வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, June 2, 2010

நட்பில் ஒரு காதல் !!

எல்லாம் முடிந்த பிறகு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்க கூடாது. நிலைமை கை மீறி போய்விட்டது. இரண்டு மாதத்தில் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் ரேகாவுக்கு என் மீது இருந்த காதல் தெரிந்திருக்க கூடாது. மூன்று வருடமாய் தோழியாய் இருந்து, அவள் காதலை இப்போது புரிந்துக் கொண்ட என் முட்டாள் தனத்தை என்ன சொல்லுவது.

இருவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தோம். நான் ரேகாவிடம் பழகிய இரண்டாவது வருடத்தில் இருந்தே காதலிக்க தொடங்கிவிட்டேன். அடிக்கடி ' நட்பை பற்றி பெருமையாக பேசி, நட்பை பற்றின எஸ்.எம்.எஸ் அனுப்பி என் மீது இருக்கும் நட்பை மட்டுமே உணர்த்தினாள். நட்பை தக்க வைத்து கொள்ள, காதலை தொலைக்கும் ஒரு கோடி ஆண்களிள் நானும் ஒருவனாக இருக்க மூடி மறைத்துவிட்டேன்.



கல்லூரி முடித்த கையோடு ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.10,000 சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், ரேகா வேலை தேடி அலைந்தாள்.

ஒரு நாள்... "டேய் ! சென்னை ட்ரேட் சென்டர்ல ஜாப் பேர் நடக்குது.ரொம்ப தூரம். என்ன வண்டியில கூட்டிட்டு போறியா" என்றாள்.

அவளிடம் எனக்கு பிடித்ததே என் மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வது தான். என் செல்போன், பர்ஸ், புத்தகம் என்று என் அனுமதி கேட்காமலே எடுத்து பார்ப்பாள். 'தொடாதே' என்று சொல்லும் தைரியம் எனக்கு இல்லை.

அவள் அழைத்தது ஞாயிற்றுகிழமை என்பதால், அவள் அம்மாவின் அனுமதியுடன் ரேகாவை என் வண்டியில் அழைத்து சென்றேன். உட்காரும் போது, "அடிக்கடி பிரேக் போடாம வண்டி ஒட்டுடா..."

" எதிர்க்க வண்டி வந்தா.... பிரேக் போடாம என்ன பண்ணுறது "

" போடா டியூப் லைட்..." என்று அவள் சொல்ல, அவள் எதற்காக அப்படி சொன்னால் என்று நினைத்தப்படி வண்டி ஓட்டினேன். வேலைக்காக பலர் பெரிய க்யூவில் ட்ரேட் சென்டரில் நின்றுக் கொண்டு இருந்தனர்.

" இது வேலைக்காவாது வா போலாம்" என்றேன்.

" உன் பிரண்டுக்காக வெயிட் பண்ணமாட்டியா...!" என்று தன் பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினாள். காதலிக்கும் பெண்ணிடம் கூட பொய் சொல்லி வந்துவிடலாம். ஆனால், தோழியாக இருக்கும் பெண்ணிடம் பொய்யும் சொல்லமுடியாமல், உண்மையும் சொல்ல முடியாமல் தவித்தேன். வேறு வழியில்லாமல், அவளுக்காக ட்ரேட் சென்டரில் காத்திருந்தேன். அவள் "உன் பிரண்டுக்காக..." என்று சொன்னது, என் காதைல் " உன் காதலுக்காக" என்றே ஒலித்தது.

அவள் வரும் போதும் மதியம் 1:30 மணியிருக்கும்.

"எப்படி இருந்தது ஜாப் பேர்" என்று கேட்டேன்.

" இப்படி எனக்காக வெயிட் பண்ண ஆளு இருந்தா.... இந்த மாதிரி எத்தன ஜாப் பேர் வேணுமானாலும் வருவேன் " என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

கொஞ்ச நேரத்தில், "போலாரிஸ்ல வேலை கிடைக்கும்னு தோணுது " என்றாள். அவள் பேசும் போது என் தோள் மீது கை வைத்ததால், அதன் பின் அவள் சொன்னது என் காதில் எதுவும் விழவில்லை. என் உடல் கொஞ்சம் நெளிய தொடங்கியது. அவள் வெட்க படுவதை வண்டு கண்ணாடியில் பார்த்தேன்.

அவளை வீட்டில் விட்ட பிறகு, " சரிடா...! நாளைக்கு பார்ப்போம் " என்றாள்.

" என்னது நாளைக்கா ! ஒரு வாரம் ஆபிஸ் வோர்க் ரொம்ப டைட்டா இருக்கும். நெக்ஸ்ட் சண்டே மீட் பண்ணுவோம்" என்று சொல்லி வண்டி எடுத்தேன்.

"என்னடா உடனே போற...பேசுறதுக்கு ஒண்ணுமில்லையா" மெல்லிய குரலில் கேட்டாள்.

" இப்பவே டைம்மாச்சு. வீட்டுல போய் தூங்கனும் " என்றேன்.

" என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற" என்றாள்.

" என்ன சொன்ன... ?"

" ம்ம்....ஒண்ணுமில்ல.... பை சொன்னேன்" என்று சொல்லி செல்லமாக கோபத்துடன் சென்றாள். 'ஒரு வேலை அதுவா இருக்குமோ ' என்று மறை முகமாகவோ கேட்டுபார்த்தால், " பிரண்ட்ஸ் கிட்ட இப்படி பேச கூடாதா...." என்று ஒரு குண்டை போடுவாள். எங்கள் மூன்று வருட நட்பில் என்னை இப்படி குழப்புவாள்.

இதே போல், டி.சி.எஸ்யில் இண்டர்வியூ என்றாள். என் வண்டி சரியில்லாததால், அவளை பஸ்ஸில் அழைத்து சென்றேன். வார வாரம் அவளை இண்டர்வியூ அழைத்து செல்லும் பாடிகார்ட் வேலை செய்கிறோமோ என்று கூட தோன்றியது.

இண்டர்வியூ முடித்து வந்ததும் இந்த வேலையும் கிடைக்கும் என்று கூறினாள்.

" பொளாரிஸ், டி.சி.எஸ் இரண்டு கிடைச்சா.. எதுலடா சேறது " என்றாள்.

" நான் டி.சி.எஸ்" என்றேன்.

" எனக்கு என்னவோ பொளாரிஸ் சேறலாம் தோனுது" " என்றாள்

( காதல் அடுத்த பதிவில் முடியும் )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails