வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 9, 2008

நல்ல அனுகுமுறை வெற்றிக்கு அச்சானி

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். பலர் வாழ வேண்டும் என்பதற்காக வாழ்க்கிறார்கள். வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். தங்கள் தாங்களே கட்டாயப்படுத்தி தங்கள் கடமையை செய்கிறார்கள். இன்னும் ஒரு சில பேர் தங்கள் கடமைகளை மற்றவர் மூலம் நிரைவேற்ற நினைக்கிறார்கள். தங்கள் எண்ணங்களை வரும் தலைமுறைக்கு திணிக்கப்படுவதுமாக இருக்கிறார்கள். யாரிடம் எப்படி அனுகுவது என்றே தெரிவதில்லை.

சிறந்த கருத்துள்ள நூலை எழுதினாலும், நூலகத்தில் மற்றவர்கள் எடுத்து படிக்கும் அளவிற்கு நூலின் அட்டை வடிவம் இருக்க வேண்டும். தமிழை உயிர் என்று மதித்தாலும், வியாபாரத்திற்காக வெளிநாட்டாவர்களிடம் பேசும் போது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் விழாவிற்கு நேரில் சென்று அழைப்பித்ழ் வைத்தே அழைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு காரியங்களிலும் அனுகுமுறை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. எவ்வளவு செயல் திறன் கொண்டவர்களாக இருந்தாலும் நல்ல அனுகுமுறை மிகவும் முக்கியம்.

மீனை பிடிக்க வேண்டும் என்றால் தூண்டிலில் அதற்கு பிடித்த பூளுவைத்தான் வைக்க வேண்டும். நமக்கு பிடிக்கும் என்று கோழி கறியை வைத்து மீன் பிடிக்க நினைத்தால் எந்த மீனும் மாட்டாது. ஒரு பெண்ணை கவர்வது என்றால் அவர்களுக்கு பிடித்தை செய்ய வேண்டும். நமக்கு பிடித்தை மற்றவர்களுக்கு செய்தால் யாருக்குமே நம்மை பிடிக்காமல் போகும்.
உலகப்புகழ் பெற்ற துணித்துவைக்கும் சோப்பு இருந்தது. அதன் விளம்பரம் உலகம் முழுக்க பிரபலம். ஆனால், அந்த சோப்பை அரபியநாடுகளில் யாரும் வாங்கவில்லை. அந்த விளம்பரப்படங்களில் முதல் படத்தில் அழுக்கு துணியையும், இரண்டாவது படத்தில் சோப்பால் துணி துவைப்பதும், முன்றாவது படத்தில் வெண்மையாக இருக்கும் துணியும் இருந்தது. எல்லா நாடுகளில் இந்த சோப்பு நன்றாக விற்கப்பட்டாலும், அரபிய நாடுகளில் விற்கப்படாதா காரணம், அவர்கள் வலது புறத்திலிருந்து இடதுப்புறமாக படிப்பது தான். உலகப்புகழ் பெற்ற சோப்பாக இருந்தாலும் அந்த நாட்டில் சோப்பை விற்க எப்படி அனுகுவது என்று தெரியவில்லை.

அரசியல், மருத்துவம், சட்ட அலோசனை, பக்தி இப்படி எல்லாவற்றிக்கும் விளம்பரங்கள் தேவை என்றாகிவிட்டது. சேவை என்று கருதப்பட்ட தொழிலெல்லாம் பணத்தேவையை நிபர்த்தி செய்யும் வேலையாக மாறிவிட்டது. சேவைத் தொழிலுக்கு எப்பொது விளம்பர அனுகு முறை தேவைப்பட்டதோ மக்களும் அந்த தொழிலையெல்லாம் வியாபாரம் என்று நினைக்க தொடங்கிவிட்டார்கள்.

சேவை அனுகுமுறை இருந்த வரையில் மருத்துவம், பக்தி, வழக்கறிஞர் தொழில்களெல்லாம் மதிக்கப்பட்டது. வியாபார ரிதியாக அனுகுமுறை தேவைப்பட்டதோ எல்லா தொழில்களும் பணம் சம்பாதிப்பதே குறிக்கொள்ளாக ஆகிவிட்டது.

இன்று நல்ல அனுகுமுறையே தொழிலாக தொண்டுள்ளார்கள். ஆங்கிலம் தெரியாமல் வேலையில் கடினமா ? கவலை வேண்டாம். ஒரு மாதத்தில் ஆங்கிலம் கற்கலாம். எங்களிடம் வாருங்கள். நாங்கள் கற்று தருகிறோம்.

நடிக்க ஆசையா ? எங்களிடம் வாருங்கள். நடிப்பு பயிற்சி அளித்து சின்னத்திரையில் நடிக்க உதவிச் செய்கிறோம்.

எங்களிடம் கணிப்பொறி கற்றுக்கொள்ளுங்கள். பயிற்சி முடித்ததும் வேலை கிடைப்பதற்கு நாங்கள் உத்தரவாதம்.

யாரிடம் எப்படி அனுகுவது என்று தெரியாதவர்களை வியாபார ரிதியாக அனுகுவது இன்றைய தொழிலாகிவிட்டது. பணம் இருந்தால் போதும் நம்மை தேடி வந்து அனுகுகிறார்கள்.

முன்பெல்லாம் வங்கியில் கடன் வாங்குவது குதிரை கொம்பாக இருக்கும். ஆனால், மாத சம்பளம் ரூ.5000 வாங்குபவர்களை கூட தேடி கண்டு பிடித்து கடன் தருவதாக அனுகுகிறார்கள். கடன் வாங்க நல்ல அனுகுமுறை சென்று, கடன் கொடுக்க நல்ல அனுகுமுறை தேவைப்படுகிறது.

பேச்சு, உடை, திறமை இவை எல்லாவற்றிற்கும் நல்ல அனுகுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல அனுகுமுறையால் மற்றவரை கவர்ந்துவிட்டால், அதன் பிறகு வரும் தவறுகள் கூட பெரிதாக தெரிவதில்லை.

இன்றைய இந்தியனுக்கு யாரை எப்படி அனுகுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை தேடும் போது தேர்வுக்கு நன்றாக படித்து தன் திறமையை முதன்மையாக வைத்து தேடுகிறான். அரசாங்கத்தில் வேலை தேடும் போது சிபாரிசுகளும், பணத்தையும் மூலதனமாக கொண்டு வேலையை தேடுகிறான்.

உலக வங்கி கூட இந்தியாவிற்கு கடன் தருவது மனிதர்களை மதிக்கும் நல்ல அனுகுமுறையே காரணம்.

(நன்றி : சிஃபி.காம்
http://tamil.sify.com/fullstory.php?id=14585769 )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails