வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, July 12, 2009

அப்துல் ரகுமானே இது நியாயம் தானா...?

அது ஒரு 'பெண்கள் தினம்'. பெண்களை பற்றி பெருமையாக கவிதை எழுதி தர வேண்டும் என்று ஒரு அழகிய யூவதி கேட்டிருந்தாள். கட்டிளம் காளை சும்மா இருப்பானா... உடனே பேனா எடுத்து கவிதை எழுதிக் கொடுத்தான். கொடுத்தவன் தனியாக கொடுக்க கூடாதா.... நண்பன் முன் கொடுத்தது தான் வந்தது பிரச்சனை. அந்த கட்டிளம் காளை கொடுத்தது அப்துல் ரகுமான் எழுதிய 'ஆலாபனை' நூலில் இருக்கும் முதல் கவிதை. அந்த நண்பன் உண்மையை போட்டு உடைத்துவிட்டான். அந்த யூவதி கோபித்துக் கொண்டு சென்று விட்டாள். அதன் பின் கட்டிளம் காளை உண்மையான கவிதை எழுதினாலும் யாரும் நம்புவதில்லை.

சினிமா துறை சாராத கவிஞர்கள் பற்றி கேட்டால் யோசிக்காமல் பலர் சொல்லுவது 'அப்துல் ரகுமான்'. கல்லூரி நாட்களில் ‘ஆலாபனை’, இரண்டு வருடம் முன்பு 'இது சிறகுகளின் நேரம்' என்று இவரின் இரண்டு புத்தகத்தை வாசித்திருக்கிறேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் எழுதிய நூல் படிக்க இப்போது தான் சந்தர்ப்பம். நூலின் பெயர் ' மரணம் முற்றுப்புள்ளி அல்ல....!'

'இமைகளைக் காப்போம்' தலைப்பில்

நெற்றிக்கண்
கண்டதும் காதல் எரிந்தது

சாம்பலின் கௌரவப் பெயர் திருநீறு

பெற்றோர்களை கொன்றுவிட்டுப்
பிள்ளைகளுக்கு அனாதை ஆஸ்ரமம்
கட்டிக் கொடுப்பது போல், தூக்கத்தைக் கொன்றுவிட்டுத்
தூக்க மாத்திரைகளைத் தயாரித்துத் தருகிறது
அறிவியல்


‘இறந்த நான்’ தலைப்பில்

இறந்த காலத்தின் ஏதோ ஒரு கணத்து நான்.
ஆம், இறந்துவிட்ட நான் !
கணத்திற்குக் கணம்
நான் மாறிக் கொண்டிருக்கிறேன் !

இதோ ! இந்த புகைப்படம்
என் பிணந்தான்
கண்ணாடிச் சமாதியில் புதைக்கப்பட்ட பிணம்.


'மலட்டு தாய்' தலைப்பில்

பிறப்பில்லாமல் இறப்பா ?
முதலில் இறப்பென்றால்
என்ன அர்த்தம் ?
பிறப்பென்றால்
உயிர்ப் படைப்பு அல்லவா ? உயிரற்றதைப்
பிறப்பு என்று எப்படிச் சொல்வது ?


நான் கல்லூரியில் படித்த அதே அப்துல் ரகுமான் தான். அவர் எழுத்துக்களில் இளமைக் குறையாமல் இருக்கிறது.

இந்த புத்தகம் படித்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். கட்டுரையில் விடுப்படு கொஞ்சம் கவிதை பக்கம் ஒதுங்கலாம் என்று புத்தகத்தை எடுத்தேன். ஆனால், இந்த நூல் அவர் எழுதிய 'பால் வீதி' நூலுக்கு உரையாக எழுதியிருக்கிறார். அவர் கவிதைக்கு அவரே உரையெழுதிய காரணத்தை தன் முன்னுரையில் சொல்லியிருந்தார்.

'டைட்டில்' கார்ட்டை forward செய்து படம் பார்ப்பது போல் விளத்தை படிக்காமல் புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டேன். மீண்டும் கட்டுரையா என்று என்னை முகம் சுலிக்க வைத்தாலும் இடை இடையே அவரின் கவிதை குளிர வைத்தது. இருந்தாலும் புத்தகம் படித்து முடித்ததும் 'முழு கவிதை' நூலை படித்த திருப்த்தியில்லை. ( இது கவிதை நூல் அல்ல....அவர் கவிதைக்கு உரைநடை என்று விளத்தை படித்த பிறகு என் புத்திக்கு எட்டியது.)

நான் ஏமாந்ததற்கு மூன்று பேர் காரணம்.

கட்டுரையை கவிதைப் போல் (வரிக்கு நான்கு வார்த்தை) அச்சடித்த ‘National’ பதிப்பகம்.

'உரைநடையை' கூட கவிதைப் போல் அழகாய் எழுதிய அப்துல் ரகுமான்.

‘அப்துல் ரகுமான்’ பெயரை மட்டும் பார்த்து எதையும் கவனிக்காமல் நூலை எடுத்த நான்.

இந்த நூலை வாசிக்க விரும்புபவர்கள் முதலில் 'பால் வீதி' நூலை வாசித்து விட்டு வாசிங்கள். :)

மரணம் முற்றுப்புள்ளி அல்ல
அப்துல் ரகுமான்
விலை.35, பக் : 88
நேஷனல் பப்ளிஷர்ஸ்
2, வடக்கு உஸ்மான் சாலை,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்),
தியாகராய நகர், சென்னை - 17.
Ph:- 2834 3385

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails