வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, August 8, 2008

குண்டக்க மண்டக்க - 3

காட்சி : பார்த்திபன் - ட்ராபிக் போலீஸ், வடிவேலு - டூ வீலர் ஒட்டுநர்

வடிவேல் வேகமாக மவுன்ட் ரோட் சிக்னலில் நிறுத்தாமல் வண்டி ஓட்டிவர, அதை ட்ராபிக் போலீஸ் பார்த்திபன் நிறுத்திகிறார்.

பார்த்திபன் : நிறுத்து.... வண்டிய ஒறங்கட்டு...
வடிவேலு : ( திரு திரு... முழியுடன்....)

பார்த்திபன் : ஏன்டா... சிகனல்ல வண்டிய நிறுத்தல...
வடிவேலு : சாரி..சார்... அவசரமா போகனும்...

பார்த்திபன் : அவசரம்னா ... பாத்ரூம் போ.. ஏன் சிக்னல்ல நிக்கல...
வடிவேலு : சார்... அவசரமா ஒரு இடத்துக்கு போனும்

பார்த்திபன் : அவசரமா போனும்னு சொல்லிட்டு… ஏன்டா ! என் கிட்ட பேசிக்கிட்டு இருக்க..
வடிவேலு : நீங்க தான் என்ன நிருத்தி ஒறங்கட்ட சொன்னிங்க...

பார்த்திபன் : ஓறம்மா நிக்க தெரிஞ்ச உனக்கு....சிக்னல்ல ஏன்டா நிறுத்த தெரியல...
வடிவேலு : அதான் சொன்னல்ல சார்...அவசரமா போனும்...

பார்த்திபன் : அவசரம்னா ... பாத்ரூம் போ.
வடிவேலு : (வ்வ்வ்வ்)... ஒரு இடத்துக்கு போனும்ப்பா...

பார்த்திபன் : போனும்னு சொல்லிட்டு... ஏன் பேசி டைப் வேஸ்ட் பண்ணுற..
வடிவேலு : ( ஆ.. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துல இருந்தே பேசுறானே....) உங்களுக்கு என்ன சார் வேணும்

பார்த்திபன் : சிக்னல்ல வண்டி ஏன் நிறுத்தல்ல.... அதுக்கு பதில் சொல்லு
வடிவேலு : அட பாவி... இவ்வளவு நேரம் அத தான்டா சொன்னே... என்ன ஏய்யா படுத்துற

பார்த்திபன் : சரி...சிக்னல்ல நிறுத்தாதது பைன் கட்டு
வடிவேலு : எவ்வளவு கட்டனும்...?

பார்த்திபன் : ஆயிரம் ரூபா..
வடிவேலு : ஏய்..யார ஏமாத்துற... சிக்னல்ல வண்டி நிறுத்தலைன்னா நூறு ரூபா தான் பைன்... என்ன பார்த்தா கேன பைய மாதிரி தெரியுதா...

பார்த்திபன் : நா அதுக்கு கேஸ் போடல்ல... வாண்டிய ஓட்டும் போது செல்போன் பேசுனதா கேஸ் எழுதியிருக்கேன்
வடிவேலு : என் கிட்ட.. செல்போன்னே இல்லையடா...

பார்த்திபன் : செல்போனே இல்லன்னா.. புதுசா வாங்கு... இப்போ பைன கட்டு...
வடிவேலு : முடியாது... கோர்ட்க்கு போய் ஜட்ஜ் முன்னாடி … என் கிட்ட செல்போன் இல்லனு சொல்லுவேன்...

பார்த்திபன் : வர வழியா.. செல்போன் தூக்கிப் போட்டேனு நான் சொல்லுவேன்... இல்ல நீ வண்டியில வரும் போது ஸ்கூட்டியில போர பொண்ண கிண்டல் பண்ண சொல்லி பொய் சாட்சி வச்சு… ஈவ் டிசிங் கேஸ்ல உள்ள தள்ளுவேன்... உனக்கு வசதி எப்படி ?
வடிவேலு : யோவ்.. உனக்கு என்ன பாவம் பண்ண.. ஊரு உலகத்துல எத்தன பேரு சிக்னல்ல வண்டிய நிறுத்தமா போறான்... நான் தானா உனக்கும் கிடைச்சேன்...

பார்த்திபன் : யாரு ஏமாந்தவங்களோ அவங்கள தான் நாங்க புடிப்போம்.. என்ன சொல்ற..?
வடிவேலு : இந்த அம்பது ரூபவ லஞ்சமா வச்சிக்கோ..

பார்த்திபன் : டாய்... யாருக்கு லஞ்சம் கொடுக்க பாக்குற.. ஒரு நேர்மையான அதிகாரிய
வடிவேலு : யாரு நீ நேர்மையான அதிகாரி...?

பார்த்திபன் : ஒரு நேர்மையான அதிகாரிய கலங்க படுத்த பாக்குரியா.. இது இன்னொரு கேஸ் எழுதுறேன்..
வடிவேலு : உனக்கு என்னய்யா வேணும்... ஏன் உசுர வாங்குற...

பார்த்திபன் : ஒழுங்க பைன கட்டு...
வடிவேலு : இப்படி ரௌடினதமா ஆயிர ரூபா பைன் கட்ட சொல்லுறியே... உனக்கே நியாயமா இருக்கா...?

பார்த்திபன் : போலீஸ்கார பார்த்து 'ரௌடி' திட்டுற... அரசு காவல் அதிகாரி மதிக்காதது... இன்னொரு கேஸ் எழுதுறேன்...
வடிவேலு : (புதுசு.. புதுசா... டெக்னிக் கண்டு பிடிக்கிறாய்யா...) சரி... இந்தா ஆயிரம் ரூபா....

பார்த்திபன் : என்னது... ஆயிரம் ரூபா கொடுக்குற.. மூவாயிரம் ரூபா பைன்.
வடிவேலு : எப்படி..???

பார்த்திபன் : சிக்னல்ல செல்போன் பேசுனது, போலீஸ்க்கு லஞ்ச கொடுக்க முயற்சி பண்ணது, அப்புறம் போலீஸ ரௌடினு சொன்னது... மூனு கேஸ்சுக்கு மூவாயிரம் ரூபா...பைன்..
வடிவேலு : அடபாவி... ஒரு சின்ன கேஸ்ச வைச்சு பெரிய பெரிய கேஸ்ச எல்லாம் தன் தலைமேல கட்டுரானே... இப்படி பண்ணுவ தெரிஞ்சிருந்தா அப்போவே ஆயிரம் ரூபா கொடுத்திருப்பேன்..

பார்த்திபன் : என்ன கொடுக்குறியா.... ஜெயிலுக்கு போறியா...
வடிவேலு : என் கிட்ட ஆயிரம் ரூபா தாய்யா இருக்கு.. வேற எதுவும் இல்ல...

பார்த்திபன் : உண்மைய சொல்லு... வேற எதுவுமில்ல....
வடிவேலு : கிரடிட் கார்ட் இருக்கு..

பார்த்திபன் : நோ பிராப்ளம்... நாங்க எல்லா கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணுவோம்
வடிவேலு : என்னது ?? கார்ட் அக்ஸப்ட்டா....????

பார்த்திபன் : அமா... இப்போ நிறைய பேர் பணம் கையில வச்சிக்கிறாது இல்ல... அவங்க வசதிக்காக நாங்க கிரடிட் கார்ட் ஸ்வைப்பிங் மிஷின் வாங்கிட்டோம். இனிமே நீங்க லஞ்சம், அன்பளிப்பு, பைன் எல்லாம் கிரடிட் கார்ட்ல கூட கட்டலாம். கூடிய சிக்கிரத்துல ‘ஆன் – லைன்ல’ கூட கட்டுறதுக்கு ஏற்பாடு செய்ய போறோம்...
வடிவேலு : என்னைய்யா... பகல் கொள்ளையா இருக்கு... லஞ்சம் வாங்குறத மீட்டிங் போட்டு யோசிப்பிங்களோ ?

பார்த்திபன் : மறுபடியும் போலீஸ திட்டுற...
வடிவேலு : இல்ல.. இல்ல... இந்தாப்பா கிரடிட் கார்டு... மூவாயிரத்துக்கு என்டிரி போட்டு கொடு...

பார்த்திபன் கார்ட்டை வாங்கி கிரடிட் கார்ட் மிஷினில் தெய்கிறார்.

பார்த்திபன் : இந்தா.. சிலிப்பல கையெழுத்து போடு.
வடிவேலு : என்னது... இது மூவாயிரத்தி அம்பது போட்டிருக்க...

பார்த்திபன் : நாங்க கட்ட வேண்டிய.. சர்வீஸ் டாக்ஸ், இன்கம் டாக்ஸ் சேர்த்து என்டிரி போட்டிருக்கேன்.
வடிவேலு : தினிசான லஞ்சமா இருக்கு...? இன்கம் டாக்ஸ் சேர்த்து லஞ்சம்மா...?? ரோம்ப முன்னேறிடிங்க..

பார்த்திபன் : இப்போ கையெழுத்து போடுறீயா... இன்னும் ஏதாவது பைன்...
வடிவேலு : கைழுத்து போடுறேன்... ஆளா விடுடா சாமி...

பார்த்திபன் : ம்ம்... இந்த மாசம் லஞ்சம் வாங்குற டார்கெட் முடிஞ்சது....
வடிவேலு : என்னது... லஞ்சம் வாங்குறதுக்கு டார்க்கெட்டா..???

2 comments:

நாஞ்சில் பிரதாப் said...

சூப்பர்ங்கண்ணா.....முடியல....உக்காந்த யோசிப்பீங்களா...

குகன் said...

நகைச்சுவை சொல்லிட்டோம்... கொஞ்சமாவது சிரிக்க வைக்கனுமே !

LinkWithin

Related Posts with Thumbnails