வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, November 4, 2008

உரையாடலில் ஒளிந்திருக்கும் ஆபத்து

நுணலும் தன் வாயால் கேடும் என்பார்கள்.

ஒரு சிலர் நல்லவர்களாகவே இருந்தாலும் அவர்களை கேட்டவர்களாக பிரதிபலிப்பது அவர்களுடைய நாவு தான். எங்கு எதை பேச வேண்டும் என்பது தெரியாது. பேச வேண்டடுமே என்பதற்காக பேசிவிட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த இசைப்பாளர் மற்ற இசைப்பாளர்ப் போல் இல்லை. மிக குறைவான காலத்தில் நல்ல இசைகளை அமைத்துக் கொடுப்பார் என்றார். இவர் புகழ்வது போல் மறைமுகமாக யாரோ இசையாமப்பாளரை தாக்குகிறார் என்று புரிகிறது. அந்த இயக்குநர் இசையாமப்பாளர் பெயரை கூறிப்பிட்டு பேசியிருந்தால் அந்த பேச்சே அவருக்கு எதிரியாய் போயிருக்கும்.

அந்த இயக்குநருக்கு மேடையல் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது. சமிபத்தில் ஒரு நடிகை திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று பேட்டி அளித்தார். அந்த பேட்டியே அவர்களுக்கு எதிரியாய் போனது. அவர்களுக்காக கோயில் கட்டியவர்கள் கூட அவர்களை எதிர்த்து நின்றார்கள்.

செய்கையால் வரும் பிரச்சனையை விட நாவால் வரும் பிரச்சனை அதிகம். நாவால் வரும் விளைவுகளும் அதிகம். அதனால் தான் வள்ளுவர் கூட எதை அடக்க விட்டாலும் நாவை அடக்க சொன்னார்.

தெனாலிராமனுக்கு 'விகடகவி' என பெயர் எடுத்துக் கொடுத்ததும் அவருடைய நகைச்சுவை பேச்சு தான்.

அண்ணாதுரைக்கு 'பேரறிஞர்' என பெயர் கொடுத்ததும் அவருடைய திறமையான பேச்சு தான்.

எந்த சேவை செய்யாமல் அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் இருந்து ஓட்டுகள் வாங்கி தருவதும் அவர்களுடைய பேச்சு தான்.

வாயுள்ள புள்ள பொலச்சிக்கும் என்பார்கள். நாம் திறமையா, அளவோடு பேசினால் அதை விட மிக பெரிய பலம் இல்லவே இல்லை.

இன்று கணிப்பொறி துறையில் திறமையில்லாமல் ஆங்கிலம் பேச தெரிந்துக் கொண்டு தன் பிழப்பை நடத்துபவர்கள் பல பேர் உண்டு. திறமையிருந்தும் ஆங்கிலம் பேச தெரியாமல் பல வாய்ப்புகளை தவர விட்டவர்களும் உண்டு.

எதை எப்படி பேச வேண்டும் என்ற வரம்பு முறைகளை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

பெண்களிடம் சென்று வயதை கேட்பதும், ஆண்களிடம் சென்று சம்பளத்தை கேட்பதும், சிறுவர்களிடம் சென்று மதிப்பெண்கள் கேட்பதும் இப்படி கேட்டவருக்கு எப்படி இருக்குமோ என்று தெரியாது. ஆனால் கேட்டபவருக்கு தர்ம சங்கடமாக இருக்கும். அதுப் போன்ற கேள்விகளுக்கு போய்யான பதில் வரும் என்று தெரியாமே பலர் கேட்கிறார்கள்.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு போய்யான பதில் வரும் என்று தெரிந்தால் அந்த கேள்வியை கேட்காமலே தவிர்ப்பது நல்லது. அவர்கள் போய்யான பதிலளிக்கும் போது மனதில் நம்மை எத்தனை முறை வெடித்துக் கொண்டாரோ என்பது யாருக்கு தெரியும்.

ஒரு சிலர் திருமணத்துக்கு முன்பு என்ன நடந்ததோ அப்படியே மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி சொல்பவர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்களே தவிர நிம்மதியாக வாழ்வது அறிது தான். மனைவியையும், அன்னைக்கு வரும் சண்டைகளை சமாததான படுத்த பல பொய்கள் சொல்லியாக வேண்டிய நிலையில் இருப்பார்கள். கண்வர்கள் உண்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனைவிமார்கள் கூட , கணவர்கள் சொல்லும் உண்மைகளை நம்புவதில்லை.

இங்கு அமைதியாய் இருக்கும் மூட்டாள்கள் அறிவாளியாக காணப்படுகிறார்கள். அதிகமாய் பேசும் அறிவாளியே மூட்டாளாக தெரிக்கின்றான்.

காதலில் எடுத்துக் கொண்டால் கூட அதிகமாய் பேசும் ஆண்களை விட அமைதியாய் இருக்கும் ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள். காரணம், அதிகமாய் பேசும் ஆண்கள் தங்களை பற்றி விளம்பரம் செய்து கொள்வார்கள். ஆனால், அமைதியாய் இருப்பவர்கள் அப்படியில்லை. விளம்பரங்கள் வியாபாரத்திற்கு உதவலாம் காதலுக்கு உதவாது.

நம் நாட்டில் வாய் சொல்லில் வீரர்கள் பல பேர் உண்டு. பேசிய சாதித்து விடலாம் என்று பல பேர்கள் நினைப்பதால் கட்டப்படாத மேம்பாலம் பாதியிலே பல காரியங்கள் நிற்கிறது. அளவாய் பேச வேண்டும். அதற்குறிய செயல்கள் வேண்டும். இந்த இரண்டுமே என்றும் சிந்தனையில் இருக்க வேண்டும்.

(கல்வெட்டு பேசுகிறது, அக்டோம்பர்,2006 )

1 comment:

Unknown said...

really super and absolutely true also....

LinkWithin

Related Posts with Thumbnails