வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 19, 2010

புத்தக விற்பனை - நல்ல பகுதி நேர வேலை

இரயில் பயணமோ, பஸ் பயணமோ எதுவாக இருந்தாலும் எனக்கு துணையாக இருப்பது புத்தகங்கள் தான். Landmark முதல் பிளாட் பாரம் கடை வரை விற்க்கும் புத்தகங்களை வாங்கி படித்திருக்கிறேன். அதிக பண புழக்கம் தொழில் உள்ளஇல்லை என்று விற்பனை அனுபவத்தில் தெரிந்துக் கொண்ட உண்மை.

புத்தக விற்பனையாளர் என்றவுடன் பதிப்பகம் தொழிலை பற்றி யோசனை சொல்ல போவதாக நினைக்க வேண்டாம். தமிழ் நாட்டில் மூன்னூறுக்கு மேற்ப்பட்ட பதிப்பகங்கள் உள்ளன. இப்போது இருக்கும் சூழ்நிலையில் புதிய பதிப்பகம் ஆரம்பித்து அதற்கு விளம்பரம் தேடி லாபம் சம்பாதிப்பது என்றால் குறைந்தது ஒரு இரு வருடமாவது வேண்டும். அதிக மூதலீடு வேண்டும். நான் சொல்ல வருவது புத்தக விற்பனையை மட்டுமே !

எத்தனை பதிப்பகங்கள் நூலை போட்டு விட்டு வியாபாரத்திற்காக புத்தக கண் காட்சியையும், அரசாங்க நூலகத்தையும் நம்பி இருக்கிறார்கள். ஒரு சில எழுத்தாளர்கள் சொந்தமாக நூலை போட்டு விட்டு அரசாங்க நூலகத்தை மட்டுமே நம்புகிறார்கள். இவர்களின் புத்தகங்கள் தமிழ் வாசகர்கள் பார்வைக்கு போவதே இல்லை. எடைக்கும் போட மனமில்லாமல், தூக்கி எறியாமல் பல புத்தகங்கள் பதிப்பகத்தில் அறையிலும், பறனையிலும் தூங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் எத்தனையோ நல்ல புத்தகங்கள் பலர் இழந்து விடுகிறார்கள்.

புத்தக விற்பனை தொழிலில் பெரிய மூதலீடு என்றால் எழுத்தாளர்களின் புத்தகங்கள் தான். தூங்கிக் கொண்டு இருக்கும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களை தட்டி எழுப்புவது தான் விற்பனையாளனின் வேலை. அவர்களிடம் இருந்து புத்தகத்தை சலுகை விலையில் வாங்கி, அதை புத்தக கடையில் 65 மூதல் 70 சதவீத விலைக்கு கொடுக்க வேண்டும். புத்தகம் விற்பனையாகவிட்டால் வாங்கிய எழுத்தாளர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டியது தான். அதனால், வாங்கும் முன்பே விற்பனையாகும் நூலுக்கு மட்டும் தான் பணம் (Sale or Return basis) தருவதாக எழுத்தாளர்களிடம் முன்பே கூறிவிட வேண்டும்.

விற்பனையாகும் ஒரு நூலுக்கு 40 மூதல் 50 சதவீதம் வரை எழுத்தாளர்களுக்கு கொடுப்போம். (எழுத்தாளரோ, பதிப்பகமோ 1000 பிரதி போட்டிருந்தால் ஒரு நூலுக்கு அவர்கள் செய்த செலவு 30 சதவீதம் தான் இருக்கும். நம் மூலம் அவர்கள் நூல் விற்பனையாவதால் அவர்களுக்கு 10 - 20 சதவீதம் லாபம், விளம்பரமும் கிடைக்கும்). கண்டிப்பாக புத்தக கடைக்காரர்கள் 30 முதல் 35 சதவீதம் வரை கமிஷனாக எடுத்துக் கொள்வார்கள். நமக்கு 15 முதல் 20 சதவீதம் வரை லாபம் கிடைக்கும். அது மட்டுமில்லாமல், ஒரு இடம் பார்த்து நம்மிடம் இருக்கும் எல்லா புத்தகங்களை 15 சதவீதம் கலிவு விலையில் விற்க்கலாம். இதில் அதிகம் லாபம் இல்லை என்று உங்களுக்கு தோன்றலாம். பள்ளி, கல்லூரி என்று அணுகி இருபது மூதல் மூப்பது சதவீத கழிவு விலையில் விற்பனை செய்யலாம்.

இது ஒரு நல்ல பகுதி நேர வேலை மட்டுமே. ஆரம்பத்தில் முழு நேர வேலையாக செய்வது கொஞ்சம் ரிஸ்க் தான். புத்தக விற்பனை கடை வைத்திருப்பவர்கள் தாராளமாக முழு நேர வேலையாக செயல் படலாம்.

பல வருடங்கள் முன் தொடங்கிய எத்தனையோ பதிப்பகங்கள் புதிதாக புத்தகம் போடாமல் இன்னும் பழைய புத்தகங்களை புதிய பதிப்பாக போட்டு கொண்டு இருக்கிறார்கள். புது தலைப்பில் புத்தகங்கள், இணையதளம் என்று புது முயற்சியில் இறங்குவதில்லை. ஆனால், கிழக்கு, விகடன், உயிர்மை போன்ற சில பதிப்பகங்கள் மட்டும் தான் இப்போது இருக்கும் கணினியையும், இணையத்தளத்தை பயன்படுத்தி புத்தகம் விற்பனை செய்கிறார்கள்.

அடுத்தவர்கள் தனக்காக வேலை செய்வதை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். தெரியாத ஒருவருக்கு பணத்தை தர தான் பயப்படுவார்கள். தாராளமாக புத்தகத்தை பெற முடியும்.

சரி ! எதற்கு இந்த கட்டுரை ??? என்று உங்கள் சந்தேகம் தெரிகிறது. சென்னை மற்றும் திருச்சியில் மட்டுமே நாகரத்னா மற்றும் விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்கள் கிடைக்கிறது. மற்ற ஊர்களில் புத்தககங்கள் கிடைக்க, புத்தக விற்பனை ஆர்வமுள்ளவர்கள் தேவை.

எங்கள் நோக்கம் புத்தக விற்பனை மட்டுமல்ல, பதிப்பகம் அல்லாமல் சொந்தமாக வெளியிடுபவர்களில் நூல்களை தமிழக முழுக்க கொண்டு செல்வது தான். சென்னை, திருச்சி விற்பனையில் எங்களுக்கு கிடைக்கும் அதே லாபம் மற்ற ஊரில் விற்பனை செய்யும் விற்பனையாளருக்கும் கிடைக்கும். நாங்கள் விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்களுக்கு எந்த லாபமும் எங்களுக்கு இல்லை. ஒரு பதிப்பாளனாக என் பதிப்பகம் நூல்களுக்கு 50% சதவீதம், விற்பனையாளனாக உங்களுக்கு 20%, கடைக்கு 30% கிடைக்கும். புத்தகத்தை பல இடங்களில் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம்.

எந்த தொழிலாக இருந்தாலும் உழைப்பை தவிர வேறு பெரிய முதலீடு எதுவுமில்லை. ஆர்வமுள்ளவர்கள் 'nagarathna_publication@yahoo.in' என்ற மின்ஞசல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

2 comments:

Radhakrishnan said...

முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

ரவி said...

வாழ்த்துக்கள் குகன்...!!

LinkWithin

Related Posts with Thumbnails