வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

6. சிவில் யுத்தம்

மில்டன் வெறும் எழுத்தாளர் மட்டுமில்லை. தன் எழுத்துக்கள் மூலம் விழுந்து கிடக்கும் மக்களை ஊக்கப்படுத்தியவர். தந்து 'பிரடைஸ் லாச்ட்' நூலில் சாத்தான் தன் சகாக்களை ஊக்கப்படுத்துவது போல் மக்களை ஊக்கப்படுத்துகிறார். சாத்தான் கடவுளுக்கு எதிரா செய்ய போகும் புரட்சியை மக்களும் மன்னரை எதிர்த்து செய்ய வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறார்.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த மன்னராட்சியை கருத்தி மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அதை எதிர்த்து புரட்சி கோடியை பிடித்தவர் மில்டன். தன் கவிதையிலும், பாடலிலும் தன் நாடு மன்னரின் கீழ் வாடுவதை படம் பிடித்து காட்டுகிறார். மன்னராட்சியை எதிர்த்து பல கட்டிரைகளையும் எழுதியிருக்கிறார்.

மில்டனை போல் மன்னரின் கொடுமைகளை கண்டு கோதித்தவர் அலிவர் கிரம்வெல். மில்டனிடம் கவித்திறன் இருந்தது போல் அலிவர் கிரம்வெலிடம் வீரம் இருந்தது. அலிவர் கிரம்வெல் ஒரு எளிமயானா குடும்பத்தில் பிறந்தவர். ஒன்பது குழந்தைகளுக்கு தந்தை. அன்பு மனைவி எலிசபத்துடன் சந்தோஷமான வாழ்க்கை. ஹன்டிங்டன் சட்டசபையில் உறுப்பினராக 1628 தெர்வு செய்ய பட்டார். முதல் சார்லஸ் மன்னரால் சட்டசபையின் உறுப்பினர்கள் கலைக்க பட்டு சர்வாதிகார மன்னராட்சி செய்தார்.

இங்கிலாந்து மன்னராட்சி முதல் சார்லஸ் மன்னரால் பலர் படுகொலை செய்யப் பட்டதில் மில்டன் கோபமுற்றால். அந்த சமயத்தில் மில்டனால் கோபம் மட்டுமே படமுடிந்தது...? மன்னரை எதிர்த்து போர் சேய்யும் அளவிற்கு படைபலமில்லை. ஆனால், அலிவர் கிரம்வெல் மன்னருக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு இருந்தார். அவரை போல் பலரும் மன்னர் மேல் கடுங்கோபத்தில் இருந்தார். அவரகளை எல்லோரையும் ஒன்று சேர்த்தார் ஒலிவர் கிரம்வெல். இந்த சமயத்தில் மில்டனுக்கும், அலிவர் கிரம்வெலுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. மில்டனின் கவித்திற்மையை அலிவர் கிரம்வெல் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு பக்கம் அலிவர் புரட்சி படைகள் திரட்டிக் கொண்டிருக்க, இனோரு பக்கம் மில்டன் மக்கள் விழிப்புணர்வு கவிதைகளும், பாடல்களும் எழுதி தூண்டு சிட்டில் பிரசுரம் செய்து மக்களுக்கு கொடுத்துக் கொண்டு இருந்தார். மக்களும் மன்னருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். எரிச்சல் அடைந்த முதல் சார்லஸ் தன்னை பற்றி தவறான எழுதுவதை தடை செய்ய புதிய சட்டம் ஒன்று கொண்டு வந்தார்.

அந்த சட்டம் என்னவென்றால் எழுத்தாளர் தாங்கள் எழுதும் புத்தகம் பிரசுரம் ஆகும் முன்பு முதலில் அரசாங்கமிடம் கொடுத்து அனுமதி லைசன்ஸ் வாங்கிய பிறகே பிரசுரமாக்க வேண்டும். அரசாங்கத்துக்கு எதிராக இருக்கும் வார்த்தைகளை நீக்கவோ அல்லது புத்தகத்துக்கு தடை விதிக்கவோ அரசுக்கு முழு உரிமை உண்டு. அரசாங்கம் அனுமதியில்லாமல் யாரும் புத்தகம் பிரசுரம் செய்ய கூடாது என்ற தடையும் விதித்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் திரைப்படங்களுக்கு 'சென்சார் போட்' மாதிரி அன்று புத்தகங்களுக்கு சென்சார் போட் அமைத்தார் முதல் சார்லஸ் மன்னர்.

இந்த சட்டம் அமலுக்கு வந்ததும் கோதித்துபோனார் மில்டன். எழுத்தாளர் சுகந்திரத்தை சீகுழைக்கும் சட்டத்தை எதிர்த்தார். இங்கிலாந்து பாராளமன்றத்தில் தன் எதிர்ப்பை தெரிவித்தார். புத்தக சென்சார் அனுமதி சட்டத்தால் நல்ல புத்தங்கள் பாதிக்கப்படும் என்பதையும், எழுத்தாளரின் ஊக்கம் பாதிக்கப்படும் என்பதையும், புத்தகத்தின் உண்மையான நிறம் கெடும் என்றெல்லாம் கூறிபார்த்தார். நல்ல புத்தகங்கள் வெளிவராமல் தடுப்பது கொலைக்கு சமம் என்று வாதாடினார். மில்டனின் வார்த்தைகளுக்கு இங்கிலாந்து பாராளமன்றம் சேவி சாய்க்கவில்லை. இங்கிலாந்து எழுதிய சட்டம் எழுதியது தான் என்ற முடிவில் இருந்தது. ஆனால், மில்டன் சோர்ந்து விடவில்லை. 1644ல் எரோபேஜிடிகா ('Areopagitica’) என்ற தலைப்பில் இங்கிலாந்து பாராளமன்றத்தின் புத்தக லைசன்ஸ் சட்டத்தை எதிர்த்து பேசியதை ஒரு தூண்டுசிட்டில் பிரசுரம் செய்து வெளியிட்டார். சிவில் யுத்ததின் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது மில்டன் இதை செய்ததால் சார்லஸ் மன்னர் எரிச்சல் அடைந்தார்.

அலிவர் கிரம்வெல் தன் படைகளை திரட்டிக் கொண்டு சார்லஸ் மன்னரை தாக்க தயார் நிலையில் இருந்தார்கள். 22,000 பேர்கள் கொண்ட படை பதினொன்று பிரிவுகளாக இங்கிலாந்தை நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது. அந்த பதினொன்று பிரிவில் ஒரு பிரிவை ஒலிவர் கிரம்வெல் தலைமை தாங்கினார்.இங்கிலாந்தை சுற்றி வலைத்து தாக்கினார். இறுதில் ஒலிவர் கிரம்வெல் வென்றார். முன்று வருடங்களாக நடந்த முதல் சிவில் யுத்தம் 1645ல் முடிவுக்கு வந்தது.

பல புரட்சியகளும், போராட்டங்களும் நடந்த பிறகு இங்கிலாந்தில் பொது நல அரசு நிலவியது. சிவில் யுத்தம் மில்டனின் கவித்திறனை இருபது ஆண்டு வெளியே வரவிடாமல் செய்தது. அலிவர் கிரோம்வெல் ஆட்சி பொருப்பு ஏற்றுக் கொண்ட பிறகு தான் மில்டனின் திறமை உலகிற்கு தெரிய தொடங்கியது. முதல் சார்லஸ் மன்னர் இறந்த பிறகு "The Tenure of Kings and Magistrates (1649)" என்ற நூலை எழுதினார். மக்களின் மன பார்வைகளையும், மன்னராட்சிக்கு துணையாக தண்டிக்க பட்டதையும் மில்டன் வர வேற்று எழுதியிருந்தார். அலிவர் கிரோம்வெல் இங்கிலாந்தில் மன்னராட்சியை ஒழித்து பொருப்பேறுக் கொண்டார். தன்னுடன் மில்டனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அலிவர் கிரோம்வெல். மில்டனை அழைத்து விரும்பும் பதவியை எடுத்துக் கொள் என்றார்.

மில்டனும் மறுக்காமல் மக்களை ஊக்கவித்ததின் பலனாக இங்கிலாந்தின் லத்தீன் செயலாளராக பதவி ஏற்றார். மக்களும் மில்டனை ஏற்றுக் கொண்டனர். தனது பதவி காலத்தில் மில்டனும் மக்களுக்காக பல தொண்டுகள் செய்தார்.

அலிவர் கிரம்வெல் ஆட்சி அமைத்ததும் இங்கிலாந்தின் பாதுகாப்பு சுவராக இருந்தார். ஆட்சி பொருப்பெற்ற பின்பு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாட்டில் படை எடுத்து வெற்றியும் கண்டார். எப்பேர் பட்ட வீரனாக இருந்தாலும் மரணத்திடம் தோல்வியை தழுவி தான் ஆ க வேண்டும். 1658ல் அலிவர் கிரம்வெல் இறந்தார்.அலிவர் கிரம்வெல் இருந்தவரை பொது நல ஆட்சி சிறப்பாக இருந்தது. ஆனால், அவரது மரணத்துக்கு பின் இரண்டாம் சார்லஸ் மன்னர் 1660ல் மீண்டும் இங்கிலாந்தில் மன்னராட்சி கொண்டு வந்தார்.

மில்டன் பதவிக்காகவும், பணத்திற்காகவும் யாருக்கும் புகழ் மாலை சுடியதில்லை. தனக்கு பிடித்தால் மட்டும் தான் அவர்களை பற்றி பாட்டு எழுதுவார். அலிவர் கிரம்வெல் மரணத்திற்கு பிறகு அவர் தொடங்கி வைத்த பொது நல ஆரசை பற்றி " The Ready and Easy Way to Establish a Free Commonwealth " என்ற நூலை எழுதினார்.
இந்த முறை இரண்டாம் சார்லஸ் மன்னர் விழித்துக் கொண்டார்.மன்னராட்சி மலர்ந்த அடுத்த நோடியில் மில்டன் கைது செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அவர் எழுதிய இரண்டு நூலகளான ஏகொன்க்லஸ்டேஸ் (Eikonklastes) மற்றும் டிபேன்சியோ (Defensio) எறித்தனர்.எனினும் சிறையில் இருந்த மில்டனை சிறிதுகாலம் கழித்து விடுதலை செய்தனர்.

தண்டனையில்லாமல் விடுதலை அடைந்த மில்டன் மன்னராட்சி வெறியர்கள் தாக்குவார்கள் என்று பலரும் எதிர்பார்த்தனர். விளகி சென்றவனை அடிப்பது ஏன் என்று அப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை. அது மட்டுமைல்லாமல் 'ஜான் மில்டன் எப்பொது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்' என்ற வத்ந்தியும் பரவியிருந்தது.

அரும்பாடு பட்டுப் போராடித் தியாகங்கள் பல செய்து தூக்கி எறியப்பட்ட மன்னராட்சி மீண்டும் இங்கிலாந்தில் வந்ததை நினைத்து மனம் நொந்திருந்தார். மீண்டும் புரட்சி செய்ய மில்டன் உடல் ஒத்துழைக்கவில்லை. அலிவர் கிரம்வெல் போல் வீரனுமில்லை. கண் பார்வை மங்கி வந்த காரண்த்தால் அரசியலில் இருந்து தன் கவனத்தை இலக்கியத்தில் மாற்றினார். தன் மூன்றாவது மனைவியை அழைத்துக் கொண்டு லண்டனில் உள்ள பன் ஹில் இடத்துக்கு சென்றார்.

உண்மையை சொல்ல போனால் மில்டன் அரசியலில் கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால் இன்னொரு பெரும் காப்பியத்தை படைத்திருப்பார். அரசியல் நெருக்கடி, சிறை தண்டனை இப்படி மில்டனின் படைப்புகளுக்கு வேகத்தடையாக இருந்தது. இதனாலையே அவர் திறமை காலம் கலிந்து உலகிற்கு தெரிந்தது என்று கூட சொல்லலாம். பல ஆண்டுகள் அரசியலில் அவர் செய்த செலவு அவரிடம் இருந்து இன்னும் நல்ல படைப்புகள் நம்மால் பார்க்க முடியவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails