வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, July 21, 2010

இன்டர்நெட் திருடர்கள் ஜாக்கிரதை !!

ரமேஷ்க்கு XXX வங்கியில் இருந்து ஒரு ஈ - மெயில்...

உங்கள் வங்கியில் வாடிக்கையாளர் தகவல் தொழில்நுட்ப காரணமாக அழிந்துவிட்டது / பழுதடைந்துவிட்டது . கீழ் காணும் இணையதளத்தில் உங்கள் பயப்பெயர் (Username) மற்றும் கடவுச்சோல் (Password) கொடுக்கவும். நீங்கள் தகவல் கொடுத்தவுடன், உங்களை பற்றிய எல்லா தகவல்களும் எங்கள் தளத்தில் புதுப்பித்து பழைய நிலையில் திரும்பிவிடும்.

உதாரணத்திற்கு. http://www.xxxbank.co.in/yourdetails.html



இந்த தளத்தில் ரமேஷ் சென்றான். பார்ப்பதற்கு வங்கி தளம் போல் இருந்தது. ரமேஷ் தன் வங்கி பயண பெயர், கடவுசொல் போன்ற எல்லா தகவலையும் சரியாக கொடுத்தான். அடுத்த நாள் தன் வங்கி கணக்கை பார்க்கும் போது இருப்பு தொகை பூஜ்ஜியமாக இருந்தது.

ஆரம்ப காலம், இணைய வங்கி தொடங்கும் போது பலர் ரமேஷ் போல் தங்கள் தகவலை கொடுத்து வங்கி கணக்கு, கிரடிட் கார்ட் கணக்கு பணத்தை கதைகள் கேள்வி பட்டிருப்போம்.

நாம் கொடுக்கும் தகவலை வைத்து நம் வங்கியில் இருக்கும் சேமிப்பு பணத்தை யார் வங்கி கணக்கில் வேண்டுமானாலும் மாற்ற முடியும். தொழில் நுட்பம் வளர வளர நுட்பமான திருடர்கள் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை தடுப்பது மிகவும் கடினம். அதனால், வங்கியில் இருந்து போன்ற மின்னஞ்சல் வந்தால் அதை நிராகரிப்பதே நல்லது.

இணையத்தில், நமது பயன பெயர் மற்று கடவுச்சொல் ரகசியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நம் வீட்டு சாவி சேர கூடாத நபரிடம் சேர்ந்தால் எப்படி நம் வீட்டு பொருளுக்கு உத்தரவாதம் இல்லையோ.... அது போல், நமது பயன பெயர், கடவுச்சொல், கிரடிட் கார்ட் எண், கிரடிட் கார்ட் CVC எண் மற்றவர்களுக்கு தெரிந்தால் தவறாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மேலே குறிப்பிட்டது பல விதமான திருட்டுகளில் ஒரு வகை. அவ்வளவு தான்.

ஒரு பிரபல எழுத்தாளரின் மின்னஞ்சலை 'hack' செய்து, அவர் மின்னஞ்சலில் இருந்து அவருடன் தொடர்புள்ள எல்லா மின்னஞலுக்கு ஒரு செய்தி செல்கிறது.

"நான் இங்கிலாந்தில் இருக்கிறேன். வந்த இடத்தில் எனக்கு அவர பணதேவை. என் கையில் 50 பவுன்ட் மட்டுமே உள்ளது. இந்தியாவுக்கு வர எனது நண்பரின் இந்த வங்கியில் பணம் செலுத்துங்கள்" என்று வருகிறது.

இதை படித்த அவருடைய வாசகர், என்ன எதும் விசாரிக்காமல் பணத்தை அனுப்பிவிட்டார்.

பிறகு தான் தெரிந்த்து, மின்னஞ்சல் அனுப்பியவர் எழுத்தாளர் இல்லை. அவருடைய மின்னஞ்சல் களவாடப்பட்டது என்று...!

இது போல் தெரிந்த நபர்களிடம் இருந்து பண உதவி வேண்டும் என்று கேட்டு, குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்லி மின்னஞ்சல் வந்தால், அந்த நபரிடம் போன் போட்டு உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

இன்று தீவிரவாதிகளுக்கு பணம் அந்நிய நாட்டில் இருந்து மட்டும் வருவதில்லை, இது போல ஹாக்கிங் முறையிலும் தங்கள் இயக்கத்திற்கு பணம் திரட்டுகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இப்படி பல நுதன திருடர்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்கள். இணையத்தில் கிரடிட் கார்ட் / டெபிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

***

என் பழைய கட்டுரை. ஒரு சிற்றிதழ்காக எழுதியது. புதிதாக எதுவும் எழுதாததால் இதை பதிவில் ஏற்றிவிட்டேன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails