வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, June 9, 2010

கற்பனை கதையல்ல...! - 3

"எவ்வளவு தைரியம் இருந்தா சுட்டுவேன் சொல்லியிருப்பான்" என்று ராமு மேல் கோபமாக இருந்தார் ராதாகிருஷ்ணன். அவன் என்ன தான் முயற்சி பண்ணினாலும் காங்கிரஸ் தான் இந்த தேர்தலில் ஜெய்க்கும். தி.மு.க வால் ஒண்ணும் பண்ண முடியாது என்ற நம்பிக்கையில் ராதா இருந்தான்.

இருந்தாலும், தான் ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவருக்கு ராமுவால் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளூர இருக்க தான் செய்தது. ராமு உயிருடன் இருக்கும் வரை தான் ஆதரிக்கும் தலைவனுக்கு ஆபத்து தான். அவனை கொல்ல வேண்டும். அது தான் சரியான முடிவு.

தனக்கும், ராமுவுக்கும் அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் நெருங்கி பழகியவர்கள். போன் போட்டு தனியாக பேச வேண்டும் என்று சொல்லி கொன்று விடலாம். இந்த சமயத்தில் தன்னை தனியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னால் சந்தேகம் வந்தாலும் வரலாம். தொழில் சம்மந்தமாக சந்திக்க வேண்டும் என்று சொல்லி தான் அவனை சந்திக்க வேண்டும்.

கொஞ்ச நேரம் கூட யோசிக்காமல் ‘வாசு’ பெயர் தான் நினைவுக்கு வந்தது. வாசுவுக்கு சந்தேகம் வராதப்படி பேசினார் ராதா.

" ஒரு கோயம்பத்தூர் பார்ட்டி வந்திருக்கு. மாசம் 750 ரூ சம்பளம். லாபத்துல ரூபாய்க்கு நாலணா தர்றேங்கறாங்க. ராமு வச்சு படம் பண்ணனும் சொல்லுறாங்க..." என்றார்.

வாசு சந்தோஷத்தில் வானத்துக்கும் பூமிக்கும் துள்ளி குதித்தார். ராமு வைத்து எடுத்த முந்தைய படம் பெரிய ஹிட். மீண்டும் அவரை வைத்து படம் எடுக்க நல்ல பைனான்ஸியர் வேறு கிடைத்துவிட்டார். கதையாவது.... வசனமாவது. பிறகு பார்த்து கொள்ளலாம். ராமு அண்ணன் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் ஹிட் தான். இப்படி பல எண்ண குதிரைகள் வாசு மனதில் ஓடியது.

பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங்கை தொடங்கி விட வேண்டும். அப்போது தான் பைனான்ஸ் பண்ணுறவங்களுக்கு நம்பிக்கை வரும் என்று ராதா ஆலோசனை வழங்கினார்.

வாசு ஷூட்டிங்கில் இருந்த ராமுவிடம் கோயம்பத்தூர் பார்ட்டி பற்றி சொன்னார். ராமுவும் படம் பண்ண சம்மதித்தார்.

கொஞ்ச நாட்கள் கலித்து, ராதா வாசுவிடம், "கோயம்பத்தூர் பார்ட்டிங்க அசோகா ஹோட்டல்ல தங்கியிருக்காங்க. நாளைக்கு நல்ல நாளு. ராமுவ பார்த்து அட்வான்ஸ் கொடுக்கனும்னு சொல்லுறாங்க..."

இவ்வளவு சீக்கிரம் படம் தொடங்க முடியும் என்று வாசு நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். ராதாவின் சதி வேலை தெரியாமல் போனை நோக்கி நடந்தான் வாசு.

ராமுவுக்கு போன் போட்டு தொடர்பு கொள்ள நினைத்தான் வாசு. அவர் மனைவி தான் எடுத்தார். தேர்தல் பிரசாரத்துக்கு சென்று இருப்பதாக சொன்னார். நடிப்பு, அரசியல் என்று கொடி கட்டி பறப்பவர். நாம் நினைத்த மாத்திரத்தில் சந்திக்க நினைத்தால் எப்படி ? ராதா அவர்கள் சொன்ன வாய்ப்பை நழுவ வாசுவுக்கு மனமில்லை.

ராதா வாசுவிடம், "இன்னாப்பா இது... கோயமுத்தூர் பார்ட்டி வெயிட் பண்ணிட்டிருக்காங்க " என்று சலிப்புடன் முணுமுணுத்தார்.

மணி நான்கானது.

" மறுபடியும் ராமு தோட்டத்துக்கு போன் பண்ணி வந்துட்டாரா பாரு" என்றார் ராதா. தன்னை விட ராதாவுக்கு ராமுவுடன் படம் பண்ண ஏன் இவ்வளவு ஆரவம் என்று தோன்றியது. எத்தனையோ பேரை வளர்த்து விட்டவர். அவரின் அக்கரை மீது சந்தேகம் பட கூடாது என்ற எண்ணத்தை அப்போதே அழித்தான்.

மீண்டும் போன் போட்டார். இந்த முறை ராமுவே போனை எடுத்தார்.

"இப்பதான் பிரசாரம் முடிச்சிட்டு உள்ள நுழைஞ்சேன். நீங்க போன் பண்ணதா அம்மா சொன்னாங்க. என்ன விஷயம் ?" என்றார்.

வாசு கோயம்பத்தூர் பார்ட்டி வந்த விபரத்தை சொன்னார்.

"நாள் முழுக்கப் பிரசாரம் பண்ணிட்டு இப்பதான் வர்றேன். இன்னும் சாப்பிடக்கூட இல்லை. இன்னைக்கு வேண்டாம், நாளைக்கு ஸ்டுடியோவில பார்ப்போம்" என்று சொல்லி போனை துண்டிக்க பார்த்தார் ராமு.

"உங்கள பாத்தாச்சுன்னாக்க உடனே வேலைகளை ஆரம்பிச்சுடலாம். ஒரு பத்து நிமிஷம் உங்களை பார்த்துட்டு போயிடறோம்" என்று பணிவோடு கேட்டார் வாசு.

வேறு வழியில்லாமல் ராமுவும் "சரி... சீக்கிரம் வாங்க " என்றார்.

ராதாவும், வாசும் ராமு தோட்டத்திற்கு சென்றனர். இரவரும் வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்தனர். சாப்பிட்டு முடித்து ராமு வந்தார்.

இருவரையும் நலம் விசாரித்து வந்த விஷயத்தை எப்போது தொடங்குவார் என்று ராமு இருந்தார்.

வாசு, "அண்ணே, விஷயத்தைச் சொல்லுங்க" என்று ராதாவை பேச சொன்னான்.

ராதா, " நீ தானே புரோடியூசர். நீ தான் கோயம்பத்தூர் பார்ட்டி வந்திருக்கிறது, அவங்க எவ்வளவு பணம் கொடுக்குறாங்கனு விபரத்த சொல்லனும்" என்றார்.

வாசு ராதா அவர்கள் சொன்ன விபரத்தையும், கோயம்பத்தூர் பார்ட்டி வந்திருக்கும் விபரத்தையும் சொன்னார்.

"மாசத்துக்கு பத்து கால் ஷீட்னு ஆறு மாசத்துக்குக் கொடுத்தீங்கன்னா படத்த முடிச்சுடலாம்” வாசு ராமு சம்மதிப்பார் என்ற ஆர்வத்தில் இருந்தார்.

ராமு," 60 கால்ஷீட் தேவையிருக்காதண்ணே. அப்படியே தேவைன்னா ஒரு மாசம் விட்டு ஒரு மாசம் ஆறுமாசத்துக்கு, மாசத்துக்குப் பத்து கால்ஷீட் கொடுக்கறேன். அப்படியும் படம் முடியலேன்னா முடியற வரைக்கும் டேட் தரேன்" என்று சொல்லிவிட்டு ராமு ராதாவிடம், "என்னண்ணே, வாசு எல்லா கால்ஷீட்டையும் கேட்கிறாரே! " என்று சொல்லிவிட்டு தன்னுடைய நாற்காலியை நகர்த்தினார்.

அப்போது, தன் காதுக்கு கீழே இடிபோல சதையை பிய்த்துக் கொண்டு ஒரு தோட்டா செல்வதை ராமு உணர்ந்தார். ராதாவின் கையில் தூப்பாக்கி இருந்தது.

"என்னண்ணே, இப்படிச் செய்துட்டீங்களே " என்று ராமு என்கிற எம்.ஜி.ஆர் அவர்கள் மயங்கி கீழே விழுந்தார்.

உடனே தன்னையும் இரண்டு முறை ராதா என்கிற எம்.ஆர்.ராதா சுட்டுக் கொண்டார்.

2 comments:

LinkWithin

Related Posts with Thumbnails