வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 27, 2010

லெஸ்பியனும் சில தற்கொலைகளும்

" ஜோஸ்னா ! இனி நாம் இனி பார்க்க முடியாது. நம் பழக்கம் என் அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது."

" நம் இருவரின் காதலை பற்றி சொன்னாய்யா ?"

" சொன்னேன் ஜோஸ்னா ! அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. என் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்"

" உன்னை பற்றி, என்னை பற்றி, நம் உறவை பற்றி முழுவதும் சொன்னாய்யா ஜெயா ?" என்று கலங்கிய குரலில் கேட்டாள் ஜோஸ்னா.

" எல்லாவற்றையும் சொன்னேன். அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் என்ன ? இந்த உலகில் யார் தான் நம் உறவை ஏற்றுக் கொள்ளமுடியும்." என்று கண்ணீர் விட்டு அழுதாள் ஜெய ஸ்ரீ.

"நாம் பிரிவது தான் முடிவா ?"

" நாம் பிரிய வேண்டும் என்பது என் பெற்றோர்களின் முடிவு. அப்படியே சேர்ந்து வாழ நினைத்தாலும், இந்த சமூதாயம் என்ன சொல்லும் ? புத்திக்கெட்ட பெண்கள் என்று தானே. அந்த விமர்சனம் நமக்கு தேவையா"

" தேவையில்லை தான். பிரியாமல் ஒன்றாக இருக்க ஒரு வழி சொல்லவா " என்றாள் ஜெய ஸ்ரீ.

பாலைவனத்தில் பழரசம் கிடைத்தது போல் ஜோஸ்னா முகம் மலர்ந்தது. ஜெய ஸ்ரீ சேர்ந்து சாக எடுத்திருக்கும் முடிவை கூறினாள். ஜெய ஸ்ரீ பிரிந்து வாழ்வதை விட அவளுடன் இறக்க ஜோஸ்னாவும் சம்மதிக்கிறாள்.

இருவரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அடுத்த நாள் செய்தி தாளில் இரண்டு பெண்கள் இறந்ததை விட அவர்கள் இறந்ததற்கு காரணத்தை தான் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசினார்கள்.

இந்த சம்பவம் 1979 ஆண்டு டெல்லியில் நடந்தது. ( ABVA 1991 : 70)



ஆக்டோபர் 29, 1980 அன்று மல்லிகா, லலிதாம்பிகா (20 வயது) இருவரும் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் விருப்பதத்துக்கு மாறாக காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். (ABVA 1991 : 70)

ஆக்டோபர், 1988 கீதா டார்ஜி என்ற பெண், தன் நர்ஸ் தோழியான கிஷோரி ஷாவிடம் இருந்தது தன் கணவன் பிரிக்கப்பட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாள். ( இந்தியா டூடே, 1988)

ஆகஸ்ட், 1990, வந்தனா என்ற பெண் தன் தோழி சிம்மி கப்பூருக்கு (21 வயது) திருமணம் நிச்சயமாகி இருந்ததால் அவளை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டாள். (தாகூர் 1990 : 33)

இது போல் தங்கள் லெஸ்பியன் உறவுகளை வெளியே சொல்ல முடியாமல், கணவனுடன் வாழவும் முடியுமால் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்கள், சில சமயம் இது போல் விபரித முடிவை எடுக்கிறார்கள்.. எல்லா இடங்களில் இருக்கும் ஆணாதிக்கத்தனம் இருப்பது போல், ஓரின சேர்க்கையிலும் இருப்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

தென் குஜராத் மாநிலத்தின் இளவரசனாக கருதப்படும் மன்வேந்திர சிங் கோஹில் ஆரம்பத்தில் அவரும் இப்படி தான் இருந்ததாக சொல்லியிருக்கிறார். இப்போது, தன்னை போல் இருக்கும் கே நண்பர்களுக்கு லக்ஷியா என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார். ராஜ்கோட், சூரத், வடோடாரா போன்ற இடங்களில் இந்த அமைப்பு இயங்கிவருகிறது.

நடிகர் வேள் எம்.ஆர்.ராதா தன்னுடைய சிறை அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகத்தில், நாடகம் நடத்திய காலங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், தனது நாடகத்தில் நடித்த அழகான யுவன்களை சீமான் மார்கள் அழைத்து சென்றதை சொல்லியிருக்கிறார். ( தகவல் : ஞாநியின் 'அறிந்தும் அறியாமலும்')

‘Page 3' என்ற படத்தில் மேல்தட்டு வர்கத்தினர் அனாதை ஆசிரமத்தில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து உறவு வைத்துக் கொள்வது போல் காட்டியிருப்பார்கள். பணக்கார வர்கத்தினர் தங்கள் பணபலத்தால் சாதித்ததில் ஓரின சேர்க்கையும் ஒன்று என்று படத்தில் காட்டியிருப்பார்கள். போலி சாமியார்கள் மாட்டிய பிறகு, தங்களை தேடி வரும் யுவன்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட செய்திகளை சமிபத்தில் பார்த்து வருகிறோம்.

பணம், பதவி, பொருள் என்று ஏதாவது ஒன்று பயண்படுத்தி ஓரின சேர்கை ஆண்கள் தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். இல்லை என்றால், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் குடும்பத்தோடு ஒட்டவும் முடியாமல் விலகிவிடுகிறார்கள். ஆனால், பெண்களால் அப்படி இருக்க முடியவில்லை. குறிப்பிட்டு காலத்திற்கு மேல் தங்கள் திருமணத்தை தள்ளி போட முடியாது. திருமணமான பின்னும் கணவனிடம் உண்மையை சொல்ல முடியாது. பிரிந்து வந்தாலும் தவறான பார்வையில் இருந்து தப்பவும் முடியாது. இப்படி பல சிக்கல்களில் ஆண்களை பெண்கள் ஓரின சேர்க்கையில் அவதை படுகிறார்கள்.

இரண்டு ஆண்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக வாழுவதை ஏற்றுக் கொள்ளும் உலகம் இரண்டு பெண்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ முடிவதில்லை. தங்களையும் ஏமாற்றிக் கொள்ள முடியாமல், சமூகத்தையும் ஏமாற்ற முடியாமல் போகும் போது தான் இது போன்ற தற்கொலை நிகழ்வுகள் நடக்கின்றன.

‘திருமணம் வேண்டாம்’ என்று சொல்லும் ஆண்ணையும், பெண்ணையும் விமர்சிப்பதில் எந்த வித்தியாசம் தெரிகிறதோ அதே வேறுபாடு ஓரின சேர்க்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள். பல விமர்சனங்கள் வரும் என்று தெரிந்து துணிந்து சில பெண்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றி சொல்லும் போது சேர்ந்து வாழ்ந்தவர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும். இல்லையா !

கிராமத்தில் ஆசிரியராக பணி புரிந்த அருணா சொம்பை ஜெய்சிங்பாய் கோகில் ( வயது 31) தன் தோழியாக சுதா அமர்சின் மோகன்சின் ரடன்வாடியா (வயது 29) ஒரு வருடம் மேல் ஒன்றாக வாழ்ந்த பிறகு 'மைதிதி கரர்' (நட்பு ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக அறிவித்துக் கொண்டனர். (ABVA 1991 : 67 )

ஊர்மிலா என்ற பெண் தான் திருமணம் செய்யவிருக்கும் ஆண்ணை நிராகரித்து விட்டு 28 வயது நிரம்பிய போலீஸ் கான்ஸ்டேபிள் லீலா நம்டேவும் ஒன்றாக வாழ தொடங்கினார். ஊர் மக்கள் இவர்களை கண்டித்தும் கேட்காமல் இருந்ததால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். (ABVA 1991 : 67 - 68, India abroad 1993)

சமூகத்தின் முன் இந்த பெண்கள் நகைச்சுவை பொருளாக தான் தெரிவார்கள். ஊடகங்களும் இவர்களை பற்றி பெரிதாக காட்டுவார்கள். ஆனால், தற்கொலை செய்து கொள்வதாகட்டும், துணிந்து தன்னை பற்றி வெளிப்படையாக சொல்வதாகட்டும் ஓரின சேர்க்கையில் பெண்களுக்கு இருக்கும் துணிச்சல் ஆண்களுக்கு இல்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication
http://www.dnaindia.com/india/report_the-prince-comes-out-of-closet_1018219
http://www3.interscience.wiley.com/journal/118947120/abstract?CRETRY=1&SRETRY=0

3 comments:

http://rkguru.blogspot.com/ said...

ஓரினசேர்கை இயற்கை முரண்பட்ட வாழ்வு...

karthikeyan pandian said...

மற்றும் ஒரு செய்தி: தென் ஆப்ரிக்காவில் கரெக்டிவே ரேப் என்ற பெயரில் லெஸ்பியன் பெண்கள் மானபங்கம் செய்ய படுகின்றனர்

anbarasan said...

click and read

1 கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!! -.

2.
கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி –.


3.
பைபிளில் உள்ளவை.: சகோதரியை கற்பழித்து ஒதுக்கியவன்
."

4.
தகப்பனை கற்பழித்த புத்திரிகள்.



5.
கற்பழித்தான் மாற்றாந்தாய்களை ஒட்டு மொத்தமாக.


LESBIANS AND HOMOSEXUAL
6.
கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ? கர்த்தரை வ‌ழிப‌டாத‌ ஆண்க‌ள் பெண்க‌ள் மீது தண்டணையாக‌ கட்டுக்கடங்காத காமத்தீயை பற்றி எரிய செய்து இழிவான பாலுணர்வு அதிக‌ரிக்க‌ செய்து அவர்களை தகாத ஓரினசேர்க்கை உறவு கொள்ள விட்டு விட்டார் கர்த்தர்.. – பைபிள்.


7.
தந்தையுடைய வைப்பாட்டிகள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக.ஊரார் முன்னிலையில் கற்பழித்தவன்.


8. .
32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?


9.
ஓரு வேசிக்கு எச்சரிக்கை.

===============

LinkWithin

Related Posts with Thumbnails