வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 26, 2009

கிச்சு கிச்சு

ஜே.எஸ்.ராகவன்

கிழக்கு பதிப்பகத்தின் ஆரம்பகால நூல் என்பதை முதல் பக்கத்தில் இருந்த மைலாப்பூர் விலாசத்திலேயே புரிந்துக் கொண்டேன். அண்ணா நகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் அவர்கள் எழுதிய 'தமாஷா வரிகள்' கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர். கிழக்கு பதிப்பகத்தின் புத்தக பட்டியலை பார்க்கும் போது ஜே.எஸ்.ராகவன் புத்தகங்களை பார்த்திருக்கிறேன். வாங்கி படிக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் கிழக்கு பதிப்பகத்தின் வேறு புத்தகங்கள் கண்ணில் பட அதை வாங்கி விடுவேன். அதுமட்டுமில்லாமல், நகைச்சுவை புத்தகங்கள் ஒரு முறைக்கு மேல் படிக்க நினைத்தாலும் ஆர்வம் வருவதில்லை என்பது இன்னொரு காரணம். எதோ கண்ணிமரா நூலகத்தின் புன்னியத்தில் இந்த நூலை எடுத்து படித்தேன்.

ரொம்ப எதிர்பார்த்து எடுத்ததாலோ என்னவோ என் எதிர்பார்ப்பை பாதி கூட புர்த்தி செய்யவில்லை. இருந்தாலும், சில நல்ல நகைச்சுவை கட்டுரைகள் பிடிக்காமல் இல்லை.

"உலகமே தட்டையா ?" கட்டுரையில் ஒரு அம்மா கடையில் தட்டை பற்றி கேட்பதும், கடைக்காரன் 'இல்லை' என்று சொல்லுகிறார். அந்த அம்மா விடாமல் கடைக்காரனை தொல்லை பண்ணி தட்டை கேட்கிறார். கடைக்காரனும் கஷ்டப்பட்டு தேடி கொண்டு வந்து அந்த அம்மாவிடம் கொடுக்க கலர், அளவு பார்த்து விட்டு 'நானே செய்துகிறேன்' என்று சொல்கிறார். இவ்வளவு நேரம் அந்த அம்மா 'தட்டை' கேட்டதற்கு காரணம் ஒரு மாதிரி வடிவத்திற்காக தான்.

"வாக்கிங் விநாயகர்" கட்டுரையில் தோப்பை குறைக்க விநாயகரை காலையில் வணங்க வேண்டும். ( ஞான பழத்தை வாக்கிங் போய் பெற்றதால் 'வாக்கிங் விநாயர்'). வேடன் கண்ணப்பன் மாதிரி விநாயகரை காலில் ஷூ போட்டுக் கொண்டு கும்பிடலாம். ( லேசு போட்ட ஷூவை லேசில கழட்ட முடியுமா).

இந்த புத்தகத்தில் ரசிக்க தக்க நகைச்சுவை கட்டுரை என்றால் "சொல்லாதே வாய் திறந்து" தான். மேடையில் வரவேற்புரை செய்பவர் ஒவ்வொருவரை அறிமுகம் படுத்தும் போதும் அவரை தன் மனதுக்குள் திட்டுகிறார். ஒரு இடத்தில் "பட்டங்கள் பல வாங்கியவர்" என்று சொல்லி தன் மனதுக்குள் " பட்டங்கள் தான் வாலோடு பறக்கும். ஆனால், இவர் பட்டங்களுக்காக ஆவலாக பறப்பவர்" என்று குமுறுகிறார்.

அதே ஒரு சில கட்டுரைளில் இருக்கும் நகைச்சுவை துணுக்குகளை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

*. தேவர்கள் வேடமிட்டு வந்ததால் அந்த இடத்திற்கு பெயர் "வேடம்" தாங்கல்.

*. தூண்டு எப்போதுமே மல்டி பர்பஸ். குடை, கைகுட்டை......

*. போன்ல லவ் தான் பண்ணுவாங்க... இன்டர்வியூமா எடுப்பாங்க....

*. 'அருள்மிகு ஆசிரியசாமி' கட்டுரையில் படைக்கும் கடவுளே புகழ்ச்சிக்கும், துதிக்கும் மயங்கும் போது படைக்கும் கதைகளை பரிசீலிக்கும் ஆசிரியர்கள் இதில் வேறுபடுவார்களா...?

*. 'எங்கே கேள்வி - பதில் ?' கட்டுரையில் உண்ட உணவிலுள்ள கலோரிகளை எரிக்காமல் வாகனங்களில் உள்ள எரிபொருள்களை எரித்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பில்லை இவ்வகை வாகனப் பிரியர்கள் அதிகரித்து வரும் நிலையில் வாகங்கள் தவிர்த்து நடக்க வேண்டும்.

பல கட்டுரைகள் விவேக் போல் 'மேசேஜ்' சொல்லும் முயற்சியில் நகைச்சுவை தொலைந்துவிடுகிறது. ஒரு சில கட்டுரைகளில் ஒண்ணுமே இல்லை என்று தோன்றுகிறது.

"கிச்சு கிச்சு" கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டி தான் சிரிக்க வைக்கிறாங்க.... :)

விலை.60.
கிழக்கு பதிப்பகம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails