வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, December 28, 2009

நாகரத்னா பதிப்பக புத்தகங்களை வாங்க...!!

வணக்கம் நண்பர்களே !

நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்களை வாங்க நினைப்பவர்கள் கீழ் காணும் முகவரியில் வாங்கலாம்.

எனது கீதை - கட்டுரை
நடைபாதை - சிறுகதை
என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை
காந்தி வாழ்ந்த தேசம் - கவிதை

நன்றி,
குகன்

Sunday, December 27, 2009

தினமலரில் நாகரத்னா நூல் வெளியிட்டு நிகழ்ச்சி

27.12.2009 அன்று வெளியான தினமலரில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழாவை பற்றி செய்து வந்துள்ளது.

அதை கத்தரித்து கீழே குறிப்பிட்டுள்ளேன்.



நாகரத்னா நூல்கள் இணையத்தில் வாங்கும் வசதி விரைவில் அறிவிக்கப்படும்.

Friday, December 25, 2009

புத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது !

இன்று (25.12.09) காலை 10.30, மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டப்பத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

அண்ணன் 'கேபிள்' சங்கர், நிலா ரசிகன் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

கிறிஸ்மஸ் தினமன்று காலையில் நூல் வெளியீட்டு விழா என்றதும் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்தேன். அரங்க இருக்கைகள் நிரம்பும் அளவிற்கு கூட்டம் இருந்தது.

காந்தி வாழ்ந்த தேசம் - கவிதை நூலை, மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்) வெளியிட திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17) அவர்கள் பெற்றுக் கொண்டார்.

என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூலை, திருமதி. கிரிஜா ராகவன் வெளியிட கவிஞர். கார்முகிலோன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழா முடிவில் 'காந்தி வாழ்ந்த தேசம்' தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலில் கவிதை எழுதிய பதிவர்கள் சான்றிதழ், புத்தகம் பெற தங்கள் முகவரியை மின்னஞ்சலில் அனுப்பவும்.

நாகரத்னா பதிப்பகத்தின் நான்கு நூல் சென்னை புத்தகக் கண் காட்சியில் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Sunday, December 20, 2009

நாகரத்னா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா !

வரும் வெள்ளி (25.12.2009) அன்று, காலை 10.30 மணிக்கு, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு வெளியீட்டு நடைப்பெற உள்ளது.

தலைமை : திருமதி. கிரிஜா ராகவன்(ஆசிரியர், 'லேடீஸ் ஸ்பெஷல்' மாத இதழ் )

காந்தி வாழ்ந்த தேசம் - 50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு.

வெளியிடுபவர் : மாம்பலம். திரு.அ.சந்திரசேகர் ( நிறுவனர், சந்திரசேகர் பிலடர்ஸ்)
பெறுபவர் : திரு. டி.சுகுமார் ( உரிமையாளர், அனுஷ் பர்னீச்சர், சென்னை - 17)

தொகுப்பு நூலில் கவிதை எழுதிய கவிஞர்களுக்கு திரு.ஆதி ('சிலந்தி' திரைப்பட இயக்குநர்) சான்றுகள் வழங்கவுள்ளார்.

என்னை எழுதிய தேவதைக்கு - சிறுகதை நூல்

வெளியிடுபவர் : திருமது. கிரிஜா ராகவன்
பெறுபவர் : கவிஞர். கார்முகிலோன்
தொடர்ந்து நூல் பெறுபவர் : திரு. ஜே.ரமேஷ் ( உரிமையாளர், 'Bigtop Travels')


100 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்கள் விழா அரங்கில் ரூ.80/-க்கு கிடைக்கும்.

என்னுடன் தோழர் தனஞ்ஜெயன் அவர்கள் தனது இரண்டு கவிதை நூல் வெளியிடுகிறார்.

மழையில் குடை பிடித்துப் போகாதே ! - கவிதை நூல்

வெளியிடுபவர் : திரு. 'யார்?' கண்ணன் ( திரைப்பட இயக்குநர்)
பெறுபவர் : திரு. ஏ.எல். ஆறுமுகம் ( நிறுவனர், A.L.A.Foundation)

காற்றில் கவிதை உலா - கவிதை நூல்
வெளியிடுபவர் : திரு.நீலன் ( 'அலிபாபா' திரைப்பட இயக்குநர்)
பெறுபவர் : திரு. எம். இருளப்பன் ( நிறுவனர், D.V.M சேவா பாலம் அமைப்பு)


இடம் : சந்திரசேகர் திருமண மண்டபம்
34, லேக்வியூ சாலை,
மேற்கு மாம்பலம், சென்னை-33,
(கிட்டு பாற்க் எதிரில், போஸ்டல் காலனி அருகில் )


அனைவரும் வருக.....!!

Saturday, December 19, 2009

80/20 - ஒரு புதிய ஆட்டம் - (பகுதி - 2)

முதல் பகுதி

சென்ற பதிவில் 80/20 தத்துவத்தை பற்றி எழுதியிருந்தேன். பலர் அதை ஒரு ‘Business Principle’ ஆக தான் பார்க்கிறார்கள். நாம் வாழ்க்கையில் பினைந்து விட்ட ஒன்று என்பதற்கு சில உதாரணங்கள் பார்ப்போம்.

நீங்கள் வேலை முன்னேற 100 சதவீத முழு மூச்சோடு உழைக்க வேண்டும் என்று இல்லை. 20 சதவீதம் செலவழிக்கும் முயற்சியில் தான் உங்கள் 80 சதவீத வெற்றி அடங்கி இருக்கிறது. உதாரணத்திற்கு, வேலைக்கு சரியான நேரத்திற்கு செல்லுதல், வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக முடித்தல், நாகரிகமான உடை அணிந்து அலுவலகம் வருதல் போன்ற சின்ன சின்ன விஷ்யங்கள் உங்கள் மேல் மேலாளருக்கு நல்ல எண்ணம் வரும். அதுவே உங்கள் 80 சதவீத வெற்றிக்கு காரணமாக இருக்கும்.



20 சதவீத உற்பத்தி பொருள் நிறுவனத்திற்கு 80 சதவீத லாபத்தை தருகிறது. ஒரு பொருளை விற்றால் நான்கு மடங்கு லாபம் சம்பாதிக்கும் படி தான் பொருளின் விலையை நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும்.

20 சதவீத வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் 80 சதவீத வருமானத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, எல்.ஐ.சி முகவர் தொடர்பில் இருக்கும் வாடிக்கையாளர் தெரிந்தவர்களுக்கு சிபாரிசு செய்வதை சொல்லலாம்.

நாட்டில் இருக்கும் 20 குற்றவாளிகள் தான், 80 குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறார்கள். 20 மோட்டார் வாகனங்களால் தான் 80 விபத்துகள் நடக்கிறது. 20 சதவீதம் வீட்டை அழகு படுத்தினால் 80 சதவீதம் பார்க்க அழகாக இருக்கும்.

80 சதவீத ஓட்டுகளில், இருபது சதவீத ஓட்டுகளை பெற்று தொகுதி வெட்பாளர் வெற்றி பெருகிறான்.

இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம்.இவ்வளவு எதற்கு... ஒரு பாரில் 20 குடிகாரர்கள் 80 பாட்டில் சரக்கு குடிக்கிறார்கள். ( இது ரொம்ப எளிமையான உதாரணம் ! )

சரி...! 80/20 நம் வாழ்க்கையில் அன்றாடம் நடக்கிற ஒன்று என்று ஏற்றுக் கொண்டு இருப்பீர்கள். அது என்ன 80/20.... ஏன் 50/50, 60/40 என்று இருக்க கூடாதா...?? இருக்க முடியாது என்பது தான் வல்லுநர்களின் கருத்து.

ஒவ்வொரு பிரிவில் சேர்ந்த வல்லுநர்கள் தங்களிடம் இருக்கும் தகவல்களை வைத்து ஆய்வு செய்த போது, முடிவில் 80/20 நெருக்கமாகவோ அல்லது அதற்கு மேலாக தான் வந்தது. அதனால், 80/20 என்று இந்த தத்துவதிற்கு பெயர் வைத்துவிட்டார்கள்.

அப்படி என்ன தகவல்கள் வைத்து ஆய்வு செய்தார்கள்...??? அடுத்த பதிவில்.

Friday, December 18, 2009

ஜெயிலுக்கு போறேன்.... நானும் ரவுடி தான்

டிசம்பர் மாதம் கச்சேரி மழை மட்டுமல்ல... புத்தக மழையும் பொழியும் என்று இந்த மாதம் நடந்து வரும் பல புத்தக வெளியீட்டு விழா காட்டியுள்ளது. பல புது பதிப்பகங்களும் களத்தில் குதித்துள்ளது. இதில் அடியேனும் பங்கு பெறுகிறேன் என்பதில் மகிழ்ச்சி.

சரி... ரொம்ப மொக்க போடமா நேர விஷயத்துக்கு வா... என்று நீங்கள் சொல்லுவது புரிகிறது.

வரும் டிசம்பர் 25ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு, மாம்பலம் சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

என்னை எழுதிய தேவதைக்கு... - (சிறுகதை தொகுப்பு)



பதிப்பகம் தொடங்குபவர்கள் செய்ய கூடாத பெரிய முயற்சியை செய்திருக்கிறேன். நான் சொந்தமாக எழுதிய நூலை வெளியீடுவதை தான் சொல்கிறேன்.

அடுத்தவர் எழுதிய நூலில் சோதனை முயற்சிகள் செய்வதை விட நான் எழுதிய நூலில் செய்வது பரவாயில்லை என்று தோன்றியது.அந்த சோதனை (?) முயற்சித் தான் இந்த புத்தகம்.படிப்பவர்களுக்கு சோதனையாக இருக்காது என்ற நம்பிக்கையில் 'காதல் சிறுகதைகள்' மட்டும் தேர்வு செய்து தொகுத்துள்ளேன்.

பக்கங்கள் : 96
விலை : ரூ.55/-


காந்தி வாழ்ந்த தேசம் (கவிதை தொகுப்பு)



50 கவிஞர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல். முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துக்காக தொகுக்கப்பட்ட நூல் என்று சொல்லலாம். ( நூல் வேலை தொடங்கும் முன்பே 50 பேரிடம் புத்தக பெயர் சென்று அடைந்து விட்டதே !) பல எழுத்தாளர்களின் தொடர்பும் கிடைத்திருக்கிறது.

பக்கங்கள் : 80
விலை : ரூ.45/-

வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரமுகர்களை பற்றிய விபரங்கள் அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.

பதிவர் நண்பர்கள் அனைவரும் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Tuesday, December 15, 2009

பிச்சைக்காரி !?



கருவில் சுமக்காத குழந்தையை
கையில் சுமந்து
யாசகம் கேட்ட பிச்சைக்காரி !

குமரியாக இருந்தாலும்
அன்னை வேடத்தில்
அனுதாபத்தை காசாக்க
காரின் ஜன்னல் வெளியே
கைய்யேந்தினாள் !

பெண் என்றதும்
காற்றடித்த காகிதம் போல்
சீமானின் சட்டை பையில்
தெரிந்தே விழுந்தது
ஐந்நூறு ரூபாய் காகிதம் !

இரவில்
அதுவே அவள் ஆடையானது !
காலையில்
மீண்டும் அன்னையானாள்
அடுத்த நாள் இரவை கடப்பதற்கு... !

**

உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை

Monday, December 14, 2009

அப்தூல் கலாமும், சுஜாதாவும்

'கலாம்' என்ற மந்திர சொல் எத்தனை காலம் கடந்தாலும் இளைஞர்களால் உச்சரிக்கப்படும். அதிபர் பதவி அவருக்கு அலங்காரமாக இருந்தது என்று சொல்வதை விட, அவர் அதிபர் பதிவிக்கு பெருமை சேர்த்தார் என்று சொல்லலாம். அப்படிப் பட்ட 'அப்தூல் காலம்' பற்றி இரண்டு சுவையான நிகழ்ச்சி. அதுவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுடன்.

*

1.



ஒரு சமயம் சில ரஷ்ய விஞ்ஞானிகள் ஹைதராபாத்திற்கு தொழில் பேச வந்திருந்தார்கள். அதில், கலாமும், சுஜாதாவும் கலந்து கொண்டனர். முக்கிய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து விட்டதைக் கொண்டாடும் சந்தோஷத்தில் ஒரு ரஷ்ய விஞ்ஞானி கலாம் கையில் ஒரு கோப்பை ஓட்காவை திணித்து விட்டு அதை அருந்துமாறு வற்புற்த்தினார். கலாம் சுத்த சைவம் மட்டுமல்லல் எந்தவித மதுபானங்களையும் தொடாதவர். விளக்கிச் சொன்னாலும் ரஷ்யருக்கு ஆங்கிலம் புரியாது. அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

கலாம் தர்ம சங்கட நிலையில் சுஜாதாவிடம் வந்து, " இந்த பானம் தண்ணி மாதிரி தான் இருக்கு. நீ நேரா போய், இதே மாதிரி கிளாஸ்ல கொஞ்சம் வெறும் தண்ணி எடுத்துட்டு வந்திரு. என்கிட்ட யாருக்கும் தெரியாம கொடுத்து மாத்திரு" என்றார். சுஜாதா அவர்களும் அவ்வாறே செய்து விட, கலாம் ஒரு கோப்பை தண்ணீரை ரஷ்யர்களை நோக்கி உயர்த்தி 'சியர்ஸ்' என்றார்.

***

2.

கலாமும், சுஜாதாவும் திருச்சியில் இருந்த காலத்திலே நல்ல நண்பர்கள். இருவருக்கும் இந்திய ராக்கெட்ட் இயலைப் பற்றி திப்பு சுல்தானிலிருந்து ஆரம்பித்து, ஒரு புத்தகம் எழுதுவதாகத் திட்டம் போட்டனர். சுஜாதா அவர்கள் கலாமை எப்போதும் விமானத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பார்த்தாலும், " கலாம் என்னாச்சு புத்தகம்" என்பார்.

"இதோ ! அடுத்த மாசம் லீவு எடுத்திட்டுப் பத்து நாள் வரேன்யா ! ரெண்டு பேரும் முதல்ல மைசூர் போவோம். அங்க எழுத ஆரம்பிக்கலாம் ! " என்பார்.

அந்தப் புத்தகம் கலாமின் கனவை போல மாற்றிவிட்டது 'சுஜாதாவின் மரணம்.

Friday, December 11, 2009

80/20 - ஒரு புதிய ஆட்டம்

9 மணிக்கு ராமேஷ் அலுவலகத்தில் இருக்க வேண்டும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, 8மணிக்கு சென்றால் தான் முடியும். உடல் அசதியில் 7 மணி வரை தூங்கிவிடுகிறான். அவசர அவசரமாக குளித்து பாத்ரூம் விட்டு வெளியே வரும் போது காலில் அடிப்பட்டு விடுகிறது. எப்போதும் பொறுமையாக இருப்பவன், அன்று மனைவி சமையல் சரியில்லை என்று கரித்து கொட்டினான். வண்டியை வேகமாக ஓட்டும் போது ஒருவர் மீது மோதி சாலையில் சிறு பிரச்சனை யாகிறது. கடைசியில் ஒரு வழியாக அலுவகத்திற்கு 9.30 மணிக்கு வந்து சேருகிறான். அரை மணி நேரம் காலதாமதமாக வந்ததிற்கு, மேலாளரிடம் ‘அர்ச்சனை’ வாங்குகிறான். அன்று முழு அவன் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை.



ரமேஷ்யின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் ? காலையில் சரியான நேரத்தில் எழுந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. ஒரு இடத்தில் தவறு நடந்ததால், பல இடங்களில் அதனின் பாதிப்பு தெரிகிறது. இதே சூழ்நிலையை எதிர்மறையாக சிந்திக்காமல், நேர்மறையாக சிந்தித்து பாருங்கள்.

ரமேஷ் சரியான நேரத்தில் எழுந்து சீக்கிரம் அலுவலகத்துக்கு தயாராகுகிறான். மனைவியின் சமையலில் குறை இருந்தாலும் சிரித்தப்படி சொல்லுகிறான். நேரம் அதிகமாக இருப்பதால் பொறுமையாக வண்டி ஓட்டி மேலாளருக்கு முன் செல்கிறான். மேலாளர் எதுவும் சொல்லலாததால் அன்றைய தினம் தன் வேலையில் தவறும் நடக்காமல் பார்த்துக் கொண்டான்.

சிறு புள்ளி தான். அதில் இருந்து சரியாக போனால் நேரான கோடு வரும். இல்லை என்றால் அது கிறுக்கல் தான். இதை தான், " முதல் கோணல் முற்றிலும் கோணல்" என்று பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். 80/20 தத்துவம் என்னவென்றால், முதல் புள்ளி சரியாக இருந்தால் போதும். கோடு என்ன… ஒரு பெரிய வீடே கட்டி விடலாம்.

"குறைந்த ஆட்களை வைத்து, அதிகமாக உற்பத்தி செய்தல்.
சிறிய நட்பு வட்டத்தில் இருந்து, பெரிய நட்பு வட்டத்தை உருவாக்குதல்.
குறைவாக முதலீடு செய்து பெரிதாக லாபம் பார்ப்பது"
- 80/20 அடிப்படை தத்துவம் இது தான்.

80/20 என்பது வியாபார தத்துவம் அல்ல.... நம் அன்றாட வாழ்க்கையில் தினமும் சந்திப்பது. சந்தித்துக் கொண்டு இருப்பது. சந்திக்க போவது....

20/20. 50/50 என்று எத்தனையோ ஆட்டம் பார்த்துவிட்டோம். இதுவும் ஒரு ஆட்டம் தான். ஆடி பார்த்துவிடுவோம்.

சினிமா, வியாபாரம், கல்வி, எழுத்து என்று நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் இந்த தத்துவத்தை தெரிந்துக் கொண்டால்.... சிகரத்தை தொட்டுவிடலாம்.

இதற்கு உதாரணம் அடுத்த பதிவில்........

Tuesday, December 8, 2009

பேனா திருடன்

மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிர்களும் திருடர்கள் தான். ஏதாவது ஒரு கட்டத்தில் எதையாவது திருட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும். சிலர் முயற்சித்து வெற்றி பெற்று இருப்பார்கள். ஒரு சிலர் பயத்தில் முயற்சிக்காமல் விட்டு இருப்பார்கள். அப்படி ஒரு 'ஆசை'. தப்பு.... 'ஆசை' என்று சொல்ல கூடாது. 'வேகம்' என்று தான் சொல்ல வேண்டும். 'பேனா' திட வேண்டும் என்ற வேகம் என்னுள் எழுந்தது.



சனிக்கிழமை (5.12.09) அன்று அவரமாக திருச்சி செல்ல வேண்டிய வேலை வந்தது. அதனால், தக்கலில் டிக்கெட் வாங்கி அரை மணி நேரம் முன்பாகவே ஏழும்பூர் ரெயில்வே நிலையத்திற்கு சென்றுவிட்டேன். பயண சமயத்தில் என்னிடம் எப்போது மூன்று புத்தகங்களாவது இருக்கும். ராமேஸ்வர எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் என் சீட்டை தேடி கண்டு பிடித்து அமர்ந்தேன். பையில் இருக்கும் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய 'சில நேரங்களில் சில அனுபவங்கள்' புத்தகத்தை படிக்க எடுத்தேன்.

புத்தகம் படிக்கும் போது எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டு குறித்துக் கொள்வேன். முடிந்தவரை கோடு, கட்டம், வீடு எல்லாம் கட்டி அடுத்தவர் அந்த புத்தகத்தை படிக்க முடியாமல் செய்துவிடுவேன். அப்படி அந்த புத்தகத்தை படிக்கும் போது கோடு போட சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்தேன். எழுதவில்லை.

தட்டி பார்த்தேன். கிறுக்கினேன். ஹூம். ஒன்றும் பலனில்லை. கடைசியில், பலூனை உதுவது போல் பேனாவை திறந்து ரிப்பில்லை எடுத்தேன். அப்போது தான் கவநித்தேன். பேனா இங்க் ரிப்பில் பின் வழியாக வழிந்து இருக்கிறது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அதை ஜன்னல் வழியாக தூக்கி ஏறிந்தேன்.

வெளியே வந்து புது பேனா வாங்கலாம் என்று பெட்டியுடன் இறங்கினேன் ( அந்த கம்பார்ட் மெட்டில் நான் தான் முதலில் ஏறியிருந்தேன். பெட்டியை தனியாக விட்டு வர பயமாக இருந்தது.) பிளாட் பாரம் கடை முழுக்க முழுக்க டீ, காபி, கூல் டிரிக்ஸ், பேப்பர் என்று இருந்தது. ஆனால், எந்த கடையிலும் பேனா இல்லை. ட்ரெயின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை இருக்கும் கடைகளை அலசிவிட்டேன். பேனாயில்லை. அந்த நேரம் பார்த்து பலர் சட்டை பையில் பேனாவுடன் அலைந்து எனக்கு எரிச்சல் மூட்டினர். அவர்களை பார்க்க பொறாமையாக இருந்து. கோபம் கூட வந்தது.

ஐந்து மணி நேர பயணத்தில் புத்தகத்தை எப்படி கோடு போடாமல் படிப்பது ? கோடி கணக்கில் செலவு செய்யும் தென்க ரயிலே ஸ்டேஷன் கட்டி என்ன பயன் ? எந்த ஒரு கடையிலும் பேனா விற்பனைக்கு இல்லை. இப்போது ரயில் புரப்பட இன்னும் பத்து நிமிடம் தான் உள்ளது. வெளியே சென்று வாங்கி வருவதும் சாத்தியமில்லை.

வேறு வழி இல்லை. பேனாவை திருட வேண்டியது தான். யாரிடமாவது பேனாவை வாங்கி அப்படியே ஒடிவிடலாம் என்று முடிவு செய்தேன். என் கெட்ட நேரம் அவர்களின் நல்ல நேரம். என் கண் முன்னே இந்தி பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் பேனாவை ஆட்டைய போட்டால், 'தமிழன்' பேனா எடுத்து ஓடிவிட்டான் என்பார்கள். அதனால் வேண்டாம். தமிழ் பேச தெரிந்தவர்களிடம் சுடலாம் என்று இருந்தால் அவர்கள் சட்டை பையில் பேனா இல்லை. யாராவது ஏமாளி கிடைக்க மாட்டானா திரும்பி வந்தேன்.

'S2' கம்பார்ட்மென்ட். நான் பயணம் செய்ய வேண்டிய கம்பார்ட்மென்ட். ஏமாற்றத்தோடு என் இடத்துக்கு வந்து அமர்ந்தேன். வேறு வழியில்லாமல் படிக்க தொடங்கினேன். அப்போது ஒரு முதிய தம்பதியர்களை ஏற்றிவிட சபரிமலை மாலை போட்ட ஒருவர் வந்தார். பாக்கெட்டில் 'செல்லோ' பேனா. அவரிடம் திருட மணமில்லை. ஆனால், எனக்கு பேனா வேண்டும். ஐந்து மணி நேரம் கிறுக்காமல் புத்தகம் எப்படி படிப்பது.

கடைசியில் துணிந்து விட்டேன். செய்து விட வேண்டியது தான். தப்பாக இருந்தாலும் வெட்கத்தை விட்டு செய்து விட்டேன். ஆம்.... !

"ஸார் ! உங்க பேனா கொடுக்க முடியாமா !" என்று கேட்டேன். நான் திருப்பி கொடுப்பேன் என்ற நம்பிக்கையில் கொடுத்தார். என் நிலைமையை ( இது எல்லாம் நிலைமையா ??) அவரிடம் சொன்னேன். "நீங்களே பேனாவ வச்சிக்கோங்க" என்று சொல்லி சென்றுவிட்டார். ( மனதில் என்ன நினைத்தாரோ ??)

அப்பாடா ஒரு வழியாக பேனா கிடைத்துவிட்டது ! இது எப்படி பேனா திருட்டாகும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் எழுதவில்லை என்று தூக்கி போட்டேனே அது திருட்டு பேனா தான்.

Saturday, December 5, 2009

சில கேள்விகளும் கலைஞரின் பதிலும்

எப்படி இருந்தால் அது கலை ? எப்படி இருந்தால் எழுத்து இலக்கியமாகிறது ?

எதோ ஒருவகையில் உணர்வுகளை வருடுவது கலை ! என்றைக்கும் சாகாத எழுத்து, இலக்கியமாகிறது.

**



சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கட்டுரை, கவிதை என்று எல்லா வகையிலும் முயற்சி செய்திருக்கிறீர்கள். இந்த இலக்கிய வடிவங்களில் உங்களுக்குப் பிடித்து எது ? எந்த வடிவத்தில் தேர்ருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் ?

நீங்கள் குறிப்பிடும் எல்லா இலக்கிய வடிவங்களிலும் எனக்கு மிகுந்த ஆர்வமும், அக்கரையும், அயற்வில்லா முயற்சியும் உண்டு ! எதில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதை மதிப்பெண் வழங்கிட உரிமை பெற்றுள்ள மக்கள் தான் தீர்மானிக்க முடியும்.

**

முன்பு குமுதத்தில் உங்களை விமர்சித்து கார்ட்டூன், செய்திகள் வந்தன என்பதற்காக குமுதத்தில் எழுதியதை நிறுத்தியது, ஜனநாயகம் போக்குதானா ? விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா நீங்கள் ?

குமுதத்தில் என் தொடர் வெளிவந்த போது அரசியல் அடிப்படையில் என்னை விமர்சித்தும், கேலி புரிந்தும், எத்தனையோ கட்டுரைகள் கார்ட்டூன்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை நான் ரசித்திருக்கிறேன். ஆனால், எனது தமிழ் அறிவையே கேள்விக்குறியாக்கி "கார்ட்டூன்" போட்ட போதுதான் குமுதம் ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, " இனி தொடர்ந்து குமுதம் இதழில் எழுதிட இயலாதவனாக இருக்கிறேன்" எனத் தெரிவித்திட நேர்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற நிகழ்ச்சி.

**
டாக்டர் பட்டம் பெற்றதால், உங்களுக்கு என்ன புது புகழ் வந்தது என்று நினைக்கிறீர்கள் ?

புத்துப்புகழ் எதுவும் வரவில்லை. அதனால் தான் என்னைப் பொறுத்த மட்பில் என் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' பட்டத்தை நான் பயன்படுத்துவதில்லை. பரவாயில்லை, "புது புகழ் வந்ததா ?" என்று கேட்பதின் மூலம் "பழைய புகழ்" இருப்பதாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி ! அதாவது, அந்தப்பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பே !

**

1936-1937ம் ஆண்டு பள்ளிப் பாடத்தின் வாயிலாக நீதிக் கட்சிகளைப் பற்றி அறிந்து கொண்டவர் நீங்கள். உங்கள் ஆட்சிக் காலத்தில், திராவிட இயக்கம் பற்றி மாணவர்கள் அறிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?

பெரியார், அண்ணா மற்றும் தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளும் - அவர்தம் கருத்துக்களும் கழக ஆட்சிக்காலத்தில் பாட புத்தங்கள்களில் இடம்பெற்றன.

**

திராவிட இயக்கத் தலைவராகிய உங்களின் குடும்பத்தார் நடத்தும் பத்திரிகைகள் குங்குமம், குங்குமச் சிமிழ், சுமங்கலி போல சனாதானத்தின் குறியீடுகளைத் தூக்கிப் பிடிப்பது ஏன் ? யாரைத் திருப்திப்படுத்த இந்தப் பெயர்கள் ?

உங்களுக்கு அந்தப் பெயர்கள் அல்லது பொருள்கள் சனாதனத்தின் குறியீடுகளாகத் தோன்றலாம். பழங்காலர் தோட்டு தமிழ் நாட்டுப் பெண்களின் பழக்கத்திலிருக்கும் பண்பாட்டுச் சின்னங்கள் என்றும் கூறலாமல்லவா ? உண்டியல் என்றால் உடவடியாக கோயிலில் இருக்கிற ஒன்று தான் நினைவுக்கு வருகிறது. அதற்காக வீட்டில் தாய்மார்கள் சேமிப்புக்காக உண்டியலைப் பயன்படுத்துவது சனாதனமாகிவிடுமா ?

**

நவீன இலக்கியம் என்றால் என்ன ? ஆங்கிலம் கலந்து எழுதுவது தான் " நவீனம்" என்று கருதுகிறீர்கள். இலக்கியத்தில் நவீனத்துவம் என்றால் என்ன ?

ஆங்கிலம் கலந்து எழுதுவது தான் நவீன இலக்கியம் என்ற கருத்து எனக்கு உடன்பாடல்ல ! இலக்கியத்தில் நவீனத்துவம் என்பது ; வளர்ந்து வரும் சமூதயத்தில் புதிய சிந்தனைகளைத் தூண்டுவது.

**

சங்கத் தமிழ் மாதிரி, தொல்காப்பியம் பற்றி எழுதுகிறீர்களாமே ? அகம், புறம் மட்டுமே எழுதுவீர்களா ? எழுத்து, சொல்லையும் எழுதுவீர்களா ?

அந்தப் பணிக்கான ஓய்வு இன்னும் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் பற்றி எழுத முயற்சி தொடங்கினால், முதல் கட்டமாக பொருளதிகாரத்தைத்தான் எடுத்துக் கொள்வேன்.

**

எழுத்துத் துறைக்கு மட்டும் நீங்கள் வராமல் இருந்திருந்தால், உங்கள் அரசியல் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ?

அரசியல் களத்தில் நின்று போராட எனக்குத் தேவையான ஒரு படைக்கலன் குறைந்திருக்கும்.

**
திரவிட இயக்கப் பாரம்பரியத்தில் ஒரு பிராமணப் பெண்மணி முதல்வராக நேர்ந்தது, திராவிட இயக்கத்தின் தத்துவப் பின்னடைவு காரணம் என்று சொல்லலாமா ? திராவிட இயக்கத்தின் மூத்த தளபதி என்ற நிலையிலிருந்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

தத்துவத்தின் பின்னடைவு அல்ல ! தத்துவங்களால் ஏற்பட்ட பின்னடைவு !

**

'1950 ம் ஆண்டுகளில் தாங்கள் எழுதிய எழுத்துப் பாணியை 90 களிலும் பயன்படுத்துவது, தங்கள் எழுத்து வளர்ச்சியைக் காட்டுவதாக இல்லை' என்று விமர்சகர்கள் கூறுகிறார்களே, அதற்குத் தங்கள் பதில் என்ன ?

என் எழுத்து வளர்ச்சியைக் காட்டும் அளவுகோல் நீங்கள் குறிப்பிடும் அந்த எரிச்சல் விமர்சகர்களிடம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.


நானும் இலக்கியமும் - பிரபஞ்சனின் கேள்விகளுக்கு கலைஞர் அளித்த பதில்கள். கலைஞர் கையெழுத்திலேயே அச்சிடப்பட்டுள்ள நூல்.

பக்கங்கள்.96. விலை.70
நக்கீரன் வெளியீடு

Thursday, December 3, 2009

குறும்படம் : என் மேல் விழுந்த மழைத்துளி

பதினைந்து நிமிடத்தில் ஒரு காதலை அழகாக சொல்ல முடியும் நிருபித்த தமிழ் குறும்படம். ஏற்கனவே... தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட கதை தான். ஆனால், இரண்டுரை மணி நேரம் சொன்ன விஷயத்தை சில நிமிடத்தில் உணர வைப்பதை பாராட்டியாக வேண்டும்.

கதாநாயகனாக வரும் அருள், காதலில் காட்டும் முகபாவனையும் மிக அருமை. இறுதி காட்சியில் நடிப்பு ( 'சேது' விகிரம் ஞாபகம் வந்தாலும்) அனுபவத்து நடித்திருக்கிறார்.

'ஐயோடா...', 'சாம்பாரே' சொல்லும் போது 'கதாநாயகி' அஷ்யானா தாமஸ் குரல் கொஞ்சுகிறது. கண் சிமிட்டுவதும் அழகு. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் தெரிவதால் என்னையும் அறியாமல் அவளை காதலிக்க வைக்கிறார். ( என் மனைவி இந்த பதிவை படிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்...). நடித்ததோடு இல்லாமல் 'சிறம் தொடும் மழைத்துளி...' என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

பாடலிலே இருவரது காதலை மனதில் பதிவைத்துவிட்டுகிறார் இசையமைப்பாளர் நந்தா.

தன் காதலி கொடுக்கும் பரிசு கொடுக்கும் , அதே பரிசில் தன்னை முடித்துக் கொள்ளுவதும் மனதை நெருடுகிறது. இரண்டு பேர் காதல் காட்சியை பார்க்கும் ஒரு படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. (கதை, திரைகதை, வசனம், பாடல் எல்லாம் இவரே ! )

குறும்படம் என்றால் மெசேஜ் என்று சொல்லாமல் ஒரு காதல் கதையும் சொல்லலாம் என்று காட்டுகிறது இந்த படம்.

Part - 1



Part - 2



இவர்கள் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Wednesday, December 2, 2009

மு.க.ஸ்டாலின்

ஜி.ஆர்.சுவாமி

"எல்லோரும் ஸ்டாலினை நான் உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. அவரை உருவாக்கி விட்டதே இந்திரா காந்தி தானே ! பேசாமல் கிடந்த அவரை மிசா கைதியாக்கி, சிறையில் போட்டு, அரசியலில் அவரை உருவாக்கியதே இந்திரா காந்தி தானே !"
– கலைஞர்




நாளைய தி.மு.க கட்சியின் எதிர்காலம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் இருக்கிறது எந்த வித சந்தேகமில்லாமல் தற்போதிய அரசியல் சூழல் தெரிகிறது. அவரை பற்றி தி.மு.க கட்சி சாற்பாக பலர் இப்போதே கொடி தூக்கி நூல்கள் எழுத தொடங்கிவிட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலை ஒரு தலை பச்சமில்லாமல் ஸ்டாலினை பற்றி வந்த புத்தகம் என்று சொல்லும் அளவிற்கு Minimax வெளியீடான ‘மு.க.ஸ்டாலின்’ நூல் அமைந்துள்ளது.

ஸ்டாலின் வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர் மிசாவில் கைதானதில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை உறுதி செய்வது போலவே 'அது ஒரு மிசா காலம்' என்ற தலைப்பில் இந்த நூல் தொடங்குகிறது.

ஜார் மன்னன் ஆண்ட ரஷ்யாவை பாரதியார் " இம் என்றால் சிறைவாசம் ! ஏன் ? என்றால் வனவாசம், இவ்வாறு செம்மை எல்லாம் பாழாகி கொடுமையே கோலோச்சியது " என்பார். அந்த பிரதிபலிப்பு மிசாவின் போதும் அங்கிகெனாதப்படி இந்திய பெருநாட்டில் எங்கும் ஒரே மாதிரி தான் இருந்தது. இக்கொடுமைக்கு ஈடுக்கொடுக்க முடியாதவர்கள், " எங்களுக்கு தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இப்போது கிடையாது, நான் இயக்கத்தை விட்டு விலகி பல நாள் ஆகிவிட்டது" என அறிக்கை விடுவோரும், விளம்பரம் செய்ததோடுமாக இருந்தனர். அந்த சமயத்தில் ஸ்டாலினை கைது செய்து, அவர் கொடுமை படுத்திய காவலர்கள் முயற்சித்தனர். ஸ்டாலினை காப்பாற்றும் முயற்சியில் சிட்டிபாபு இறந்தார். ( சிட்டிபாபு இறந்ததை பற்றி இந்த நூலில் குறிப்பிடவில்லை.)

இப்படி தொடங்கிய ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் தி.மு.க இளைஞர் அணி முக்கிய பொறுப்பு அவரை மேலும் உயர்த்தியது. ஸ்டாலினுக்கு தோள் கொடுத்த தி.மு.க தலைவர்களுள் முக்கியமானவர் வை.கோபால்சாமி. தோள் கொடுத்தவர் ஒரு கட்டத்தில் எதிர் அணியில் சந்திக்க வேண்டிய சவாலை சமாளிக்க வேண்டிய நிலைமை.

ஆ.தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் மேயராக இருந்த போது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேயருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. விளைவு, மாநகராட்சியின் நிர்வாகப் பணிகளில் தேக்கநிலை ஏற்ப்பட்டது. ஒருவர் இரண்டு பதவியில் இருக்க கூடாது என்பதால் தன் மேயர் பதவியை துறந்தார்.

அதுமட்டுமில்லாமல், முதன் முறையில் போட்டியிட்டு அமைச்சரவையில் சுலபமாக வருவது போல் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி எதுவும் கிடைக்கவில்லை. 1976ல் தொடங்கிய ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில், 2006யில் தான் அமைச்சர் பதவி கிடைத்தது. அதுவும் வாரிசு என்ற பெயரில் கிடைத்த பதவி என்று விமர்சனத்துக்கு ஆளானார்.

அரசியலில் தொடக்கத்திலே பல சவால்கள், விமர்சனங்கள் என்று எப்படி சமாளித்தார் என்பதை இன்னும் விரிவாக இந்த புத்தகம் சொல்லியிருக்கலாம். ஒரு சில இடங்களில் புத்தகம் படிக்கும் எண்ணமே வரவில்லை. நாளெடுகழில் சேகரித்த செய்தி தொகுப்பு போல் இருந்தது. குறிப்பாக, தினகரன் அலுவலகத்தில் தீவைப்பு சம்மவமும், அழகிரி, ஸ்டாலின் உறவுமுறையும் சொல்லலாம். சிறு புத்தகம் என்பதால் மேலோட்டமாக செய்திகளை தான் தெரிந்துக் கொள்ள முடிகிறது.


‘ஒரே இரத்தம்’ என்ற திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவராக நடித்திருப்பார். ஸ்டாலின் வெள்ளித்திரை பிரேவரத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஒரு டி.வி தொலைக்காட்சி தொடரில் கூட நடித்து இருக்கிறார். இவரும் சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தினாரா இல்லையா என்று விபரங்கள் இல்லை.

ஸ்டாலின் பற்றிய வாழ்க்கை குறிப்புகளில் மு.க.முத்து, எம்.ஜி.ஆர் படம் எதற்கு ? ஸ்டாலின் சம்பந்தமான வேறு படத்தை போட்டு இருக்கலாம். எதிர் கட்சியில் இருந்த பெருந்தலைவர் காமராஜர், வி.வி.கிரி போன்றவர்கள் ஸ்டாலின் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். அதை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

"கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலினுக்கு அது சாதகமாகவும் இருக்கிறது. பாதகமாகவும் இருக்கிறது. சாதகம் அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. சுலபமாக மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். அதே சமயம் முதல்வரின் மகன் என்பதால் விமர்சங்களும் எழுகிறது. இது பாதகம்." - சோ, துக்ளக் ஆசிரியர் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

இப்படி முன்னனி பத்திரிக்கையாளர் விமர்சனங்களுக்கு ஸ்டாலின் பதில் என்ன ?? ஸ்டாலின் பத்திரிக்கை விமர்சனங்களை எப்படி எதிர்க் கொண்டார் ?? போன்ற விபரங்கள் சொல்ல வேண்டிய ஒன்று.

கலைஞர் குழுமத்தில் சன் டி.வி இருந்த போதும், இப்போது கலைஞர் டி.வி கையில் இருந்தும் ஸ்டாலின் பெரும்பாலும் பேட்டி கொடுத்ததில்லை. அவர் மேல் இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களை பெரிதாகவும் எடுத்துக் கொண்டதில்லை. அரசியல் விமர்சங்களுக்கு பதில் அளிக்கிறார். மேற் குறிப்பிட்ட ஒரு சில குறைகளை ஸ்டாலினை பற்றி பெரிய புத்தகம் கொண்டு வரும் போது கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்.

தமிழ் நாட்டு அரசியலில் வாரிசு அரசியல் என்ற பதம் தவிர்க்க முடியாதது. ஆனால், அது ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. ! (என் கருத்தல்ல.... இந்த புத்தகத்தில் இருந்த இறுதி வரிகள்)

நூலை வாங்க இங்கே...

பக்கங்கள்.79 விலை.25.
Minimax வெளியீடு

Monday, November 23, 2009

எப்படி தான் இப்படி படம் எடுக்குறாங்களோ ??

22.11.09 அன்று, நம் உரத்தசிந்தனை மூன்று குறும்படம் திரையிடல் நிகழ்ச்சி மைலாப்பூர் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் நடந்தது. அந்த குறும்படங்கள் பற்றி என் பார்வையில்...

நண்பர்கள் கலைக்கூடம் வழங்கிய 'என்று முடியும் ?'

இழந்த விவசாய நிலத்தை பார்த்து எங்கும் ஊனமுற்ற விவசாயின் கண்ணீர் காட்சியில் படம் தொடங்குகிறது. தன் நிலத்தை இழந்த சோகத்தை சென்னை 'BPO'வில் வேலை செய்யும் தன் மகனிடம் சொல்ல வருகிறார். 'செல்லக்கண்ணு' என்று பெயர் வைத்த மகன்,'George Bush' என்ற பெயரில் வாழ்கிறான். அவனிடம் பேச கூட அந்த ஏழை விவசாயால் முடியவில்லை.

'அப்பா எப்படி இருக்க ?' என்று கேட்க முடியாத அளவுக்கு அந்த இளைஞன் வேலை பலுவில் இருக்கிறான். மகனிடம் எதையும் சொல்ல முடியாமல் திரும்பி ஊருக்கு செல்கிறார். அப்போது, அவன் மகனின் நண்பனிடம் விஷயத்தை சொல்கிறார். இறுதியாக, அந்த விவசாயி 'எப்ப தான் வாழ போறீங்க..?' என்று கேட்கும் கேள்வி 'சுருக்' என்று இருக்கிறது.

தந்தையிடம் பேச கூட நேரமில்லாத அவசர யுகத்தில் வாழும் இளைஞர்களை இந்த படம் உருக்கமாக காட்டியுள்ளது.

விவசாய நிலத்தை இழந்த சோகத்தை வார்த்தைகளில் சொல்லாமல் பின்னனி வயலின் இசையில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.


கதை , இயக்கம் - சி.ஜே.முத்துகுமார்


கல்வெட்டு திரைக்குடில் வழங்கும் 'கொஞ்சம் கொஞ்சமாய்'

Saxophone, Drum, Piano பின்னனி இசையில் மணலி நகராட்சி காட்டுகிறார். படம் தொடங்கி மூன்று, நான்கு நிமிடங்கள் குளம், செடி, கொடியை காட்டி சலிப்பை ஏற்ப்படுத்துகிறார். ஆனால் இறுதியில், குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக்குடன் சமாதியை காட்டி, சாவு மேளத்தை பின்னை இசையில் முடித்திருக்கிறார்.

பெரிய தொழில்நுட்பம், வசனம், கதாபாத்திரம் என்று எதுவுமில்லை.

'இயக்கைக்கு நாம் கொடுத்த பிளாஸ்டிக் சமாதி' என்ற கவிதை படமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் சொர்ணபாரதி.

ஒளிப்பதிவு, கதை, இயக்கம் - சொர்ணபாரதி


நண்பர்கள் திரைகுழுமம் வழங்கிய 'நடந்த கதை'

சமிபத்தில் சன் டி.வி யில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வந்து ஒரு மாதத்தில் பத்து இடங்களில் திரையிடப்பட்டதாக இயக்குநர் பொன். சுதா அவர்கள் கூறினார். திரையிடப்பட்ட படங்களில் என்னை அதிக கவர்ந்த படமும் இது தான்.

பேரனின் சேருப்பு சத்தத்தில் தன் வாழ்க்கையை புரட்டி பார்க்கிறார் ஒரு முதியவர்.

கதை பின்னோக்கி செல்கிறது. செருப்பு அணிவது அதிகாரத்தின் சின்னமாக வாழ்ந்த காலம்.

ஒரு குழந்தையின் பார்வையில் தன் இனம் கீழ் தெருவில் வெறுமையாக காலில் நடக்க, மேல் தெருவில் செருப்புடன் நடப்பதை பார்த்து ஏங்குகிறது. நாம் ஏன் செருப்பு போட கூடாது ?" என்ற கேள்வி தொடங்கி ஏக்கம் , ஆசை, கனவாக 'செருப்பு' அவன் மனதில் அழமாய் பதிகிறது.

அந்த குழந்தை வளர்ந்து, 'வீரபத்திரன்' என்னும் இளைஞனாக இராணுவத்தில் சேர்கிறான். அவன் முதன் முதலில் ஷூவை தன் காலில் அணியும் போது கண்ணீர் பல தலைமுறைகளின் ஏக்கத்தை காட்டுகிறது.

ஷூ அணிந்து மேல் தெருவில் ஓடும் போது, மேல் குடி மக்கள் அவனை தடுக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மீண்டும் அந்த தெருவில் ஓடிக் காட்டுகிறான். அவன் ஓட ஓட கீழ் தெரு ஒவ்வொரு வீட்டில் வெளியே செருப்பு இருப்பது போல் படம் முடிகிறது.

முதியவர் உணர்வுகளுக்கு உருக்கமான குரல் கொடுத்தவர் 'கவிஞர்' அறிவுமதி அவர்கள்.

'எல்லா இடங்களிலும் வறுமைதான் சேர்ந்து வாழுது'

எங்கள் வலைந்த முதுகில் ஜாதி என்னும் அடிக்கல் இருக்குது'

இறுதியில்,

என் கால்ல தச்ச வலிய என் பேரன் மனசுக்கு உணர்த்தனும்
' என்று சொல்லும் இடம் நெகிழ வைக்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் எடுக்கும் தகுதி பொன். சுதா அவர்களுக்கு இருக்கிறது என்பதை இந்த படம் காட்டியுள்ளது.

மூன்று படங்களை விமர்சித்த அழகப்பன் அவர்கள்,

" குறும்படம்
படுக்கை அறையல்ல..
தாயின் கருவறை"

என்று சொன்ன கவிதை பிரமாதம்.

மூன்று படம் இணையத்தில் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அதன் சுட்டியை குறிப்பிடுகிறேன்.

Thursday, November 19, 2009

யுவன் சந்திரசேகர் : ஏற்கனவே

"ஏற்கனவே கடந்து சென்ற உணர்வுகள்
ஏற்கனவே மனதை பாதித்த சம்பவங்கள்
ஏற்கனவே சிந்தித்த சிந்தனைகள்
ஏற்கனவே சொல்ல நினைத்த வார்த்தைகள்
இப்படி பல 'ஏற்கனவே' கடந்து வந்தவர்களுக்கு
மீண்டும் அதே நினைவலைகள் !!"


இந்த புத்தகத்தை படித்ததும் 'கவிதை' என்ற பெயரில் நான் கிறுக்கியது.



'கானல் நதி' நாவலுக்கு பிறகு 'யுவன் சந்திரசேகர்' அவர்கள் எழுதிய புத்தகத்தை இப்போது தான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

யுவன் சந்திரசேகர் எப்படி நகைச்சுவையாக பேசுவார் என்று சமிபத்தில் நடந்த 'சிறுகதை பட்டறையில் கலந்துக் கொண்டவர்களுக்கு தெரியும். அப்படி கலந்துக் கொண்ட பதிவர்கள் யுவன்சந்திரசேகர் நூல்களை வாசிக்க விரும்பினால், கண்டிப்பாக இந்த நூலை படியுங்கள்.

இவருடைய எழுத்து நடையை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் வளரவில்லை என்பதால், நான் விரும்பி வாசித்த சில வசனங்கள், இடங்கள் மட்டும் மேற்கொள் காட்டுகிறேன். இந்த சிறுகதை தொகுப்பில் வரும் சில வசனங்கள் ஏதார்த்தத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.

'மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு' கதையில்

"ச்சே...! தற்கொலை பண்ணிக்கிறது கோழைத்தனமில்லையா ??"
"வீரனாய் இருந்து பதக்கமாய் வாங்க போறோம் ?"

'புகைவழிப் பாதை'

"கதைகள்லே துக்கம் கூடக் கூட வாசிக்கிறவனுக்கு சந்தோஷம் எப்படிப் பொங்கறது !"

நூற்றிச் சொச்சம் நண்பர்கள்

சிகரெட்டை எடுக்கிறோம். பற்ற வைக்கிறோம், மிச்சத்தை தரையில் வீசி நசுக்கித் தேய்க்கிறோம் என்பது பிரக்ஜை அறியாத அனிச்சைச் செயலாக மாறிவிட்டது. நண்பர்கள் இந்த விஷயத்தில் செய்த உதவியை சிகரெட் உள்ளவரையும், உயிர் உள்ளவரையும் மறக்க முடியாது.

சோம்பேறியின் நாட்குறிப்பு

உண்மையில் வாழ்க்கை என்பதாக ஒரு பொதுத்தளம் இருப்பது வெறும் தோற்றம் மட்டுமே. அவரவர் அனுபவத்தைப் பிறருடைய அனுபவத்துடன் கோர்த்த அனுபவத் தொடரை ஒற்றை அனுபவமாக எப்படி விரிக்க ??


சில இடங்களில் எழுத்தாளான தன் சொந்த அனுபவத்தை பதிவு செய்வது போன்ற வரிகள்.

"எழுத்தாளனாகும் என் கனவுகளின் அடிப்படையில் புதிய நண்பர்கள் எனக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்ததும், தொடர்ந்து எழுதுவதன் காரணமாக உண்டாகும் புதுப்புது விரோதிகளின் விரோதிகள் எனக்கு நண்பர்களாய்க் கிடைத்துக் கொண்டேயிருந்ததும், குளப்பரப்பில் கல்விழுந்து உண்டாகும் சிற்றலைகள் போல நண்பர் வட்டம் விரிவடைந்து கொண்டே போனதும். புதிய அலைகள் வர வரப் பழைய அலைகள் கரையேறிக் காணாமல் போனதும். என் தரப்புக் காரணங்களாக இப்போது தோன்றுகிறது.


அவமானம்

ஆதாரமான தளத்தில் ஒரு பெண்ணுக்கும் மற்றோரு பெண்ணுக்கும் உடலமைப்பின் விகிதாசாரத்தில் தவிர வேறு என்ன வித்தியாசம் ?

கரு திறமை

விந்துவிட்டவன் நொந்து கெட்டான்.

எழுத்தாளனை பற்றி வரும் வரிகளை படிக்கும் போது தன் சொந்த அனுபவம், சுயசரிதை எழுதியிருக்கிறாரோ என்ற எண்ணம் நம் மனதில் வராமல் இல்லை.

சிறுகதை என்ற பெயரில் குறுநாவல் தொகுப்பை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுயுள்ளது.

பக்கங்கள். 192
விலை.100

Wednesday, November 18, 2009

நான் ரசித்த தமிழ் குறும்படங்கள்

குப்பை

இனிமையான பெண்ணில் குரலில் தொடங்கிறது. எதை பற்றி இந்த குறும்படம் என்று குறும்படம் முடியும் வரை யுகிக்க முடியாது. இறுதியாக காட்டப்படும் செய்திதாள் தான் உணர்த்துகிறது. கண்டிப்பாக இதை இரண்டாவது முறை பார்க்காமல் இருக்க முடியாது.

பின்னனியில் வரும் அந்த பெண்ணின் குரலும், இசையும் இந்த குறுப்படத்தின் மிக பெரிய பலமே ! 'குப்பை' என்று தொடங்கப்பட்ட குறும்ப்படம் 'குப்பை ?' என்று முடித்திருப்பது கூட நம்மை சிந்திக்க வைக்கிறது.

மேலும் இங்கே பார்க்கவும்.

Voice : Rajeshwari Veeran
Art Direction : Ilayaraja
Editing : Saleem HAdi
Music : Saleem HAdi, Vikeshwaran veeran
Story : GAnesh Kasi, Saleem HAdi

**

நிஜங்கள் - ஒரு இளைஞனின் கனவு

நல்ல நகைச்சுவையான குறுப்படம். ஒப்பனிங்கே பெரிய ஹீரோக்கான பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த ஜே.கே.ரித்தீஷ் என்று பயப்படும் சமயத்தில் குறுப்படத்திற்கான உண்மையான நோக்கத்தை காட்டியுள்ளனர்.

இந்த படம் மட்டும் அப்துல் காலம் பார்த்தால், தன் கருத்தை மாற்றிக் கொள்வது உறுதி.

மேலும் இங்கே பார்க்கவும்.

படம் பார்த்து முடித்த பிறகு, விவேக் நகைச்சுவை ஞாபகம் வந்தால் நான் நிர்வாகம் பொறுப்பல்ல....

Story & direction - A.Kumaran
Camera, Screenplay & Editing - R.Vasantharajan

**
சிகப்பு - விபச்சாரியுடன் ஒரு நாள்

டி.வி நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம். அப்பா, அம்மா வீட்டில் இல்லாத சமயம் மனதில் தட்டும் சபல புத்தி கொண்ட இளைஞன் தன் நண்பன் மூலம் ஒரு விபச்சாரியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அவளிடம் முதலில் தயங்கியப்படி பேச்ச தொடங்குகிறான். தன் அறையை தயார் செய்து விட்டு, வெளியே வர அந்த பெண் அங்கு இல்லை. புட்டிய கதவு புட்டியப்படி தான் இருக்கிறது. தன் வீட்டுக்குள் எங்கோ தான் இருக்கிறாள். திடீர் என்று அந்த பெண்ணின் சத்தம் கேட்கிறது.அடுத்து...

மேலும் இங்கே பார்க்கவும்.

**

எதோ பொழுது போகவில்லை என்று இணையதளத்தை மெய்ந்த போது பார்த்த படம். இனி வாரம் ஒரு முறை இப்படி ஒரு குறுப்படத்தை பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல குறும்படத்தை வாசகர்கள் பரிந்துரை செய்யுங்கள்.

***

வரும் ஞாயிறு ( 22.11.2009) காலை 10.30, மூன்று குறும்படம் திரையீட இருக்கிறார்கள்.

இடம் : ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம்,
( லஸ் கார்னர், அமிர்தாஞ்சன் அருகில்)
மயிலாப்பூர், சென்னை - 4

குறும்படத்தை மதிப்பீடு செய்பவர் : "வண்ணத்துபூச்சி" புகழ் அழகப்பன் சி.

பார்க்க விரும்பும் நண்பர்கள் வரலாம்.

Sunday, November 15, 2009

கலைஞரும், வழுக்கை தலையும்

ஒரு முறை கலைஞர் அவர்களின் வழுக்கைத் தலை பற்றிய பேச்சு வந்தது. கலைஞரின் வழுக்கை முதுமையைக் காட்டுவதாகச் சொன்னார்கள்.

கலைஞர் கவலைப்படவே இல்லை. சட்டென்று பதில் சொன்னார், " வழுக்கை என்பது முதுமையின் அடையாளமல்ல. இளமையின் அடையாளம். எப்படி தெரியுமா ?"

"தேங்காய் பறிக்கும் போது, இளசா நாலுகாய் பறிச்சுப் போடுப்பா என்பார்கள். அவர் நாலு வழுக்கையைப் போடுவார்.

ஆக, வழுக்கை என்பது இளமை. ஆகவே, நான் வழுக்கையாய் இருக்கிறேன் என்றால் இளமையாய் இருக்கிறேன் என்று அர்த்தம்"

குறையை நிறையாகக் காணும் திறத்தால், முதுமையையே இளமையாக ஆக்கிவிட்டார்.



**

அமைச்சர் தான் கிழித்தார்

ஒரு முறை கலைஞர், 'ஆற்காட்டு' வீரசாமி, 'கவிப்பேரசு' வைரமுத்து, டி.ஆர் பாலு ஆகியோருடன் காரில் சென்றுக் கொண்டு இருந்தார். கலைஞர் அவர்கள் முன்புற இறுக்கையிலும், மற்ற மூவரும் பின்புறம் அமர்ந்துக் கொண்டனர்.

வண்டி சென்றுக் கொண்டு இருக்கும் போது, கவிஞர் அவர்கள் தன்னை இருக்கையில் சரிப்படுத்த முயற்சிக்கும் போது, தனது நீண்ட சட்டையின் கீழ்ப்பகுதியில் அமைச்சர் பாலு அமர்ந்திருப்பதைக் கண்டு அவரிடம் தெரிவிக்காமலே, சட்டையைச் சரிசெய்ய, சட்டையைப் பிடித்து இழுக்கும் போது சட்டை கிழிந்துவிட்டது.

கலைஞர் இல்லம் வந்தும், கவிஞரின் கிழிந்த சட்டையை கவனித்த கலைஞர் அவர்கள் " என்ன கவிஞரே ! சட்டை கிழிந்திருக்கிறதே பார்க்கவில்லையா " எனக் கேட்டார்.

கவிஞர் நடந்தை விவரித்தார். இதைக் கேட்ட கலைஞர் அவர்கள், " சட்டை கிழிந்ததற்குப் பாலு தான் காரணம் என்றால் எனக்கு சந்தோஷமே !" என்றார். ஒரு நிமிடம் எல்லோரும் திகைத்தனர்.

அப்போது கலைஞர், " பின்னே ! இனிமே எதிர்க்கட்சியினர் யாரும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு என்ன கிழித்து விட்டார் ? எனக் கேட்கவே முடியாதல்லவா ?" என்றார்.

**

லவ் எஸ்டர்டே

சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கம் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன் வெள்ளி விழா ஆண்டையும் கலைஞரே நடத்த வேண்டும் என அதன் உரிமையாளர் சிதம்பரம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தலைவர் ஒப்புதல் தந்திருந்தார். அப்போது, அங்கே விஜய் நடித்திருந்த "லவ் டுடே' என்ற படத்தின் நூறாவது நாளும் சேர்ந்தே கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்புரையாற்றிய கலைஞர்.

"இது 'லவ் டுடே' படத்தின் வெற்றிவிழா. இன்றைய இளைய சமுதாயத்திற்கு இது 'லவ் டுடே' தான். எனக்கோ, 'லவ் எஸ்டர்டே'" என்றதும் அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

Friday, November 13, 2009

பெரம்பூர் பாலம்

இரண்டு தினம் முன்பு பெரம்பூர் பகுதியே மிகவும் பரபரப்பாக இருந்தது. வியாம்பார சங்க தலைவர் வெள்ளையனை வெட்டிவிட்டதால், பொது மக்கள் மிகவும் கவலையில் இருந்தனர். ( பின்ன எல்லா கடையும் முடிட்டாங்கனா... காய்கறி வாங்க எங்க போறது). நல்ல வேலை பெரம்பூர் வெள்ளையன் மார்க்கெட்டை மட்டும் முடி இருந்தனர். பக்கத்தில் 'ஈ' ஓட்டிய ரவி மார்க்கெட் ஜக ஜோதியாய் கூட்டம் அலை மோதியது. வாங்க வந்தவர்களுக்கு நிற்க கூட இடமில்லை. வணிகர் தினத்தில் மட்டும் பாரதி ரோடை காலியாக பார்த்திருக்கிறேன். (பாதி ரோட்டில் வெள்ளையன் மார்க்கெட் வண்டி, ஆட்டோ நிற்கும்) பக்கத்தில் மூன்று பள்ளிகூடங்கள் வேறு. அதை கடக்க முடியாமல் சுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

இப்போது எல்லாம் பெரம்பூரை தாண்டி செல்வது பாகிஸ்தான் பார்டரை தாண்டி செல்வது போல் உள்ளது. போக்குவரத்து நெருக்கடியில் வீட்டில் இருந்து அலுவகத்திற்கு செல்ல பிடிப்பதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வீட்டுக்கு செல்ல பிடிப்பதில்லை.எதோ பாரதி ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி கம்மியாக இருக்கிறதே சந்தோஷப்பட்ட அடுத்த நிமிடத்தில் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன் தாண்டும் அடுத்த கொடுமை வந்தது.

பஸ் செல்வதற்கு தனியாக வழி அமைத்திருக்கிறார்கள். மற்ற வண்டி செல்ல இருக்கும் வழி ஷேர் ஆட்டோ வழி மறித்து நின்று கொண்டு இருக்கும். எவ்வளவு தான் ஹாரன் அடித்தாலும், அவர்களுக்கு சவாரி வரும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். காலையில் இவர்களை திட்டாமல் செல்வதுதில்லை. பாதி பேர் ஷேர் ஆட்டோ ஆட்களை திட்டி விட்டு தான் பெரம்பூர் ஸ்டேஷனை கடக்கிறார்கள். இப்படியே போனால், காலையில் ஷேர் ஆட்டோக்காரர்களை திட்டி விட்டு சென்றால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூன்றாவது ,பெரம்பூர் பாலம். பெரம்பூரில் இருந்து தி.நகர் செல்வதற்கு நாற்பத்தியைந்து நிமிடங்கள் தான் ஆகும். பெரம்பூர் பாலம் கட்டிட வேலைக்காக பாதை சுருங்கி கொண்டே பொகிறது. இப்போது சுரங்கப்பாதையில் தான் எல்லா வண்டியும் செல்ல வேண்டிய நிலைமை. ஒருவர் அதிக நம்பிக்கையுடன் அந்த குறுகிய பாதையில் டாடா சுமோவை இறக்கி செல்ல முடியாமல், ரிவர்ஸ் எடுத்து வேறு பாதை செலும் வரை இன்னும் போக்கு வரத்து நெருக்கடி அதிகமாக தான் ஆனது.

இப்படி, பெரம்பூர் டூ தி.நகர் பயணத்தை பற்றி என் அலுவலக நண்பரிடம் சொல்லி கொண்டு இருந்த போது, "பெரம்பூர் பாலம் வந்துட்டா இந்த பிரச்சனை எல்லாம் இருக்காதுல்ல..." என்றார்.

"நாங்களும் பத்து வருஷமா இதையே தான் சொல்லி எங்க மனசுக்கு ஆறுதல் சொல்லுறோம்" என்றேன்.

ஸ்டாலின் மேயராக இருந்த போது தொடங்கிய பாலம், அவர் துணை முதல்வர் ஆன பிறகு திறக்க வேண்டும் என்று இருக்கிறது.

எதோ வந்தா சரி.

Thursday, November 12, 2009

முதியோர் இல்லம்



என்ன தான் சுந்திரமாக திறிந்தாலும், சிவகாமிக்கு இந்த இடம் திறந்த சிறைவாசமாக தான் இருந்தது. உறவுகள் இருந்தும் ஆனாதையாக வாழ்வது எவ்வளவு கொடுமை. வாழ்வும் வயதில் கணவனை இழந்து, இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து கரை சேர்த்ததற்கு அவளுக்கு கிடைத்த பரிசு 'முதியோர் இல்லம்' என்ற சிறை தான்.

"என்ன சிவகாமி அம்மா... காலையில இருந்து ஒன்னும் சாப்பிடாம இருக்கீங்க...?" என்று காமாட்சி பரிவுடன் கேட்டாள். இந்த முதியோர் இல்லத்தில் புதிதாக சேர்ந்தவள். மகள் திருமணத்தை முடித்து யாருக்கும் தொல்லைக் கொடுக்க கூடாது என்று அவளே இங்கு வந்து சேர்ந்து விட்டாள். இந்த இல்லத்தில் வந்து சேர்ந்ததில் கவலைப்படாத ஒரே ஜீவன் இவளாக தான் இருக்க முடியும்.

காமாட்சி வந்து சேர்ந்த பிறகு தான், அங்கு தங்கி இருந்த மற்றவர்கள் மனதில் புது நம்பிக்கை பிறந்து. குறிப்பாக சிவகாமிக்கு. தன் பிள்ளைகள் தொல் கொடுக்க வேண்டிய வயதில் சிவகாமிக்கு கிடைத்த சக வயது தொழி தான் காமாட்சி.

" என்ன சிவகாமி அம்மா... எதுவுமே பேசமாட்டீங்றீங்க.." என்றாள்.

"இன்னையோட நான் இங்க வந்து நாலு வருஷம் ஆகுது.." என்று கண்களில் நீர் தழும்ப சிவகாமி கூறினாள்.

" நாள் போற வேகத்துல இன்னுமா இந்த தேதி உங்களுக்கு ஞாபகம் இருக்கு.." என்றாள் காமாட்சி.

சிவகாமி எதுவும் பேசவில்லை. தன் வலி பற்றி அவளுக்கு தெரியாது. தெரிந்தாலும் பெரிதாக பாதிப்பு ஒன்று அவளுக்கு இருக்க போவதில்லை. சிவகாமியை போல பல கதைகள் காமாட்சிக்கு கேட்டு பழகிவிட்டது. ஆனால், சிவகாமி அப்படியில்லை. தன் கதையே பெரிய கதை என்று நினைத்து வருந்துக் கொண்டு இருந்தாள்.

சிவகாமி நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

தன் கணவன் அரசாங்க உத்தியோகம் பார்த்ததால், அவர் இறந்ததும் அந்த வேலை சிவகாமிக்கு கிடைத்தது. அந்த வேலை கிடைத்ததால் தன் இரண்டு மகன்களை நன்றாக வளர்த்தாள். முத்த மகன் பெயர் 'ராஜசேக'ர். இரண்டாவது மகனின் பெயர் 'ராஜமோகன்'. 'ராஜா' மாதிரி வளர்க்க வில்லை என்றாலும் பெயரிலாவது 'ராஜா' இருக்கட்டும் என்று வைத்துவிட்டாள்.

தன் முத்த மகன் ராஜசேகர், தன் மகன் சத்யா வெளிநாட்டு படிக்க கூட்டு குடும்பம் நடத்தும் வீட்டை விற்று பணம் தர சொன்னான். ஆனால், இளைய மகன் ராஜமோகன் முதலில் விற்க மறுத்தான். ஆனால், அவன் மனைவி தனி குடிதனம் போகுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்று அவனை சம்மதிக்க வைத்துவிட்டாள். தன் காலம் முடியும் வரை வீடு விற்க கூடாது என்று பிடிவாதமாக இருந்தவள் தன் பேரன் படிப்பு உதவியாக இருக்கும் என்று வீடு விற்க சம்மதித்தாள்.

வீடு விற்ற பிறகு பணத்தை பிரித்துக் கொண்டார்கள். ஆனால், சிவகாமியை.... ??

"அண்ண வீட்டில் இரும்மா" என்று தம்பியும், "தம்பி வீட்டில் இரும்மா" என்று அண்ணனும் கூறி, கடைசியில் அவளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

"சிவகாமி அம்மா... இந்த உலகத்துல தான் இருக்கீங்களா...." என்று காமாட்சி கூறியதும், தன் நினைவலைகளில் இருந்து விடுப்பட்டாள்.

"சின்ன வயசுல என் இரண்டு பசங்க பொம்மைக்காக சண்ட போடுவாங்க. நான் போய் சமாதானம் பண்ணுவேன். பேர பேத்தி கல்யாணத்த பார்க்கலாம்னு இருக்குறப்போ... சொத்துக்காக அடிச்சிக்கிட்டவங்க. அம்மாவ பத்தி யோசிக்கவே இல்ல..." என்று சொல்லும் போது சிவகாமி கண்கள் கழங்கியது.

" விடுங்க சிவகாமி அம்மா... பந்தயத்துல ஓட முடியாத குதிரைய சுட்டு கொல்லுற உலகம். வயசான மனுஷங்களுக்கு வாழ இந்த மாதிரி இடமாவது இருக்கே ! சந்தோஷப்படுங்க..." என்று ஆறுதலாக காமாட்சி கூறி சிவகாமியை தேற்றினாள்.

இவ்வளவு பெரிய வார்த்தை. பந்தயத்தில் ஓடும் வரைக்கு தான் குதிரைக்கு பெருமை. மனிதனுக்கு அப்படி தான். ஓட்டம் அடங்கி விட்டால், இறந்து விடுவது நல்லது. இல்லை என்றால் இது போன்ற இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சிவகாமி மனதில் நினைத்துக் கொண்டாள்.

"சிவகாமி மேடம்... உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க..." என்றாள் காப்பாளர் சுதா.

இந்த நான்கு வருடங்களில் தன்னை யாரும் பார்க்க வராத போது இப்போது யார் வந்தது என்று சிவகாமி குழப்பமாக இருந்தது. சிவகாமி வெளியே வந்த பார்த்தும் தன்னை அறியாமல் வந்தவனை கட்டிபிடித்து முத்தமிட்டாள். வந்தன் அவள் பேரன் சத்யா.

சந்தோஷத்தில் சிவகாமியால் எதுவும் பேசமுடியவில்லை. அவன் பேரன் சத்யா நலம் விசாரித்தும் பதில் அளிக்காமல் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் காப்பாளர் சுதா அங்கு வந்தாள். "சிவகாமி மேடம். உங்க பேரன் உங்கள அழைச்சிட்டு போக தான் வந்திருக்காரு..." என்றாள்.

சிவகாமிக்கு என்ற சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆனால், சிவகாமி அந்த இடத்தை விட்டு வர அவளுக்கு மனமில்லை.

"பாட்டி..! எங்க அப்பா அம்மா பண்ண தப்புக்கு நான் பிராசித்தம் பண்ணுறேன். என் கூட வாங்க..." என்றான்.

"நான் வரல. இங்கையே என் கடைசி காலத்துல இருந்துடுறேன் " என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல் கூறினாள். பல ஆறுதலான வார்த்தைகள் சத்யா கூறியும் சிவகாமி கேட்கவில்லை.

கடைசியில், " நீங்க இப்ப வரல... உங்களுக்கு கம்பேனியா எங்க அப்பா, அம்மாவையும் இங்க வந்து விட்டுவேன் " என்றான்.

" டேய் அப்படியெல்லாம் சொல்லாத. என் மகன் கேட்டா தாங்கமாட்டான் ! " என்று சிவகாமி கூறி, தன் மகனுக்கு இல்லாத அன்பும், பாசமும் தன் பேரனுக்கு இருப்பதை சந்தோஷப்பட்டாள்.

பிறகு, காப்பாளர் சுதா, காமாட்சி என்று பலர் சிவகாமியிடம் பேசி சம்மதிக்க வைத்தனர். சத்யா தன் பாட்டியை காரில் முன் பக்கம் அமர வைத்து ஓட்டி சென்றான்.

பிணங்களாக முதியோர் இல்லத்தை விட்டு செல்பவர்கள் மத்தியில், முதல் முறையாக உயிருடன் செல்லும் சிவகாமியை பார்த்து காப்பாளர் சுதா சந்தோஷப்பட்டாள்.

Monday, November 2, 2009

ஹைக்கூ கவிதைகள் - 1

பத்திரிகை ஆசிரியர்களை
எதிர்த்து மனு கொடுத்தனர்
முரசொலி ஆசிரியரிடம் !

**

நாளைய சந்ததியர்களுக்கு
இன்றே சவ குழி தயார்
எல்லா மரங்களும் வெட்டப்பட்டன

**

அடிமை இந்தியாவில் சுதந்திரமாக
சுதந்திர இந்தியாவில் பிணமாக
மகாத்மா காந்தி !

**

சிவப்பும், மஞ்சளும்
ஒன்றாய் மின்னியது
சுமங்கலி பிணத்தில் !

**

Friday, October 30, 2009

கவிதை அனுப்பிய பதிவர்கள்

'காந்தி வாழ்ந்த தேசம்' கவிதை தொகுப்பு நூலுக்காக இதுவரை 14 கவிதைகள் வந்துள்ளன. அதில் கீழ் காணும் பதிவர்களின் கவிதை தேர்வு செய்யப்படுள்ளது.

1.மதுரை பாபாராஜ்
2.கார்த்திக் சுப்பிரமணி
3.தவப்புதல்வன்
4.ஈ.ரா
5.வி.என்.தங்கமணி

கவிதை அனுப்பிய சக பதிவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கவிதை அனுப்ப விரும்பும் பதிவர்கள் நவம்பர் 2ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

கவிதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
nagarathna_publication@yahoo.in மற்றும் kannan@gurumurthy@gmail.com.

இஞ்ஜினியரிங்...எது படிக்கலாம் ???



திருஷா, நயந்தாரா, ஸ்னேகா, நமீதா போன்ற அழகுள்ள நான்கு பெண்கள் உங்களை திருமணம் செய்து கொள்ள கேட்டால், எந்த பெண்ணை தேர்வு செய்வீர்கள். உங்களுக்கு பிடித்த பெண்ணை சொல்லுவதறு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். ஒவ்வொரு பெண்ணிலும் ப்ளஸ் எது ? மைனஸ் எது ? யோசிப்பீர்கள். மற்றவர் 'ஸ்னேகா' என்று கருத்து சொன்னாலும் நம் மனம் 'நமீதா' என்று சொல்லும். இதற்கு, பதில் சொல்ல எவ்வளவு யோசிப்பார்களா +2 படித்து முடித்த மாணவன் எந்த பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்பதையும் அதிகம் யோசிக்க வேண்டும்.

படிப்பை தேர்ந்தெடுப்பதும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது போல தான். அதை வைத்து தான் நமக்கு வேலை, சம்பளம், சமூகத்தில் மரியாதை எல்லாமே !

பொறியியலில் Chemical, Civil, Electrical போன்ற பிரிவுக்கு என்று மதிப்பு உண்டு. இருபது வருடம் முன்பு பொறியியலில் இந்த மூன்று பிரிவு மட்டும் தான் இருந்தன. ஆனால், Computer, Marine, Aeronautics என்று பல எஞ்ஜுனியரிங் படிப்புகள் வந்து விட்டன. கண்டிப்பாக இதில் எது படிக்க வேண்டும் என்ற குழப்பம் பல மாணவர்களுக்கு இருக்கும். பெற்றோர்களும் தங்கள் சொந்தத்தில் இருப்பவர்கள் படித்த படிப்பை விசாரித்து அதையே தங்கள் பெண்ணை, மகனை படிக்க சொல்லுவார்கள். எந்த யோசனை இல்லாதவர்களும் பெற்றோர்கள் சொன்னப்படி கேட்பார்கள். வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர், தம்பி ! இந்த படிப்பு படி. நல்ல எதிர்காலம் இருக்கு. உனக்கு நான் வேலை வாங்கி தரேன்.' என்பார். உறவினர், ' பாரும்மா ! இன்னைக்கு கம்யூட்டர் படிச்சா வெளிநாட்டு வேலை கிடைக்கும். அது படி !'.

எந்த துறையை விரும்பமாக உங்களுக்கு உள்ளதோ அந்த துறை படித்தவர்களிடம் கேளுங்கள். ப்ளஸ், மைனஸ் பார்த்து நமக்கு எது ஏற்றதாக இருக்கும் யோசித்து சேருங்கள். முதல் வருடம் Electrical Engg. படித்த மாணவன் பெரிய ஆளை பிடித்து அதே கல்லூரியில் இரண்டாவது வருடம் Computer Engg வகுப்பு வந்தான். மூன்றாவது வருடம், 'I.T. down' என்ற செய்தி கேட்டவுடன் 'பேசாமல் நாம Electrical லே படிச்சிருக்கலாம்' தோணும், இன்னொருன் " போடா.. Circut theory படிச்சு அரியர் வைக்கிறதுக்கு, 'கம்யூட்டரே பெஸ்ட். என்று சக மாணவன் சொல்லுவான்.

படிப்பில் எதுவுமே வேஸ்ட் என்பது கிடையாது. பலர் 'பெஸ்ட்' என்று சொல்லுவது அதில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தான். எந்த படிப்பு படித்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், நாம் முன்னேற முன்னேற சம்பளம் அதிகமாகும். இது எல்லா படிப்புக்கு பொருந்தும்.

திருஷா, நயந்தாரா, ஸ்னேகா, நமீதா - இதில் யார் உங்களுக்கு யார் பிடிக்கும் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அடுத்தவர்கள் அல்ல....!!

--

பிரபல வார இதழுக்காக எழுதிய கட்டுரை. பிரசுரமாகததால் பதிவெற்றிவிட்டேன் :(

Wednesday, October 28, 2009

இண்டர்வியூ டிப்ஸ்



எஸ்.எல்.வி. மூர்த்தி

படம் பார்த்து விட்டு வரும் ரசிகனிடம், " படம் எப்படி இருக்கு?" என்று கேட்கும் போது, " முதல் அரை மணி நேரம் ஒரே போர் ஸார், அதுக்கு அப்புறம் படம் பார்க்கலாம்" என்று சொல்லுவது போல், ஒரு வாசகனாக இந்த புத்தகத்தை வாசிக்கும் போது தோன்றியது.

‘இண்டர்வியூ டிப்ஸ்' என்ற தலைப்பு வைத்திருப்பதால் இந்த புத்தகம் வேலை தேடும் இளைஞர்/ இளைஞிகளுக்காக என்ற எண்ணத்தோடு தான் படிக்க தொடங்கினேன். ஆனால், முதல் மூன்று அத்தியாயம் படித்ததும் ஒரு சிறு குழப்பம் வந்தது. இந்த புத்தகம் இண்டர்வியூ செல்பவர்களுக்காக ? அல்லது இண்டர்வியூ எடுப்பவர்களுக்காக ? என்று. காரணம் அந்த மூன்று அத்தியாயங்கள் நிறுவனத்தின் தேவைகள், அதற்கு தேவையான ஆட்கள் எண்ணிகை என்று நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் நூல் இருந்தது. அதன் பின் வரும் அத்தியாயங்களில் தான் இண்டர்வியூ செல்வபர்களுக்கு டிப்ஸ்யை வாரி வழ்ங்கி இருக்கிறார்.

1905 ஆம் ஆண்டு ஆல்ஃப்ரட் பினெட் (Alfred Binet) கண்டு பிடித்த தேர்வு முறையை நாம் இன்றளவு பின்பற்றுகிறோம். (இவ்வளவு நாள் யார் இந்த முறையை கண்டு பிடிச்சாங்க தெரியாமல் இருந்தேன்.)

நூறு வருடங்கள் கடந்த பின்னும் அந்த முறையை இன்றளவு நாம் கடைப்பிடிக்கிறோம். அதில் தேர்ச்சி பெற பாவனை, அடிப்படை யூக்தி, நடை, உடை என்று ஆச்சரியப்படு அளவிற்கு தேர்வு முறையை வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் விதியையும் தேர்வு தான் தீர்மானிக்கிறது. வாழ்க்கையின் வெற்றியை தேர்வின் வெற்றி முடிவு செய்கிறது.

இண்டர்வியூ வருபவர்கள் இப்படி தான் வர வேண்டும், இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சில விதி முறைகள் உள்ளன. புதிதாக கல்லூரி முடித்து வருபவர்களுக்கு அந்த விதி முறைகள் தெரிய நியாயமில்லை. அனுபவம் பெற்ற சில பேரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தான் ஆலோசனை பெற முடியும். இருந்தாலும் அவர்களுக்கு ஒரளவு தான் இது உதவும். இண்டர்வியூ கற்று கொடுக்கும் அனுபவம், அடுத்த இண்டர்வியூக்கு உதவும். அடுத்த இண்டர்வியூ என்ற பேச்ச வராமல், முதல் இண்டர்வியூ வெற்றி பெற நினைப்பவர்கள் ஒரு சிலர் தான் வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றி பெறாத பலருக்கு ஒரு நல்ல வழி காட்டியாக இந்த புத்தகம் இருக்கும்.

மைக்ரோசாஃப்ட், கூகிள் கம்பெனிகள் படாத பாடு பட்டு தயாரித்த ஒரு சில கேள்விகளை குறிப்பிட்டு நம் தலையை சுற்ற வைத்திருக்கிறார். குறிப்பாக இந்த கேள்வி...

'How many golf ball can fit in a schoolbus ?'

இந்த மாதிரி கேள்விக்கு யோசித்து பதில் சொல்வதாக இருந்தால் அந்த வேலையே எனக்கு வேண்டாம். இவ்வளவு சொல்லுபவர் ஏன் மைக்ரோசாஃப்ட், கூகிள் போன்ற நிறுவனத்தில் வேலைக்கு சேரவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இருந்தால், அவர் ஏன் இந்த புத்தகத்தை எழுதிக்கொண்டு இருக்க போகிறார்.

பயோடேட்டா, இணைப்புக் கடிதம், ரெக்ரூட்மெண்ட் ஏஜென்ஸி என்று விண்ணப்பம் அனுப்பும் முறைகளை மிக எளிதாக விளக்கியுள்ளார். அதை போல் இண்டர்வியூ செல்லும் முறைகளையும், அங்கு எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமை, அடிப்படை நல் ஒழுக்கங்கள் போன்ற தகவல்கள் புதிதாய் கல்லூரி படித்து முடித்து விட்டு வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். ( முக்கியமான Target Audience அவர்கள் தானே !)

இவை எல்லாவற்றிக்கும் மேலாக, நாம் எந்த கம்பெனியில் வேலை செய்யலாம் போன்ற தகவலுக்கு To Best Companies to Work for 2008 - சர்வேவையும் கொடுத்திருக்கிறார்கள். இறுதி அத்தியாயத்தில் கொடுத்திருக்கும் 230 கேள்விகள் (50 கேள்விகளுக்கு தான் பதில் உள்ளது) கொடுத்து நேர் முக தேர்வுக்கு வாசகனை முழுமையாக தயார் படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

'இண்டர்வியூ டிப்ஸ்' என்று புத்தகத்தின் தலைப்பு வைத்து விட்டு, புத்தகத்தின் உள்ளே பல இடங்களில் 'பேட்டி' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். படிக்கும் போது படு செயற்கை தனமாக உள்ளது. ( நல்ல வேளை 'பேட்டி ஆலோசனை' என்று புத்தகத்தின் தலைப்பு வைக்கவில்லை)

எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய 'ஹலோ ! உங்களை தான் தேடுகிறார்கள்' என்ற புத்தகத்தை வாசித்தவர்களா நீங்கள் ! அப்படி வாசித்திருந்தால் இந்த புத்தகத்தை பாதி படித்தது போல் தான். அந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் இதிலும் உள்ளன. ஒரு சில இண்டர்வியூ கேள்விகள், வேலை செய்வோர் எண்ணிக்கை கணக்கு என்று அசல் அந்த புத்தகத்தில் இருப்பதை அப்படியே காபி அடித்திருக்கிறார்கள். ஸாரி... அப்படியே மறு பதிப்பு செய்திருக்கிறார்கள். (இரண்டு புத்தகத்தின் ஆசிரியரும் எஸ்.எல்.வி.மூர்த்தி தானே !)

இண்டர்வியூ செல்பவர்கள் தங்களை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவு தயாராக செல்ல இந்த புத்தகம் உதவும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.


இந்த புத்தகத்தை வாங்க... இங்கே.

பக்கங்கள்.152,
விலை.75
கிழக்கு பதிப்பகம்

Tuesday, October 27, 2009

யாரோ ஒருத்தி



சிறுவயதில் இருந்து விரல் சப்பி பழக்கப்பட்ட எனக்கு, சிகரெட் தான் சரியான ஆல்டர்னெடாக இருந்தது. இருபது வயதானவன் விரல் சப்பினால் எவ்வளவு கேவலமாக இருக்கும் ? வயதானாலும், உதடு சுவைத்துக் கொள்ள ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. தற்சமயம் அந்த எதோ ஒரு தேவை.... சிகரேட் தான். நண்பனை கிங்ஸ் வாங்க அனுப்பி விட்டு, சாலையில் செல்லும் வாங்கனங்களையும், சிகனலையும் பார்த்துக் கொண்ட்டு இருந்தேன்.

பச்சை.... மஞ்சல்....சிவப்பு.... சிவப்பு.. பச்சை.. மஞ்சல்.

பரபரப்பான போக்குவரத்து நெரிசலில் சிக்னல் எவ்வளவு கொடுமையானவை. மனிதன் வசதிகாக கண்டு பிடித்தது எல்லாம் மனிதனுக்கு எதிரியாக இருப்பது வியப்போன்றுமில்லை. அதில் சிக்னல் தவிர்க்க முடியாத ஒன்று.

எதிர் சாலையில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, மார்டன் ட்ரெஸ் போட்ட பெண் சாலையை கடந்து நான் நிற்கும் பஸ் நிற்கும் பஸ் பயணிகள் குடைக்குள் வந்தாள். நெற்றியில் சிவப்பு பொட்டு, ஸ்லீவ் லெஸ் பச்சை டி ஷர்ட், ஜீன்ஸ் என்று அணிந்திருந்தாள். ஸ்லீவ் லெஸ் டி ஷர்ட் போடும் பெண்களை ஒரு ஆண் எதை பார்த்து ரசிப்பானோ அதையே தான் நான் பார்த்து ரசித்தேன்.

ஒரு நிமிடம் சிக்னலையும், அவளையும் மாற்றி மாற்றி பார்த்தேன். மஞ்சல் நிறத்தை அவள் உடம்பில் எங்காவது மறைத்து வைத்திருப்பாளா ?? ச்சே... அவள் நிறமே மஞ்சலாக இருக்கும் போது இன்னொரு மிஞ்சல் எதற்கு ? அவள் நடமாடும் சிக்னலாக தெரிந்தாள். திரும்பி என் நண்பனை பார்த்தேன். அவன் கடைக்காரனிடம் சில்லரை பற்றி பேசிக் கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் அவன் வராமல் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போது எனக்கு சிகரெட்டை விட அந்த பெண் அழகு தான் முக்கியமாக இருந்தது.

நாள் அவளை பார்ப்பதை தெரிந்து விட்டது போல் என்னை திரும்பி பார்த்தாள். ஓட்டு போட்ட மக்களை கண்டுக் கொள்ளாத அரசியல்வாதி போல் நான் என் முகத்தை திருப்பிக் கொண்டேன். நான் அவளை பார்ப்பதை உள்ளூர ரசிக்கிறாள். அல்லது ரசிப்பது போல் பாவனை செய்கிறாள்.

தன் செல்போனை எடுத்து யாரிடமோ பேசினாள். அவள் பேசி முடித்த இரண்டாவது நிமிடத்தில் இரண்டு பேர் வந்து அவளிடம் பேசினர்.குறிப்பாக செல்போன் வைத்திருப்பவனிடம் அவள் அதிகமாக பேசினாள். அவள் பேசிய இரண்டாவது நிமிடத்தில் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது. இரண்டு பேரில் ஒருவன் அவளிடம் கை நீட்டி பேசினான். இன்னொருவன் அவனை அழைத்து சென்று சமாதானப்படுத்தினான். அந்த பெண் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. காதல் சண்டையாக இருக்கும் என்று நினைத்தேன்.

அந்த பெண் திரும்பி பார்த்து, என்னை நோக்கி வந்தாள். அப்போது பஸ் நின்று இருந்ததாள், அதுக்காக வருகிறாளோ என்று யோசிக்க கூட அவகாசம் கொடுக்கவில்லை.

அவள் என்னிடம், "டி.நகருக்கு என்ன பஸ் போகும் ?" என்றாள்.

இவ்வளவு நேரம் பார்த்து ரசித்த பெண்ணிடம் இருந்து எதிர்பாராத அறிமுகம்.

தட்டு தடுமாறி '27C' என்றேன். அவள் அந்த இடத்தை விட்டு நகர விரும்பவில்லை. என்னுடன் பேச்சை தொடர விரும்புவது போல் இருந்தது. எனக்கு அவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் இருப்பது போல் என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொண்டேன். ஆனால், உண்மை அது தான்.

" இங்க கீரின் போர்ட், யெல்லோ போர்ட் பஸ் நிக்குமா ?" என்றாள்.

"ம்..." என்று தலை அசைத்தேன்.

அவளிடம் கோபப்பட்டவம் எங்களை முறைத்தவாரு இருந்தான். கண்டிப்பாக அவன் அவள் காதலானாக தான் இருக்க வேண்டும். அவனை பொறாமைப்பட வைக்க அந்த பெண் என்னிடம் வந்து பேசுகிறாள் என்று யூகிக்க முடிந்தது.

அவள் காதலனுடன் வந்தவன் அந்த பெண்ணை ஒரு நிமிடம் அழைத்தான். அந்த பெண் போகமாட்டாள் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை பொய்யாக்கி அவனிடம் பேச சென்றாள். சற்று ஏமாற்றத்தோடு அவள் போவதை பார்த்துக் கொண்டு இருந்தேன். இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். ஆனால், அவர்கள் காதலில் என்னால் வீண் பிரச்சனை வரும். வந்தாள்... பேசினாள்... சென்றாள். அவ்வளவு தான்.

ரசித்த சந்தோஷத்தோடு... பேசிவிட்டு சென்று இருக்கிறாள். இது வரை நான் சைட் அடிக்கும் பெண்களிடம் பேசியதில்லை. இது தான் முதல் தடவை. ஒவ்வொரு முறை பெண்களிடம் பேசும் போது இப்படி தான் நினைத்துக் கொள்வேன்.

அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. அந்த பெண் தன் காதனுடன் கை குழுக்கிக் கொண்டாள். தன் காதலனின் நண்பனுடன் ஒரு காரில் ஏறி சென்றாள். அவர்கள் சமரசமாகி விட்டார்கள் என்று அவர்களின் புன்னகையில் தெரிந்தது. எதோ என்னை அறியாமல் ஒரு காதலுக்கு உதவியிருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் உருப்படியாக செய்த முதல் காரியம் இது தான்.

நான் அந்த பெண் செல்வதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது என் தோள் மீது யாரோ கை போட்டனர். என் நண்பன் தான். இரண்டு சிகரெட்டை வாங்கி இப்போது தான் வந்தான். அந்த பெண்ணை நினைத்து ஏக்க பெரு மூச்சு விட கண்டிப்பாக எனக்கு சிகரெட் தேவை. சிகரெட்டை வாங்கி ஆறாவது விரலாக சொருகிக் கொண்டு பற்ற வைத்தேன்.

" என்ன... மாமா..." என்று என் நண்பன் சிரித்தப்படி கேட்டான்.

எப்போது 'மாப்பிள்ள' என்று அழைப்பவன். வழக்கத்துக்கு மாறாக என்னை 'மாமா' என்று அழைத்தான்.

"என்னடா...புதுசா...." என்றேன்.

"உன்ன வச்சு அந்த பொண்ணு ரேட்ட ஏத்திட்டா...." என்றான்.

"என்ன சொல்லுற..."

" டேய்... அந்த பொண்ணு இரண்டு பேருக்கு இரண்டாயிரம் கேட்டா... வந்த பசங்க ஆயிரம் தான் தருவேன்னு கராரா இருந்தான். உன் கூட வந்து பேசுனதும்.... எங்க நீ தள்ளிட்டு போய்டுவியோ பயந்து இரண்டாயிரத்துக்கு ஒத்துக்கிட்டாங்க...."

"அட...ச்சே... சும்மா பொய் சொல்லாத... நான் அந்த பொண்ணு கிட்ட பேசுனத இவ்வளவு பொறாமையா பார்த்தான்..."

"டேய்...அது ஐடம்டா ! அந்த இரண்டு பேரும் சிகரெட் வாங்குன கடை பக்கத்துல நின்னு எனக்கு கேக்குற மாதிரி தான் பேசுனாங்க. அந்த பையன் தான் கஷ்ட பட்டு போன் பண்ணி அந்த பொண்ண வர சொன்னா... நீ தள்ளிட்டு போற மாதிரி இருந்தா கோபம் வராதா..." என்று சொல்லி என்னை ஏளனமாக சிரித்தான்.

என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. அவள் அந்த மாதிரி பெண்ணா இருப்பாளோ என்று சந்தேகம் வர தொடங்கியது.

ச்சே... இவ்வளவு நேரம் அந்த மாதிரி கேவலமான பெண்ணிடமா பேசிக் கொண்டு இருந்தேன். அவளின் காதலனாக நினைத்த நான், அவளை பொறாமையில் பார்த்தான். தான் படுக்க வேண்டும் என்றால், விபச்சாரியிடம் கூட கற்பை எதிர்பார்க்கும் ஆளாக இருப்பான் போலிருக்கு. கடைசியில் என் மரியாதையை நானே கெடுத்துக் கொண்டேன். இனிமேல் எந்த பெண்ணும் வழிய வந்து பேசினால் நான் பேச கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்தில் நான் செல்ல வேண்டிய பஸ் வந்தது. கையில் இருக்கும் சிகரெட்டை அனைத்தேன்.

" இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவ போன் நம்பர் வாங்கி இருந்திருக்கலாம் " என்று மனதில் நினைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன்.

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009]

Monday, October 26, 2009

ஒழுக்கம்

இராவணன் ஒழுக்கம் தவறினான்
இராமயணம் பிறந்தது !
துரியோதனன் ஒழுக்கம் தவறினான்
பாரத போர் பிறந்தது !
இயற்கையின் ஒழுக்கத்தை கெடுத்தனர்
வறட்சி பிறந்தது !
இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் ஒழுக்கம் தவறியது
டிசம்பர் ஆறு பிறந்தது !

ஆராய்ச்சியில் ஒழுக்கத்தை சிதைத்தனர்
அணுகுண்டு பிறந்தது !
அணுக்கள் ஒழுக்கமில்லாமல் செயல் பட்டன
ஊனமுற்ற குழந்தைகள் பிறந்தன !
ஓட்டுநர் ஒழுக்கம் தவறினான்
சாலையில் விபத்துக்கள் பிறந்தது !
அரசாங்க அதிகாரி ஒழுக்கம் தவறினான்
லஞ்சம் பிறந்தது !

ஒரு சிலர் ஒழுக்கம் தவறினர்
AIDS பிறந்தது !
காற்றின் ஒழுக்கத்தை கெடுத்தனர்
SWINE FLU பிறந்தது !

ஒழுக்கம் தவறி பிறந்தது எல்லாம்
மக்களை கொல்லும் கத்தியாய் எதிரே !
அதை எதிர்த்து போர் செய்ய
நம் கையில் இருக்கும்
ஒரே ஆயுதம் ஒழுக்கம் !

--

ஒரு பள்ளி மாணவன் தன் பள்ளி கவிதைப் போட்டிக்காக 'ஒழுக்கம்' தலைப்பில் கவிதை கேட்டிருந்தான். அந்த கவிதையை பதிவில் ஏற்றியிருக்கிறேன்.

Wednesday, October 21, 2009

கவிதை தேவை.... கதை ஒத்திவைப்பு

நாகரத்னா பதிப்பகம் சார்பாக 'காந்தி வாழ்ந்த தேசம்', 'ஒரு நிமிட கதை' என்று இரண்டு தொகுப்பு நூல் வெளியீடுவதாக அறிவித்திருந்தேன்.

ஒரு சில காரணங்களுக்காக தற்காலிகமாக கதை தொகுப்பு நூல் வேலையை ஒத்திவைத்துள்ளேன். கதை அனுப்பியவர்கள் தங்கள் பதிவில் போட்டுக்கொள்ளலாம். கதை தொகுப்பு நூல் பற்றின அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

'காந்தி வாழ்ந்த தேசம்' திட்டமிட்டபடி வெளியீட இருக்கிறோம். அதனால், கவிதை நூலுக்கான படைப்பு அனுப்பும் தேதி 2.11.09 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில கவிதைகள், காந்தி பற்றி இல்லாமல் இந்தியாவை பற்றி கவிதை எழுதியிருந்தார்கள். கவிதை நன்றாக இருந்ததால், நிராகரிக்க முடியவில்லை. அதனால், இந்த தலைப்பில் காந்தியை பற்றி தான் எழுத வேண்டும் என்று இல்லை. இந்தியாவை பற்றியும் கவிதை எழுதி அனுப்பலாம்.

கவிதைக்கான நிபந்தனைகளில் வேறு எதுவும் மாறவில்லை.

தொகுப்பு நூலுக்கான முந்தைய பதிவு.

உங்கள் சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Monday, October 19, 2009

யார் இந்த பாப்லோ நெருடா , ஏர்னெஸ்ட் ஹெமிங்வே???

எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா எழுத்துகளை வாசிக்கும் போது அடிக்கடி அவர்கள் சொல்லும் பெயர் தாஸ்தாயேவ்கி, ஹேமிங்வே, பாப்லோ நெருடா. இவர்கள் குறிப்பிடும் எழுத்தாளர்கள் அவ்வளவு பெரிய ஆளா...? சும்மா... இந்த எழுத்தாளர்கள் புராணமே பாடுகிறார்கள். படித்து பார்த்து விட வேண்டியது தான் என்று அவர்கள் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களை தேடிபார்த்தேன். அதிஷ்ட வசமாக பாப்லோ நெருடா, ஹேமிங்வே அவர்களை பற்றி தமிழ் புத்தகமே கிடைத்தது.

மஹாகவி பாப்லோ நெருடா
விலை.80
நிழல் வெளியீடு

வாழ்க்கை வரலாறு, கவிதைகள், நினைவலைகள், நேர்முகம், நோபல் பரிசு ஏற்புரை என்று பாப்லோ நெருடா சம்மந்தமான எல்லா கலவை சேர்ந்து தொகுத்த நூல். அதனால், கவிதை, கட்டுரை, வரலாறு என்று எந்த வகையிலும் பிடிப்படாத நூலாக இருக்கிறது. பலர் ஒவ்வொரு பகுதியை மொழிப்பெயர்த்து இருப்பதால், சில இடங்களில் மொழிப்பெயர்ப்பு சுமாராக தான் இருக்கிறது.

சில கவிதைகள் படிக்கும் போது என்னை அறியாமல் ஈழத்தில் நடக்கும் போராட்டத்தை ஒப்பிட தோன்றியது. அவர் கவிதைகளில் எனக்கு பிடித்த சில கவிதைகள்...

இன்றிரவு என்னால் எழுத முடியும்

இனி அவளை நான் காதலிப்பதில்லை. அது நிச்சயம்
எனினும் அவளை எவ்வளவு நேசித்திருந்தேன்
காற்றைத் தேடியலைந்தது என் குரல், அவள் செவிப்புலனைத்தோட
இன்னொருவனின் உரிமையாவாள் அவள்
எனது முந்திய முத்தங்கள் போல
அவளுடைய குரல், பிரகாசமான உடல் முடிவற்ற கண்கள்
இனி அவளை நான் கதலிப்பதில்லை
அது நிச்சயம் எனினும். காதலிக்க நேரலாம்.



நான் சில விஷயங்கள் விளக்குகிறேன்

ஸ்பெயினின் ஒவ்வொரு மூட்டிலிருந்தும்
ஸ்பெயின் வெளிவருகிறது
ஒவ்வொரு இறந்த குழந்தையிலிருந்தும்
கண்களுடன் ஒரு துப்பாக்கி
குண்டுகள் உருவாகின்றன ஒவ்வொரு குற்றத்திருந்தும்
அவை ஒரு நாள்
உம் இதயத்த்தின் மையத்தை தேடும்


தனிப்பாசுரம்

என்னைப் போல் உள்ள மற்ற மனிதரை
எப்பொழுதும் நேசித்தத் தாயாராய் உள்ள
ஏழை மனிதன் நான்


நாம் பலர்

முறையாக நானே எனக்கு
மெய்யாலும்மே தேவைப்பட்டால்
என்னை நானே மறைந்து கொள்ள
அனுமதிக்கக் கூடாதல்லவா ?


அமெரிக்காவின் வன்கொடுமையாளர்கள்

காலியான பாழ்நிலத்தில் எனது கவிதைக்குள்
கைதிகள் நிரப்பப்படுகின்றனர்

புத்தகம்

காதலின் உறுதியற்ற கணம்
தனது முத்தத்தை ஒரு பொதும் எழுதி வைக்காத
மனதின் சூறையாடல்

ஸ்பெயின் போராட்டமும், ஈழத்தில் போராட்டமும் நடக்கும் காலகட்டம் வேவ்வெறாக இருக்கலாம். ஆனால், போராட்டம் ஒன்று தான்.


--

கடலும் கிழவனும்



பல நாட்களாய் கடலுக்கு சென்று வெற்றுக்கையுடன் கரைக்கு திரும்புகிறான் கிழவன். அவனுக்கு ஆறுதல் கூறும் சிறுவன், அடுத்த பயணத்தில் தானும் வருவதாக கூறுகிறான்.

இருந்தும், மீண்டும் தன்ந்தனியாக கடலுக்கு செல்கிறான். நடுகடலில் மீனுக்காக காத்திருக்கிறான். தான் ஒரு துரதிஷ்டசாலி என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு, பெரிய மீன் அவன் வலையில் வந்து மாட்டிக் கொள்கிறது. இரண்டு நாட்களாக கடுமையாக போராடி அந்த மீன்னை கொள்கிறான்.

அந்த மீன் படகை விட பெரிதாக இருப்பதால், தன் படகில் கட்டி இழுத்து வருகிறான். கரைக்கு வரும் வழியில் அந்த பெரிய மீன்னை சுறா மீன் வருகிறது. அதனோடு யுத்தம் செய்து கரைக்கு மீனோடு திரும்புவது தான் கதை. இடையில், பேஸ்பால் போட்டியில் யார் வென்றிருப்பார்கள் என்று எண்ணுவதும், அந்த சிறுவன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பதும், தனியே உறக்க கத்துவதும் என்று நாவல் முழுக்க கிழவன் மட்டுமே தான் வாழ்கிறார்.

ஒரு கதாபாத்திரம் வைத்து நாவலின் பெரும் பகுதியை ஸ்வாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் ஹெமிங்வே.

உரையாடல் வசனங்கள் சுத்த தமிழில் இருப்பதால், மீனவர்கள் வாழும் இடத்தில் கொண்டு செல்ல நம்மை தடுக்கிறது. மொழிபெயர்ப்பு நாவல் என்று அவ்வபோது நியாபகம் படுத்தும் வசங்களாகவே இருக்கின்றன.

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே
வ.உ.சி.நூலகம்
விலை.50

****

மனதை தொடும் நிகழ்வுகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது கோட்டை விட்டது போல் உள்ளது. இதனால், நோபல் பரிசு பெற்ற இரண்டு பெரும் எழுத்தாளர்களில் படைப்பை படித்த திருப்தி முழுமையாக கிடைக்கவில்லை.

Sunday, October 18, 2009

ஈழ கவிஞன்

எதற்காக எனக்கு பாராட்டு ?
யாருக்கு வேண்டும் உங்கள் பூ மாலை.. ?

என் கையாளகாத தனத்திற்கு
எதற்கு விருது ?
புலம் பேர்ந்தவர்களின்
புலம்பலை பதிவு செய்ததற்கு
சால்வை எதற்கு ?

மிஞ்சியவர்களை
காப்பாற்ற முடியாமல்
பேனா பிடித்து
எழுதும் என் போன்றோர்களால்
உணர்வுகளை மட்டுமே
தட்டி எழுப்ப முடியும் !
உயிர்களை அல்ல...!!

எதற்காக எனக்கு பாராட்டு ?
யாருக்கு வேண்டும் உங்கள் பூ மாலை.. ?

**

பாப்லோ நெருடா கவிதைகள் படிக்கும் போது எனக்கு தோன்றிய கவிதை.

Thursday, October 15, 2009

வரம்பு மீறிய சாரு நிவேதிதா



கருத்து சண்டை, குத்து சண்டை, கும்மாகுத்து சண்டை என்று பல சண்டை பதிவில் நடந்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், 'சண்டை நாயகன்' சாரு நிவேதிதா அவர்களை நாம் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்று தோன்றியது. அதான், அவர் எழுதிய 'வரம் மீறிய பிரதிகள்' புத்தகம் பற்றிய என் பார்வையில் ஒரு பதிவு.

“சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.”

பின் அட்டையில் அச்சான வாசங்கள்.

சாரு மீது பலர் (என்னையும் உட்பட்) பல விதமான விமர்சணங்கள் முன் வைத்தாலும், அவரின் (எழுத்து) தேடலை படித்து பல முறை பிரம்பித்து போயிருக்கிறேன். பொதுவாக ஆறு மாதத்திற்கு படிக்க வேண்டிய நூல்களை வாங்கி மூன்று மாதத்தில் படித்து முடித்து விட வேண்டும் என்று நினைப்பேன். இதில் என் எழுத்துலக நண்பர்கள் எழுதிய சில மொக்கை புத்தகங்கள் அடங்கும். ( கஷ்டப்பட்டு சொந்தமாக புத்தக போட்டவர்களை என்னால் முடிந்த வரை ஒரு பிரதி வாங்கி படித்து தொலைப்பேன்.)

“நான் படிக்க நினைக்கும் புத்தகங்களை படிக்க எனக்கு இரண்டு ஜென்மம் வேண்டும்” என்று பல முறை நினைத்திருக்கிறேன். சாரு தன் வலைத்தளத்தில் "நான் படிக்க நினைக்கும் புத்தகங்களை படிக்க மூன்று ஜென்மம் வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இவருக்கே மூன்று ஜென்மம் தேவை பட்டால், நான் பத்து ஜென்மம் எடுத்து வந்து தான் அத்தனை புத்தகங்களை படிக்க வேண்டும்.

சாரு எழுதிய இலக்கிய கட்டுரைகள் படித்தால், கண்டிப்பாக ஒரு ஜென்மம் எடுத்து படிக்க வேண்டிய புத்தக பட்டியல் குறையும். இந்த புத்தகம் சாரு ஒரு எழுத்தாளர் என்பதை விட அவர் ‘ஒரு நல்ல வாசகர்’ என்று காட்டுகிறது.

இந்த நூலில் நகுலனை பாராட்டும் சாரு, சுந்தர ராமாசாமி, புதுமைபித்தன் போன்றோரை தன் விமர்சனத்தால் Total damage செய்திருக்கிறார்.

இதில் , சில கட்டுரைகள் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். பல மொழி புத்தகங்களின் சாரத்தையும், ஆழமான சிந்தனையும் நம்மிடம் பகிர்ந்து கொள்வதும், அந்த புத்தகங்களை படிக்க தூண்டுவதும் பல கட்டுரைகள் இருக்கின்றன.

என் பார்வையில்… சாரு அவர்கள் எழுதிய நூல்களில் படிக்க வேண்டிய நூல் இது என்று கருதுகிறேன்.



சாரு சொன்ன படிக்க வேண்டிய நூல்கள்

Blood and Guts in high school - Kathy Acker
Main Currents of Marxism - கோலகோவ்ஸ்கி
Fear in Chile - Patricia Politzer
Islo 10 - அயிந்தே
The offical Story –
Funny dirty little war - ஒஸ்வால்தோ ஸொரியானோ
Report to Grew – கஸான்லொகி
Real life of Alejandro Marta - யோசா
One hundred of solititude
El Ilano en ilamas ( எனியும் சமவெளி ) - ருல்போ
Waiting for an angel - Helon Habila
Ship of fools - மார்த்தாத் ராபா
Sexual/Textual politices : A feminist theory - Toril moi
என் கதை - வெ.ராமலிங்கம் பிள்ளை
தமிழவனின் நாவல்கள்
புனர்ஜென்மம் (சிறுகதை) - கு.பா.ரா
மகாகவி பாரதியார் - வ.ரா. - சந்தியா பதிப்பகம்
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
வேண்டப்படாதவன் (சிறுகதை) - லா.ச.ரா

கடுமையாக விமர்சித்த நூல்கள்

ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
உபபாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
ராமாயணம்


பக்கங்கள்:278
விலை.170
உயிர்மை பதிப்பகம்

Wednesday, October 14, 2009

நகம்



பொழுது சாய்ந்த பிறகு நகத்தை வெட்டுவது வீட்டுக்கு ஆகாது என்பார்கள். ஆனால், இதை விட நல்ல பொழுது இல்லை என்று சிதம்பரம் சொல்பவன். அலுவக வேலை பலுவுக்கு நடுவில் தன் நகத்தை கடித்து எடுத்துவிடுவான். டென்ஷனாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் அவன் கையில் நகம் வளர விடமாட்டான். வளர்வதும் பிடிக்காது.

இரவு சாப்பிட்டு கட்டிலுக்கு பாலுடன் வந்த மனைவியின் விரலை பார்த்தான். ஒவ்வொரு விரலின் நகம் பெரிதாக இருந்தது. ஆடி மாதம் முடிந்து நேற்று தான் அம்மா வீட்டில் இருந்து மல்லிகா வந்தாள். ஒரு மாத பிரிவில் அவளை அனைப்பதிலும், முத்தமிடுவதிலும் ஆசையாய் இருந்த சிதம்பரம் அவள் நகத்தை கவனிக்க வில்லை. இப்போது தான் பார்த்தான்.

"என்ன இவ்வளவு பெருசா நகத்த வளர்த்திருக்க..."

"தினமும் சாப்பாடு போட்டு வளர்க்கிறேன்" என்று கிண்டலாக கூறினாள்.

சிதம்பரம் செல்லமாக அவளை முறைத்தாள். மல்லிகா சிரித்தபடி, " பின்ன என்ன ! நகத்த வெட்டல வளர்ந்திடுச்சு....!"

"இரு வெட்டுறேன்...."

" இராத்திரி நேரத்துல வேணாம். காலையில வெட்டுங்க..."

" நேத்து ‘அந்த’ சமயத்துல என்ன கீறிட்ட. அப்போ எனக்கு பெருசா தெரியல. இப்போ வெட்டுனா தான் அது செய்ய எனக்கு மூடு வரும்...!!"

மல்லிகா தன் கையை எடுக்க நினைத்தும், சிதம்பரம் விடாமல் அவள் கையை இழுத்தான். தன் கையில் நகம் இல்லாததால் அவள் நகத்தை வாய்யால் கடித்து வெட்டினான்.

" ஐய்யோ ! இப்போ தான் பாத்திரம் கவுவின..."

" பராவாலே...! " அவளின் நகத்தை கடித்தப்படி சொன்னான்.

" ஒரு மாச ஊருல இருந்தியே...! உங்க சொந்தகார எல்லாரு வீட்டுக்கு போனீயா..!!" என்றான்.

" எங்க டைம்மே இல்ல. அம்மாவோட கோயிலுக்கு போனேன். அண்ணா பசங்களோட விளையாடுவேன். உங்க கிட்ட போன் பேசுனேன். அவ்வளவு தான்."

" ஒரு மாசமா இந்த வேல தானா ???"

" பின்ன... நம்ப ஊரு மாதிரி சுத்தி பாக்குற மாதிரி அந்த ஊருல எதுவும் இல்லையே...."

வடது கையில் நான்கு விரலில் நகத்தை எடுத்து விட்டு கட்டை விரலின் நகத்தை எடுத்து காகிதத்தில் போட்டான்.

" அப்புறம் சொல்ல மறந்திட்டேன். உங்க பெரியம்மாவ கோயில்ல பார்த்தேன். வீட்டுக்கு வர சொன்னாங்க... எனக்கு தான் போக நேரமில்ல. அத்த வீடு, சித்தி வீடு போறத்துக்கு சரியா இருந்துச்சு...."

" அடிபாவி ! இப்போ தான் எங்கையும் போகல சொன்ன..."

" அதுக்காக சொந்தகார வீட்டுக்கு போகமா இருப்பாங்களா..."

ஒரு மாச பிரிவில் தன் சொந்தகாரர்கள் வீட்டில் போகாதத் பெரிதாக தெரியவில்லை. அவள் நகம் தான் பெரிதாக தெரிந்தது. பொறுமையாக இடது கையில் விரல்களில் நகத்தை கடித்தான்.

" ஆமா ! எங்க மாமாவுக்கு 500 ரூபா தரணும் சொன்னனே தந்தியா....!"

" இல்லங்க...! அண்ண பசங்களுக்கு எதுவும் வாங்கிட்டு போலியா.... பொம்மை வாங்கி கொடுத்திட்டேன்..."

" ஐந்நூறு ரூபாய்க்கும் பொம்மையா..." என்று நடுவிரல் நகத்தை கடித்தபடி அதிர்ந்தான்.

" பின்ன...! பெரிய அண்ணன் பசங்க இரண்டு, சின்ன அண்ண பசங்க மூனு... ஆளுக்கு 100 ரூபா வச்சாலும்... ஐந்நூறு வருதா..."

"ம்ம்ம்....சரி..." என்று ஆள்காட்டி விரலை கடித்தான்.

இந்த சமயத்தில் ஐந்நூறு ரூபாய்க்கு சண்டை போடுவது சரியில்லை என்பதற்காக அமைதியாக இருந்தான். கட்டை விரல் நகத்தை கடித்து, நகங்கள் வைத்த பேப்பரை குப்பையில் போட்டான்.

தன் சொந்தக்காரர்களை பார்க்காதது சிதம்பரத்துக்கு பெரிதாக தெரியவில்லை. பெரிதாக இருந்த நகம் வெட்டியாகிவிட்டது. எதுவாக இருந்தாலும் காலையில் பேசலாம். சண்டை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.

மல்லிகாவை படுக்க வைத்து சிதம்பரம் அவள் மேல் படுத்து முத்தமிட தொடங்கினான். நேற்று அவனை கீறிய நகம், இன்று இல்லாதது சிதம்பரத்துக்கு நிம்மதியாக இருந்தது.

Tuesday, October 13, 2009

என் பழைய நண்பா !



என் பழைய நண்பா !
இதை நான் சொல்லும் போது
உன் கண்கள் சிவந்திருக்கும்
பற்கள் ஒன்றொடு ஒன்று
மோதிக் கொள்ளும்
விரல்கள் இறுக்கி
அடிக்க நினைக்கும்
காதை திருகி
கடலில் போட தோன்றும்

நாம் இது வரை
பழகிய நினைவுகள் அந்நியமாக்கப்படும்
பரிமாரிக் கொண்டது எல்லாம்
பஞ்சாய் பறந்துப் போகும்
தேவையில்லா வார்த்தையின்
நீளம் குறையும்

பழைய நண்பா !
இதை நான் சொல்லும் போது
நான் உனக்கு அந்நியனாக இருப்பேன் !

***

பதிவில் கருத்து சண்டை இருக்க கூடாது என்று சொல்லிக் கொண்டு இருந்தேன், இப்போது குத்து சண்டையே வந்துவிட்டது.

Monday, October 12, 2009

நடிகர் சங்கம் vs பத்திரிகையாளர்கள்

புவனெஸ்வரி என்ற தனி நபர் விபச்சார வழக்கு எப்படி எல்லாம் திசை மாறி நடிக சங்கம் - பத்திரிகையாளர்கள் சண்டையாக மாறிவிட்டது. கடைசியில், வழக்கில் கைதான புவனெஸ்வரியை மறந்து விட்டனர். மூன்று நாட்கள் பெரிய விஷயமாக இருக்கும் என்று எதிர்பார்த்தது, இப்போது ஒரு மாதத்திற்கு பெரிய செய்தியாக மாறிவிட்டது.

தினமலர் வெளியிட்ட விபச்சார நடிகைகள் பட்டியலை வெளியிட்ட கண்டன கூட்டத்தில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் உண்மையான குணம் தெரிந்துவிட்டது. அவர்கள் யாருக்கு பிறந்தவர்கள் என்பதை பத்திரிகையாளர்களை திட்டியதில் தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக கூடிய கூட்டத்தில் கூட இத்தனை ஆவேசத்தை காட்டவில்லை. இலங்கை இராணுவத்தை எதிர்த்து பேச வாய்வரவில்லை. அங்கு நடக்கும் பிரச்சனையை எழுதிய பத்திரிகையாளர் குடும்பத்தை சேர்த்து திட்டுவதற்கு இவர்களுக்கு பல வார்த்தைகளை கண்டு பிடித்து பேசி இருக்கிறார்கள்.

தினமலர் மீது மான நஷ்ட வழக்கு போட்டு முடிய வேண்டிய விஷயத்தை, தன் நண்பர் விஜயகுமார் மனைவி (மஞ்சுளா) பெயரை பிரசுரம் செய்ததற்காகவே நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பெரிதாக ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் அவர்கள் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்.

இவ்வளவு பெரிய பிரச்சனை ஆன பிறகு, தினமலர் தங்கள் ஆதாரத்தை வெளியீட வேண்டும். அப்போது தான் அவர்கள் சொன்னது உண்மை என்று நம்ப வைக்க முடியும். இல்லை என்றால், அவர்கள் வெளியீட்ட செய்தி யூக மாக கருதப்படும்.

எது எப்படியோ ஒரு மாதத்திற்கு இது தான் "Headlines"

டிஸ்கி : பத்திரிகையாளருக்கு எதிரான மனுவை முரசொலி ஆசிரியர் (முதல்வர்) நடவடிக்கை எடுக்க கொடுத்திருக்கின்றனர். முதல்வருக்கு வேறு வேலையே இல்லையா.... அவர் பதவியை நடிகர் சங்கம் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் நாட்டமைக்கு தான் வெளிச்சம்...

Tuesday, October 6, 2009

கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா - ஓர் எதிர்வினை

கேபிள் சங்கர் அவர்களின் 'கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா' பதிவை படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவருக்கு இவ்வளவு குறுகிய பார்வை என்பதை இந்த பதிவு காட்டிவிட்டது. அதுமட்டமில்லை... எம்.ஆர்.பியை விட 3 ரூபாய் அதிகமாக கொடுப்பது தான் அவர் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. கேபிள் சங்கர் இவ்வளவு சுயநலமானவர் என்று நான் நினைக்கவில்லை.



டாஸ்மாக் கடையில் ஒரு ப்ளாஸ்டிக் க்லாஸ்யின் (அசல் விலை 1 ரூ.) விலை 2.5 ரூபாய். ஒரு வாட்டர் பாக்கெட்டின் (அசல் விலை 1 ரூ) விலை 2.5 ரூபாய். ஆக, ஒரு க்வாட்டர் குடிப்பவன் கண்டிப்பாக ப்ளாஸ்டிக் க்லாஸ், தண்ணீர் இல்லாமல் குடிக்க முடியாது என்பதால் அவன் வாங்கி தான் திற வேண்டும். இதில் 3 ரூபாய் டாஸ்மாக் கொள்ளை அடிக்கிறான். ஒரு நாளைக்கு 200 பேர் குடிக்கிறார்கள் என்றால், 600 ரூபாய். மாதத்திற்கு 18,000 ரூபாய்.

டாஸ்மாக்கில் கடை போட்டு முட்டை, சிக்கன் விற்பவன் தனக்கு ஆகும் விற்பனையில் இருந்து 2 சதவீதம் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஆதாவது நீங்கள் வாங்கும் சிக்கன், மட்டன், பீப், கடலை, ஆம்லேட் எல்லாவிற்றில் இருந்து இரண்டு சதவீதம் கொடுக்க வேண்டும். டாஸ்மாக் கடையில் வாங்கி குடிப்பவர்கள் யாரும் பில் வாங்குவதில்லை. ஒரு நாளுக்கு இவ்வளவு தான் சேல்ஸ் என்று சொன்னாலும் நம்பி தான் ஆக வேண்டும். அதில், டாஸ்மாக் அநியாய லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இது எல்லாம் போக் நீங்கள் குடித்து விட்டு பாட்டில் அங்கேயே வைத்து விட்டு வந்தால், பழைய கடையில் ஒரு பாட்டில் ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 200 பாட்டில் என்றால் 200 ரூபாய். ஒரு மாதத்திற்கு 6000 ரூபாய். வருடத்திற்கு 72,000 ரூபாய்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக... இரவு 10 மணிக்கு கடையை மூட வேண்டும். ஆனால், 9:45 மணிக்கு 'Closed' என்பான். நீங்கள் கேட்டால், அக்கௌண்ட்ஸ் பார்த்து மூட வேண்டும் என்பான். கொஞ்சம் குரலை உயர்த்தி செட்டு சேர்ந்து கத்தினால் கொடுப்பான். சில சமயம் செட்டு சேரவில்லை என்றால்... அவ்வளவு தான். தர மாட்டான். 10 மணிக்கு மேல், 60 ரூபாய் க்வாட்டரை அங்கு சிக்கன் கடை போட்டவன் 100 ரூபாய்க்கு விற்பான். அந்த சமயத்தில் குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் சொல்லும் விலையில் வாங்கி தான் ஆக வேண்டும். இதில் டாஸ்மாக் அநியாய அநியாயத்திற்கு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்களிடம் பங்கு வாங்குவதற்கு போலீஸ் காத்திருப்பு தனி கதை...!!

டாஸ்மாக்கில் இத்தனை விஷயம் இருப்பதை Part-time குடிகாரனான எனக்கு இவ்வளவு தெரியும் போது, ஒரு Full-time (?) சீனியர் குடிமகனான நீங்கள் சொல்லாமல் விட்டதை என்னால் மன்னிக்க முடியாது. இன்னும் நான் ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

படித்ததில் பிடித்தது : ஈழ கவிதைகள்

நண்பர் ஒருவர் எனக்கு SMSயில் ஈழ கவிதைகளை அனுப்பியிருந்தார். அதில் எனக்கு பிடித்த கவிதையை தொகுத்து பதிவு ஏற்றியுள்ளேன்.



முடி சூடிய தமிழினம்
முள்வேளி கம்பிக்குள் !

- ஈழபாரதி, புதுக்கோட்டை

**

சிங்கள பெண்கள்
உதட்டு சாயம்
ஈழ தமிழர் குருதியில் !

- கணேசன், காங்கேயம்

**

பணிக்கூடம் உடைத்து
தொப்புல் கொடி அருத்தார்கள்
துடிக்கிறது ஈழம் !

- அமீர்ஜான், திருநின்றவூர்

**

அம்மனமாய் தமிழன்
அகிலமே பதைக்கிறது
உடன் பிறப்புக்கு தமிழ் மாநாடு !

- ஏழைதாசன், புதுக்கோட்டை - 2

**

புத்த தேசத்திற்கு
ஆயுதம் கொடுத்தது
காந்தி தேசம் !

- எஸ்.விஜயகுமார், புதுக்கோட்டை

**

ஆனாதையாக அமைதி
தத்தெடுக்க துடிக்கும் ஈழம் !

- ஜஸ்டின், கொடைக்கானல்.

Sunday, October 4, 2009

கவிதை, கதை எழுதுபவர்கள் எங்கே ???

'நான் சொந்தமாக பதிப்பகம் தொடங்க போறேன்.என்ன செய்யலாம் ?' என்று கேட்டேன். அவர், 'நல்ல தானே இருந்த. என்னப்பா ஆச்சு..?' என்று கிண்டலாக கேட்டார்.

உண்மையாக புத்தகம் எழுதுவதை விட புத்தகம் வெளியீடுவது அதை விட சிரமம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

பதிவு போடாமல் இதை சாதிக்க வேண்டும் என்று இருந்தேன். வேறு வழியில்லாமல் என் விரதத்தை விட்டு பதிவு போடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் படைப்பை அனுப்புங்கள்.

நாகரத்னா பதிப்பகம் சார்பில் வெளியீடப்படும் இரண்டு தொகுப்பு நூல்

'ஒரு நிமிட கதை'- சிறுகதை தொகுப்பு

1.கதை ஒரு பக்க அளவில் இருக்க வேண்டும். அதிகப்படி 250 வார்த்தைகள் இருக்கலாம்.

2.கதை எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆபாசமான கதைகள் இருக்க கூடாது. அவ்வளவு தான்.

3.தேர்வு செய்யப்படும் கதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

'காந்தி வாழ்ந்த தேசம்'- கவிதை தொகுப்பு

1. 24 வரிகள் மேல் இருக்க கூடாது.

2. காந்தி வாழ்ந்த காலம், இப்போதைய இந்தியா, காந்தி அரசியல், காந்தி இல்லாத அர்சியல் என்று எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

3. ஹைக்கூ, மரபு, புதுகவிதை - எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 24 வரிகள் மேல் தாண்டக்கூடாது.

தயவு செய்து காந்தியை தாக்கி கவிதை எழுத வேண்டாம்.

( சத்தியமாக நான் காந்தியவாதி இல்லை. ஆனால், அவரை பற்றி தொகுப்பு நூல் போட வேண்டும் என்று தோற்றியது. அதான், இந்த தலைப்பு....!!)

4. தேர்வு செய்யப்படும் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 20.10.09

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
TO :nagarathna_publication@yahoo.in
CC : kannan.gurumurthy@gmail.com போடவும்.

பொது விதிமுறைகள்.

நீங்கள் அனுப்பும் படைப்புகள் யுனி கோட்டில் இருக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்புபவர்கள் 'In-text' மெயிலாக அனுப்பவும். Download செய்யும் போது சில சமயம் பிரச்சனை வரலாம். உங்கள் படைப்பை Attachment யில் அனுப்புவதை தவிர்க்கவும்.

தயவு செய்து பதிவில் போட்ட படைப்புகளை அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்பு தேர்வாகாத பட்சத்தில், நீங்கள் உங்கள் படைப்பை பதிவில் போட்டுக் கொள்ளுங்கள்.

இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் நீங்கள் அனுப்பும் கவிதைக்கும், கதைக்கும் உதவி தொகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
குகன்

பி.கு : மேலும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Saturday, October 3, 2009

வாடிய மல்லி !

"பிச்ச வாங்கி தான் வாழனும்னு மனசுல பச்ச குத்தியிருக்காங்க போலிருக்கு..." என்று மனதில் நினைத்துக் கொண்டான் கோகுல்.

மதுரை செல்லும் வரை ட்ரெயினில் போழுது போகவில்லை என்று ஒரு பழைய புத்தகம் வாங்கி படித்துக் கொண்டு இருந்தான். ஒருவன் அமர்ந்த படி இறுக்கையில் இருந்தவர்களின் கால் கீழ் இருக்கும் குப்பையை சுத்தம் செய்து பிச்சைக் கேட்டு வந்தான். ஸ்வரஸ்யமாக படித்துக் கொண்டு இருக்கும் போது அந்த பிச்சைக்காரன் கோகுலின் காலை தொட்டு பிச்சை கேட்டான்.

" ஏப்பா உக்காந்த இடத்துல ஷூ பாலீஷ் போடலாம், பேப்பர் கடை வைக்கலாம். எதுக்கு பிச்ச எடுக்குற " என்று சொல்ல கோகுல் வாய் எடுத்தான். வார்த்தைகள் தொண்டை வரை நின்றது. " காசு இருந்தா போடு. வெட்டி பேச்சு பேசாத ! " என்று அந்த பிச்சைக்காரன் சொல்லிவிட்டால், மதுரை வரும் வரை மற்ற பயணிகள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். எதுக்கு வம்பு என்று காசு கொடுக்காமல் அமைதியாக மீண்டும் புத்தகம் படித்தான்.

ஆர்வமாக படித்துக் கொண்டு இருக்கும் போது மீண்டும் பிச்சை கேட்கும் குரல். கவனிக்காமல் இருந்தான். இரண்டு கை தட்டல் சத்தம் கேட்டது. பிச்சை கேட்பவனை அடித்து துரத்த வேண்டும் என்று கோபமாக நிமிர்ந்து பார்த்தான். ஒரு திருநங்கை பிச்சை கேட்டு நின்றது.... மன்னிக்கவும் நின்றார்.



கோகுல் மனதில் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. தன் பையில் இருந்து 10 ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

" மகராசனா இருக்கனும்..!" என்று வாழ்த்தி விட்டு அந்த திருநங்கை சென்றார். அவனுடன் பயணம் செய்தவர்கள் யாரும் அந்த திருநங்கைக்கு காசு போடவில்லை. ஊனமுற்றவனுக்கு காசு போடாதவன், திருநங்கைக்கு பணம் கொடுத்த கோகுலை பலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

அவன் அதை பற்றி கவலைப்படாமல் தன் கையில் இருக்கும் புத்தகத்தை படித்தான்.

" பிஷ்மர் மரணத்திற்குக் காரணமான சிகண்டி ஒரு அலி, அர்ஜூனன் அலியின் உருவத்தோடு இருக்கும் போது தான் கௌரவப்படைகள் தன்னந்தியாய் தோற்கடித்தான். கடவுள் ஆண் வடிவாகவோ அல்லது பெண் வடிவாகவோ பாராபட்சமாய் இருக்க முடியாது. அலி வடிவத்தில் தான் இருக்க வேண்டும்"

மதுரை வரும் போது, சு. சமுத்திரம் எழுதிய 'வாடா மல்லி' புத்தகத்தை படித்து முடித்தான்.

--
குட்டி கவிதை

இவர்களை 'அவன்','அவள்'
என்று அழைக்க முடியாதது தான் !
'அது' என்று அழைக்காமல்...
'அவர்' என்று அழைப்போம் !!

LinkWithin

Related Posts with Thumbnails