வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, February 6, 2009

நடிகர் சீரன்ஜிவியின் அரசியல் வரவு

சமிபத்தில் Business World நடத்திய கருத்து கணிப்பில் 2009 ஆம் ஆண்டு கவனிக்க தக்க நபர்களில் நடிகர் (அரசியல்வாதி) சிரன்ஜிவி இருப்பதை பார்த்து அதிர்ந்துவிட்டேன்.

நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது எதோ புது வீடு வாங்குவது மாறிவிட்டு வருகிறது. இப்படி விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், டி.ராஜேந்திரன் என்று சொந்தமாக கட்சி தொடங்கிபவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும். நடிகர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் அவர்கள். எப்படி தமிழ் நாட்டு நடிகர்களுக்கு எம்.ஜி.ஆர் முன்னோடியாக இருந்தாரோ ஆந்திரா மாநிலத்திற்கு என்.டி.ராம ராவ் இருக்கிறார்.



‘தெலுங்கு தேசம் கட்சி’ தொடங்கி குறுகிய காலத்தில் வெற்றி கனியை சுவைத்தவர். எப்படி 1982 ஆம் ஆண்டு என்.டி.ஆர் (ராமா ராவ்) வரவை மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்களோ அதே அளவிற்கு கை தட்டல்களும், ஆரவாரமும் நடிகர் சீரன்ஜிவிக்கு கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 26, 2008 அன்று என்.டி.ஆர் போலவே திருப்பதியில் பிரஜா ராஜ்ஜியம் பார்ட்டி ( மக்கள் ஆளும் கட்சி) தொடங்கினார். ஒன்பது லட்சம் மேல் மக்கள் திரண்டு சீரஜிவியின் கடிசிக்கு அலையாக திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

"எனக்கு அரசியல் தெரியாது. ஆனால், மக்கள் படும் கஷ்டம் தெரியும்" என்று கூறினார். சீரன்ஜிவியின் கட்சியின் ஆதரவாக அவரது சகோதரர்கள் நாகேந்திர பாபு, பவன் கல்யான் துணையாக இருக்கிறார்கள். கட்சி தொடங்கும் போது குடும்பத்துடன் தொடங்கியிருக்கிறார்.

சீரன்ஜிவியின் கட்சிக்கு ஆந்திராவில் கிடைத்த வரவேற்பை பார்த்தவர்கள் சட்டசபை தேர்தலில் 35 முதல் 50 இடங்களும், பாராள மன்ற தேர்தலில் ஐந்து - ஆறு இடங்களும் கிடைக்கும் என்று கருத்து கூறியுள்ளனர். போலீஸ் காஸ்டேபின் மகனான சீரன்ஜிவி பி.காம் பட்டதாரி. நடிப்பதற்காக 1977 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தவர் '47 நாட்கள்', 'இராணுவ வீரன்' என்று இரண்டு தமிழ் படங்கள் நடித்தார். தெலுங்கில் அவர் நடித்த 'கைதி' என்ற படம் வெற்றி பெற்றது மூலம் திரை உலகில் நிலையான இடம் பெற்றார். அரசியலுக்காக சீரன்ஜிவி கையில் எடுத்திருக்கும் சமூக பிரச்சனை தெலுங்கான போராட்டம். விவசாயிகளிடம் பேசி தன்னால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இவர் வரவை மற்ற கட்சிகள் விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை ஆந்திராவில் நடக்கும் அரசியல்வாதிகளின் பேச்சில் இருந்து புரிந்துக் கொள்ளமுடிகிறது. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல் ஆந்திரா அரசியலில் மின்னுவாரா ? அல்லது நமது சிவாஜியை போல் கட்சியை முடிவிட்டு மீண்டும் நடிக்க வருகிறாரா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

நடிகர் சிர்ரஞ்சீவி தெலுங்கு தேசத்தின் சூப்பர் நடிகர் மட்டும்மல்ல...ஒரு மிகப்பெரிய சமூகமான சொளத்திரி என்ற சமூகப் பின்னணி உள்ளவர்...He does have "CHARISHMA"...to mobilise people as his party's workers, as well public also....However, its too early to comment in details about his POLITICAL ENTRY...Let us wait and see....Hope Thiru "CHIRANJEEVI"...will prove his mettle beyond doubt...in the coming days thru his popuylarity and political intelligence...which is what he is currently doing...Let us hope for the "BEST"...நல்ல பதிவு...

குகன் said...

Thanks for your visit RAMASUBRAMANIA SHARMA :)

LinkWithin

Related Posts with Thumbnails