வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, February 2, 2009

வாய்தா வாங்கும் வழக்குகள்

நம் நாட்டில் விசாரனை முடிந்து எல்லா வழக்குகளுக்கும் தீர்ப்பு வருவதற்கு முன்னூறு ஆண்டுகள் ஆகும். தீர்ப்புகள் தள்ளிச் செல்லவே நீதி மன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கிறோம். நீதி மன்றங்கள் சரியாக இயங்கினால் தான் எந்த நாட்டையும் முன்னேற்ற முடியும். அதை சரியாக வழி நடத்த தெரியாமல் தான் நாம் தடுமாறிக் கொண்டு இருக்கிறோம்.

ஆரபு நாட்டில் திருடுபவர்களுக்கு தூக்கு தண்டனையாம். ஒருவன் இயலாமை காரணமாக திருடும் போது காவல் துறையிடம் பிடிப்பட்டு விடுகிறான். அவனை தனியாக தண்டித்தால் யாருக்கும் தெரியாது என்று மக்கள் மத்தியில் தூக்கிலிட்டு கொன்றார்கள். அந்த திருடனின் மரணத்தை மக்கள் கூட்டமாக வந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்பொது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவன் தன் பணம் பரிப்போனதாக அலருகிறான். எந்த கடுமையான தண்டனை வைத்தாலும் தவறு செய்பவர்கள் தவறு செய்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

நம் நாட்டில் தீர்ப்புகள் தாமதமாய் வருவதால் நல்லவர்களை கூட தீய வழி செல்ல வழி வகுக்கிறார்கள். 1996ல் ஒரு மானைக் கொன்ற வழக்குகாக ஒரு நடிகனுக்கு 2006ல் எழு வருடம் தண்டனை வழங்கப் பட்டது. அந்த நடிகர் மானைக் கொள்ளாமல் இருந்திருந்தால் இடைப்பட்ட காலத்தில் அந்த மானே வயதாகி இறந்திருக்கும்.

1983 ஆம் ஆண்டு ஒருவன் ஒரு குடும்பத்தையே வெட்டிக் கொலை செய்து இருக்கிறான். அவனுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கியும் உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ஜனாதிபதி கருணை மனு என்று இருபது வருடம் கடந்து 2003ல் தான் அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவெற்றப் பட்டது. அவனை தூக்கில் இடும் போது அவனுக்கு வயது ஐம்பத்தியெட்டு. இன்னும் சில நாள் அவனே வயதாகி இறந்திருப்பான்.

உடல் சரியில்லை என்று மருத்துவ மனையில் சேர்பவனும், நீதிக்காக நீதி மன்றத்தில் வழக்குப் போட்டவனும் நிம்மதியாக இருப்பதில்லை. காரணம் ஒரு புறம் பணம் செலவாய் செல்லும், மறுபுறம் அங்கும் இங்கும் அலைந்து திரிய வேண்டும். மருத்துவமனைக்கும், நீதி மன்றத்திற்கும் செல்லாதவனே நிம்மதியாக வாழ்கிறான்.

இன்றைய இளைஞர்கள் (என்னையும் உட்பட) வழக்கறிஞர் தொழிலை பெரிதாக நினைப்பதில்லை. எல்லோரும் மருத்துவம், பொறியியல் பற்றியே சிந்திக்கிறார்கள். மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், வா.உ.சிதம்பதரார் பிள்ளை போன்றவர்கள் வழக்கறிஞர் தொழிலில் இருந்து தான் வந்தார்கள். ஆனால், இன்று பெரும் பாலும் அந்த படிப்பை விரும்பி படிப்பதில்லை. மருத்துவம், பொறியியல் கிடைக்காதவனே வழக்கறிஞர் படிப்பை படிக்கிறான். வேறு வழியில்லை எதாவது படித்தாக வேண்டும் என்று வழக்கறிஞர் படிப்பாகிவிட்டது.

சரி வாய்தா வாங்கும் வழக்குகளை பற்றியும், மாணவர்கள் வழக்கறிஞர் விரும்பி படிக்கவில்லை என்பதையும் செய்திதாள்கள், தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இதை எப்படி சரி செய்வது....???

நம் நாட்டில் காவல்துறை மட்டுமே இருபத்தி நான்கு மணி நேரம் இயங்குகிறது. நீதி மன்றங்கள் அல்ல. கொலை, திருட்டு, மற்றவரை ஏமாற்றுவரு இப்படி இருபத்தி நான்கு மணி நேரத்தில் எந்த தவறு வேண்டுமானாலும் நடக்காலம் என்பதற்காக காவல்துறை ஒவ்வொரு மணி நேரம் பணியாற்றுகிறார்கள். ஆனால் தவறு செய்தவனுக்கு விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு நீதி மன்றங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை. ( பிரமாண பண்டிகை நாளில் 11.30 மணிக்கு நீதி மன்றம் தொடங்கும்).

மக்களுக்கு தேவையான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும். அப்பொது தான் தீர்ப்பை மற்றவர்களுக்கும் மதிப்பார்கள். காலம் கடந்து கடவுளே தீர்ப்பு வழங்கினாலும் அந்த கடவுளை கூட தூக்கி எறியும் காலமட் இது. அதனால் நீதி மன்றங்கள் இருபத்தி நான்கு மணி நேரம் இயங்க வேண்டும். இன்னும் தெளிவாய் சொல்ல போனால் 24 X 7 மணி நேரம் நீதி மன்றங்கள் மக்கள் வழக்குகளை விசாரிக்க வேண்டும்.

ஏன் சாத்தியமில்லை....? இரவு நேரத்தில் தாய் பசு இறந்த தன் கன்றுக்காக மனுநீதி சோழனிடம் செல்லவில்லை. மனுநீதி சோழன் இரவு நேரம் என்று வழக்குக்கு வாய்தாவா கொடுத்தார் ? அந்த வழக்கில் விசாரித்து தவறு செய்தவன் மகனென்று பார்க்காமல் தேரில் ஏற்றி கொல்லவில்லை. அந்த காலத்தில் இருபத்தி நான்கு மணி நேரம் நீதி மன்றங்கள் நடந்தன. நீதிபதிகளாக அரசர்கள் இருபத்தி நான்கு மணி நேரம் தீர்ப்பு வழங்கினார்கள். காலம் கடக்க வெள்ளையன் வந்து நம்மை ஆட்சி செய்ய நீதி மன்றத்திற்கு நேரமும், சனி, ஞாயிறு விடுமுறை என்று விதித்து விட்டான். அதையும் நாம் மறக்காமல் தொடர்கின்றோம்.

இன்று பல தனியார் நிறுவனமும் அதிகம் லாபம் காண்பது இருபத்தி நான்கு மணி நேரம் உழைப்பு தான். ஒரு நாளை மூன்று எட்டு மணி நேரங்களாக பிரித்து, ஒவ்வொரு எட்டு மணி நேரமும் ஒவ்வொரு ஊழியர்கள் உழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Shift basis work என்பார்கள். நம் நீதி மன்றங்களும் அப்படி இயங்க வேண்டும்.

நீதி மன்றத்தில் இருபத்தி நான்கு நேரம் வழக்குகள் விசாரித்தால் எல்லா வழக்குகளும் தீர்ப்பு கிடைக்கும். அப்படி என்றால் இப்பொது இருக்கும் நீதிபதிகளை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். அவர்களுக்கு எற்றார் போல் ஒரு நாளைக்கு எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து வேலை செய்யலாம்.

வழக்கறிஞர்கள் எண்ணிக்கை உயர்த்த மாணவர்கள் மத்தியில் வழக்கறிஞர் தொழிலை பற்றி உயர்வான எண்ணத்தை பெருக்க வேண்டும். மருத்துவம் போல் வழக்கறிஞர் தொழில் சேவை என்று உணர்த்த வேண்டும்.

நம் நாட்டில் சிறைசாலையில் இருக்கும் கைதிகளில் இருபது சதவீதம் மட்டுமே தீர்ப்பு வழங்கப் பட்டவர்கள். மீதி எண்பது சதவீத கைதிகள் தீர்ப்புகளுக்காக நீதி மன்றங்களுக்கு அலைத்தும் செல்வதுமாய் இருக்கிறார்கள். இந்திய சிறைசாலையில் சுமராக எண்பது லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு நாளுக்கு நீதி மன்றத்திற்கு அலைத்து செல்லும் செலவு பத்து ரூபாய் என்று வைத்துக் கொண்டால் எண்பது லட்சத்திற்கு எட்டு கோடி செலவாகிறது. வருடத்துக்கு ஒரு கைதியை சுமராக இருபது முறை நீதி மன்றத்திற்கு அலைத்து செல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட எண்பது லட்ச கைதிகளுக்கு 160 கோடி செலவாகிறது. கைதிகளுக்காக தேவை இல்லாமல் இத்தனை கோடி செலவு செய்கிறார்கள். தீர்ப்புகள் தள்ளிப் போடுவதால் அரசாங்கத்திற்கு இத்தனை கோடி செலவாகிறது. குறைவான காலத்தில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினால் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் செலவுகள் குறையும்.

( தாய் மண் (இலக்கிய மாத இதழ்) : மார்ச், 2007 )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails