வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, May 13, 2010

அன்புள்ள நண்பனுக்கு...!

நம் நான்கு வருட நட்பில்
நான் அனுப்பும் முதல் மடல் !
நன்றி , மன்னிப்பு
வார்த்தைகள் நம்மிடம் இல்லை !
மடல் அனுப்பும் தொலைவில்
இதுவரை நாம் இருந்தில்லை !

எல்லை தாண்டிய பயங்கரவாதம்
நாளைக் கூட தொடரும் !
நம் நட்பு
எல்லை தாண்டியும் தொடரும் !
அதற்கு
இந்த மடல் ஒரு ஆதாரம் !

அன்று -
ஆழகிய பாவை ஒருத்தி
நம்மை பார்க்கும் போது
'அவள் என்னை தான் பார்க்கிறாள்'
- என்று நீ உரைக்க !
'என்னை விட அழகன் நீ'
- என்று நான் பொய்யுரைக்க !
'அவள் உன்னை தான் பார்க்கிறாள்'
என்று நான் கேலி செய்ய !
நாம் வாழ்ந்த கல்லூரி நாட்களை
எப்படிச் சொல்ல !

இன்று -
நீ பார்க்கும் பாவையர்களை
நான் பார்க்கவில்லை !
நான் பேசும் பெண்ணிடம்
நீ பேசவில்லை !

அன்று -
நம் நான்கு கண்களில்
ஒரே அழகை ரசித்தோம் !
இன்று -
தேசம் வேறு ஆனதால்
வேவ்வெரு அழகை ரசிக்கின்றோம் !

வெளிச்சத்தில் மறையும்
தீப்பொறி போல்
எல்லா துறையில் வல்லவனாக
என்னை நான் முற்பட்டேன் !
ஒரு துறையில் திறமை காட்ட
எழுத்து பக்கம் திசை காட்டினாய் !

ரயில் பொட்டிப்போல்
பேச்சை அடுக்கிக் கொண்டு இருந்தேன் !
அதிகமாய் பேசும் நாவை
பூட்டு என்றாய் !

தவறு செய்ய தவறியவன்
வரலாறு படைப்பதில்லை என்றாய் !
என் தவறுகளில்
பாடம் படிக்கச் சொன்னாய் !

காதல் கடிதங்கள்
பொய்களைச் சொல்லும் !
நட்பின் கடிதங்கள்
மனதைச் சொல்லும் !

உனக்கோ
அங்கு பல நண்பர்கள்
எனக்கும்
இங்கு பல நண்பர்கள்
ஆனால்...
என் தமிழுக்கு முதல் நண்பன் நீ !

நம் சந்திப்பை
கடல்,எல்லை,பாஸ்போட்,விசா
இவைகள் தடுக்கலாம்
நாம் சந்தித்த
நினைவுகளை இல்லை |

நம் முதல் சந்திப்பில்
வழிப்போக்கர்களாக சந்தித்தோம் !
நாளை சந்திப்பில்
நாம் உலக்கிற்கு வழிக்காட்டிகளாக ...!!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails