வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 31, 2008

தொலைந்து போன தொழிற்கல்வி

'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற ஒர பழமொழி உண்டு. இது எதுக்கு பொருந்துதோ இல்லையோ .... நம் நாட்டின் கல்விக்கு பொருந்தும்.

எல்லா தேர்வு முடிவுகளை விட 10வது, 12வது தேர்வு முடிவுகளே மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்ப்பார்ப்aர்கள். இந்த தேர்வு மதிபெண்கள் வைத்தே எந்த கல்லூரியில் சேரலாம், என்ன படிப்பு படிக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும். அந்த மதிபெண்கள் வைத்து தான் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ஒரு புறம் ஜாதி, மதம் இட ஒதிக்கீட்டில் திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும். மறுபுறம் தேர்வின் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது. தேர்வு முடிவு ஒரு சில மாணவர்களுக்கு வாழ்க்கை முடிவாகிவிடுகிறது. அந்த முடிவுக்கு வர காரணமாக இருப்பது மாணவர்களின் மனநிலை என்று சொல்லலாம். அந்த மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டது மிக பெரிய காரணம் அவர்களின் பெற்றோர்களும், கல்வி முறைதான் காரணம்.

தங்கள் பிள்ளைகளை ஊக்கவிக்க தெரியாத பெற்றோர்கள் கையாலும் முறையே மிக அபத்தமாக இருக்கும்.

“உன்னை யாருடனும் ஒப்பிடாதே .. அப்படி ஒப்பிட்டால் உன்னை நீயே அவமானம் படுத்திக் கொள்கிறாய்” - ஓஷோ

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு தங்கள் பிள்ளைகளை அவர்களே அவமானப்படுத்துகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் தன்னை நல்ல முறை ஊக்கவித்தார்கள். அதனால் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன் என்று சொல்கிறார்களே ! தவிர, மற்றவரோடு ஒப்பிட்டார்கள் அதனால் நல்ல படித்தேன் என்று யாரும் சொல்வதில்லை. பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வருவதற்கு மிக முக்கிய காரணம். படிப்பு இல்லை என்றால் வவாழ்க்கையில்லை என்றுமங, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் ஆசையில் மன ஆழுத்தம் ஏற்படும் அளவிற்கு பேசுவதும் என்று பெற்றோர் செய்கிறார்கள். அதனால் ஒரு சில தோல்வி அடைந்த மாணவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கு அவமானத்தை தேடி கொடுத்து விட்டோமே என்று வருந்தி தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்.

ஒரு குற்றவாளி பெற்றோர் என்றால், இன்னொரு குற்றவாளி கல்வி முறைகள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் எழுதினால் அதிக மதிப்பெண்கள் என்ற கல்விமுறை. சிந்தனைகளுக்கு வேலைக் கொடுக்காமல், நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றலுக்கு முதலிடம் கொடுக்கும் கல்விமுறை மாற்ற வேண்டும். பெற்றோர்கள் ஒரு புறம் மன அழுத்தத்தை கொடுக்க, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள தங்களை தாங்களே மன அழுத்ததிற்கு உள்ளகுகிறார்கள்.

இந்த முறைகளை மாற்றவே தொழிற்கல்வி தொடங்கப்பட்டது. தொழிற்கல்வி முலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வேலை செய்வார்கள்.

எனக்கு பள்ளி வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் தொழிற்கல்வி கற்றவர். பள்ளி விடுமுறையில் ஓய்வு நேரங்களில் வாட்ச் பழுது பார்த்து சிறு வருமானம் வந்ததை சொல்லிக் கொண்டு இருந்தார். தொழிற்கல்வி பெருமைகளை பற்றி சொல்லிக் கொணடடி இருந்த ஆசிரியர், என் வகுப்பு நண்பர் ஒருவர் “நீங்க பேசாம்ம வாட்ச் கடையல வேலை பார்த்து இருக்கலாம்.. நாங்க உங்க கிட்ட மாட்டமா தப்பிச்சு இருப்போம்” என்று சொன்னான். அதன் பிறகு அந்த மாணவன் ஆசிரியரிடம் உதை வாங்கியது வேறு விஷயம்.

இப்படி எந்த கவலையில்லாமல் வாழும் மாணவர்கள், தற்கொலை செய்துக் கொள்ள ஆசையா படுவார்கள். அதில் வரும் தோல்விகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நற்றாக படித்து தேர்வு எழுதி, தேர்வு முடிவு எதிராக வரும் போது மாணவர்கள் தற்கொலை வெய்துக் கொள்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இருக்கும். அந்த குற்ற உணர்ச்சியே தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.

ஒரு வேலை தொழிற்கல்வி கற்ற மாணவர்களாக இருந்தால், எப்படியாவது தொழில் செய்தாவது பெற்றோர்களின் கனவுகளை நிஜமாக நினைத்து இருப்பார்கள்.அவர்கள் மன அழுத்தங்களும் குறைந்திருக்கும். என்ன செய்வது பெற்றோர்கால் வரும் மன அழுத்தம், சிந்திக்க வைக்காத கல்வி கொடுக்கும் மன அழுத்தம், பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி.... முடிவு. பக்குவம் இல்லாத மனது தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.

( நன்றி : 'செங்கரும்பு' இலக்கிய மாத இதழில் பிப்ரவரி, 2007 வெளிவந்தது )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails