வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, November 23, 2009

எப்படி தான் இப்படி படம் எடுக்குறாங்களோ ??

22.11.09 அன்று, நம் உரத்தசிந்தனை மூன்று குறும்படம் திரையிடல் நிகழ்ச்சி மைலாப்பூர் ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கில் நடந்தது. அந்த குறும்படங்கள் பற்றி என் பார்வையில்...

நண்பர்கள் கலைக்கூடம் வழங்கிய 'என்று முடியும் ?'

இழந்த விவசாய நிலத்தை பார்த்து எங்கும் ஊனமுற்ற விவசாயின் கண்ணீர் காட்சியில் படம் தொடங்குகிறது. தன் நிலத்தை இழந்த சோகத்தை சென்னை 'BPO'வில் வேலை செய்யும் தன் மகனிடம் சொல்ல வருகிறார். 'செல்லக்கண்ணு' என்று பெயர் வைத்த மகன்,'George Bush' என்ற பெயரில் வாழ்கிறான். அவனிடம் பேச கூட அந்த ஏழை விவசாயால் முடியவில்லை.

'அப்பா எப்படி இருக்க ?' என்று கேட்க முடியாத அளவுக்கு அந்த இளைஞன் வேலை பலுவில் இருக்கிறான். மகனிடம் எதையும் சொல்ல முடியாமல் திரும்பி ஊருக்கு செல்கிறார். அப்போது, அவன் மகனின் நண்பனிடம் விஷயத்தை சொல்கிறார். இறுதியாக, அந்த விவசாயி 'எப்ப தான் வாழ போறீங்க..?' என்று கேட்கும் கேள்வி 'சுருக்' என்று இருக்கிறது.

தந்தையிடம் பேச கூட நேரமில்லாத அவசர யுகத்தில் வாழும் இளைஞர்களை இந்த படம் உருக்கமாக காட்டியுள்ளது.

விவசாய நிலத்தை இழந்த சோகத்தை வார்த்தைகளில் சொல்லாமல் பின்னனி வயலின் இசையில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.


கதை , இயக்கம் - சி.ஜே.முத்துகுமார்


கல்வெட்டு திரைக்குடில் வழங்கும் 'கொஞ்சம் கொஞ்சமாய்'

Saxophone, Drum, Piano பின்னனி இசையில் மணலி நகராட்சி காட்டுகிறார். படம் தொடங்கி மூன்று, நான்கு நிமிடங்கள் குளம், செடி, கொடியை காட்டி சலிப்பை ஏற்ப்படுத்துகிறார். ஆனால் இறுதியில், குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக்குடன் சமாதியை காட்டி, சாவு மேளத்தை பின்னை இசையில் முடித்திருக்கிறார்.

பெரிய தொழில்நுட்பம், வசனம், கதாபாத்திரம் என்று எதுவுமில்லை.

'இயக்கைக்கு நாம் கொடுத்த பிளாஸ்டிக் சமாதி' என்ற கவிதை படமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் சொர்ணபாரதி.

ஒளிப்பதிவு, கதை, இயக்கம் - சொர்ணபாரதி


நண்பர்கள் திரைகுழுமம் வழங்கிய 'நடந்த கதை'

சமிபத்தில் சன் டி.வி யில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வந்து ஒரு மாதத்தில் பத்து இடங்களில் திரையிடப்பட்டதாக இயக்குநர் பொன். சுதா அவர்கள் கூறினார். திரையிடப்பட்ட படங்களில் என்னை அதிக கவர்ந்த படமும் இது தான்.

பேரனின் சேருப்பு சத்தத்தில் தன் வாழ்க்கையை புரட்டி பார்க்கிறார் ஒரு முதியவர்.

கதை பின்னோக்கி செல்கிறது. செருப்பு அணிவது அதிகாரத்தின் சின்னமாக வாழ்ந்த காலம்.

ஒரு குழந்தையின் பார்வையில் தன் இனம் கீழ் தெருவில் வெறுமையாக காலில் நடக்க, மேல் தெருவில் செருப்புடன் நடப்பதை பார்த்து ஏங்குகிறது. நாம் ஏன் செருப்பு போட கூடாது ?" என்ற கேள்வி தொடங்கி ஏக்கம் , ஆசை, கனவாக 'செருப்பு' அவன் மனதில் அழமாய் பதிகிறது.

அந்த குழந்தை வளர்ந்து, 'வீரபத்திரன்' என்னும் இளைஞனாக இராணுவத்தில் சேர்கிறான். அவன் முதன் முதலில் ஷூவை தன் காலில் அணியும் போது கண்ணீர் பல தலைமுறைகளின் ஏக்கத்தை காட்டுகிறது.

ஷூ அணிந்து மேல் தெருவில் ஓடும் போது, மேல் குடி மக்கள் அவனை தடுக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மீண்டும் அந்த தெருவில் ஓடிக் காட்டுகிறான். அவன் ஓட ஓட கீழ் தெரு ஒவ்வொரு வீட்டில் வெளியே செருப்பு இருப்பது போல் படம் முடிகிறது.

முதியவர் உணர்வுகளுக்கு உருக்கமான குரல் கொடுத்தவர் 'கவிஞர்' அறிவுமதி அவர்கள்.

'எல்லா இடங்களிலும் வறுமைதான் சேர்ந்து வாழுது'

எங்கள் வலைந்த முதுகில் ஜாதி என்னும் அடிக்கல் இருக்குது'

இறுதியில்,

என் கால்ல தச்ச வலிய என் பேரன் மனசுக்கு உணர்த்தனும்
' என்று சொல்லும் இடம் நெகிழ வைக்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் எடுக்கும் தகுதி பொன். சுதா அவர்களுக்கு இருக்கிறது என்பதை இந்த படம் காட்டியுள்ளது.

மூன்று படங்களை விமர்சித்த அழகப்பன் அவர்கள்,

" குறும்படம்
படுக்கை அறையல்ல..
தாயின் கருவறை"

என்று சொன்ன கவிதை பிரமாதம்.

மூன்று படம் இணையத்தில் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அதன் சுட்டியை குறிப்பிடுகிறேன்.

Thursday, November 19, 2009

யுவன் சந்திரசேகர் : ஏற்கனவே

"ஏற்கனவே கடந்து சென்ற உணர்வுகள்
ஏற்கனவே மனதை பாதித்த சம்பவங்கள்
ஏற்கனவே சிந்தித்த சிந்தனைகள்
ஏற்கனவே சொல்ல நினைத்த வார்த்தைகள்
இப்படி பல 'ஏற்கனவே' கடந்து வந்தவர்களுக்கு
மீண்டும் அதே நினைவலைகள் !!"


இந்த புத்தகத்தை படித்ததும் 'கவிதை' என்ற பெயரில் நான் கிறுக்கியது.



'கானல் நதி' நாவலுக்கு பிறகு 'யுவன் சந்திரசேகர்' அவர்கள் எழுதிய புத்தகத்தை இப்போது தான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

யுவன் சந்திரசேகர் எப்படி நகைச்சுவையாக பேசுவார் என்று சமிபத்தில் நடந்த 'சிறுகதை பட்டறையில் கலந்துக் கொண்டவர்களுக்கு தெரியும். அப்படி கலந்துக் கொண்ட பதிவர்கள் யுவன்சந்திரசேகர் நூல்களை வாசிக்க விரும்பினால், கண்டிப்பாக இந்த நூலை படியுங்கள்.

இவருடைய எழுத்து நடையை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் வளரவில்லை என்பதால், நான் விரும்பி வாசித்த சில வசனங்கள், இடங்கள் மட்டும் மேற்கொள் காட்டுகிறேன். இந்த சிறுகதை தொகுப்பில் வரும் சில வசனங்கள் ஏதார்த்தத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.

'மூன்று ஜாமங்கள் கொண்ட இரவு' கதையில்

"ச்சே...! தற்கொலை பண்ணிக்கிறது கோழைத்தனமில்லையா ??"
"வீரனாய் இருந்து பதக்கமாய் வாங்க போறோம் ?"

'புகைவழிப் பாதை'

"கதைகள்லே துக்கம் கூடக் கூட வாசிக்கிறவனுக்கு சந்தோஷம் எப்படிப் பொங்கறது !"

நூற்றிச் சொச்சம் நண்பர்கள்

சிகரெட்டை எடுக்கிறோம். பற்ற வைக்கிறோம், மிச்சத்தை தரையில் வீசி நசுக்கித் தேய்க்கிறோம் என்பது பிரக்ஜை அறியாத அனிச்சைச் செயலாக மாறிவிட்டது. நண்பர்கள் இந்த விஷயத்தில் செய்த உதவியை சிகரெட் உள்ளவரையும், உயிர் உள்ளவரையும் மறக்க முடியாது.

சோம்பேறியின் நாட்குறிப்பு

உண்மையில் வாழ்க்கை என்பதாக ஒரு பொதுத்தளம் இருப்பது வெறும் தோற்றம் மட்டுமே. அவரவர் அனுபவத்தைப் பிறருடைய அனுபவத்துடன் கோர்த்த அனுபவத் தொடரை ஒற்றை அனுபவமாக எப்படி விரிக்க ??


சில இடங்களில் எழுத்தாளான தன் சொந்த அனுபவத்தை பதிவு செய்வது போன்ற வரிகள்.

"எழுத்தாளனாகும் என் கனவுகளின் அடிப்படையில் புதிய நண்பர்கள் எனக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்ததும், தொடர்ந்து எழுதுவதன் காரணமாக உண்டாகும் புதுப்புது விரோதிகளின் விரோதிகள் எனக்கு நண்பர்களாய்க் கிடைத்துக் கொண்டேயிருந்ததும், குளப்பரப்பில் கல்விழுந்து உண்டாகும் சிற்றலைகள் போல நண்பர் வட்டம் விரிவடைந்து கொண்டே போனதும். புதிய அலைகள் வர வரப் பழைய அலைகள் கரையேறிக் காணாமல் போனதும். என் தரப்புக் காரணங்களாக இப்போது தோன்றுகிறது.


அவமானம்

ஆதாரமான தளத்தில் ஒரு பெண்ணுக்கும் மற்றோரு பெண்ணுக்கும் உடலமைப்பின் விகிதாசாரத்தில் தவிர வேறு என்ன வித்தியாசம் ?

கரு திறமை

விந்துவிட்டவன் நொந்து கெட்டான்.

எழுத்தாளனை பற்றி வரும் வரிகளை படிக்கும் போது தன் சொந்த அனுபவம், சுயசரிதை எழுதியிருக்கிறாரோ என்ற எண்ணம் நம் மனதில் வராமல் இல்லை.

சிறுகதை என்ற பெயரில் குறுநாவல் தொகுப்பை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுயுள்ளது.

பக்கங்கள். 192
விலை.100

Wednesday, November 18, 2009

நான் ரசித்த தமிழ் குறும்படங்கள்

குப்பை

இனிமையான பெண்ணில் குரலில் தொடங்கிறது. எதை பற்றி இந்த குறும்படம் என்று குறும்படம் முடியும் வரை யுகிக்க முடியாது. இறுதியாக காட்டப்படும் செய்திதாள் தான் உணர்த்துகிறது. கண்டிப்பாக இதை இரண்டாவது முறை பார்க்காமல் இருக்க முடியாது.

பின்னனியில் வரும் அந்த பெண்ணின் குரலும், இசையும் இந்த குறுப்படத்தின் மிக பெரிய பலமே ! 'குப்பை' என்று தொடங்கப்பட்ட குறும்ப்படம் 'குப்பை ?' என்று முடித்திருப்பது கூட நம்மை சிந்திக்க வைக்கிறது.

மேலும் இங்கே பார்க்கவும்.

Voice : Rajeshwari Veeran
Art Direction : Ilayaraja
Editing : Saleem HAdi
Music : Saleem HAdi, Vikeshwaran veeran
Story : GAnesh Kasi, Saleem HAdi

**

நிஜங்கள் - ஒரு இளைஞனின் கனவு

நல்ல நகைச்சுவையான குறுப்படம். ஒப்பனிங்கே பெரிய ஹீரோக்கான பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த ஜே.கே.ரித்தீஷ் என்று பயப்படும் சமயத்தில் குறுப்படத்திற்கான உண்மையான நோக்கத்தை காட்டியுள்ளனர்.

இந்த படம் மட்டும் அப்துல் காலம் பார்த்தால், தன் கருத்தை மாற்றிக் கொள்வது உறுதி.

மேலும் இங்கே பார்க்கவும்.

படம் பார்த்து முடித்த பிறகு, விவேக் நகைச்சுவை ஞாபகம் வந்தால் நான் நிர்வாகம் பொறுப்பல்ல....

Story & direction - A.Kumaran
Camera, Screenplay & Editing - R.Vasantharajan

**
சிகப்பு - விபச்சாரியுடன் ஒரு நாள்

டி.வி நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம். அப்பா, அம்மா வீட்டில் இல்லாத சமயம் மனதில் தட்டும் சபல புத்தி கொண்ட இளைஞன் தன் நண்பன் மூலம் ஒரு விபச்சாரியை வீட்டுக்கு வரவழைக்கிறான். அவளிடம் முதலில் தயங்கியப்படி பேச்ச தொடங்குகிறான். தன் அறையை தயார் செய்து விட்டு, வெளியே வர அந்த பெண் அங்கு இல்லை. புட்டிய கதவு புட்டியப்படி தான் இருக்கிறது. தன் வீட்டுக்குள் எங்கோ தான் இருக்கிறாள். திடீர் என்று அந்த பெண்ணின் சத்தம் கேட்கிறது.அடுத்து...

மேலும் இங்கே பார்க்கவும்.

**

எதோ பொழுது போகவில்லை என்று இணையதளத்தை மெய்ந்த போது பார்த்த படம். இனி வாரம் ஒரு முறை இப்படி ஒரு குறுப்படத்தை பற்றி விமர்சனம் எழுத வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல குறும்படத்தை வாசகர்கள் பரிந்துரை செய்யுங்கள்.

***

வரும் ஞாயிறு ( 22.11.2009) காலை 10.30, மூன்று குறும்படம் திரையீட இருக்கிறார்கள்.

இடம் : ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம்,
( லஸ் கார்னர், அமிர்தாஞ்சன் அருகில்)
மயிலாப்பூர், சென்னை - 4

குறும்படத்தை மதிப்பீடு செய்பவர் : "வண்ணத்துபூச்சி" புகழ் அழகப்பன் சி.

பார்க்க விரும்பும் நண்பர்கள் வரலாம்.

Sunday, November 15, 2009

கலைஞரும், வழுக்கை தலையும்

ஒரு முறை கலைஞர் அவர்களின் வழுக்கைத் தலை பற்றிய பேச்சு வந்தது. கலைஞரின் வழுக்கை முதுமையைக் காட்டுவதாகச் சொன்னார்கள்.

கலைஞர் கவலைப்படவே இல்லை. சட்டென்று பதில் சொன்னார், " வழுக்கை என்பது முதுமையின் அடையாளமல்ல. இளமையின் அடையாளம். எப்படி தெரியுமா ?"

"தேங்காய் பறிக்கும் போது, இளசா நாலுகாய் பறிச்சுப் போடுப்பா என்பார்கள். அவர் நாலு வழுக்கையைப் போடுவார்.

ஆக, வழுக்கை என்பது இளமை. ஆகவே, நான் வழுக்கையாய் இருக்கிறேன் என்றால் இளமையாய் இருக்கிறேன் என்று அர்த்தம்"

குறையை நிறையாகக் காணும் திறத்தால், முதுமையையே இளமையாக ஆக்கிவிட்டார்.



**

அமைச்சர் தான் கிழித்தார்

ஒரு முறை கலைஞர், 'ஆற்காட்டு' வீரசாமி, 'கவிப்பேரசு' வைரமுத்து, டி.ஆர் பாலு ஆகியோருடன் காரில் சென்றுக் கொண்டு இருந்தார். கலைஞர் அவர்கள் முன்புற இறுக்கையிலும், மற்ற மூவரும் பின்புறம் அமர்ந்துக் கொண்டனர்.

வண்டி சென்றுக் கொண்டு இருக்கும் போது, கவிஞர் அவர்கள் தன்னை இருக்கையில் சரிப்படுத்த முயற்சிக்கும் போது, தனது நீண்ட சட்டையின் கீழ்ப்பகுதியில் அமைச்சர் பாலு அமர்ந்திருப்பதைக் கண்டு அவரிடம் தெரிவிக்காமலே, சட்டையைச் சரிசெய்ய, சட்டையைப் பிடித்து இழுக்கும் போது சட்டை கிழிந்துவிட்டது.

கலைஞர் இல்லம் வந்தும், கவிஞரின் கிழிந்த சட்டையை கவனித்த கலைஞர் அவர்கள் " என்ன கவிஞரே ! சட்டை கிழிந்திருக்கிறதே பார்க்கவில்லையா " எனக் கேட்டார்.

கவிஞர் நடந்தை விவரித்தார். இதைக் கேட்ட கலைஞர் அவர்கள், " சட்டை கிழிந்ததற்குப் பாலு தான் காரணம் என்றால் எனக்கு சந்தோஷமே !" என்றார். ஒரு நிமிடம் எல்லோரும் திகைத்தனர்.

அப்போது கலைஞர், " பின்னே ! இனிமே எதிர்க்கட்சியினர் யாரும் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு என்ன கிழித்து விட்டார் ? எனக் கேட்கவே முடியாதல்லவா ?" என்றார்.

**

லவ் எஸ்டர்டே

சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கம் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன் வெள்ளி விழா ஆண்டையும் கலைஞரே நடத்த வேண்டும் என அதன் உரிமையாளர் சிதம்பரம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தலைவர் ஒப்புதல் தந்திருந்தார். அப்போது, அங்கே விஜய் நடித்திருந்த "லவ் டுடே' என்ற படத்தின் நூறாவது நாளும் சேர்ந்தே கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்புரையாற்றிய கலைஞர்.

"இது 'லவ் டுடே' படத்தின் வெற்றிவிழா. இன்றைய இளைய சமுதாயத்திற்கு இது 'லவ் டுடே' தான். எனக்கோ, 'லவ் எஸ்டர்டே'" என்றதும் அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

Friday, November 13, 2009

பெரம்பூர் பாலம்

இரண்டு தினம் முன்பு பெரம்பூர் பகுதியே மிகவும் பரபரப்பாக இருந்தது. வியாம்பார சங்க தலைவர் வெள்ளையனை வெட்டிவிட்டதால், பொது மக்கள் மிகவும் கவலையில் இருந்தனர். ( பின்ன எல்லா கடையும் முடிட்டாங்கனா... காய்கறி வாங்க எங்க போறது). நல்ல வேலை பெரம்பூர் வெள்ளையன் மார்க்கெட்டை மட்டும் முடி இருந்தனர். பக்கத்தில் 'ஈ' ஓட்டிய ரவி மார்க்கெட் ஜக ஜோதியாய் கூட்டம் அலை மோதியது. வாங்க வந்தவர்களுக்கு நிற்க கூட இடமில்லை. வணிகர் தினத்தில் மட்டும் பாரதி ரோடை காலியாக பார்த்திருக்கிறேன். (பாதி ரோட்டில் வெள்ளையன் மார்க்கெட் வண்டி, ஆட்டோ நிற்கும்) பக்கத்தில் மூன்று பள்ளிகூடங்கள் வேறு. அதை கடக்க முடியாமல் சுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

இப்போது எல்லாம் பெரம்பூரை தாண்டி செல்வது பாகிஸ்தான் பார்டரை தாண்டி செல்வது போல் உள்ளது. போக்குவரத்து நெருக்கடியில் வீட்டில் இருந்து அலுவகத்திற்கு செல்ல பிடிப்பதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வீட்டுக்கு செல்ல பிடிப்பதில்லை.எதோ பாரதி ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி கம்மியாக இருக்கிறதே சந்தோஷப்பட்ட அடுத்த நிமிடத்தில் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன் தாண்டும் அடுத்த கொடுமை வந்தது.

பஸ் செல்வதற்கு தனியாக வழி அமைத்திருக்கிறார்கள். மற்ற வண்டி செல்ல இருக்கும் வழி ஷேர் ஆட்டோ வழி மறித்து நின்று கொண்டு இருக்கும். எவ்வளவு தான் ஹாரன் அடித்தாலும், அவர்களுக்கு சவாரி வரும் வரை அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். காலையில் இவர்களை திட்டாமல் செல்வதுதில்லை. பாதி பேர் ஷேர் ஆட்டோ ஆட்களை திட்டி விட்டு தான் பெரம்பூர் ஸ்டேஷனை கடக்கிறார்கள். இப்படியே போனால், காலையில் ஷேர் ஆட்டோக்காரர்களை திட்டி விட்டு சென்றால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மூன்றாவது ,பெரம்பூர் பாலம். பெரம்பூரில் இருந்து தி.நகர் செல்வதற்கு நாற்பத்தியைந்து நிமிடங்கள் தான் ஆகும். பெரம்பூர் பாலம் கட்டிட வேலைக்காக பாதை சுருங்கி கொண்டே பொகிறது. இப்போது சுரங்கப்பாதையில் தான் எல்லா வண்டியும் செல்ல வேண்டிய நிலைமை. ஒருவர் அதிக நம்பிக்கையுடன் அந்த குறுகிய பாதையில் டாடா சுமோவை இறக்கி செல்ல முடியாமல், ரிவர்ஸ் எடுத்து வேறு பாதை செலும் வரை இன்னும் போக்கு வரத்து நெருக்கடி அதிகமாக தான் ஆனது.

இப்படி, பெரம்பூர் டூ தி.நகர் பயணத்தை பற்றி என் அலுவலக நண்பரிடம் சொல்லி கொண்டு இருந்த போது, "பெரம்பூர் பாலம் வந்துட்டா இந்த பிரச்சனை எல்லாம் இருக்காதுல்ல..." என்றார்.

"நாங்களும் பத்து வருஷமா இதையே தான் சொல்லி எங்க மனசுக்கு ஆறுதல் சொல்லுறோம்" என்றேன்.

ஸ்டாலின் மேயராக இருந்த போது தொடங்கிய பாலம், அவர் துணை முதல்வர் ஆன பிறகு திறக்க வேண்டும் என்று இருக்கிறது.

எதோ வந்தா சரி.

Thursday, November 12, 2009

முதியோர் இல்லம்



என்ன தான் சுந்திரமாக திறிந்தாலும், சிவகாமிக்கு இந்த இடம் திறந்த சிறைவாசமாக தான் இருந்தது. உறவுகள் இருந்தும் ஆனாதையாக வாழ்வது எவ்வளவு கொடுமை. வாழ்வும் வயதில் கணவனை இழந்து, இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து கரை சேர்த்ததற்கு அவளுக்கு கிடைத்த பரிசு 'முதியோர் இல்லம்' என்ற சிறை தான்.

"என்ன சிவகாமி அம்மா... காலையில இருந்து ஒன்னும் சாப்பிடாம இருக்கீங்க...?" என்று காமாட்சி பரிவுடன் கேட்டாள். இந்த முதியோர் இல்லத்தில் புதிதாக சேர்ந்தவள். மகள் திருமணத்தை முடித்து யாருக்கும் தொல்லைக் கொடுக்க கூடாது என்று அவளே இங்கு வந்து சேர்ந்து விட்டாள். இந்த இல்லத்தில் வந்து சேர்ந்ததில் கவலைப்படாத ஒரே ஜீவன் இவளாக தான் இருக்க முடியும்.

காமாட்சி வந்து சேர்ந்த பிறகு தான், அங்கு தங்கி இருந்த மற்றவர்கள் மனதில் புது நம்பிக்கை பிறந்து. குறிப்பாக சிவகாமிக்கு. தன் பிள்ளைகள் தொல் கொடுக்க வேண்டிய வயதில் சிவகாமிக்கு கிடைத்த சக வயது தொழி தான் காமாட்சி.

" என்ன சிவகாமி அம்மா... எதுவுமே பேசமாட்டீங்றீங்க.." என்றாள்.

"இன்னையோட நான் இங்க வந்து நாலு வருஷம் ஆகுது.." என்று கண்களில் நீர் தழும்ப சிவகாமி கூறினாள்.

" நாள் போற வேகத்துல இன்னுமா இந்த தேதி உங்களுக்கு ஞாபகம் இருக்கு.." என்றாள் காமாட்சி.

சிவகாமி எதுவும் பேசவில்லை. தன் வலி பற்றி அவளுக்கு தெரியாது. தெரிந்தாலும் பெரிதாக பாதிப்பு ஒன்று அவளுக்கு இருக்க போவதில்லை. சிவகாமியை போல பல கதைகள் காமாட்சிக்கு கேட்டு பழகிவிட்டது. ஆனால், சிவகாமி அப்படியில்லை. தன் கதையே பெரிய கதை என்று நினைத்து வருந்துக் கொண்டு இருந்தாள்.

சிவகாமி நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

தன் கணவன் அரசாங்க உத்தியோகம் பார்த்ததால், அவர் இறந்ததும் அந்த வேலை சிவகாமிக்கு கிடைத்தது. அந்த வேலை கிடைத்ததால் தன் இரண்டு மகன்களை நன்றாக வளர்த்தாள். முத்த மகன் பெயர் 'ராஜசேக'ர். இரண்டாவது மகனின் பெயர் 'ராஜமோகன்'. 'ராஜா' மாதிரி வளர்க்க வில்லை என்றாலும் பெயரிலாவது 'ராஜா' இருக்கட்டும் என்று வைத்துவிட்டாள்.

தன் முத்த மகன் ராஜசேகர், தன் மகன் சத்யா வெளிநாட்டு படிக்க கூட்டு குடும்பம் நடத்தும் வீட்டை விற்று பணம் தர சொன்னான். ஆனால், இளைய மகன் ராஜமோகன் முதலில் விற்க மறுத்தான். ஆனால், அவன் மனைவி தனி குடிதனம் போகுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் என்று அவனை சம்மதிக்க வைத்துவிட்டாள். தன் காலம் முடியும் வரை வீடு விற்க கூடாது என்று பிடிவாதமாக இருந்தவள் தன் பேரன் படிப்பு உதவியாக இருக்கும் என்று வீடு விற்க சம்மதித்தாள்.

வீடு விற்ற பிறகு பணத்தை பிரித்துக் கொண்டார்கள். ஆனால், சிவகாமியை.... ??

"அண்ண வீட்டில் இரும்மா" என்று தம்பியும், "தம்பி வீட்டில் இரும்மா" என்று அண்ணனும் கூறி, கடைசியில் அவளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

"சிவகாமி அம்மா... இந்த உலகத்துல தான் இருக்கீங்களா...." என்று காமாட்சி கூறியதும், தன் நினைவலைகளில் இருந்து விடுப்பட்டாள்.

"சின்ன வயசுல என் இரண்டு பசங்க பொம்மைக்காக சண்ட போடுவாங்க. நான் போய் சமாதானம் பண்ணுவேன். பேர பேத்தி கல்யாணத்த பார்க்கலாம்னு இருக்குறப்போ... சொத்துக்காக அடிச்சிக்கிட்டவங்க. அம்மாவ பத்தி யோசிக்கவே இல்ல..." என்று சொல்லும் போது சிவகாமி கண்கள் கழங்கியது.

" விடுங்க சிவகாமி அம்மா... பந்தயத்துல ஓட முடியாத குதிரைய சுட்டு கொல்லுற உலகம். வயசான மனுஷங்களுக்கு வாழ இந்த மாதிரி இடமாவது இருக்கே ! சந்தோஷப்படுங்க..." என்று ஆறுதலாக காமாட்சி கூறி சிவகாமியை தேற்றினாள்.

இவ்வளவு பெரிய வார்த்தை. பந்தயத்தில் ஓடும் வரைக்கு தான் குதிரைக்கு பெருமை. மனிதனுக்கு அப்படி தான். ஓட்டம் அடங்கி விட்டால், இறந்து விடுவது நல்லது. இல்லை என்றால் இது போன்ற இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சிவகாமி மனதில் நினைத்துக் கொண்டாள்.

"சிவகாமி மேடம்... உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க..." என்றாள் காப்பாளர் சுதா.

இந்த நான்கு வருடங்களில் தன்னை யாரும் பார்க்க வராத போது இப்போது யார் வந்தது என்று சிவகாமி குழப்பமாக இருந்தது. சிவகாமி வெளியே வந்த பார்த்தும் தன்னை அறியாமல் வந்தவனை கட்டிபிடித்து முத்தமிட்டாள். வந்தன் அவள் பேரன் சத்யா.

சந்தோஷத்தில் சிவகாமியால் எதுவும் பேசமுடியவில்லை. அவன் பேரன் சத்யா நலம் விசாரித்தும் பதில் அளிக்காமல் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் காப்பாளர் சுதா அங்கு வந்தாள். "சிவகாமி மேடம். உங்க பேரன் உங்கள அழைச்சிட்டு போக தான் வந்திருக்காரு..." என்றாள்.

சிவகாமிக்கு என்ற சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆனால், சிவகாமி அந்த இடத்தை விட்டு வர அவளுக்கு மனமில்லை.

"பாட்டி..! எங்க அப்பா அம்மா பண்ண தப்புக்கு நான் பிராசித்தம் பண்ணுறேன். என் கூட வாங்க..." என்றான்.

"நான் வரல. இங்கையே என் கடைசி காலத்துல இருந்துடுறேன் " என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தை போல் கூறினாள். பல ஆறுதலான வார்த்தைகள் சத்யா கூறியும் சிவகாமி கேட்கவில்லை.

கடைசியில், " நீங்க இப்ப வரல... உங்களுக்கு கம்பேனியா எங்க அப்பா, அம்மாவையும் இங்க வந்து விட்டுவேன் " என்றான்.

" டேய் அப்படியெல்லாம் சொல்லாத. என் மகன் கேட்டா தாங்கமாட்டான் ! " என்று சிவகாமி கூறி, தன் மகனுக்கு இல்லாத அன்பும், பாசமும் தன் பேரனுக்கு இருப்பதை சந்தோஷப்பட்டாள்.

பிறகு, காப்பாளர் சுதா, காமாட்சி என்று பலர் சிவகாமியிடம் பேசி சம்மதிக்க வைத்தனர். சத்யா தன் பாட்டியை காரில் முன் பக்கம் அமர வைத்து ஓட்டி சென்றான்.

பிணங்களாக முதியோர் இல்லத்தை விட்டு செல்பவர்கள் மத்தியில், முதல் முறையாக உயிருடன் செல்லும் சிவகாமியை பார்த்து காப்பாளர் சுதா சந்தோஷப்பட்டாள்.

Monday, November 2, 2009

ஹைக்கூ கவிதைகள் - 1

பத்திரிகை ஆசிரியர்களை
எதிர்த்து மனு கொடுத்தனர்
முரசொலி ஆசிரியரிடம் !

**

நாளைய சந்ததியர்களுக்கு
இன்றே சவ குழி தயார்
எல்லா மரங்களும் வெட்டப்பட்டன

**

அடிமை இந்தியாவில் சுதந்திரமாக
சுதந்திர இந்தியாவில் பிணமாக
மகாத்மா காந்தி !

**

சிவப்பும், மஞ்சளும்
ஒன்றாய் மின்னியது
சுமங்கலி பிணத்தில் !

**

LinkWithin

Related Posts with Thumbnails