்துக்கொண்டு இருந்தது.

நரி : இப்போது நேரம் என்னவென்று தெரியுமா ? என் கை கடிகாரம் ஒட வில்லை.

சிங்கம் : என்னிடம் கொடு. உனக்காக நான் சரி செய்து தருகிறேன்

நரி : மிகவும் கஷ்டமான காரியம்... நகங்கள் கொண்ட கையில் செய்தால்... அந்த கடிகாரம் அழிந்துவிடும்

சிங்கம் : ஒன்றும் ஆகாது.... நான் சரி செய்வேன்

நரி : இது முட்டாள் தனமாக உள்ளது. நீண்ட நகங்கள் கொண்ட கையால் சரி செய்ய முடியாது.

"என்னால் சரி செய்ய முடியும்" என்று சொல்லி அந்த கடிகாரத்தை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது. சற்று நேரத்தில் வேளியே வந்தது. நரிக்கு ஒரே அதிர்ச்சி. நரி மகிழ்ச்சியுடன் தன் கடிகாரத்தை வாங்கி சென்றது. சோம்பேரி சிங்கம் மீண்டும் தன் உறக்கத்தை தொடர்ந்தது. அப்போது ஒரு ஓனாய் சிங்கத்தின் குகைக்கு வந்தது.

ஓனாய் : இன்று உன் குகைக்குள் தொலைக்காட்சி பார்க்க வரலாமா ? என் தொலைக்காட்சிப் பேட்டி உடைந்து விட்டது.

சிங்கம் : என்னிடம் கொடு. நான் சரி செய்து தருகிறேன்

ஓனாய் : இதை நான் நம்புவேன் என்று நினைக்கிறாயா? எப்படி உன் நீண்ட நகங்கள் கொண்ட கையினால் சரி செய்வாய் ?

சிங்கம் : கவலை வேண்டாம். என்னால் முடியும்.

ஓனாய் தன் தொலைக்காட்சி பெட்டியை சிங்கத்திடம் கொடுத்தது. சிங்கம் அந்த தொலைக்காட்சி பெட்டியை தன் குகைக்குள் எடுத்து சென்றது. சற்று நேரத்தில் சரி செய்து தொலைக்காட்சி பெட்டியை ஓனாய்யிடம் கொடுத்தது. ஓனாய் மிகழ்ச்சியுடன் வாங்கி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தது.

வெளியே தெரியாத காட்சி : சிங்கத்தின் குகைக்குள் ஆறு முயல்கள் இருந்தன. ஆறு முயல்களும் மென்னையான கைகளையும், நல்ல அறிவு திறனும் இருப்பதால் அந்த பணியை செம்மையாக முடித்தன. சிங்கம் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை மட்டுமே பார்த்தது.

செய்தி : நிர்வாகியர் தன் கீழ் வேலை செய்பவர்களால் பெயர் எடுக்கிறான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails