வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, February 16, 2009

ஒவ்வொரு நிமிஷமும் சென்னைக்கு ஆபத்து...!

'மணிரத்னம்' படத்தில் வருவது போன்ற இரவு. நான் தனியாக நடந்துக் கொண்டு இருந்தேன். இந்த இரவு நேரத்தில் என்னை ஒரு நிழல் தொடர்வது போல் இருந்தது. என் கை துப்பாக்கியை எதற்கும் தயார் நிலையில் வைத்திருந்தேன். எதிரி என்னை தாக்க வரும் போது நான் தாக்குவதை விட அவர்களை தேடி சென்று தாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த நிழல் இன்னும் என்னை தொடர்ந்து கொண்டு இருந்தது. நான் நடக்கும் என் கண் எதிரில் ஒரு முட்டு சந்து தென்ப்பட்டது. அந்த நிழலிடம் தப்பிப்பது போல் அந்த முட்டு சந்து பாதையில் ஒலிந்துக் கொண்டேன். அந்த நிழல் என்னை விடுவதாக தெரியவில்லை. அது என்னை பின் தொடர்ந்து முட்டு சந்தில் நுழைந்தது. நான் அந்த உருவத்தை பின் புறம் இருந்து தாக்கு என் கை துப்பாக்கியை வாயில் வைத்து மிரட்டினேன்.

" யார் நீ... எதுக்காக என் பின்னாடி வர...?"

" நீங்க சி.ஐ.டி சங்கர் தானே...!"

" ஆமா... நீ யாரு...?"

" என் பேரு கதிரேசன். ஹோட்டல்ல சர்வரா இருக்கேன். நா வேலை செய்ற ஹோட்டல்ல இரண்டு பேரு சென்னைய அழிக்க டைம் பாம் வைக்க போறதா பேசிக்கிட்டாங்க...!"

" மை காட்... ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ளைன்ட் பண்ணல..."

" எனக்கு போலீஸ்னா பயம்... கோர்ட் கேஸ்னு அலைய முடியாது. விஷயம் தெரிஞ்சு அவங்க என்ன கொன்னுட்டா... அதான் சொல்லல்ல..."

" சரி... என்ன எப்படி உனக்கு தெரியும் !"

" தினமும் உங்கள பத்தி பேப்பர்ல படிக்கிறேனே... உங்க திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..."

" சரி... உனக்கு அவங்க எங்க இருக்காங்கனு தெரியுமா..."

" தெரியும் சார்... வாங்க காட்டுறேன் "

அந்த இருட்டில் நானும், கதிரேசனும் சென்னை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளை தேடி சென்றோம். ஒரு நகரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்றால் அவர்களிடம் எப்பேர்ப்பட்ட வெடிகுண்டுகள் இருக்கும் ? அதை எங்கிருந்து கொண்டு வந்தார்கள். இவர்களை இயக்குவது யார் ? இப்படி பல கேள்விகள் என் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.

இத்தனை கேள்விகளுக்கு நடுவில் எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. கதிரேசனை நம்பலாமா...? தீடிர் என்று வந்தான். வெடிகுண்டு வைக்கிறார்கள் என்றான். நானும் அதை நம்பி அவனுடன் வந்துவிட்டேன். ஒரு வேளை என்னை கொல்ல எதிரியின் சூழ்ச்சியாக இருந்தால்... ? எதற்கும் நான் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

" சங்கர் சார் ! அவங்க அந்த கம்பி ரூம் குள்ள தான் இருக்காங்க.."

எனக்கு சந்தேகம் அதிகமானது. எதற்கு முன் எச்சரிக்கையாக போலீஸ் ஹெட் குவாட்டர்ஸ்க்கு போன் போட்டு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். என் செல்போனை எடுத்து தகவலை சொல்லி நான் இருக்கும் இடத்தை பற்றியும், தீவிரவாதிகளை பற்றியும் தெரிவித்தேன்.

" சங்கர் சார் ! சிக்கீரம் வாங்க ... நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் சென்னைக்கு ஆபத்து...!"

ஒரு வேளை அவன் சொல்வது உண்மையாக இருந்தால் என்ன செய்வது ..? சென்னையை காப்பாற்ற வேண்டும். நான் என் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கம்பி அறையில் நுழைந்தேன். அங்கு இரண்டு பேர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். எனக்கு அதிகம் பழக்கமான முகம் போல் இருந்தது.

" இந்திரன், ராமு இவர்கள் எப்படி இங்கே..?" - நான் யோசித்து முடிப்பதற்குள் கதிரேசன் கம்பி அறையை பூட்டினான்.

" ஏய்... என்ன பண்ணுற உன்ன சுட்டுடுவேன் " - என் கை துப்பாக்கியால் அவனை சுட்டேன். என் துரதிஷ்டம் என் கை துப்பாக்கி சுடவில்லை.

" இன்னொரு வாட்டி இப்படி நடந்தா... உங்க வேலைய விட்டு தூக்கிடுவேன்.." என்று தன் இரண்டு கம்பௌன்டர்களை கடிந்து கொண்டான் கதிரேசன்.

" எல்லோரையும் கவனிக்க தான் உங்களுக்கு சம்பளம் ஒழுங்க கவனமா வேலைய பாருங்க"

"சாரி டாக்டர்..இனிமே இப்படி நடக்காது.." - கம்பௌன்டர் தயக்கத்துடன் கூறினான்.

"ம்ம்... எந்த பைத்தியமும் தப்பிச்சு போகாம பாத்துக்கோங்க. ஜாக்கிரதை" - என்று கூறியப்படி டாக்டர் கதிரேசன் நகர்ந்தார்.

" இந்திரன், ராமு கவலப் படாதீங்க. போலீஸ்க்கு நா போன் பண்ணி விஷயத்த சொல்லிட்டு தான் வந்தேன்..."

"போன் எங்கே...?" என்று ஆர்வத்துடன் கேட்டா இந்திரன்.

" இதோ பார் கையில் தான் இருக்கு..." - தன் கையில் இருந்த பொம்மை போனை காட்டினான் சங்கர்.போலீஸ் வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக ஆசைப்பட்டு அது முடியாமல் தோல்வியடைந்ததால் பைத்தியமான சங்கர்.

நன்றி: முத்துகமலம்.காம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails