வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 22, 2010

We Can Books பட்டியல் - 1

அன்பான பதிவு நண்பர்களுக்கு,

நாகரத்னா பதிப்பகத்தின் புத்தங்களோடு சில புத்தகங்களை விற்பனை உரிமை வாங்கி 'We Can Books' என்ற பெயரில் விற்பனை செய்துவருகிறது. வாசகர் பார்வைக்கு வராத நல்ல புத்தகங்கள், விருது பெற்ற புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டமாக 13 புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதன் பட்டியல் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

**

1.வளமுடன் வாழ்வோம் வா
- துருவன்



விலை.40 . பக்கங்கள் : 112

யாரும் வாழ்ந்தது போதும் என்று நினைப்பதில்லை. ஏதாவது ஒரு தேடலை நோக்கி தான் வாழ்க்கை செல்கிறது. தன் தேடலை தெரிந்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் இந்த புத்தகம் ஒரு 'கைய்ட்'.

**
2. வரம் தரும் வாழ்வு
- துருவன்


விலை.75 . பக்கங்கள் : 160

வாழ்க்கை இவ்வளவு சுவையானதா ? நம் ரசிக்க வேண்டிய சந்தோஷங்கள் இன்னும் உள்ளதா ? சோகம், விரக்தி, கவலை எல்லாம் இந்த புத்தகம் உங்களை அறக்கடித்து விடும். வாழ்க்கையை வரமாக பெற்று, மற்றவர்களுக்கு பாடமாக மாற்றி வாழ்ந்த பல வாழ்க்கையை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட நூல்.

நம் உரத்தசிந்தனை - என்.ஆர்.கே விருது பெற்ற புத்தகம்.

**

3. ஓஷோ - தமிழ் ஹைக்கூ புரிதல்
- செல்லம்மாள் கண்ணன்



விலை.30 . பக்கங்கள் : 80

ஹைக்கூ கவிதைகளில் இப்படி ஒரு ஆராய்ச்சி செய்ய முடியுமா என்ற பிரம்மிப்பும், வியப்பையும் வரவழைக்கும் விதமாக செல்லம்மாள் கண்ணன் எழுத்து நடையுள்ளது. ஓஷோவின் தத்துவத்தை, அதற்கு ஒப்பான ஹைக்கூ கவிதை கூறி விளக்கம் தந்து புரிய வைக்கும் நூல்.

**
4. சலாம் இஸ்லாம்
- களந்தை பீர்முகமுது



விலை.50 . பக்கங்கள் : 160

17 இஸ்லாமிய எழுத்தாளர் எழுதிய சிறுகதை தொகுப்பு. சல்மா, தோப்பில் முஹம்மது மீரான், நாகூர் ரூமி போன்றவர்களில் சிறுகதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

**

5. சூரியனுக்கு சுப்ரபாதம்
- ஜெயந்தி சங்கர்



விலை.35 . பக்கங்கள் : 88

ஆர்னால்ட் பென்னட் எழுதிய 'How to live on 24 hours a day' தமிழ் வடிவம். பல பல நூல்கள் எழுதிய ஜெயந்தி சங்கர் இந்த நூலை தமிழில் எழுதியுள்ளார்.

**

6. தகப்பன்சாமி
- பத்ரிநாத்



விலை.25 . பக்கங்கள் : 96

11 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் இலக்கிய சிந்தனையில் பரிசு பெற்ற ஒரு கதையும், ஜோதி வினாயகம் நினைவுச் சிறுகதை குழுவில் சிறந்தவையாக ஐந்து முறை பரிசு பெற்ற சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.இந்த நூலை எழுதிய பத்ரிநாத் மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையின் அண்ணா பல்கலை தந்தி அலுவலகத்தில் பணியாற்றியவர்.

**

7. தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை
- ம.ந.ராமசாமி



விலை.25 . பக்கங்கள் : 80

தீவிர இலக்கிய வாசிப்பும், பற்றும் கொண்டவர்களில் ம.ந.ராமசாமி மிகவும் முக்கியமானவர். இவர் எழுதிய 'நாலாவான்' சரித்திர நாவல் புதியபார்வை பரிசு பெற்றுள்ளது. 'இந்திய ஆங்கிலச் சிறுகதைகள்' சாகித்ய அகாதெமிக்காக தமிழில் மொழி பெயர்த்துள்ளது.

'தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை' நாவல் திண்ணை இணையதள வார இதழில் தொடராக வெளிவந்தது.


*******

மீதம் உள்ள புத்தங்கள் அடுத்த பதிவில் இடம் பெறும். புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் கீழ் காணும் முறையில் வாங்கலாம்.

1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பினால், அடுத்த இரண்டு நாளில் புத்தகங்கள் வந்து சேரும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

ரூ.150 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம்.

இன்னொரு மகிழ்ச்சியான அறிவிப்பு.

நாகரத்னா புத்தகங்கள் ரூ.100 மேல் வாங்கினால் தபால் செலவு இல்லை.(உதாரணத்திற்கு பரிசல், கேபிள் புத்தகங்கள் வாங்க விரும்புபவர்கள் ரூ.100 வங்கியில் செலுத்தினால், புத்தகங்கள் வீடு தேடி வரும்).

நாகரத்னா பதிப்பகத்திற்கு அளித்த ஆதரவை 'We Can Books'க்கு அளிப்பிர்கள் என்று நம்புகிறேன்.

1 comment:

butterfly Surya said...

வாழ்த்துகள் கண்ணன்.

LinkWithin

Related Posts with Thumbnails