வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, June 14, 2010

படித்ததும் பார்த்ததும் - 14.6.10

ஜீ தமிழ் டி.வி யில் ஞாயிறு காலை 9:30 மணி 10: 30 மணி வரை "மக்களின் மனசாட்சி" நிகழ்ச்சி ஒளிப்பரப்புகிறார்கள். சென்னை மா நகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சென்னை மக்களின் குறைக் கேட்டு நிபர்த்தி செய்கிறார். ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளித்ததில் அரசாங்கம் ஒவ்வொரு பகுதிக்கு ஒதிக்கிய நிதி பற்றிய விபரங்களை சொல்லுகிறார்.

முதல் பாதி மக்கள் புகாரும், இரண்டாவது பாதியில் மக்கள் புகாரின் எதிரோலியாகவும் ஒளிப்பரப்பாகிறது.

இது ஒரு நேரடி ஒளிப்பரப்பு. 044- 3919 4113 எண்ணுக்கு தொடர்பு கொண்டு சென்னை மக்கள் தங்கள் குறைகளை மேயரிடம் சொல்லலாம்.

****
கம்யூனிசம் நேற்று - இன்று - நாளை

வருடக்கணக்கில் படித்த ஒரே புத்தகம் இந்த புத்தகமாக தான் இருக்கும். 2007ல் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியது. இன்னும், படித்த முடித்த பாடில்லை. அதிக தகவல் கொண்ட புத்தகம். கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், பாட புத்தக நடையில் இருப்பதால், இரண்டு, மூன்று அத்தியாயம் படித்ததும் அலுப்பு தட்டுகிறது. அதிக தகவல் கொண்ட புத்தகம் என்பதால், புத்தகத்தை படிக்காமல் எடுத்து வைக்கவும் மனமில்லை. தினமும் இரண்டு அத்தியாயமாவது படித்து இந்த வருடத்திலாவது முடிக்க வேண்டும் நினைக்கிறேன்.

விலை.80, பக்கங்கள் : 450
நக்கீரன் வெளியீடு

***

என்ன பதிவு போடலாம் என்று இருந்த பலருக்கு பதிவர் சண்டை உதவியாக இருந்துள்ளது என்று நினைக்கிறேன். ஒவ்வொருவரின் பதிவு படிப்பதற்குள் தாவு கிளிந்துவிட்டது. இரண்டு பேர் சண்டை எப்படி ஜாதி கலவரம், மத கலவரமாக மாறுமோ அந்த அளவுக்கு பதிவர்களுக்குள் கூட நடக்கும் என்று சமிபத்திய நிகழ்வு காட்டியுள்ளது.

யாரோ, ‘பொட்டிக்கடை’ என்று சொல்லு மாதிரி இருக்கு... அதுக்குள்ள அடுத்ததா... ஆள விடுங்கடா சாமி...!!

***

12.6.10 அன்று, எல்.எல்.ஏ நூலகத்தில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் 19ஆம் ஆண்டு விழா நடைப்பெற்றது. ஆண்டு விழாவுக்காக பெரிய அளவு கூட்டமில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகவும் தொய்வாக நகர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்பே புத்தக ஸ்டால் போட அனுமதி வாங்கி, அதற்கான வேலை செய்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு புத்தகம் விற்பனை ஆகவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லை. அதிக புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்த்தது கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது.

வெளியூரிலும் 'நாகரத்னா புத்தக கண்காட்சி' நடத்த திட்டமிட்டுள்ளேன். வெளியூரில் நடக்கும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் அனுப்பினால் கமிஷன் அடிப்படையில் புத்தக கண்காட்சி நடத்தலாம். நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails