வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, May 28, 2010

குறும்படம் : ஊன்றுகோல், தடுமாறும் நூலகம்

குறும்படம் என்றால் வலியை உணர்த்தும் சோகம் இருக்க வேண்டும் இல்லை என்றால் கருத்து சொல்ல வேண்டும் என்ற விதியை யார் நிர்ணயம் செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த இரண்டு விதி பின்பற்றி வந்திருக்கும் குறும்படங்கள் தான் - ஊன்றுகோல் மற்றும் தடுமாறும் நூலகம்.

ஊன்றுகோல்

தெருவில் குப்பை பொறுக்கும் சிறுவர்களுக்கு உடைந்த செல்போனும், கடிகாரமும் குப்பை தொட்டியில் கிடைக்கிறது. யாருக்கும் உதவாத பொருளாக இருந்ததை இரண்டு சிறுவர்கள் பயனுள்ளதாக மாற்றுகிறார்கள். இருந்தாலும், அவர்கள் திறமை மதிக்கப்பட்டாமல் மிதிக்கப்படுகிறது. அவர்கள் திறமையை யாரும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது வயதான ஒருவர் அவர்களை ஊக்கப்படுத்தி தன் நண்பர் மூலம் நாளிதழில் இரண்டு சிறுவர் புகைப்படத்தை பிரசுரம் செய்கிறார்.

திறமை இருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுத்தால், யார் வேண்டுமானாலும் புகழ் உச்சத்தை தொடலாம் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கும் குறும்படம். வழக்கமான கருத்து சொல்லும் குறும்படம் என்றாலும் இரண்டு சிறுவர்களில் திறமையை காட்டியதில் செய்கை தனம் தெரிகிறது.

சிறுவர், இளைஞர்களின் திறமை மதிப்பு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நம் கல்வி முறைகள் மாற வேண்டும். தொழிற்கல்வி, பயிற்சி முறை கல்வி போன்ற முயற்சிகள் வந்தால் தான் திறமையானவர்களை மதிக்கும் குணம் வரும். அதுவரை, யார் என்ன கண்டுபித்தாலும், சாதித்தாலும் கல்வி பின்னனி பார்த்து பாராட்டும், வாழ்த்தும் கிடைக்கும்.

இந்த குறும்படத்தை இயக்கியவர் தனுஷ்ராஜா.

தடுமாறும் நூலகம்

இன்றைய அவசர யுகத்தில் எத்தனையோ விஷயங்களை தொலைந்தை தெரியாமல் வாழ்கிறோம். அப்படி தொலைந்த ஒரு தொழிலை இந்த குறும்படம் உணர்த்துகிறது.

ஒரு காலத்தில், ஒருவர் வீடு தேடி வந்து வார இதழ்கள், நாவல்கள் கொடுப்பார். இரண்டு, மூன்று நாட்கள் கலித்து படித்ததற்கு பணத்தையும், இதழையும் வாங்கி செல்வார். வீட்டில் இருக்கும் பல பெண்கள், ஓய்வு பெற்றவர்கள் என்று பலர் எல்லா வார இதழ்களையும் குறைந்த விலையில் படித்தனர். இன்று படிக்கும் பழக்கமே அறிதாக போய்விட்ட காலத்தில் வீடு தேடி புத்தகம் கொடுத்து, வாங்கி செல்பவர்கள் தொலைந்துவிட்டார்கள்.

இப்படி காலத்தால் மறக்கடிக்கப்பட்ட நடமாடும் நூலகமாக இருந்தவரின் மன வேதனையை சொல்லும் குறும்படம். ஒரு நிமிடத்தில் காட்ட வேண்டிய நடமாடும் நூலகத்தின் வாழ்க்கையை ஐந்து நிமிடங்களாக காட்டியிருப்பது கொஞ்சம் இழுவையாக தான் இருக்கிறது. இறுதியில், தன் மகன் வாங்க வேண்டிய பாட புத்தகத்தின் பட்டியலையும், தொழிலுக்காக வாங்க வேண்டிய புத்தகத்தின் பட்டியலும் வைத்து எது வாங்க வேண்டும் தெரியாமல் தவிக்கிறார். நடமாடும் நூலகமாக இருந்தவர் தடுமாறும் நூலகமாகிறார்.

காலத்தால் மறந்த தொழிலை நினைவு படுத்தியதற்காக இந்த குறும்படத்தை பாராட்டலாம். இந்த குறும்படத்தை இயக்கியவர் நாஞ்சில் தமிழ்வாணன்.

மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு குறும்படங்களை கீழ் காணும் முகவரியில் வாங்கலாம்.

கலைமலர் கலைக்கூடம்
50/1ஏ, ராஜசுபம் காம்ளேக்ஸ்,
இந்து கல்லூரி தெற்கு,
நாகர்கோவில் – 629002

1 comment:

Unknown said...

விமர்சனம் பார்க்க தூண்டுகிறது ..

LinkWithin

Related Posts with Thumbnails