வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 10, 2010

படித்ததும் பார்த்ததும் - 10.5.10

கடந்த வெள்ளிகிழமை நான்கு படங்கள் வெளிவந்து எந்த படம் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் எந்த படமும் பார்க்கவில்லை. 'நாரத கானா சபா'வில் சே.வி.சேகர் 5600வது மேடை நாடக நிகழ்ச்சிக்கு சேன்றிருந்தேன். கலைஞர், ஸ்டாலின், 'நல்லி' குப்புசாமி, 'திரிசக்தி' சுந்தராமன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முதன் முறையாக கலைஞர் பத்தடி தூரத்தில் இருந்து பார்த்தேன். அவர் பேசுவதற்காக இரண்டு மணி நேர நாடகத்தை ஒரு மணி நேரத்தில் எஸ்.வி.சேகர் முடித்துவிட்டார். நிகழ்ச்சி முடிவில் கலைஞர்களுக்கு கலைஞர் அவர்கள் விருது வழங்கினார்.

****

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 20/20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அரை இறுதி வாய்ப்பை இழந்தது. நமக்கும், பாகிஸ்தானுக்கு எவ்வளவு ஒற்றுமை.

2007 - ஒரு நாள் உலக கோப்பையில் இருவருமே முதல் சுற்றில் வெளியெறினர். இதில் பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோல்வி பெற்ற அடுத்த நாளில், இந்தியா பங்லாதேஷிடம் தோற்றது.

2007 - 20/20 உலக கோப்பையில் இருவரும் இறுதி ஆட்டத்தில் மோதினர். இதில் இந்தியா கோப்பையை கைபற்றியது. அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றது.

2010 - பாகிஸ்தான் நியூசிலாந்து அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அடுத்த நாள், இந்தியா வெஸ்ட் இன்டிஸ் அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

என்ன மாதிரியே அழுவுறானே ! இதான் ஒரே இரத்தம் சொல்லுறது !!

****

திரைக்கலை பிறந்த கதை

வாசகர்கள் பார்வைக்கு வராத நல்ல புத்தகம். சினிமாவில் முதல் கேமிரா கொண்டு இயக்கப்பட்ட படம் தொடங்கி கேமிராவும், திரைக்கலை வளர்ச்சியையும் பற்றி வரை சொல்லும் புத்தகம். உலகில் முதல் அசையும் படம், திரைகதை வடிவ படம், நகைச்சுவை படம் என்று பல தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. சினிமா பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்கலாம்.

இந்த புத்தகம் நூலகத்தில் கிடைத்தது. நூலக ஆணைக்கு பிறகு இந்த புத்தகம் மறு அச்சு செய்தார்களா என்று தெரியவில்லை. பாரதி புத்தகாலயம் விற்பனை உரிமை பெற்றுள்ளது.

****

நேற்று (9.5.10) அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் சார்பில் வாசுகி கண்ணப்பன் விருது வழங்கும் விழா மாம்பலம் சந்திரசேகர் மண்டப்பத்தில் நடந்தது. நாகரத்னா பதிப்பகம் சிறப்பு புத்தக கண்காட்சி அனுமதி பெற்று நடைப்பெற்றது. நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் நாகரத்னா பதிப்பக புத்தங்களை விட விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்கள் அதிகமாக விற்றதில் பதிப்பாளனாக சிறு வருத்தம். விற்பனையாளனாக சந்தோஷம்.

****

யுவராஜ் சிங் : தல ! நாம தோத்துட்டோமே இப்ப என்ன பண்ணுறது ?

தோனி : கவலப்படதா ! ரொம்ப 'ஐ.பி.எல்' விளையாடுனதால நாங்க ரொம்ப டையர்ட் ஆய்ட்டோம். அதனால உலக கோப்பையில சரியா விளையாட முடியல சொல்லி பேட்டி கொடுப்போம்.

ரைனா ஓடி வந்து " தல நாம மோசம் போய்ட்டோம் "

"'ஐ.பி.எல் விளையாடுனதால எங்களால நல்ல விளையாட முடிஞ்சதுனு' கெயல், பிட்டர்சன் பேட்டி கொடுத்திருக்காங "

தோனி : நாம் தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு உக்காந்து யோசிப்போம். அதுக்குள்ள என் வீட இடிக்காம இருந்தா நல்லா இருக்கும் !!

****

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails