வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, June 17, 2010

உறங்காத உணர்வுகள் - எதிர்வினை

என் உறங்காத உணர்வுகள் நூலுக்கு வந்த முதல் வாசகர் கடிதம்.

டியர் கண்ணன்,

உங்கள் உறங்காத உணர்வுகள் கவிதைகள் நன்றாக இருந்தது. உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது " நான் பார்க்காத சகோதரிக்கு...". உங்கள் சகோதரியாக நான் இருக்கிறேன். என் பெயர் கே.காயத்ரி. பத்தாம் வகுப்பு படிக்கிறேன். உங்கள் நூறு அதிசயங்களும் சூப்பர். பதில் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்.

அன்புள்ள,
காயத்ரி
20.9.03

***
உறங்காத உணர்வுகள் கவிதை நூலின் அணிந்துரை.

எல்.பி.வெங்கட்ராமன்
துணைவேந்தர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்


இன்நூல் மனித உணர்வுகள், மனித நேயம் இவைகளை நன்றாக பிரதிபல்லிக்கும் விதாமாக உள்ளது. தேசப்பற்று, காதல், விரக்தி, கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி என்று ஒவ்வொரு உணர்வுகளை நன்றாக சித்தரித்துள்ளார்.

எடுத்துக்காட்டாக,

"மகாத்மா தன் சோகத்தை முறையிட
அயோத்தி ராமனிடம் சென்றார்
அவரிடம் கூற மறந்து விட்டேன்
இன்று டிசம்பர் ஆறு என்று !
அயோத்தி ராமனோ !
தலைமறைவாகி விட்டான் !


இந்த வரிகளில் குஜராத் மதக்கலவரத்தையும், டிசம்பர் ஆறு நடந்த மதக்கலவரத்தையும் சம்பந்தப்படுத்தி எழுதியுள்ளார். இந்த எழுத்தாளர் ஒரு இளைஞனின் ஆதங்கத்தை நன்றாக சித்தரிக்கும் ஆற்றல் கொண்டவர்.

"அயோத்தி இடத்தை நிரப்பும் முயற்சியில்
என் கவிதையின் பக்கம் மட்டுமே நிரம்பியது"


என்ற வரிகளில் நாட்டை பற்றி அவருக்கு இருக்கும் ஏக்கத்தை காட்டுகிறது.

காதலைப் பற்றி சொல்லு கண்ணன் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அழகு. காதலைச் சொல்லத் துடிக்கும் இளைஞனின் நிலையை

"நான்கு மொழி கற்று அறிந்தவன் நான்
எந்த மொழிகளும் உதவவில்லை
உன்னிடத்தில் என் காதலை சொல்ல !"

விளக்குகிறார்.

"விரக்தியில் பேசுகிறான்" என்ற தலைப்பில் விரக்தியில் ஒருவன் பேசும் வார்த்தைகளையும், "எய்ட்ஸ் குழந்தை" தலைப்பில் எய்ட்ஸ் நோயில் அவதைப்படும் குழந்தைகளையும், முதியோர் இல்லம்" என்ற தலைப்பில் முதியோர்கள் படும் துயரத்தையும், "பேசும் சிலை" என்ற தலைப்பில் கண்ணகி சிலை பிரச்சனைப் பற்றி போன்ற சமூதாய இன்னல்களை பற்றி எழுதியிருக்கும் வரிகள் சமூதாயத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் தைரியம் கொண்டவர் என்று தெரிகிறது.

"பலமுறை நினைத்துப் பார்த்தும்
வாழ்ந்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தது
மீண்டும் அந்த நாட்கள் சென்று
வாழ முடியவில்லை"


என்ற வரிகளில் பள்ளிப் பருவத்தை பிரித்த இவரின் ஏக்கம் தெரிகின்றன.

இவர் மேலும் பல கவிதை தொகுப்புகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். எங்கள் பல்கலைக்கழக மாணவனின் கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதுவதில் மகிழ்ச்சி அடைக்கிறேன். வளரட்டும் இவரது தமிழ் பணி.

எல்.பி.வெங்கட்ராமன்
12.3.2003

****

இந்த புத்தகம் போடும் போது நாகரத்னா பதிப்பகம் தொடங்க போகிறோம் என்ற கனவு துளிக் கூட இல்லை. ஆனால், நாகரத்னா பதிப்பகம் தொடங்குவதற்கு இந்த நூல் தான் முதல் படியாக இருந்தது.

இந்த நூலின் பிரதிகள் என்னிடம் ஒன்று தான் இருக்கிறது. நான்கு பிரதிகள் நியூ புக் லாண்ட், தி.நகர் கடையில் இருக்கிறது. அடுத்த பிரதி போடலாமா என்ற யோசனையில் இருக்கிறேன்.

ஒரு சில கவிதைகளை பதிவில் ஏற்றியுள்ளேன். படித்துவிட்டு தங்கள் கருத்துகளை கூறவும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails