வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 24, 2010

படித்ததும் பார்த்ததும் - 24.5.10

முன்பெல்லாம் திரையரங்கிற்கு போகாதவர்கள் 30,40 ரூபாய் கொடுத்தாவது திருட்டு விசிடி, டிவிடி வாங்கி படம் பார்ப்பார்கள். ஆனால், இப்போது அந்த செலவு கூட இல்லாமல் யூ-டியூப் போன்ற இணையதளத்தில் புதுபடங்களை இலவசமாய் திரையிடுகிறார்கள். 'ஜக்குபாய்' படம் வந்த பிறகு இணையதளத்தில் படம் வர அதிக கெடுபிடி இருக்கும் என்று எதிர்பார்த்தால், முன்பை விட சீக்கிரமாகவே இணையத்தில் படம் வருகிறது.

சமீபத்தில் வெளிவந்து, இரண்டாவது வார தொடக்கத்திலே இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், கோரிப்பாளையம் போன்ற படங்கள் இணையத்தில் கிடைக்கிறது. திரை உலகினர் இதை தீவிரமாக எடுத்து கொண்டால் நல்லது.

***

பிரபாகரன் பேசுகிறார் ( வீரம் விளைந்த ஈழம் - 2)அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
பக்.176, விலை.140

ஹிட்லர் இறந்த பிறகு, உலக நாடுகளில் இருந்து ஜெர்மனுக்கு வர வழைத்து, மரண மூகாம் பற்றியும், ஹிட்லரின் கொடுமை பற்றியும் பதிவு செய்தனர். ஜெர்மானியர்களை கொண்டு யூத உடல்களை அப்புரப்படுத்தினர். இப்படி எல்லாம் செய்யாமல் போனால் நாளைய சங்கதியர்களுக்கு ‘யூத இன படுகொலை’ பற்றி தெரியாமலே போயிருக்கும். 'யூத இன படுகொலை' ஹிட்லரோடு முடிந்தது என்று தைரியமாக சொல்லும் அளவிற்கு இந்த வரலாறு பதிவுகளே உதவியிருக்கிறது.

யூதர்களுக்கு பிறகு அதிகமாக இன படுகொலை செய்யப்பட்ட இனம் 'தமிழர்' இனம் தான். ஈழ யுத்த நடக்கும் போதே ஹிந்து நாளேடு, சோ, ஞாநி போன்றவர்கள் ஈழத்தில் அப்படி ஒரு யுத்தமே நடக்கவில்லை என்று தான் பேசினார்கள். இன்னும், 20,30 வருடங்களில் ராஜபாக்ஷே பெரிய நாயகனாக கருதப்படலாம். தமிழர் இன படுகொலை நடக்கவில்லை என்று தமிழர்களே வாதாடலாம்.

அப்படி எல்லாம் நடக்காமல் இருக்க இது போன்ற சில வரலாற்று பதிவு நூல்கள் தேவை. ஈழ போராட்ட வரலாறு குறிப்பு சேகரிப்பில் நக்கீரன் குழுமத்துக்கு தனி பங்கு உண்டு. அதே சமயம் அவர்களின் நம்பக தன்மையை விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக இருப்பார்கள்.

ஈழ யுத்தத்திற்கு பிறகு அரசியல்வாதிகளே மறந்து விட்ட நிலையில் நக்கீரன் குழுமமாவது ஈழத்தை பற்றி பரப்புகிறார்கள்.

****

ஜூலை மாதத்தில் இருந்து அடித்தல் திருத்தல் கொண்ட காசோலைகளை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. முன்பு, காசோலையில் பெயர், தேதி, பணம் போன்ற விபரங்களில் தவறு இருந்தால் அடித்து திருத்தி விட்டு கையெழுத்து போடுவார்கள். வங்கிகளும் ஏற்றுக் கொள்ளும். இனி அப்படி நடந்தால், புது காசோலை தான் கொடுக்க வேண்டும். காசோலை ஏமாற்று வேலையை தவிர்க்க ஆர்.பி.ஐ இந்த புது அறிவிப்பை அறிவித்துள்ளது.

****

தெனாவட்டு, தீ படங்களை விட 'சுறா' சன் குழுமத்திற்கு அதிக நஷ்ட கொடுத்த படம் என்று நினைக்கிறேன். சன் குழுமம் ஒரு படம் வாங்கினால், குறைந்தது இரண்டு மாதம் விளம்பரம் ஓடும், ஆறு வாரமாவது சன் டாப் 10 மூவியில் முதல் இடம் இருக்கும். ஆனால், 'சுறா' வெளிவந்து ஒரு மாததிற்குள் தன்னுடைய அடுத்த படமான 'சிங்க' த்தை வெளியிடுகிறார்கள். இதனால், படம் வெளிவந்து இரண்டாவது வாரத்தில் இருந்து 'சிங்கம்' முதல் கொடுக்க, 'சுறா' இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

விஜய்யால் வந்த நஷ்டத்தை சூர்யா 'அயன்' போல் லாபம் சம்பாதித்துக் கொடுக்கிறாரா என்று பார்ப்போம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails