வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, November 29, 2008

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - இரண்டாவது பாகம்

'ஹிட்லரும் நல்லவர் தான்' என்ற தலைப்பில் வலைப்பதிவு எழுதியிருந்தேன். நண்பர் ராபின் அவர்கள் நான் ஹிட்லருக்கு வக்காளத்து வாங்கும் வழக்கறிஞர் என்று நினைத்துக் கொண்டாரோ என்னோவோ தெரியவில்லை. "கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் மனப்பான்மை" என்று கூறி கண்டித்திருந்தார். அவர் கண்டித்தற்காகவே 'ஹிட்லரை' பற்றிய இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். ஹிட்லர் நல்லவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளையும் நாம் பார்க்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

முந்தைய பதிவு ஹிட்லரை ஆதரிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ‘அமெரிக்காவை காட்டிலும் ஹிட்லர் நல்லவர்’ என்று சொல்ல வந்தேன். ஆனால், இந்த பதிவு ஹிட்லருக்கு இருந்த நல்ல எண்ணத்தை சொல்லுவதே என் நோக்கம். அதற்கு முக்கிய காரணம், ஹிட்லருக்கு தன் தாய் நாட்டின் மீது இருந்த தேசப்பற்று யாருக்கும் தங்கள் தாய் நாட்டின் மீது இருந்திருக்காது.

ஒருவன் நொய்டாவில் எத்தனை சிறுமிகள் பாலியல் கொடுமையில் கொன்று புதைத்திருக்கிறான். இங்கிலாந்தில் பதினாறு வயதில் இருக்கும் பெண்கள் எண்பது சதவீதம் பேர் கற்பத்தை கலைத்துக் கொள்கிறார்கள். சிறு வயதில் பாலியல் ரிதியாக பாதிக்கப்படும் சிறுமிகளை பாதுக்காக்க பாலிய திருமணத்தை ஆதரித்தார் ஹிட்லர். பாலிய திருமணத்தால் பாலியல் ரிதியானா எண்ணங்கள் மாறிவிடிகிறது. சிறு வயதில் இருந்து பாலியல் உணர்ச்சி வளர்வதால் வாலிபவ பருவத்தில் பெண்களை கற்பழிப்பது, சிறிமிகளை கொலை செய்வது என்று மனதில் வளர்த்துக் கொள்கிறார்கள். இது போன்ற தவறுகளை தடுக்க பாலியல் திருமணமே சரியான வழி என்பது ஹிட்லரின் கருத்து. (பாலியல் திருமணத்தை நான் ஆதரிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.)

மூன்று தலைமுறை முன்பு நம் நாட்டில் பாலியல் திருமணம் இருந்திருக்கிறது. கணவனை இழந்த சிறுமிகளை உடன் கட்டை எரிப்பதும், மொட்டை அடித்து காவி உடை அணிவிப்பதும் போன்ற கொடுமைகள் நடந்து உள்ளன. விதவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையாக அன்று இருந்துள்ளது.(இதை எடுத்துக் காட்டியதே அன்றைய "பராசக்தி" படம் தான்.) இந்த கொடுமைகளை தவிர்க்க பாலிய விவாகம் அரசால் ரத்து செய்யப் பட்டது. ஆனால், நொய்டா சிறுமிகளை பாலியல் கொடுமையில் கொன்றது, மருத்துவம் பார்க்க வந்த பெண்களை நிலப்படம் எடுத்த மருத்துவர், போலி சாமியார்கள் மன்மத லீலைகள் இது போன்ற செய்திகளை தினமும் செய்திதாளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பாலியல் விவாகம் இருந்த காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. பாலியல் உணர்ச்சி கட்டுப்படுத்தும் முயற்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. இதை எல்லாம் படிக்கும் போதும், கேட்கும் போது பாலிய விவாகமே பரவாயில்லை தோன்றும் அளவிற்கு பல செய்திகள் நம் மனதை கொள்கிறது.

பாலியல் திருமணத்தை ஆதரித்த ஹிட்லரின் எண்ணம் பலருக்கு கோமாளித்தனமாக தெரிந்தாலும், பாலியல் கொடுமைகளை ஒழிக்க நினைத்த அவரது குணத்தை பார்க்க வேண்டும். ஹிட்லர் பாலியல் கொடுமைகளை ஒழிக்க பாலியல் விவாத்தை மட்டும் சொல்லவில்லை. சரியான தேக பயிற்சி, சண்டை பயிற்சி மூலம் பாலியல் உணர்ச்சிகளை குறைக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். தேக பயிற்சி மூலம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என்று இன்றைய மருத்துவம் கணடறிந்த உண்மை. ஆனால், 1920 ஆம் ஆண்டுகளிலே ஹிட்லை இதை பற்றி எழிதியிருக்கிறார். இன்று மருத்துவம் சொல்லும் உண்மை, அன்றே ஹிட்லர் தெளிவுப்படுதியிருக்கிறார்.

ஹிட்லர் பாலியல் உணர்ச்சியில் தவறு செய்ய நினைத்த வாலிபர்களை தேக பயிற்சி செய்து இராணுவத்தில் சேர்வதற்கு உற்சாகமுட்டினார். இன்று எத்தனையோ இளைஞர்கள் மென்பொருளிலும், வன் பொருளிலும் வேலை செய்ய விரும்புகிறார்கள். அரசாங்கமும் அதற்கு தகுந்த உதவிகளை செய்து வருகிறது. ஆனால், ஹிட்லர் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் தான் உற்சாகமுட்டினார். மற்ற நாடுகளை பிடிக்க இராணுவத்தை பலப் படுத்தும் சுயநலம் ஹிட்லருக்கு இருந்தாலும், இளைஞர்களை தவறான பாதையில் செல்லாமல் நாட்டுக்காக சேவை செய்ய தூண்டிய பொதுநலமும் இருந்தது. பல இளைஞர்களுக்கு இராணுவத்தில் வேலைக் கொடுத்தால் ஜெர்மனியில் வேலையில்லாத திண்டாட்டம் ஹிட்லர் காலத்தில் ஒழிந்தது. (அமெரிக்கா இன்றும் தங்கள் நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியாமல் தவிப்பதை நினைத்து பாருங்கள்.)

இன்று நம் நாட்டில் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ, ஹிட்லர் தன் நாட்டு இளைஞர்களை செயல் படுத்தி காட்டினார். நண்பர் கமல் சொன்னது போல் என்னதான் கொலைகாரனாக, கொடுங்கோலனாக இருந்தாலும் ஹிட்லர் காலத்தில் தான் ஜெர்மனி மிகப்பெரிய நாடாக வளர்ந்தது.

2 comments:

Unknown said...

அனைத்து சர்வாதிகாரர்களும் தன் நாட்டை முன்னேற்றுவதில்லை.இதற்கு பல உதரணங்கள் சொல்லலாம்...நம் எல்லாருக்கும் தெரிந்த சர்வாதிகாரி..இடி அமீன்..உகாண்டாவை அவர் எப்படி ஆண்டார் என்று அனைவருக்கும் தெரியும்...
ஹிட்லர் நினைத்திருந்தால் ஜெர்மனியை குட்டிசுவராக ஆக்கிருக்கமுடியும்...ஆனால் அவர் "தீவிர" தேசபக்தர்...தன் நாடு முன்னேறவேண்டும் ..உலகம் தன் நாட்டைபார்த்து பயப்படவேண்டும் என்று நினைத்து விட்டார்...நாட்டை பார்த்து வியக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் வரலாறு வேறு மாதிரி ஆகிருக்கும்...என்ன செய்ய???

குகன் said...

// உலகம் தன் நாட்டைபார்த்து பயப்படவேண்டும் என்று நினைத்து விட்டார்...நாட்டை பார்த்து வியக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் வரலாறு வேறு மாதிரி ஆகிருக்கும்...//

உண்மை. ஹிட்லர் மட்டும் தன் நாட்டை பார்த்து மற்றவர்கள் வியக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அமெரிக்கா சர்வாதிகாரத்தை விரலை விட்டு ஆட்டியிருப்பார்.

LinkWithin

Related Posts with Thumbnails