வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, July 26, 2010

படித்ததும் பார்த்ததும் - 26.7.10

ஓரின சேர்கை பற்றி எழுதி வரும் தொடர்களுக்கு பெரிதாக பின்னூட்டம் இல்லை என்றாலும், அதை பற்றி வாசகர்கள் பலர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் மின்னஞ்சலில் ஒன்று தெளிவாக புரிந்தது. ஓரின சேர்கையை ஆதரிப்பதாகட்டும், எதிர்ப்பதாகட்டும் வெளிப்படையாக சொல்ல தயங்குகிறார்கள். உள்ளூர சிறு அச்சம் இருப்பதை சில வாசகர்களின் மின்னஞ்சலில் புரிந்துக் கொள்ள முடிந்தது.

குறிப்பாக, ஒரு மின்ஞ்சல் என்னை அதிர வைத்துவிட்டது. 'ஓரின சேர்கை பற்றி எழுதுறீங்களே ! ஒரு வேல... அவங்க தான் நீங்களுமா' என்று கேட்டிருந்தார்.

தொடர் தொடங்கும் முன்பே "ஓரின சேர்கை பற்றி ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. அவர்களை பற்றி புரிந்து கொள்ளவும், அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள தான் எழுதுகிறேன்" என்று சொல்லியிருந்தேன்.

தயவு செய்து இது போன்ற மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் அவன் இல்லை !!!

--

Rescaling Transnational "Queerdom": Lesbian and "Lesbian" Identitary–Positionalities in Delhi in the 1980s
- Paola Bacchetta

ஒரின சேர்க்கை பற்றி எழுதிய தொடருக்கு இந்த கட்டுரை மிகவும் உதவியாக இருந்தது. எங்கும் ஆணாதிக்கம் நிரம்பியிருக்கும் உலகில், "தான் ஒர் லெஸ்பியன்" என்று ஒரு பெண் சொல்லுவதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும், மன உறுதி இருக்க வேண்டும் என்ற கூறூகிறார். பல இடங்களில் நடந்த லெஸ்பியன் தற்கொலைகள், வாழ்ந்துக் கொண்டு இருக்கும் லெஸ்பியன் மேற்கொள் எழுதியிருக்கிறார்.

அந்த கட்டுரையை வாசிக்க... இங்கே

--

நேற்று (25.7.10), ஒரு டி.வி நிகழ்ச்சியில் பேச என்னை அழைத்திருந்தார்கள். காலை 9 மணிக்கு வந்துவிட்டால், 15 நிமிடங்களில் பேசிவிட்டு சென்றுவிடலாம் என்றனர். வழக்கத்துக்கு மாறாக ஞாயிறுகிழமை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு (ஞாயிறு என்றால் மதியம் தான் குளியல்) 8:40 அவர்கள் சொன்ன இடத்தில் இருந்தேன்.

பேப்பரில் எழுதி இதை தான் பேச வேண்டும் என்று சொல்லாத குறை. தலைப்பை கொடுத்து விட்டு எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று பதினைந்து நிமிடத்துக்கு விளக்கம் கொடுத்தார்கள். சென்று விடலாம என்று கூட தோன்றியது. என்னை அழைத்த நண்பர் மிகவும் நெருங்கியவர் என்பதால் பொருத்துக் கொண்டேன்.

சில தோழில்நுட்ப காரணங்களால் 10:30 மணிக்கு தான் ஷூட்டீங் தொடங்கியது. அமைதியாக இருந்தேன். கொஞ்ச நேரத்தில் என்னை போலவே பேச பலர் வருவதை பார்த்தேன். என்னை அழைத்த நண்பர் பிஸியாக இருந்ததால் எதுவும் அவரிடம் பேச முடியவில்லை. 11:30 மணியானது. எனக்கு பின் வந்தவர்கள் ஒரு சிலர் பேசிவிட்டு செல்வதை கவனித்தேன். நான் வந்திருக்கும் நிகழ்ச்சிக்கு தான் அவர்களும் வந்திருப்பதை தெரிந்ததும் கோபம் தலைக்கேறியது. காலதாமததிற்கு காரணத்தை கேட்க, 'டி.வி ஷூட்டிங்னா அப்படி தான். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' என்றார்.

இது பற்றி முன்பே தெரிந்தவர், பதினைந்து நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று என்னிடம் சொல்லியிருக்க கூடாது. காலையில் சாப்பிடமால் எந்த இடத்துக்கு சென்றது கிடையாது. அரை மணி நேரத்தில் வந்து விடலாம் என்று நினைத்ததற்கு நல்ல பாடம் கிடைத்தது.

ஐந்து நிமிடம் டி.வியில் வருவதற்கு அரை நாள் இழந்துவிட்டேன். இன்னும் காத்திருந்து விடுமுறை நாளை இழக்க விரும்பவில்லை. அந்த பொது இடத்தில் என் நண்பர் மீது கோபத்தை காட்ட விருப்பமும் இல்லை. எனக்கு அவசரமாக வேலை இருப்பதாக சொல்லி வந்துவிட்டேன்.

சாரு அந்த டி.விய திட்டுறது தவறு இல்லை என்பதை அனுபவம்யுர்வமாக உணர்ந்தேன்.

***

"கவிதை உலகம்" - கவிதை தொகுப்புக்கு தேர்வான கவிதைகள் கீழே



1.கனவு பலிக்குமா..? - அமுதா ப. பாலகிருஷ்ணன்
2.தமிழன் - கார்முகிலோன்
3.இந்தியா ஒளிர்கிறது - எஸ்.செல்வராஜ்
4.வறுமையும் கல்வியும் - இளையராஜா
5. தாய்மை காப்போம் ! - அருட்கவிஞர் காசி
6. நன்றி பயவா வினை - த.கருணைச்சாமி பி.இ.
7. வானம் வசப்படும் - மு.வேடியப்பன்
8. தமிழ் மொழி செம்மொழி - சி. உண்ணாமலை
9. ஆலமரம் - கே.கிருஷ்ணன்
10. வாய் - க.சிவசண்முகம் 11. அர்த்தமுள்ள இந்துமதம் ! - நங்கவள்ளி
12. பூனைக்கு மணிக்கட்டுவது யார்?- கிருஷ்ணசாமி
13. போகர் சித்தர் (பழனி) - பா.பிரதாப்
14. உண்மை இல்லை - சாப்டூர் சதுரகிரியான்
15. பணம் - எஸ்.ராஜேந்திரன்
16. இறந்தவனின் புகழ் - இ.நி. நந்தகுமாரன்
17. பெருமை - ந.முராரி
18. பாட்டும் ! பாவையும் ! - பெ.து. இராதா
19. மறவேனே ! - க.காத்தப்பன்
20. காகித ஆசை - பி. காமகோடி
21. குடியரசு - பு.மகேந்திரன்
22. கவிவிழி - இரா.சக்திவேல்
23. காதல் விடை பெற்றால் ! - எல். காந்தி
24. கவிதையே..! நீ தானோ! – ஷாலினி
25. மணம் வீசும் மலர்கள் - து.செ.கவியரசு
26. பேரறிஞர் வள்ளுவர் -செ.வெங்கடேசன்
27. அன்பே எங்கே இருக்கிறாய் ? -டி.கோபிசந்துரு
28. மனித நேயம் - பி. ராஜசோழன்
29. என தருமை - புதுயுகன்
30. அவலத்தின் பிஞ்சுகள் - அன்னை சிவா
31. அன்பு தேவதையே ! - ஜன்னி அந்தோணிராஜ்
32. இதோ கடவுள் - ஓட்டேரி செல்வக்குமார்
33. புதியதோர் உலகம் - ஓட்டேரி செல்வக்குமார்
34. உலகமகா உண்மை - ஓட்டேரி செல்வக்குமார்
35. நம் காதல் - கோ.கணேஷ்
36.தமிழ்! தமிழ் !! தமிழே! - 'அய்யம்பேட்டை' ராஜா
37.ஹைக்கூ கவிதைகள் - P.Mathar
38. விழியுற்ற மனிதன் - ஆ.முத்துராமலிங்கம்
39. காதல் - யாழ் அகத்தியன்
40. ஹைக்கூ கவிதைகள் - பிரதீப் பாண்டியன்
41.முரண்கள் - என்.விநாயக முருகன்
42. கிராமம் தேடி - Rajakamal
43. பூனைகளும், சில நியதிகளும் - சேரல்
44. மண்ணியல் - சேரல்
45. கனவு சாம்பல் - நேசமித்ரன்
46. ஞாபகங்கள் இல்லாது - செல்வராஜ் ஜெகதீசன்
47.நட்புக்காலம் - மகிழினி சரவணன்
48. கடவுள் பேசுகிறேன்.. - K.R.P.Senthil kumar
49. நினைவின் நாணம் - Safeer Hafiz
50.அவள் - கலாநேசன்
51.கூண்டுக்கிளி - எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
52.கண் விருந்து கலை - ப.தங்கவேலன்
53.சாத்தானின் தாசியன் - பொன்.வாசுதேவன்
54.அம்மா - மணிஜீ
55.ஒரு அழகான குடிசை - Subburajan Mylandan
56. குட்டி குட்டி கவிதைகள் - நவயுக தமிழச்சி.
57.வேண்டும் வரம் – அகல்விளக்கு
58. உயிர்மிருகம் - நிலாரசிகன்
59. துய‌ர‌த்தின் ம‌ர‌ம் - லாவண்யா சுந்தரராஜன்

கவிதை தொகுப்பு விரைவில் வெளிவர உள்ளது. தேதி, மற்ற விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails