வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, June 11, 2010

கவிதை : வயதில்லா வளர் தமிழ்

மனித உடலின் வயதை சொன்னவர்கள்
உன் வயதை துள்ளியமாக
சொன்னவர் உண்டா ?

வங்க கடலின் ஆழம் கண்டவர்கள்
உன்னை பற்றின பாடலின்
கணக்கு எடுக்க முடியுமா ?

வரப் போகும் இயற்கை சீற்றத்தை
முன் கூட்டியே அறிவிப்பவர்கள்
வாழ்ந்துக் கொண்டு இருக்கும்
உன் சாதனையை எல்லாம் அறிவார்களா ?

வடக்கில் இருந்து எத்தனை மொழி
உன்னை ஆக்கிரமிப்பு செய்ய வந்தாலும்
முச்சங்க வரலாற்றில் முதிர்ந்த மொழியே
உன்னை வெல்ல யாரால் முடியும் !

ஆயுதம் தாங்கி பல படைகள் வந்தாலும்
அறம் பாடும் பாடலின் முன் எப்படி நிற்கும் ?
சிந்தனை வளமும் சீரிய மாண்பும்
செம்மொழியாம் தமிழ் மொழி நீகருக்கு எம்மொழி ?

வந்தவர்கள் ஆட்சி செய்தாலும்
வாழ வைக்க உதவுவது எங்கள் மொழியே !
வருடங்கள் பல சென்றாலும்
வயதில்லா மொழி தமிழ் மொழியே !

(நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டிக்காக தமிழை வாழ்த்தி எழுதிய கவிதை )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails