வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 30, 2008

"'குண்டு' குரு - 'மண்டு' மதன்" அறிமுகம் - புது நகைச்சுவை தொடர்

‘குண்டக்க – மண்டக்க’ நகைச்சுவை தொடரை படித்த பலர் என்னை இருந்தார்கள். அதில் கூறிப்பாக ‘ராஜ்’ அவர்களை சொல்ல வேண்டும். தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் வைத்து எழுதுங்கள் என்று கூறினார். அவரை போல் இன்னும் ஒரு சிலர் இதே அறிவுரை கூறினார்கள். சமிபத்தில் பதிவர் சந்திப்பில் கூட ‘கேபிள் சங்கர்’ அவர்கள் என் நகைச்சுவை தொடரை பாராட்டி, தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் பற்றி கூறியிருந்தார். அதனால், ‘குண்டக்க மண்டக்க’ தொடரை இன்னும் ஒரு கதையோடு முடித்துக் கொண்டு, புதிய நகைச்சுவை தொடராக 'குண்டு' குரு - 'மண்டு' மதன் தொடரை எழுதலாம் என்று இருக்கிறேன். (குண்டக்க மண்டக்க போல் கோர்வையாக இருப்பதால் குண்டு - மண்டு என்று தேர்ந்தெடுத்தேன்)

'குண்டு' குரு - 'மண்டு' மதன் இதற்கு முன் யாரவாது பயன் படுத்திருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

'லாரன் - ஹார்டி' கதாப்பாத்திரங்கள் போல் இந்த இரண்டு பாத்திரம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் ( பேராசையில்) 'குண்டு - மண்டு' என்று வைத்தேன். எழுத தொடங்கும் போதே பெரிய அளவில் யோசிக்கிறேன். தவறில்லை. அப்போது தான் ஒரளவாவது வெற்றி கிடைக்கும்.
இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். என்னென்றால், அது எனக்கே தெரியாது. 'குரு' குண்டாய் இருப்பான். கொஞ்சம் புத்திசாலி. 'மதன்' ஒல்லியாக இருப்பான். சரியான மடையன். அவ்வளவு தான் இப்போதைக்கு. கார்டூன் மதன், மதி, மருது போன்றவர்கள் இந்த பாத்திரங்களை வரைந்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். (ஓவர பேசுர ... இங்கையே நிறுத்திக்கோ... குகன்)

கதைக்கு ஏற்றவாரு... இவர்கள் பாத்திரப்படைப்புகள் எப்படி மாற்ற போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நாலு பேரு சிரிக்க வைக்க எதுவுமே தப்பிலே’ என்ற தைரியத்தில் தொடங்குகிறேன்.

'குண்டு' குரு - 'மண்டு' மதன் சிரிக்க வைக்க வருகிறார்கள்.

தாயாகுங்கள்… மன்னிக்கவும் தயாராகுங்கள்.

Thursday, December 18, 2008

சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்

பிரபல கார்ப்ரேட் நிறுவனம் ஒரு நடிகனுக்கு பத்து கோடி சம்பளம் கொடுத்து பெரிய அளவில் படம் தயாரிக்கிறார்கள். அந்த படமும் பெரிய வெற்றி படமாக அமைந்து விடுகிறது. அதன் பிறகு அந்த நடிகனின் சம்பளம் பத்து கோடியாக மாறிவிடுகிறது. சிறு தயாரிப்பாளர்கள் அந்த நடிகனிடம் நெருங்க கூட முடியாது. இப்படி ஒவ்வொரு நடிகனின் சம்பளம் கார்ப்பேரட் நிறுவனத்தின் உதவியால் சம்பளம் உயர்வதை பார்த்த சிறு தயாரிப்பாளர்கள் புதுமுகங்களை வைத்து படம் எடுக்கும் சூழ்நிலை வருகிறது. ஒரு சில தயாரிப்பாளர்கள் போட்டி போடாமல் ஒதுங்கி விடுகிறார்கள். சில வருடங்கள் பிறகு அந்த நடிகனை வைத்து தயாரித்த கார்ப்ரேட் நிறுவனத்தின் படங்கள் தோல்வி அடைகின்றன. அந்த கார்ப்ரேட் நிறுவனம் தயாரிப்பு செலவை குறைக்க நடிகனின் சம்பளத்தை குறைக்கிறார்கள். அந்த நடிகன் தன் சம்பளத்தை பத்து கோடியில் இருந்து ஒரு பைசா கூட குறைக்க மனமில்லை. அதனால், அந்த கார்ப்ரேட் நிறுவனம் புதுமுகங்களையும், குறைவாக சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார்கள். எந்த தயாரிப்பாளர்களும் அந்த நடிகனின் சம்பளத்தை பார்த்து அவரை நெருங்குவதில்லை. இனி திரையுலகில் அவர் நீடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகன் தன் சம்பளத்தை குறைத்தாக வேண்டும். அது தான் அவனுக்கு இருக்கும் ஒரே வழி. இப்போது இருக்கும் மென்பொருள் பொறியியலாளர்களின் நிலைமையும் அதுவே !

மேலே குறிப்பிட்டுள்ள நடிகனின் சம்பளம் ஏற்றமும், இறக்கமும் காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் இப்படி ஒரு வீழ்ச்சியை சந்திப்பது இரண்டாவது முறை. (ஒரு சில இளைய பொறியியலாளர்களுக்கு 2000,2001 ஆண்டில் இப்படி ஒரு வீழ்ச்சி தெரிந்திருக்க வாய்ப்பில்லை). பல கார்ப்ரேட் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இளசுகளுக்கு சம்பளத்தை அதிகமாக கொடுத்தனர். அதிக பணம் வருவதால் கார், வீடு, மனை என்று வங்கி கடன் மூலம் வாங்கிவிட்டனர். இப்பொது இருக்கும் பொருளாதார வீழ்ச்சியால் எந்த நிறுவனத்தாலும் அதிக சம்பளம் கொடுக்க முடியவில்லை. கொடுக்கும் சம்பளத்தில் வங்கி கடன், செல்வுகளுக்கு போதவில்லை. விளைவு... தற்கொலை.

ஐந்து எண்களில் சம்பளத்தை வாங்கியவர் மீண்டும் நிலைமை சீராகும் வரை நான்கு எண்கள் சம்பளத்தை வாங்க தோன்றுவதில்லை. மனம் சிறு குழந்தையை போல் ஐந்து எண்கள் நாடுவதால் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் உழியர்களை அனுப்பிவிட்டு குறைவான சம்பளத்தில் குறைந்த தகுதியுள்ளவனை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கிறார்கள். அனுபவமுள்ள ஒருவனுக்கு கொடுக்க படும் சம்பளத்தை ஆறு புதியவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். இது போன்ற சம்பளங்கள் ஒர் இரு நடிகர்களுக்கு நடக்கும் போது பெரிதாக தெரிவதில்லை. ஆனால், ஒட்டு மொத்த மென்பொருள் துறைக்கே இப்படி ஒரு பாதிப்பு வந்ததால் எல்லோருடைய பார்வையும் இதன் மேல் இருக்கிறது.

இந்திய பொருளாதாரமே சரிவை சந்திக்கும் போது மென்பொருள் பொறியியலாளர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்கப்படும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள். அப்போது தான் அவர்கள் வேலை செய்யும் நிறுவங்கள் இயங்க முடியும். இன்னும் பழைய சம்பளத்தை எதிர்பார்த்தால் ஜெட் ஏர்வே, சதியம், டி.சி.எஸ் என்று உழியர்களை வெளியே அனுப்பும் நிறுவனத்தின் பட்டியலிட வேண்டியது தான்.

சரி ! இன்னும் எனக்கு ஐந்து எண் சம்பளம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிப்பு, சிற்றுண்டி போன்ற கடைகள் வைக்கலாம். கிண்டலாக சொல்லவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மிட்டாய், அடையார் ஆனந்த பவன் ஆரம்பமே சின்ன இனிப்பு கடைதான். சரவண பவன், அஞ்சப்பர் ஆரம்பம் சிற்றுண்டி தான். இவர்கள் வளர்ச்சி அண்ணா எழுதிய 'ஒர் இரவு' போல் வந்து விடவில்லை. இந்த நிலையை தொட அவர்களுக்கு ஒரு தலைமுறை உழைப்பு தேவைப்பட்டது. இன்று அந்த ஸ்தாபனத்தின் இரண்டவாது, மூன்றாவது தலைமுறையை பார்க்கிறோம்.

அவர்களை போல் களத்தில் இறங்கி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பின் பலனை அடுத்த தலைமுறை அனுபவிக்கட்டும். இந்த தலைமுறையில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பளத்தை குறைத்து கொள்ள தான் வேண்டும். அதுவும் இல்லை என்றால் மென்பொருள் துறையை விட்டு வெளியே வந்து வேறு துறையில் கொடுக்கும் நியாயமான சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டியது தான். இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். நானும் ஐந்து எண்கள் சம்பளம் வாங்கும் (வாங்கிய) மென்பொருள் பொறியியலாளர் தான்.

Monday, December 15, 2008

தமிழ் சினிமா 2008 - ஒரு பார்வை

இப்போது தான் 2007 ஆண்டு முடிந்தது போல் இருந்தது. உடனே 2009 ஆம் ஆண்டு நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடியவில்லை. வேகமான உலகத்தில் கால சக்கரம் அதி வேகமாக சுழன்றுக் கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் வேகம் உலக தரத்தை நோக்கி செல்லும் முயற்சியில் ஈடுப்பட தொடங்கியிருக்கிறது. கிராமத்தில் நிலத்தை விற்று படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மறைந்து பல கார்ப்ரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் நுழைந்து இருப்பது இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல நடிகர், நடிகைகளின் முகத்தில் சந்தோஷம் வர தொடங்கியிருக்கிறது. சரி ! இந்த வருடம் வெளிவந்த படங்களை ஒரு பார்வை பார்ப்போம்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, கமல் படம் ஒரே ஆண்டில் வெளிவந்துள்ளது. நடிப்பில் மட்டுமே ரஜினியை ஒவர்டேக் செய்த கமல், இந்த ஆண்டு வசூலிலும் முந்திவிட்டார். கமலின் 'தசாவதாரம்' இந்த ஆண்டு மிக பெரிய வசூல் குவித்த படம் என்று சொல்ல வேண்டும். பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கிச்சானை வரவழைத்து உலகின் முழு பார்வையை தமிழ் சினிமா மீது பட வைத்திருக்கிறார். (பாவம் ரவிசந்திரன் ! 'Oscar' என்ற தன் நிறுவனத்தின் பெயரை 'Ascar' என்று மாற்ற வேண்டிய நிலைவந்தது.)

பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய ரஜினியின் 'குசேலன்' படம் பெரிய தோல்வியை தழுவியது. 'பாபா' படத்திற்கு பிறகு ரஜினிக்கு தோல்வி அடைந்த படம். சில அரசியல் காரணங்களாலும், ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததாலும் 'குசேலன்' தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம். ( படத்தை வாங்கியவர்கள் நிஜமாகவே குசேலனாக மாறிவிட்டதாக கேள்வி)

இந்த வருடம் ரஜினி படமே தோல்வி அடைந்து விட்டதால் பலர் களத்தில் குதிக்காமல் இருந்துவிட்டனர். பிரஷாந்த், விக்ரம், ஆர்யா ( பீமா மற்றும் ஓரம் போ நீண்ட நாள் கிடப்பில் இருந்து வெளிவந்த படம்) போன்றவர்கள் இந்த வருடம் போட்டியில் இறங்கவில்லை. விஜய் (குருவி), அஜீத் (ஏகன்), விஜய்காந்த் ( அரசாங்கம்), மாதவன் (வாழ்த்துக்கள்), விஷால் ( சத்யம்) போன்ற நடிகர்கள் அட்டடென்ஸ் கொடுப்பது போல் இந்த வருடம் ஒரு படம் மட்டும் நடித்திருக்கிறார்கள். பெரிதாக சொல்லுவதற்கில்லை.

ஜீவாவின் 'தெனாவட்டு', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்' சமிபத்தில் தான் வெளிவந்திருப்பதால் அதன் வெற்றியை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்த படத்தை வெளியிட்டவர்களின் தொலைக்காட்சியில் இதற்கு முதல் இடம் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமில்லை.

எப்போதும் இல்லாமல் இந்த வருடம் புதியவர்கள் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். 'சுப்பிரமணியபுரம்' மற்றும் 'சரோஜா' பெரிய நடிகர்கள் இல்லாமல் கதை, திரைக்கதையால் வெற்றி பெற்ற படங்கள். 'காதலில் விழுந்தேன்' முதல் இரண்டு வாரம் நல்ல வசூலை குவித்துள்ளது. 'பொய் சொல்ல போறோம்', 'ராமன் தேடிய சீதை' இந்த வருடத்தின் சிறந்த குடும்ப படங்கள் என்று சொல்லலாம். கதைக்கு முன்னுரை கொடுத்தால், கதாநாயகர்கள் யாராக இருந்தாலும் படம் வெற்றி பெறும் என்பதற்கு இந்த படங்களே உதாரணம்.

தனுஷ்யின் 'யாரடி நீ மோகினி' , 'ஜெயம்' ரவியின் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' வெற்றிப்படமாக மட்டுமில்லாமல் நல்ல குடும்ப படமாகவும் இருந்தன. ஒரு சில இடங்களில் பெண்களை முகம் சுழிக்க வைத்தாலும் 'அஞ்சாதே' நட்பு, கடமை என்று இரண்டும் கலந்த வெற்றிப் படம்.
நடிகைகளில் பிரியாமணிக்கு பருத்தி வீரனில் நடித்ததிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. நடிகைக்கு தமிழ் படத்திற்கு என்று கிடைத்திருப்பது நான்காவது முறை. நயந்தாரா கவர்ச்சியில் என்ன புதுமை செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். மற்றப்படி தமிழ் சினிமா நல்ல நடிகையை தேடிக் கொண்டு தான் இருக்கிறது.

எழுத்தாளர் சுஜாதா, நடிகர் எம்.என். நம்பியார், நடிகை பத்மினி அவர்களின் மரணம் தமிழ் சினிமாவின் துயர பக்கங்களாக இந்த வருடம் இருக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

பழைய வெற்றிய படங்களின் தலைப்பை வைத்து புது படங்கள் வருவதால் அந்த தலைப்பை மட்டுமல்ல பழைய படத்தின் வெற்றியையும் கெடுத்துவிடுகிறது. அடுத்த வருடமாவது சொந்தமாக தலைப்பை யோசித்து படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை எப்படி இருக்கபோகிறது அடுத்த வருடம் பார்ப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

( நன்றி : தமிழ்.சிஃபி.காம்
http://tamil.sify.com/columns/fullstory.php?id=14815216 )

Tuesday, December 9, 2008

நல்ல அனுகுமுறை வெற்றிக்கு அச்சானி

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். பலர் வாழ வேண்டும் என்பதற்காக வாழ்க்கிறார்கள். வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். தங்கள் தாங்களே கட்டாயப்படுத்தி தங்கள் கடமையை செய்கிறார்கள். இன்னும் ஒரு சில பேர் தங்கள் கடமைகளை மற்றவர் மூலம் நிரைவேற்ற நினைக்கிறார்கள். தங்கள் எண்ணங்களை வரும் தலைமுறைக்கு திணிக்கப்படுவதுமாக இருக்கிறார்கள். யாரிடம் எப்படி அனுகுவது என்றே தெரிவதில்லை.

சிறந்த கருத்துள்ள நூலை எழுதினாலும், நூலகத்தில் மற்றவர்கள் எடுத்து படிக்கும் அளவிற்கு நூலின் அட்டை வடிவம் இருக்க வேண்டும். தமிழை உயிர் என்று மதித்தாலும், வியாபாரத்திற்காக வெளிநாட்டாவர்களிடம் பேசும் போது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் விழாவிற்கு நேரில் சென்று அழைப்பித்ழ் வைத்தே அழைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு காரியங்களிலும் அனுகுமுறை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. எவ்வளவு செயல் திறன் கொண்டவர்களாக இருந்தாலும் நல்ல அனுகுமுறை மிகவும் முக்கியம்.

மீனை பிடிக்க வேண்டும் என்றால் தூண்டிலில் அதற்கு பிடித்த பூளுவைத்தான் வைக்க வேண்டும். நமக்கு பிடிக்கும் என்று கோழி கறியை வைத்து மீன் பிடிக்க நினைத்தால் எந்த மீனும் மாட்டாது. ஒரு பெண்ணை கவர்வது என்றால் அவர்களுக்கு பிடித்தை செய்ய வேண்டும். நமக்கு பிடித்தை மற்றவர்களுக்கு செய்தால் யாருக்குமே நம்மை பிடிக்காமல் போகும்.
உலகப்புகழ் பெற்ற துணித்துவைக்கும் சோப்பு இருந்தது. அதன் விளம்பரம் உலகம் முழுக்க பிரபலம். ஆனால், அந்த சோப்பை அரபியநாடுகளில் யாரும் வாங்கவில்லை. அந்த விளம்பரப்படங்களில் முதல் படத்தில் அழுக்கு துணியையும், இரண்டாவது படத்தில் சோப்பால் துணி துவைப்பதும், முன்றாவது படத்தில் வெண்மையாக இருக்கும் துணியும் இருந்தது. எல்லா நாடுகளில் இந்த சோப்பு நன்றாக விற்கப்பட்டாலும், அரபிய நாடுகளில் விற்கப்படாதா காரணம், அவர்கள் வலது புறத்திலிருந்து இடதுப்புறமாக படிப்பது தான். உலகப்புகழ் பெற்ற சோப்பாக இருந்தாலும் அந்த நாட்டில் சோப்பை விற்க எப்படி அனுகுவது என்று தெரியவில்லை.

அரசியல், மருத்துவம், சட்ட அலோசனை, பக்தி இப்படி எல்லாவற்றிக்கும் விளம்பரங்கள் தேவை என்றாகிவிட்டது. சேவை என்று கருதப்பட்ட தொழிலெல்லாம் பணத்தேவையை நிபர்த்தி செய்யும் வேலையாக மாறிவிட்டது. சேவைத் தொழிலுக்கு எப்பொது விளம்பர அனுகு முறை தேவைப்பட்டதோ மக்களும் அந்த தொழிலையெல்லாம் வியாபாரம் என்று நினைக்க தொடங்கிவிட்டார்கள்.

சேவை அனுகுமுறை இருந்த வரையில் மருத்துவம், பக்தி, வழக்கறிஞர் தொழில்களெல்லாம் மதிக்கப்பட்டது. வியாபார ரிதியாக அனுகுமுறை தேவைப்பட்டதோ எல்லா தொழில்களும் பணம் சம்பாதிப்பதே குறிக்கொள்ளாக ஆகிவிட்டது.

இன்று நல்ல அனுகுமுறையே தொழிலாக தொண்டுள்ளார்கள். ஆங்கிலம் தெரியாமல் வேலையில் கடினமா ? கவலை வேண்டாம். ஒரு மாதத்தில் ஆங்கிலம் கற்கலாம். எங்களிடம் வாருங்கள். நாங்கள் கற்று தருகிறோம்.

நடிக்க ஆசையா ? எங்களிடம் வாருங்கள். நடிப்பு பயிற்சி அளித்து சின்னத்திரையில் நடிக்க உதவிச் செய்கிறோம்.

எங்களிடம் கணிப்பொறி கற்றுக்கொள்ளுங்கள். பயிற்சி முடித்ததும் வேலை கிடைப்பதற்கு நாங்கள் உத்தரவாதம்.

யாரிடம் எப்படி அனுகுவது என்று தெரியாதவர்களை வியாபார ரிதியாக அனுகுவது இன்றைய தொழிலாகிவிட்டது. பணம் இருந்தால் போதும் நம்மை தேடி வந்து அனுகுகிறார்கள்.

முன்பெல்லாம் வங்கியில் கடன் வாங்குவது குதிரை கொம்பாக இருக்கும். ஆனால், மாத சம்பளம் ரூ.5000 வாங்குபவர்களை கூட தேடி கண்டு பிடித்து கடன் தருவதாக அனுகுகிறார்கள். கடன் வாங்க நல்ல அனுகுமுறை சென்று, கடன் கொடுக்க நல்ல அனுகுமுறை தேவைப்படுகிறது.

பேச்சு, உடை, திறமை இவை எல்லாவற்றிற்கும் நல்ல அனுகுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல அனுகுமுறையால் மற்றவரை கவர்ந்துவிட்டால், அதன் பிறகு வரும் தவறுகள் கூட பெரிதாக தெரிவதில்லை.

இன்றைய இந்தியனுக்கு யாரை எப்படி அனுகுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை தேடும் போது தேர்வுக்கு நன்றாக படித்து தன் திறமையை முதன்மையாக வைத்து தேடுகிறான். அரசாங்கத்தில் வேலை தேடும் போது சிபாரிசுகளும், பணத்தையும் மூலதனமாக கொண்டு வேலையை தேடுகிறான்.

உலக வங்கி கூட இந்தியாவிற்கு கடன் தருவது மனிதர்களை மதிக்கும் நல்ல அனுகுமுறையே காரணம்.

(நன்றி : சிஃபி.காம்
http://tamil.sify.com/fullstory.php?id=14585769 )

Monday, December 8, 2008

என் பதிவை பார்த்து ‘பெட்ரோல்’ விலை குறைந்தது.

டிசம்பர் 4. அன்று 'விலைக்குறையாத பெட்ரோல்' என்ற பதிவை எழுதினேன். ஏன் பெட்ரோல் விலைக்குறைக்காமல் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருந்தேன். அடுத்த நாளே பாருங்கள், பெட்ரோல் விலை ஐந்து ரூபாய்யும், டீசல் விலை மூன்று ரூபாய்யும் குறைந்து விட்டது.

எப்படி என் பதிவு அரசாங்க பார்வைக்கு போச்சுனு தெரியல்ல... நல்ல முடிவு எடுத்திருக்காங்க.

எதோ என்னால முடிஞ்ச நல்ல காரியம் செஞ்ச திருப்தி.

காக்கை வர பணை மரம் விழுந்த கதை இல்ல... பண்ணை விழுந்த கதை :)

Thursday, December 4, 2008

விலைக்குறையாத பெட்ரோல்

சமிபத்தில் என் நண்பர் ஒருவர் கைபேசியில் எனக்கு அனுப்பிய செய்தி (எஸ்.எம்.எஸ்)...

“கடவுள் உன் மகிழ்ச்சியை
பெட்ரோல் விலைப் போல் உயர்த்தட்டும்
உன் சோகத்தை
நடிகையன் ஆடைப்போல் குறைக்கட்டும்”

நடிகையின் ஆடையால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த ஒரு நஷ்டமுமில்லை. ஆனால் பெட்ரோல் உயர்வால் பல தரப்பட்ட மக்கள் பாதிக்க படுகிறார்கள். அதனால் மிகப் பெரிய விவாதிக்க குரிய விஷயம் பெட்ரோல் உயர்வு தான்.

காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களின் விலையும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில் இதை ஏற்றி செல்லும் போக்குவரத்துக்கு பெட்ரோல், டிசல் இன்றியமையாத தேவையாகிவிட்டது. அதே போல் நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவையான பேரூந்து, ஆட்டோ, இரு சக்கிர வண்டி என அனைத்து தேவைகளும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது.

சரியாக கணக்கு போட்டு பார்த்தால் நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்தியாவில் விலை ரூ. 21 முதல் ரூ. 27 வரை விற்கலாம்.

கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நூகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.

நவம்பர் 15 ஆம் தேதி, பாக்கிஸ்தானில் பெட்ரோல் விலை பத்து ரூபாயும், டிசல் விலை மூன்று ரூபாயும் இறங்கி உள்ளது.

பாகிஸ்தானில் மட்டும் குறைவான விலை... நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு உயர்வான விலை ? ஏனென்றால், மற்ற நாடுகளில் மானியங்கள் கிடையாது. அங்கெல்லாம் எண்ணை நிறுவனத்தை அரசு நடத்தவில்லை. தனியார் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் குறைவாக விற்க முடியும் என்றால் நம்மாலும் விற்க முடியும்.

இதில் நமக்கு மானியம் வழங்குகிறது என்று சொல்வது நம்மிடம் பிடுங்கி நமக்கே பிச்சையிடுவது போல் இருக்கிகறது.

பீளு கிராஸ் மட்டும் தடை விதிக்காமல் இருந்தால் காருக்கு பதிலாக ஒரு குதிரையில் வாங்கி அதில் பேர் சவாரி செய்திருக்கலாம்.

இன்று, ஒரு பேரல் கச்சா எண்ணை $45 கீழ் இறங்கியுள்ளது. ஆனால், $140 இருக்கும் போது ஏறிய பெட்ரோல் விலை, நம் நாட்டில் இன்னும் குறையாமல் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் பெட்ரோல் விலையை குறைப்பார்களோ !!!

LinkWithin

Related Posts with Thumbnails