வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, August 28, 2010

நாகரத்னா பதிப்பகம் வேலூரில் என்ன செய்கிறது ??

முதல் முறையாக வேலூரில் 'புத்தகக் கண்காட்சி - நூலாறு 2010' என்ற பெயரில் பிரமாண்டமான புத்தகக் கண்காட்சி நடைப்பெறவுள்ளது. பல புத்தகக் கண்காட்சி நிபந்தனைகளில் இருந்து விடுபட்டு இப்புத்தகக் கண்காட்சி மாறுபட்டு இருக்கிறது.



புத்தகம் பார்க்க வரும் வாசகர்களுக்கு அனுமதி கட்டனம் இல்லை. ஒவ்வொரு முறையும் பணத்தை செலவு நுழைய வேண்டும் என்ற தொல்லை வாசகனுக்கு இருக்காது. ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உள்ளே வரலாம்.

வார நாட்களில் மதியம் 2:30 முதல் இரவு 8:30 வரை நடைபெறும் கண் காட்சியில் இருந்து விடுபட்டு வார நாட்களிலும் காலை 11 முதல் இரவு 8:30 வரை வேலூர் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

குறும்படம், உலக சினிமா திரையிட பிரத்யேக கண்காட்சி அரங்கம் அமைத்திருக்கிறார்கள்.

இவை எல்லாவற்ற்கும் மேலாக ஒரு முக்கியமான விஷயம்.... முதல் முறையாக 'நாகரத்னா பதிப்பகம்' நேரடியாக புத்தக கண்காட்சியில் அடியெடுத்து வைக்கிறது. (ஸ்டால் : 51). உள்ளே நுழைந்தது மூன்றாவது ஸ்டால் !! நாகரத்னா பதிப்பக நூல்களோடு இருவாட்சி, சோலை, பாலவசந்தா... எங்களை போன்ற சிறு பதிப்பகத்தின் நூல்கள் விற்பனை உரிமை வாங்கி விற்கபடுகிறது.

கேபிள், பரிசல் போன்ற பதிவர் நூல்களோடு ஒரு பாதி இலக்கிய சம்மந்தமான நூல்களும், இன்னொரு பாதி மாணவர்களுக்கு சுய முன்னேற்றம், பாட நூல்களும் உள்ளது. வேலூர், காட்பாடி, ஆரணி அருகில் உள்ள பதிவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் நாகரத்னாவின் அரும்பு முயற்சியை ஆதரப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் விபரங்களுக்கு....

***

இன்று(28.8.10), 'கவிதை உலகம்' நூல் வெளியீட்டு விழா தேவநேயப் பாவாணர் நூலகம் கட்டிடம், சிற்றரங்கம் , LLA, அண்ணா சாலை, சென்னை – 2, மாலை 6 மணி நடைபெறவிருக்கிறது.

அனைவரும் வருக !!

Friday, August 27, 2010

ஓரினசேர்கை மீதான வன்கொடுமைகள்

உலகில் அதிக ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மையினர் யார் என்று தெரியுமா ? யூதர்கள். கண்டிப்பாக இல்லை. இஸ்ரேலில் யூதர்கள் தான் பெரும்பான்மையினர். இஸ்லாமியர்களா ? உலகில் இருபதுக்கு மேற்ப்பட்ட நாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஒரு வேளை தமிழர்கள். தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு பிரச்சனையில்லையே !! கருப்பு இனத்தினர். அவர்களும் இல்லை. ஆப்பிரிக்கா நாடுகளில் பெரும்பாலான பகுதியில் அவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் தான் ஆள்கிறார்கள். பின்பு எந்த சிறுபான்மையினர் எல்லா பகுதியிலும் ஒடுக்கபடுகிறார்கள். சந்தேகமே இல்லை. எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், இனமாக இருந்தாலும் எல்லா பகுதியிலும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் ‘ஓரின சேர்கையாளர்கள்’ தான்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை ஓரினசேர்க்கையாளர்களுக்கு வந்துக் கொண்டு தான். அந்த நாட்டின் அந்த நாட்டின் பராம்பரிய குணமும், பழக்க வழக்கமும் அவர்களை பார்க்கும் விதத்தில் வேறாக இருந்தாலும் உளவியல் ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தாக்கப்பட்டு வருகிறார்கள்.



தென் ஆப்பிரிக்காவில் லெஸ்பியனில் ஈடுபடும் பெண்களை கற்பழிப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ஓரின சேர்க்கை என்பது ஒரு வியாதி. அந்த நோய்யை குணப்படுத்த லெஸ்பியன் பெண்களை ‘கரேக்டிவ் ரேப்’ என்ற பெயரில் கற்பழித்தால் சரியாகிவிடுமாம். ஆண் சுகம் தெரிந்து விட்டால் சுயபால் இன்பத்தை கைவிடுவார்களாம். அதனால், லெஸ்பியன் பெண்கள் குணப்படுத்த அவர்கள் விருப்பதிற்கு மாறாக கற்பழிக்க பல சமூக சேவகர்கள் கலத்தில் குத்தித்துள்ளனர்.

2000ல் இருந்தே 'கரேக்டிவ் ரேப்' என்ற பெயரில் பல லெஸ்பியன் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், 2008ல் தென் ஆப்பிரிக்கா கால்பந்து வீராங்கனை ஈடி சிமெலைன் என்ற லெஸ்பியன் பெண் 'கரேக்டிவ் ரேப்' பெயரில் ஒரு குழுவால் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 'கரேக்டிவ் ரேப்' உலக பார்வைக்கு வந்தது. மேலும், வருடத்திற்கு 5 லட்சம் சிறுமி, யுவதிகள் கற்பழிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்கா அரசு ஒத்துக் கொண்டுள்ளது.

பிரேசிலில், 19 வயதான ஓச்வன், தன் பகுதியில் 'மிஸ் கே' போட்டியில் வெற்றிப் பெற்று திரும்பும் போது மர்மமான முறையில் தாக்கப்பட்டான். அடுத்த நாள் அவன் உடல் நிர்வணமாய் கண்டெடுக்கப்பட்டு போது இறக்கும் முன் பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது. 1980 முதல் 2006 வரை பிரேசிலில் 2800 மேற்பட்ட ஓரின சேர்க்கை ஆண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2002ல் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பாரிஸ் மெயரான 'Bertrand Delanoë 'கே' என்பதால் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் . யிஷாயி என்ற யூதன் 'கே போராட்ட ஊர்வலத்தில் மூன்று கேகளை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளான்.

போர்சுக்கலில், மாற்று பால் அருவை சிகிச்சை செய்துக் கொண்ட Gisberta Salce Júnior' என்பவர், சில வாலிபவர்களால் மூன்று நாள் கற்பழிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுளார்.

நியூசிலாந்தில், ஜெஃப் விட்டிங்டன் என்ற ‘கே’ இளைஞன் இரண்டு ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்தார்.

இவ்வளவு ஏன் ? ஹிட்லரின் மரண முகாமில் ஓரின சேர்கையாளருக்கு தான் முன்னுரிமை. ஹிட்லர் கொன்ற கோடிக்கணக்கானவர்களில் 50,000 ஓரின சேர்கையாளர்களும் அடங்குவார்கள். இறந்த யுதர்களில், ஓரின சேர்கையாளர்கள் கொடுமையான வன்கொடுமைகளுக்கு பலியானார்கள் என்பது பரிதாபத்திற்குறியது.

இன்னும், ஈரான், நைஜிரியா, அரேபியா, சுடான், ஏமன் போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்குகிறது. அதுவும் ஈரானில், 1979ல் இருந்து 4000 ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கி கொன்றுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானில் கூட ஓரின சேர்கையாளர்களுக்கு 2001ல் வரை மரண தண்டனை வழங்கி வந்தார்கள். தாலிபன் வீழ்ந்த பிறகு ஆப்கானிஸ்தானில் ஓரின சேர்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை நிறுத்தி அபராதம் மட்டும் போட சட்டம் கொண்டு வந்துள்ளனர். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது.

இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்களுக்கு சட்டப்படி அங்கிகாரம் கிடையாது. சமூகப்பார்வையில் நிராகரிப்பு என்ற பெரிய தண்டனை இவர்களுக்கு வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க எதோ சில பகுதிகளில் அங்கிகாரம் பெற்ற இவர்கள் தின வாழ்க்கை நடத்துவதில் சிரமப்படுபவர்கள் பலர் உண்டு. இவர்களை அழிப்பதாகட்டும், எதிர்பதாகட்டும் மொழி, இனம் பாராமல் ஒற்றுமையாக செயல் படுவதில் ஓரின சேர்கையாளர் விஷயத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.


கட்டுரைக்கு உதவிய இணையம்

http://en.wikipedia.org/wiki/Sexual_violence_in_South_Africa

http://en.wikipedia.org/wiki/Violence_against_LGBT_people

Monday, August 23, 2010

சினிமா வியாபாரம் - புத்தக பார்வை

உலகில் சமத்துவமான ஒரு சில விஷயங்களில் சினிமாவும் ஒன்று. பணியாற்றுபவர், திரையரங்கு போன்றவற்றில் பாகுபாடு இருந்தாலும், படம் பார்க்கும் மக்களுக்கு சந்தோஷம் கொடுப்பதில் ‘சினிமா’ என்று பேதம் பார்த்தில்லை.

இணையத்தில் தொடர்ந்து படித்திருந்தாலும், புத்தகமாக படிப்பதில் ஒரு தனி சுகமே இருக்கிறது.

புத்த ஆரம்பத்திலே, ' நல்ல கதை மட்டும் வெற்றி பெற உதவாது' என்று உணர்த்திவிடுகிறார்.




கோலிவுட்டை பற்றி எழுதும் போது சுவையான அனுபவம், படங்கள் பற்றிய தகவல், வியாபார உத்தி என்று பல விஷயங்கள் விளக்கும் போது 'கேபிள்' நம்மோடு பயணம் செய்கிறார். ஆனால், ஹாலிவுட் பற்றி சொல்ல தொடங்கியதும் ஆசிரியராகிவிடுகிறார் . ஒவ்வொன்றுக்கும் விளக்கும் போது அவர் நகைச்சுவை நடை கொஞ்சம் மறைந்து நம்மிடம் இருந்து அந்நியப்படுகிறார்.

இலங்கை யுத்தம் தமிழ் படங்களுக்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பு ஏற்ப்படுத்தியது என்று சொல்லும் போது எதார்த்த உண்மையாக இருந்தாலும், ஒரு குற்றவுணர்வு நம் உள்ளே தொன்றிக் கொள்கிறது.

ஹாலிவுட்டில் இருந்து டெக்னாலஜி மற்றும் கற்றுக் கொண்டால் போதாது, அவர்களின் வியாபார திறமையை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது.

சினிமா பற்றி தெரியாதவர்கள் கூட இந்த புத்தகம் படித்து பிறகு சினிமா தெரிந்த மாதிரி பேச தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன்.

விநியோகஸ்தர்கள் பற்றி சொல்லும் போது ஏமாற்றும் தயாரிப்பார்களை எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

ஸ்னேகாவின் முதல் படம் 'விரும்புகிறேன்'. ஆனால், 'என்னவளே' முதலில் வெளிவந்து ஒரு புதுமுக இயக்குனர் அவரை அறிமுகப்படுத்திய புண்ணியத்தை கட்டிக் கொண்டார். அதே போல், கேபிள் முதலில் எழுத தொடங்கிய 'சினிமா வியாபாரம்' தான். ஆனால், 'லென் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' சிறுகதை தொகுப்பை முதலில் கொண்டு வந்து அவரை அறிமுகப்படுத்திய புண்ணியத்தை அடியேனுக்கு கிடைத்தது. அவரின் சிறுகதை இந்நேரம் இரண்டாம் பதிப்பு வந்திருக்க வேண்டியது. முதல் பதிப்பை மார்க்கெட்டிங் செய்ய தெரியாமல் அவரின் புத்தகத்தை தேக்கி வைத்துவிட்டேன். (யாராவது 'புத்தக வியாபாரம்' புத்தகம் எழுதியிருக்காங்களா ?) ஆனால், 'சினிமா வியாபாரம்' அவரை பல பேரிடம் கொண்டு சென்றுள்ளது.

இந்த புத்தகத்தை பற்றி சொல்லும் போது சங்கரின் உழைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். நிச்சயமாக சினிமாவில் அடிப்பட்டு, கை சுட்டுக் கொண்டவர்களால் தான் இது போன்ற படைப்பை படைக்க முடியும். 'சினிமா வியாபாரம்' அவரின் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வெற்றி தான்.

சங்கர் சிறுகதை தொகுப்பு போது அவரோடு ஏற்ப்பட்ட சுவையான அனுபவத்தை சொல்லியாக வேண்டும். 'லென் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' சிறுகதை தொகுப்பில் 12 சிறுகதைகளும் பரத்தையர்களை பற்றியோ அல்லது செக்ஸ் பற்றியோ சொல்லும் கதைகளமாகவே அமைந்தது. அதில் ஒரே ஒரு கதை சம்மந்தமில்லாமல் ஒட்டிக் கொண்டது. அது நல்ல கதையாக இருந்தாலும், மற்ற கதையோடு இது அந்நியப்பட்டு இருப்பதை என்னால் உணர முடிந்தது. கண்டிப்பாக படிக்கும் வாசகர்களும் உணர்ந்திருப்பார்கள். அந்த கதை நூலில் இடம் பெற எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அந்த சிறுகதை எழுத பல தகவல் சேகரித்ததாகவும், அதற்காக உழைத்ததையும் ஒரு பதினைந்து நிமிடம் மேல் எனக்கு விளக்கினார். இருந்தும், என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இறுதியில், என்னுள் இருக்கும் எழுத்தாளன் பதிப்பாளனை வென்றுவிட்டான். 13வது கதையாக 'நண்டு' கதையை அந்த புத்தகத்தில் இணைத்துவிட்டேன். எந்த நேரத்திலும் தன் உழைப்பை விட்டுக் கொடுக்க விரும்பாதவர் சங்கர்.

'சினிமா வியாபாரம்' - 350 பக்கங்களுக்கு மேல் வர வேண்டிய புத்தகம், 142 பக்கங்களில் வந்திருக்கிறது. அடுத்த எடிஷனில்... மன்னிக்கவும் ரிவிஷனில் விலையோடு பக்கங்களும் அதிகமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

Friday, August 20, 2010

'கவிதை உலகம்' நூல் வெளியிட்டு விழா !!

நண்பர்களே !

ஒரு மாதமாக என் பதிவில் இட பக்கத்தில் இருந்த 'கவிதை உலகம்' நூல் வரும் ஆகஸ்ட், 28 ஆம் ( சனிக்கிழமை) வெளியீடப்படுகிறது.



நூலை வெளீய்டுபவர் : திரு. கயல் தினகரன்,
தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணையம்

முதல் பிரதி பெறுபவர் : திரு. அரிமா. இளங்கண்ணன்

தொகுப்பு நூலில் இடம் பெற்ற எழுத்தாளர்களுக்கு சான்றிதழை திரு.'அமுதா' பாலகிருஷ்ணன் வழங்கவிருக்கிறார்.

நேரம் : மாலை 6 மணி
இடம் :
தேவநேயப் பாவாணர் நூலகம் கட்டிடம்
சிற்றரங்கம்
LLA, அண்ணா சாலை,
சென்னை – 2

வெளியீட்டு விழாவன்று ரூ.315/- மதிப்புள்ள நாகரத்னா பதிப்பகத்தின் ஏழு நூல்கள் ரூ.250 /- விற்கப்படும்.



விலை.ரூ.35. பக்கங்கள் : 64

56 எழுத்தாளர்கள் எழுதிய 59 கவிதைகள் கொண்ட நூலை ரூ.25/- க்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நிபந்தனை..

கீழ் காணும் இரண்டு நூல்களோடு தேர்வு செய்து ஆர்டர் கொடுக்க வேண்டும். (இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டும். தபால் செலவு இல்லை) ஹி...ஹி...

எனது கீதை (கட்டுரை)- குகன் - ரூ.40
நடைபாதை (சிறுகதை)- குகன்- ரூ.40
என்னை எழுதிய தேவதைக்கு (சிறுகதை)- குகன் - ரூ.55
காந்தி வாழ்ந்த தேசம் (கவிதை) - ரூ.45
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்(சிறுகதை)- சங்கர் நாராயணன் - ரூ.50
டைரி குறிப்பும் காதல் மறுப்பும் (சிறுகதை)- பரிசல் கிருஷ்ணா - ரூ.50

உதாரணத்திற்கு, கவிதை உலகம் (ரூ.25) + என்னை எழுதிய தேவதைக்கு (ரூ.45) + டைரி குறிப்பும் காதல் மறுப்பும் (ரூ.50) = ரூ.120/- செலுத்தலாம்.

பணம் செலுத்தும் முறை...

1.பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in / nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பவும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

29.8.10 முதல் புத்தகங்கள் கோரியரில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

நண்பர்கள் இந்த அறிவிப்பை தங்கள் பதிவில் அறிவிக்க, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
அன்புடன்,
குகன்

Thursday, August 19, 2010

ஓஷோ சொன்ன கதை - 3

புத்தரின் சீடன் ஒருவன் அவர் போதனையைப் பரப்ப அவரை விட்டு விலக எண்ணினான். அப்போது அவன் புத்தரிடம், " பெண்களிடம் எப்படி அணுகுவது ?" என்று கேட்டான். துறவிகளுக்கு எப்போதும் இது தான் பிரச்சனை.

புத்தர் கூறினார், " அவர்களை பார்க்காதே ! இது தான் சுலபமான வழி" என்றார்.

ஐயோ ! அது அவ்வளவு சுலபமில்லை. புத்தருக்கு எளிதாக இருக்கலாம். அது நமக்கு உதவாது என்று நினைத்த அந்த சீடன் புத்தரிடம், " பார்ப்பதைத் தவிர்க்க முடியாமல் போனால் என்ன செய்வது?" என்றார்.

" தொடாதே !" புத்தர் கூறினார்.

பார்ப்பது கூட ஒருவகையில் தொடுதல் தான். கண்களால் தொடுதல். ஒரு பெண்ணை மூன்று கணங்களுக்கு மேல் வெறித்துப் பார்த்தால் அவள் கூச்சப்படுகிறாள். உன் கண்களை கைகளாக்கி நீ அவளைத் தொட்டுக் கொண்டுள்ளனர்.

மீண்டும் சீடன், " சில சந்தர்ப்பங்களில் பெண்ணை தொடுகிற நிலையும் ஏற்படுகிறது. ஒரு பெண் தெருவில் விழுந்து கிடந்தால் யாரும் அவளை கவனிக்காத இடமாக இருந்து விட்டால் அவளுக்கு உதவுவதற்காக தொட நேரிடுமே ? அப்போது என்ன செய்வது ?"

புத்தர் சிரித்து விட்டு சொன்னார், "அப்படியானால் விழிப்புடன் இரு"

கடைசியாக புத்தர் கூறியது தான் உண்மை. கண்களை மூடுவது, தீண்டாமல் இருப்பது என்று எதுவும் உதவாது. செக்ஸ் பற்றி விளக்கம் சொல்லும் ஓஷோ சொன்னக் கதை.

***



ஒரு ஜென் துறவி மரணப் படுக்கையில் இருக்கிறார். அன்று மாலை தான் இருக்க மாட்டோம் என்றிந்து அதை அவர் அறிவித்தார். அவரது சீடர்களும், நண்பர்களும் கூடிவிட்டனர், ஒரு பழைய சீடன் குரு இறக்கப் போகும் சேதியறிந்து சந்தைக்கு ஓடி அவருக்கு விருப்பமாக கேக் ஒன்றை வாங்க செல்கிறான். அந்த குறிப்பிட்ட கேக் எங்கும் கிடைக்கவில்லை. இருந்தும், அந்த சீடன் விடாமல் தேடிக் கண்டுபிடித்து விட்டான். குருவும் யாருக்காகவோ காத்திருந்தார் எல்லோரும் அவரைப் பார்த்து வேதனைப்பட்டனர். சீடன் வந்தான்.

அவர் கண்களைத் திறந்து, " நீ வந்து விட்டாயா ? எங்கே என் கேக் ?" என்றார். சீடன் கேக்கை வாங்கி அளவற்ற மகிழ்ச்சியுடன் ருசித்தார்.

இதை பார்த்த ஒருவன் குரு மரணத்தில் நடுங்காமல் ஆச்சரியத்துடன் கேட்டான். அதற்கு குரு, " நான் நடுங்கவில்லை. ஏனென்றால் எனக்கு பயமில்லை. என் உடல் மூப்பு கொண்டாலும் நான் இன்னும் இளைமையாக இருக்கிறேன்."

மீண்டும் அவன், " உங்கள் கடை சேதி என்ன குருவே ?"

குரு புன்னகைத்தார். " கேக் மிகவும் ருசியாக இருக்கிறது " என்றார்.

சாகும் முன்பு இப்போது வாழ்கிற மனிதரின் அடையாளம் இது தான். கேக் ருசியாக இருக்கிறது. மரணம் கூட ஒரு பொருட்டல்ல. அடுத்த கணம் அர்த்தமற்றது என்பதை விளக்கவதற்காக சொல்லப்பட்ட கதை.

***

பழைய ஜென் சம்பிரதாயப்படி ஒரு சீடர் தன் குருவிடம் பத்து வருடங்களாவது சேர்ந்திருக்க வேண்டும்.

ஒரு ஜென் கதையில் பத்து வருடம் முடிந்து ஒரு சீடர் தன் குருவான 'நான் - இன்'னை சந்தித்தார். தான் விலகிச் செல்ல அனுமதி கேட்ட போது நான் - இன், " நீ உன் கால் செருப்புகளை வாசலில் விட்டு வந்திருக்கிறாய். ஆனால் உன் குடையின் எந்தப் பக்கத்தில் செருப்புகளை விட்டாய் ?" என்று கேட்டார்.

ஒரு கணம் அந்த சீடர் தயங்கினார். அந்த தயக்கம் தான் ஒவ்வொரு கணமும் ஜென்னுடன் இல்லாததை அவர் உணர்ந்துக் கொண்டார்.

நாம் செய்யும் எந்த காரியமானாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட சொல்லப்பட்ட கதை.

Wednesday, August 18, 2010

மொக்கை குறும்படங்கள் – கண்டிப்பா பார்க்காதீங்க...!!

திரைப்படத்தை விமர்சிப்பவர்கள் பார்க்கலாம், பார்க்க வேண்டாம் என்று கருத்து சொல்லுபவர்கள், குறும்படத்தை பற்றி சொல்லுவதில்லை. இது நல்ல படம் பாருங்கள் என்கிறார்களே தவிர, மொக்கை படங்களை பற்றி பேசுவதில்லை.

ஒரு குறும்படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்லுவதற்கு அதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், “நான் பட்ட துன்பம் பெறுக வையகம்” என்ற நல்ல எண்ணத்தில் இந்த மொக்கை குறும்படங்களை உங்களோடு பகிந்து கொள்ளுகிறேன்.


மண்ணு குதிர



அற்புதம்



5 சகோதரர்கள்



சேம் பிலட்...

Tuesday, August 17, 2010

ஓஷோ சொன்ன கதை - 2

ஒரு பிச்சைக்காரன் அனாதை சிறுவன் ஒருவனை வளர்த்து வந்தான். பிச்சைக்காரனின் குடிசை அருகே சுடுகாடு இருந்தது.
இரவில் சிறுவன் சுடுகாட்டுக்குள் சென்று குறும்புகள் செய்யாமல் தடுக்க அவனிடம், "சுடு காட்டுக்குள் இரவில் நுழைந்தால் அங்கிருக்கும் பேய்கள் உன்னைப் பிடித்து தின்றுவிடும்” என்று பயப்படுத்தினான். அந்த சிறுவன் பெரியவனாக வளர்ந்து கல்வியறிவு பெற்ற பின்னும் பேய் பயம் ஓயவில்லை.

பிச்சைக்காரன் வாலிபன் கையில் தாயத்தைக் கட்டி, " இப்போது தெய்வ சக்தி உள்ளது. கடவுள் உனக்கு பேய்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பார்" என்று கூறினான்.

வாலிபன் தைரியமாக சுடுகாட்டை இரவில் தாண்டி வெளியூர் செல்லும் போது, " பேய்களே அஞ்சும் கடவுள் எவ்வளவு பெரிய பேயாக இருக்க வேண்டும் ?" என்று நினைத்து கடவுள் மீது பயம் கொண்டான். முன்பெல்லாம் பேய்யை நினைத்து இரவில் பயந்தவன், கடவுளை நினைத்து பயப்படத் தொடங்கினான்.

விபரீதத்தை உணர்ந்த பிச்சைக்காரன் கொடுத்த தாயத்தை தூக்கி எறிந்து, சுடுக்காட்டில் சென்று பேய்களை பற்றியும், பிசாசுகளை பற்றியும் விளக்கினான். அதன் பிறகு அந்த வாலிபன் மனதில் இருக்கும் பேய்களும், பிசாசுகளு விடைப்பெற்று மனத்தெளிவு பெற்றான்.

தெய்வ பயமும், சரணாகதியும் பற்றி விளக்கும் போது ஓஷோ சொன்ன கதை.

***


வாழ்நாள் முழுவதும் தீமைகளைச் செய்து விட்டு கடைசி நேரத்தில் கடவுளை நினைத்தால் போதுமா என்று ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார். அதற்கு ஓஷோ ஒரு கதை சொல்கிறார்.

பேராசை பிடித்த வியாபாரி ஒருவன் மரணப் படுக்கையில் இருக்கிறான். எந்த நேரமும் அவன் உயிர் பிரிந்துவிடும் நிலையில் இருந்தது. அவன் கண்களை மூடிய நிலையில் இருந்தான். அவன் படுக்கையை சுற்றி கவலையுடன் அவன் மனைவி, மகன், மகள் என்று எல்லோரும் இருந்தனர்.

கொஞ்ச நேரத்தில் கண் விழித்த கிழவன், " என் மனைவி உங்கு இருக்கிறாளா ?" என்று கேட்டான். மனைவி, " இதோ இங்கு இருக்கிறேன்" என்றாள். மகள்களைப் பற்றி கேட்டதும் அவர்களும் இருப்பதாக மனைவி கூறினாள். "மகன் எங்கே ?" என்று வியாபாரி கேட்க, அதற்கு அவன் மனைவி " எல்லோரும் இங்கு தான் இருக்கிறார்கள். கவலையை விடுத்து ஓய்வு எடுங்கள்" என்றாள்.

"அப்படியானால் கடையை யார் கவனித்துக் கொள்வது ?" என்று கேட்டான்.

இந்த கதையில் உள்ள வியாபாரியைப் போல கடைசி நேரத்தில் மனிதன் மனதில் அதுவரை இருந்த எண்ணங்களின் சாரம் தான் தோன்றும்.

***

பணத்திற்கும் சொர்க்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்பதற்கு ஓஷோ ஒரு கதை சொல்லுகிறார்.

யாருக்கும் உதவாத ஒரு பணக்கார கஞ்சன் இறந்து சித்திரகுப்தர் முன் நிற்கிறான். அந்த பணக்காரன் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விடும்படி கூறினான்.

சித்திரகுப்தர் சிரித்தபடி, " பூலோக முறைகள் இங்கு பயன் தராது. சொர்க்கத்தில் நுழையும் தகுதி பெறும் அளவிற்கு நீ யாருக்கு என்ன நன்மைகள் செய்தாய் ?" என்று கேட்டார்.

பணக்காரன் நன்கு யோசித்துவிட்டு, " ஒரு கிழவிக்கு பத்து பைசா தானம் கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர், "இது தவிர, வேறு ஏதாவது நன்மை செய்து இருக்கிறாயா ? " என்று கேட்டார்.

பணக்காரன் மேலும் யோசித்து, " ஒரு அனாதை சிறுவனுக்கு ஐந்து பைசா கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர் "இன்னும் வேறு உண்டா ?" என்று கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்தான்.

அப்போது சித்திரகுபதரின் உதவியாளர் சித்திரகுப்தரிடம், " இந்த பணக்காரனிடம் பதினைந்து பைசாவை திருப்பிக் கொடுத்துவிட்டு அவனை நரத்திற்கு அனுப்பிவிட வேண்டும்" என்றான்.

இந்த கதையில் வெறும் பதினைந்து பைசாவில் சொர்க்கத்தை வாங்க முடியாது என்பதற்காக ஓஷோ கூறினார்.

***

வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை என்று ஒருவன் ஓஷோவிடம் சொல்லும் ஒரு கதை சொல்லுகிறார்.

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. கிராமவாசி ஒருவன் மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது. பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் இந்த கிராமவாசி இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கிராமத்தின் எல்லையில் அவன் நின்று விட்டான்.

அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தான்.

அப்போது அங்கு ஒரு கிழவன் அதை விட சிறிய விளக்குடன் அங்க் வந்தான். அவனும் மலையேற கூறினான். கிராமவாசி கிழவனிடம் சந்தேகத்தை கேட்டப் போது, கிழவன் சிரித்தப்படி "விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும். அவ்வாறே எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நீ மலையேறிச் செல்லலாம்." என்றான்.

நீண்ட கால திட்டம் போடும் போது, உங்களுக்கு முன் இருப்பதை மறந்து விடு குழம்பக் கூடாது என்பதற்கு ஓஷோ கூறுகிறார்.

**

கதை கிடைத்த புத்தகம்

அர்த்தமுள்ள ரஜனீஷ் - பி.குமார் எம்.ஏ, நர்மதா வெளியீடு

Monday, August 16, 2010

ஓஷோ சொன்ன கதை - 1

ஒரு ஜென் சந்நியாசி மீது கோபம்க் கொண்ட அந்த தேசத்து அரசன், அவரை தூக்கிட உத்தரவிடுகிறான். கொல்வதற்கு முன்பு அவரசன் அவரிடம், " உனக்கு இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கிறது - நீ அதை எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறாய்" என்று கேட்டார்.

இதைக்கேட்ட சந்நியாசி சிரித்தவாறு, " நான் எப்போதும் வாழுவது போல - கணத்துக்குக் கணம் வாழ்கிறேன் ! என்னைப் பொறுத்தவரையில், இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது. ஆகவே, எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன ? 24 வருடம் இருந்தால் என்ன ? எனக்கு இதில் எந்த வேற்பாடும் இல்லை. நான் கணத்துக்கு கணம் வாழ்ந்து வந்திருப்பதால், இந்த கணமே எனக்கு அதிகம் தான். இந்த ஒரு கணம் போதும்" என்றார்.

அரசர் ஒன்று புரியாமல் விழித்தார். அப்போது சந்நியாசி அரசரிடம், " நான் உங்களை ஒன்று கேட்க அனுமதி கொடுங்கள். நீங்கள் தொடர்ந்து இரண்டு கணங்கள் ஒரே சமயத்தில் வாழ முடியுமா ?" என்று கேட்டார்.

யாருமே அப்படி வாழ்ந்தது கிடையாது. வாழ்வதற்கு ஒரே வழி, ஒரு சமயத்தில் ஒரு கணம் வாழ்வது தான்.

யோக , யோகி, தியானம் பற்றி விளக்கம் சொல்ல ஓஷோ அவரள் உதாரணத்திற்கு சொன்ன கதை.

***



போதிதர்மர் சீனாவுக்கு சென்ற பொழுது, தன் செருப்பு ஒன்றை தலையிலும், மற்றொன்றை காலிலும் போட்டுக் கொண்டு நடந்தார். இதை பார்த்த அரசர், " நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? இது என்ன முட்டாள் தனம் ? " என்றார்.

அதற்கு போதிதர்மர், " நான் ஜோக் அடிக்கிறேன்" என்றார்.

அரசர், " நாங்கள் ஜோக் அடிக்கும் சாதுவை எதிர்பார்க்கவில்லை" என்றார்.

இதை கேட்ட போதிதர்மர், " ஒரு உண்மையான சாதுவால், எப்படி கடுமையாக இருக்க முடியும்? கடவுள் கடுமையாகவே இல்லை. அவர் எப்போழுதும் விளையாட்டில் தான் இருக்கிறார்" என்றார்.

திருமணம் அன்பது ஆத்மிகமானது அல்ல விளக்கம் சொல்லும் கூறிய கதை.

***

ஓஷோ அவர்கள் தனது சொற்பொழிவின் போது பல ஜென் கதைகள் சொல்லியிருக்கிறார். அதில், ஒன்று....

புகழ்பெற்ற குருவான ஒரு துறவி இறந்துவிட்டார். அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த குருவின் முக்கிய சீடர், தன் குரு இறந்ததை நினைத்து தேம்பி தேம்பி அழுகிறார். வந்தவர்களுக்கு புரியவில்லை. பற்றற்றவன் அழக்கூடாது - அதுவும் ஆத்மாவுக்கு அழிவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் ஒருவன் அழுததால், அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் சீடரிடம் நேருங்கினான்.

"எதற்காக அழுகிறீர்கள் ?" என்று கேட்டான்.

அந்த சீடர், " என்னால் எப்போதும் 'ஏன்' என்ற கேள்விகளோடு வாழ முடியாது. 'ஏன்' என்ற கேள்வி இல்லாத நேரமும் உண்டு. நான் இப்போழுது அழுகிறேன். அவ்வளவு தான்" என்று பதில் சொன்னார்.


கூட்டத்தில் இருப்பவர் இன்னொருவர், " நீங்கள் எப்போழுதும் ஆத்மாவுக்கு அழிவு கிடையாது என்று சொல்லி வந்தீர்கள். பிறகு ஏன் அழுகிறீர்கள் ?" என்று மீண்டும் கேட்டார்.

அதற்கு, "இப்போழுதும் நான் அப்படிதான் கூறுகிறேன். ஆனால், நான் அழுவதை அதனால் தடுத்து நிறுத்த முடியாது" என்றார்.

ஆத்மாவுக்கு அழிவில்லை என்று சொல்பவன் அழக்கூடாது. ஆனால், அந்தத் துறவி, "என் ஆத்மாவே அழும்போழுதும், என்னால் என்ன செய்ய முடியும் ? என்னால் எதுவும் செய்ய முடியாது. எது என்னிடம் வந்தாலும், நான் அதனுடன் ஒன்றாகி விடுகிறேன். என் கண்களில் கண்ணீர் வருகிறது. நான் அத்துடன் ஒன்றாகி விடுகிறேன்" என்று சொன்னார்.

கதைக் கிடைத்த புத்தகம்

The Great Challenge - ஓஷோ

Friday, August 13, 2010

மூன்று கவிதைகள்

கடிகாரம்

"உன் கடிகாரம்
பதினைந்து நிமிடம்
அதிகமாக சுற்றுகிறது" - என்றான்.

"அடுத்த பதினைந்து நிமிடம்
என்ன நடக்க போகிறது என்று
தெரிந்து கொள்வதற்காக !" என்றேன்.

"எல்லாம் முன்பே தெரிந்துக் கொள்ள
நீ என்ன கடவுளா !" என்றான்.

"ஆம் ! நான் கடவுள் " என்றேன்.


****

எழுத்தாளன்




கோடி எழுத்துக்கள் என்னுள்
புதைந்து கிடக்கின்றன !

லட்ச கட்டுரைகள்
உயிர் கொண்டு வர துடிகின்றன !

ஆயிரம் புத்தகங்கள்
அச்சில் உருவாக போகின்றன !

கற்பனை கோட்டையில்
எழுத்தாளன் !

****

புத்தகம்

கம்யூனிச புத்தகம்
வாங்கலாம் என்று எடுத்தேன்
விலையோ
முதலாளிதுவம் பேசியது !

Thursday, August 12, 2010

ஓரின சேர்கை போராளிகள்

ஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சணங்கள் இந்தியாவில் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியா, ரஷ்யா போன்ற நாடுகளில் ஓரின சேர்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஒதிக்கினாலும் துணிவாக அவர்கள் பேசுவதை மதிக்கிறார்கள். பாச வலையில் பின்னப்பட்ட இந்தியாவில் ஓரின சேர்கையாளர்களர்களை அவர்கள் குடும்பங்கள் நிராகரிப்பதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பல எதிர்ப்புகள் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்த எதிர்ப்புகளையும் மீறி ஒரு சிலர் வாழ்ந்து, அவர்களைப் போல் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒரு சிலர்.....

கிடி தடனி (Giti Thadani)

1980ல் இந்தியாவில் லெஸ்பியன் பரவலாக தெரியப்பட்ட காலத்தில் போராடிய பெண். லெஸ்பியன் திருமணத்தை பற்றியும், லெஸ்பியன் தற்கொலை தடுப்பது பற்றியும் மிக தீவிரமாக பேசியும், எழுதியும் வருகிறார். தன்னை லெஸ்பியன் என்று அறிவித்து, ' Sakhiyani: Lesbian Desire in Ancient and Modern India' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் பத்தாண்டுகளாக சமஸ்கிரத்தத்தை கற்று அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளை இதில் தொகுத்துள்ளார். ரிக் வேதத்தில் ‘ஜமி’ என்ற இரட்டை அம்மாக்கள், இரத்த சம்மந்தமில்லாத உஷா, நக்டா தாய் - மகள் உறவு போன்ற குறிப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக, கஜுராஹோ சிலையில் இரண்டு யோனி கொண்ட பெண் சிலைகள் இருப்பதாக சொல்லுகிறார்.

டெல்லியில் இருக்கும் 'Sakhi' (சகி) மற்றும் Red Rose Rendezous Group (சிவப்பு ரோஜா) போன்ற ஓரின சேர்க்கை அமைப்புகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்.

நம் விநாயகர் கூட இரண்டு பெண்களால் உருவானவர் என்று தன் பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். பார்வதி கங்கையில் நீராடும் போது தன் காவலுக்காக விநாயக பெருமானை உருவாக்கிய கதையில், பார்வதிக்கும், கங்கைக்கும் உருவானவர் என்று விளக்குகிறார். இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஓரின சேர்கையை எதிர்க்கும் நிலையில் இந்து மதத்தை தங்களுக்கு ஆதரவாக்க பார்க்கிறார்கள் என்று இவர் ஆராய்ச்சியை எதிர்ப்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கிடி தடனி தன் வேத குறிப்புகளை மறு பரிசீலனை செய்து எந்த லாபமும் அடைய முடியாது என்று அவரை எதிர்ப்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

அப்ஹா பையா (Abha Bhaiya)

பத்து வருடங்களாக ஒரு பெண்ணுடன் வாழ்ந்து, இப்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். லெஸ்பியன் பெண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்ணியத்துக்காவும் போராடி வருகிறார். ‘சங்கத்’ என்ற அமைப்பின் மூலம் திருமணமாகாத பெண்கள், விவாகரத்தான பெண்கள், கன்னியாஸ்திரிகள் போன்றவர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

மன்வேந்திர சிங் கோஹில் (Manvendra Singh Gohil)




குஜராத்தில் உள்ள ராஜ்பிப்லா சமஸ்தானத்தின் இளவரசராக கருதப்படும் மன்வேந்திர சிங் கோஹில் ஒரு கே. திருமணத்துக்கு பிறகு தனக்கு ஏற்பட்டு இருக்கும் தன் பால் ஆர்வம் மாறிவிடும் என்று நம்பி சந்திரிகா குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். அப்போது தான் ஒரு கே என்று அவருக்கு தெரியவில்லை. தாம்பத்திய வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் 1992ல் விவாகரத்து பெற்றார். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சுற்றி இருப்பவர்கள் நினைத்தார்கள். 2002ல் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஒரு கே என்று உறுதிப்படுத்தினார். தான் கே என்று உணர்ந்த கோஹில், தன்னை போல் பாதிக்கப்பட்டுயிருப்பவர்களுக்கு 'லக்ஷியா' என்ற அமைப்பை தொடங்கினார். ஓரின சேர்க்கை மட்டுமில்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடம் பரப்பிவருகிறார். தான் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

பிந்துமாதவ் கிரே (Bindumadhav Khire)



மராத்திய எழுத்தாளர். திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஆரம்பத்தில் தன்னுடைய ஓரின சேர்கை உணர்வை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், விடுபடவும் முடியாமல் மிகவும் அவதைப்பட்டவர். மிகுந்த மன உலைச்சலுக்கு உள்ளன, பிந்து மாதவ் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு இருக்கும் சன் ப்ரான்சிகோவில் த்ரீகோன் (Trikone) ஓரின சேர்க்கை அமைப்பின் மூலம் தன் குற்றவுணர்வில் இருந்து விடுப்பட்டார். த்ரீகோன் காலாண்டு இதலில் துணை பதிப்பாளராக இருந்து, பின்பு பதிப்பாசிரியரானார். அதன் பின், அமெரிக்காவில் நடந்த ஓரின சேர்கை போராட்டங்களில் கலந்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் தன்னம்பிகை வளர்ந்ததும் தன்னைப் போல் அவதைப்படும் இந்தியர்களுக்கு உதவ இந்தியா திரும்பினார்.

நிறைய புத்தகம் படித்தார். சுயபால் இனத்திற்காக எழுத தொடங்கினார். 2005ல் , 'பார்ட்னர்' என்ற நாவலை எழுதினார். ஓரின சேர்கைப் பற்றிய இந்த நாவல் சுய பால் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு இந்த புத்தகத்தை பயன்படுத்துகின்றனர்.

அஷோக் ரோவ் ரவி (Ashok Row Ravi)

ஓரின சேர்கையாளரான இவர் மும்பையில் பிறந்தார். சுய பால் இனத்தினருக்காக போராடுவதோடு இல்லாமல், 50000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இந்திய பாரம்பரியத்தை பற்றியும் ஆராய்ச்சி செய்துவருகிறார். மலையாள மணோராமா, சன்டே மைல், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னனி பத்திரிகைகளுக்கு நிருபராக பணியாற்றியிருக்கிறார். 1990ல் பத்திரிகை நிருபர் வேலைக்கு முழுக்கு போட்டு, சொந்தமாக 'பாம்பே தோஸ்த்' என்ற ஓரின சேர்கையாளருக்காக இதழை தொடங்கினார். ஓரின சேர்கை மட்டுமல்லாமல் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வருகிறார். அம்ஸபவர் ஓரின சேர்க்கை அமைப்பை தொடங்கி அதற்கு தலைவராகவும் இருந்து வருகிறார்.

இன்னும் பல பேர் ஓரின சேர்கைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வெளிச்சத்திற்கு வரமால் இருக்கலாம். இன்று நூற்றி ஐம்பது நாடுகளுக்கு மேல் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஓரின சேர்கை திருமணம் சமூகத்தின் அங்கிகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. உலகில் பல நாடுகளில் இவர்கள் போராட்டம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

சரி... போராட்டம் நடத்த அப்படி என்ன இருக்கிறது ? சமூகத்தில் அங்கிகாரம் கொடுக்கவில்லை. ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு தான். போராட்டம் நடத்தினால் மதிப்பும், மரியாதையும் தானாய் வந்து விடுமா ? என்று கேள்வி எழலாம். நியாயமான கேள்வி தான்.

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்கள் புரிய வைப்பதற்காகவும், விழிப்புணர்வு எற்ப்படுத்தவும் தான். ஓரின சேர்க்கையால், தற்கொலை நடக்காமல் இருக்க இவர்கள் பாடுபடுகிறார்கள். ஆனால், உலகளவில் ஓரின சேர்கையாளர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுக்க பல போராட்டங்கள் உலகளவில் நடந்து வருகிறது. மிருகத்தை கேவலமாக தண்டிக்கப்பட்டுயிருக்கிறார்கள். ஏன் ? கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதை பற்றி அடுத்த பதிவில்.....

கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication

http://www.sayoni.com/index.php?option=com_content&view=article&id=1947:interview-giti-thadani&catid=61:literature-queer-a-more&Itemid=54

http://www.desicritics.com/2008/05/06/003835.php

http://en.wikipedia.org/wiki/Manvendra_Singh_Gohil

http://en.wikipedia.org/wiki/Ashok_Row_Kavi

Wednesday, August 11, 2010

பெண்ணியவாதி

யாரும் இந்த அளவுக்கு என்னை அசிங்கப்படுத்தியதில்லை. முதுகுக்கு பின்னாடி இது போல் பேசுவார்கள் என்று தெரியும். ஆனால், மேடையில் அத்தனை பேர் முன்னால் எனக்கு திருமணமாகததை இழிவு படுத்தி அந்த சகோதரி பேசி இருக்க கூடாது.

"இப்போது... பெண்களை அடிமைப்படுத்துவது பெண்கள் என்ற அணியில் பேச கே.கேவை அழைக்கிறேன். வாருங்கள் கே.கே.... எங்கள் காதுகள் கேட்க காத்திருக்கிறது" என்று நடுவர் மாசிலாமணி அறிவித்தார்.

கே.கே எழுந்து மைக்கை தொடும் வரை கை தட்டலும், விசிலும் ஒளித்தது.

" மேடையில் வீற்றுயிருக்கும் நடுவர் மாசிலாமணிக்கும்... ஆண்களுக்காக பேச வந்திருக்கும் எங்கள் அணிக்கும், வீட்டில் ஆண்களை அடிமைப்படுத்தி பெண்களுக்காக பேச வந்திருக்கும் எதிர் அணிக்கும் என் தாழ்மையான வணக்கம்" என்று தொடங்கியதுமே கே.கே வுக்கு கைத்தட்டல் கிடைத்தது.

"பெண்கள் வேலைக்கு போக கூடாது என்று அவர்களின் வளர்ச்சியைதடுப்பது பெண்ணடிமை தனமோ... ஆண்கள் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்து, கவிஞனாக, விளையாட்டு வீரனாக,இசை மேதையாக உருவாக்காமல் செய்வது ஆண்ணடிமை தனம்.



குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சுதா நாராயணமூர்த்தி சொன்னதால் தான், நாராயணமூர்த்தியால் 'இன்போசிஸ்' என்ற பெரிய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது. சுதா போல் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். மனைவி, குழந்தைகளை காப்பாற்ற எத்தனை பேர் குமாஸ்தாவாகவே இருக்கிறார்கள். குடும்பத்தால் ஆண்களே அடிமையாகி இருக்கும் போது அவர்கள் எப்படி பெண்களை அடிமை படுத்த முடியும்.

அரங்கத்தில் சிரிப்பொலியுடன் கைதட்டல் பலமாய் ஒலித்தது. கே.கே எவ்வளவு சீரியஸான தலைப்பாக இருந்தாலும் தன் நகைச்சுவை பேச்சால் தன் அணிக்கு வெற்றி பெற்று தந்துவிடுவார். அதனாலே,மாசிலாமணி மேடை பட்டிமன்றங்களில் கே.கே எப்போதும் இருப்பார். அவர் பேச்சை கேட்கவே ஒரு தனி கூட்டம் வரும்.

"குடும்பத்திற்குள் சிறை கைதியாக இருக்க பெண்கள் விரும்புகிறார்கள். உடல் உழைப்பு, அறிவை சிரமப்படுத்தி வேலை செய்வது வீட்டில் இருக்கும் பெண்கள் விரும்புவதில்லை. வேலைக்கு செல்லும் பெண்கள்,தான் பெண் என்று சொல்லியே எல்லா இடத்திலும் சலுகையை எதிர்பார்க்கிறாள். இதில் பெண் தான் தன்னை அடிமையாக்கி கொள்ளுகிறாளே தவிர ஆண் எங்கிருந்து வந்தான் ?"

கே.கே பேசிய ஐந்து நிமிடங்கள் அரங்கம் மூழுக்க சிரிப்பு மழை தான். எப்படியும், அவர் அணி தான் வெற்றி பெரும் என்று பலர் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

" என்ன ஒரு கருத்தை சொன்னார் பாருங்க...! ஆண்களே குடும்பத்துல அடிமையா இருக்கான். இத தெரிஞ்சு தான் கே.கே. கல்யாணமே பண்ணிக்கல போல. சரி ! பெண்களை ஆண்கள் தான் அடிமைப்படுத்துகிறார்கள் பேச வரப்போறது... அம்மையார் கோமதி அவர்கள். உங்கள் திறமையான பேச்சு உங்கள் அணிக்கு அவசியம். கோமானை போல் காப்பாற்ற கோமதியை மேடைக்கு அழைக்கிறேன்" என்று நடுவர் மாசிலாமணி அறிவித்தார்.

" மேடையில் அமர்ந்திருக்கும் நடுவருக்கும், சக பேச்சாளருக்கும்... குறிப்பாக திருமணமே செய்துக் கொள்ளாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றிய கே.கேவுக்கும். வணக்கம்" என்று சொல்லி கோமதி தொடங்கினார்.

ஆரம்பத்திலே தன்னை தாக்கியது கே.கேவிற்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது.

" பெண்ணை பற்றி தெரியாமல், பெண்ணின் மனதை தெரியாதவர்,பெண்ணோடு வாழதாவர்.... பெண்ணின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் பேசுவதில் எனக்கு பெரிய வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், அவர் பேசியதை கேட்டு நடுவர் முதல்க் கொண்டு கை தட்டியது எதோ ஆணாதிக்க அரங்கித்திற்கு வந்திருக்கிறேன் என்று புரிகிறது."

இவ்வளவு நேரம் அரங்கத்தில் உள்ளவர்களை சிரிக்க வைத்த கே.கே.,கோமதி பேச தொடங்கியது அமைதியானார்கள்.

" கே.கே திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்று சொல்வதை விட அவரின் ஆணாதிக்க குணத்தை பார்த்து எந்த பெண்ணும் திருமணம் செய்ய முன் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்".

தனக்கு கிடைத்த ஐந்து நிமிடத்தில் மூன்று நிமிடமும் கே.கேவின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்குவதில் செலவிட்டார். கடைசியாக அவர் தயார் செய்ய இரண்டு நிமிட பேச்சையும் பேசி முடித்தார்.

நடுவர் மாசிலாமணி தன் தலைமை உரையை முடித்து, தீர்ப்பு சொல்ல இரண்டு தரப்பு வாதங்களையும் முன் வைத்தார்.

இறுதியில், " பெண்களை அடிமைப்படுத்துவது பெண்களை விட ஆண்கள் தான் என்று என் தீர்ப்பை" வழங்குகிறேன் என்று முடித்து தான் ஆணாதிக்கவாதி அல்ல என்பதை காட்டிக் கொண்டார்.

பட்டி மன்ற நிகழ்ச்சி முடிந்ததும், கோமதி ஒருவர் மனதை புண்படுத்திவிட்டோம் என்ற குற்றவுணர்வு இல்லாமல் சென்றார். கே.கே தன் சொந்த வாழ்க்கை மேடையில் விமர்சணமாக்கப்பட்டது மிக வருத்தமாக இருந்தது. நகைச்சுவைக்காகவும் ,தான் இருந்த அணிக்கு சாதகமாக பேசவும் சொன்ன கருத்துக்கள் தனிப்பட்ட விமர்சணமாக மாறியதற்கு நடுவர் கூட வருத்தம் தெரிவிக்காமல் இருந்தது மேலும் கஷ்டமாக இருந்தது.

கல்லூரி பேராசிரியாக இருந்து, எழுத்தில் அதிகம் ஆரவம் கொண்டவர். ஆரம்பத்தில் குறைந்த சம்பளம் என்பதால் திருமணத்தை தவிர்த்தார். பிறகு எழுத்து உலகில் அதிக கவனம் செலுத்த முடியாது என்று கொஞ்ச நாள் திருமணத்தை தவிர்த்தார். திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது வயது முப்பத்தியெட்டானது. அதன் பிறகு திருமணம் செய்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

பெண் சுகம் தேவைப்படும் போதும், மனதில் சோகம் இருக்கும் போதும் பத்மா வீட்டுக்கு செல்வான். விஸ்கி, பிராந்தியை விட அதிகம் போதை கொடுப்பவள் என்று கே.கே அடிக்கடி சொல்லுவான். எல்லா சோகத்திற்கும் காரணம் பெண் தான். மருந்து பெண் தான். இப்போது அவனது கால்கள் பத்மாவின் வீட்டை அடைந்தது.

" ரண்டி சாரு....! பாகவுண்டாரா " என்று சிரித்த முகத்தோடு வரவேற்றாள். பத்மாவின் விபச்சார விடுதியில் வரும் கஸ்டமர்களுக்கு எல்லா பெண்களுக்கும் கே.கே மீது தனி மரியாதை உண்டு. காரணம்,பலர் அவர் எழுத்தை படித்தவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்கள். இன்னொரு காரணம், அந்தரங்கரத்தில் அவன் கில்லாடி.

" ஏமி சார் ! மூத்தி டல்லுகாவுந்தி... தல வலிக்குதா. ஏ சுஜா ! ரைட்டர் ஸாருக்கு மந்து எத்துரா..." என்று சுஜாவை கூக்குரலிட்டு அழைத்தாள்.

" அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பத்மா..." என்று பத்மாவின் மாப்பிளை உபச்சாரத்தை தவிர்த்தான்.

"பத்மா ! எந்த பொண்ணு ப்ரீயா இருக்கா...." என்று கேட்க, " ஐயோ ரைட்டர் ஸாரே ! மிரு வௌச்ச தெளிச்சிவுண்டே இரண்டு அம்மாயி இங்கே வச்சிருப்பேன். பக்கத்து ஏரியாவுல ஒரு தலைவருக்கு பொறந்த நாளாம். இப்போது தான் எல்லாம் அம்மாயியும் போச்சிங்கோ... சுஜா மட்டும் நாக்கு தோடுகா வுந்து.." என்று சொல்ல, சுஜா தலைவலி மருந்தோடு வந்தாள்.

" சரி சுஜா இருக்கால்ல... அவ போதும்" என்றான்.

" உங்களுக்கு ஓ.கே ! எனக்கு என்ன ஸாரே ! சுஜா அம்மா ! ஸாரு பாக கவனிச்சிக்கோம்மா..." என்று சொல்லி சுஜாவோடு ரைட்டரை அனுப்பி வைத்தாள். அறைக்கு செல்லும் முன் பார்ட்டி கொடுக்கும் பணத்தை வைத்து பத்மா விரலை காட்டுவாள். எத்தனை விரல் காட்டுகிறாளோ ஆந்தை முறை சம்மதிக்க வேண்டும் என்பது அந்த விடுதின் சம்பாஷை. ஆனால், கே.கேவுக்கு மட்டும் விதி விளக்கு உண்டு. கே.கேவுடன் செல்லும் பெண்களிடம் எண்ணிகை விரலை பத்மா காட்டமாட்டாள்.

அந்த விடுதியில் சுஜாவின் ரேட்டு தான் கம்மி. பார்க்க சுமாரான உருவம்,ஆள் கொஞ்சம் கருப்பு என்பதால் பல சமயம் விடுதிக்கு வரும் ஆண்கள் அவளை தேர்ந்தெடுப்பதில்லை. கே.கே பல முறை அந்த விடுதிக்கு வந்திருந்தாலும் சுஜாவுடன் முதல் முறையாக இருக்க போகிறான்.

கே.கே வருவதாக தெரிந்தால் போதும் மற்ற பெண்கள் முந்தியடித்துக் கொண்டு அவன் முன் வந்து விடுவார்கள். எல்லாம் கே.கேவின் அந்தரங்க ரகசியதிற்காக தான்.

அறைக்குள் நுழைந்ததும் சுஜா தனது புடவையை நீக்கினாள்.

" என்ன ? உனக்கு அவசரம்மா "

" ரூம்குள்ள வந்ததும் செய்யுறது தானே ! நீங்க என் ட்ரெஸ்களட்டனுமா?"

" செக்ஸ் போது பொண்ணுங்க தான் அவங்க துணிய களட்டனும். ஆம்பளைங்க களட்டினா அவங்க விருப்பதுக்கு மாற செய்யுற மாதிரி"

சுஜா சிரித்துக் கொண்டு , " ட்ரிஸ்ஸ யார் களட்டுனா என்ன ? செக்ஸ் நடக்குறது தான் முக்கியம் இருக்குற இடத்துல வித்தியாசமா பேசுறீங்க !" கூறினாள்.

கே.கேவின் பேச்சு சுஜாவுக்கு மேலும் பேச வேண்டும் என்ற ஆரவத்தை தூண்டியது. அரை மணி நேரம் மேல் அந்த அறைக்கு என்ன செய்ய வந்தோம் என்று மறந்து சுஜா கே.கேவின் நகைச்சுவை பேச்சில் ஆழ்ந்துவிட்டாள்.

மணியாவதை உணர்ந்தாலும் வாங்கிய பணத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சியில் சுஜா, " என்ன சார் ! நைட் முழுக்க பேசிக்கிட்டே இருக்க போறிங்களா " என்று கேட்டாள்.

" ஓ.. நா வந்து ரோம்ப நேரமாச்ச " என்று சிரித்தப்படி சுஜாவின் தோள் மீது கைவைத்தான்.

" என் ட்ரிஸ்ஸ களட்ட போறீங்களா "

" உனக்கு என்ன புடிச்சிருந்தா... ட்ரிஸ்ஸ நீயே கலட்டு...” என்று கே.கே சொல்ல, சுஜா தன் உடைகளை ஒவ்வொன்றாக அகற்றத்தொடங்கினாள். கே.கேவுன் தன் ஆடைகளை துறந்த துறவியானான். இருவரும் பிறந்த மேணியில் கட்டிலில் புரண்டனர்.

கே.கே.வின் இரண்டு கையும் சுஜாவின் உடலில் இருக்கும் எல்லா பாகங்களை தீண்டியது. உச்சி முதல் பாதம் வரை கே.கேவின் உதடுகள் சுவைத்தது. கொஞ்சம் மூச்சு தினறியது. வியர்வை துளிகளில் அனைந்த விளக்கின் நடுவில் கே.கேவின் மோகத்தின் புன்னகை மின்னியது.

"சுஜா ! எனக்கு இது போதும். உனக்கு மூட் இருந்தா என்ன அனுபவிச்சிக்கோ" என்றான்.

சுஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் தேவை தீர்ந்தும், தன் பசியாற்றிய பெண்ணுக்கும் பசி இருக்கும் என்பதை கே.கே சொன்னது வியப்பாக இருந்தது.

ஸீரோ வாட்ஸ் பள்ப் வெளிச்சத்தில் கே.கே அதிசய பிறவிப் போல் பார்த்தாள்.

" என்ன சுஜா ! அப்படி பார்க்குற"

" பணத்திற்காக வர்றவங்க ! அவங்களோட உடம்பு பசியை மட்டும் தான் பார்ப்பாங்க. நீங்க உங்க பசி தீர்த்து வச்சவங்க பசி பத்தி யோசிக்கிறீங்க...நீங்க ரொம்ப பெரிய மனுஷன் ஸார் !!”

" என்ன தான் விபச்சாரியா இருந்தாலும். ஒரு ஆண்ணோட படுக்கும் போது உங்களுக்கு செக்ஸ் பீலிங் இருக்கும்ல. நா பணத்துக்காக வந்தாலும் உங்க உணர்வுக்கு மதிப்பு கொடுக்குறேன். அவ்வளவு தான்.இதுக்கு போய் என்ன பெரிய மனுஷன் சொல்லுற. எனக்கு வயது 38 தானாவது”

சுஜாவின் கண்கள் அறியாமல் கண்ணில் இருந்து கே.கே மீது இரண்டு துளி விழிந்தது.
" என்ன சுஜா ! அழுவுறியா..."

" ஸார் ! நா பல பேரோட படுத்திருக்கேன். கொடுத்த காசுக்கு மேல அனுபவிக்கனும் தான் நினைப்பாங்க. எந்த ஆம்பளையும் அவங்கள அனுபவிக்க விட்டதில்ல.....”

“உண்மையான பெண்ணியவாதி விபசாரிய கூட கட்டுல சமபங்கு தரவன் தான். இப்படி நீ அழுவறதா இருந்தா நா போறேன்.”

சுஜா தன்னை அறியாமல் கே.கேவின் தோள்களை பிடித்து கட்டிலில் தள்ளினாள். கே.கே மீது தன் உடலை பாம்புப் போல் நெளிந்து சென்றாள்.

கே.கேவின் அந்தரங்க ரகசியம் சுஜாவுக்கும் தெரிந்தது.

Tuesday, August 10, 2010

தாரகேஷ் – Pre KG



பெண் குழந்தை என்றால் வாயாடும். கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அதிகார தோரனை அதிகமாக இருக்கும். ஆனால், தாரகேஷ் ( என் மூன்று வயது மகன்) பேச்சிலும் சரி, வார்த்தையால் விளையாடுவதிலும் சரி பெண் குழந்தையை விட மிஞ்சிவிடுவான்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் தாரகேஷ் பள்ளியில் 'கலர் டே' என்று எல்லோரு ஒரு நிற ஆடை அணிந்து வருவார்கள். மஞ்சல், சிவப்பு, பச்சை என்று ஒவ்வொரு திங்களும் ஒவ்வொரு நிறம்.

இப்படி நேற்று திங்கள் (9.8.10), என் மனைவி தாருவை ஏழுப்பும் போது, " குட் மார்னிங் தாரு... அவன் ஸ்கூல்ல இன்னைக்கு என்ன டே தெரியுமா " கேட்டாள்.

“ரோஸ் டேவா!! " என்றேன் நான்.

" இல்ல மம்மி. இன்னைக்கு ஹாலிடே !" என்று சொல்லி மீண்டும் தூங்க சென்றான்.

(இப்ப ஸ்கூல் கட் அடிக்க அஸ்திவாரம் போடுறான்.)

***
ஒரு முறை தாருவுடன் நானும், என் மனைவியும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். ஸ்டாட்டராக சூப் சாப்பிட்டு பிரியாணி, நான் என்று மூவரும் ஒரு கட்டு கட்டினோம். அந்த இடம் கொஞ்சம் காஸ்டிலியான ஹோட்டல் என்பதால் கை கழுவ 'பிங்கர் பவுல்' கொண்டு வந்து எங்கள் முன் வைத்தனர்.

" என்ன டாடி ! இன்னொரு சூப்பா " என்றான்.

சர்வர் முதல்க் கொண்டு அனைவரும் சிரித்தனர்.

( 'பிங்கர் பவுல்' சைஸ் இருந்துக் கொண்டு நக்கல் ஜாஸ்தி )

***



தாரகேஷ்க்கு அவன் பள்ளியில் தோழர்களை விட தோழிகள் தான் அதிகமாம். லக்ஷனா, ரித்திக்கா என்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தான் எப்போதும் விளையாடுவனாம்.

பள்ளியில் இருந்து அவனை அழைத்து வர என் மனைவி சென்ற போது அவன் டிச்சர், " தாரு ! நல்லா படிக்கிறான். எது சொன்னாலும் உடனே புரிஞ்சிக்கிறான். ஆனா, எப்போ பார்த்தாலும் பொண்ணுங்களோட தான் விளையாடுறான்"

சின்ன பசங்க தான் அப்படி தான் இருக்கும் என்று என் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்து சொன்ன தகவல் தான் அதிர்ச்சியாக இருந்தது.

"இரண்டு பொண்ணுங்களோட விளையாடும் போது தீடிர் தீடிர்னு முத்தம் கொடுக்குறான்" என்று கூறினார்.

வீட்டுக்கு வந்ததும் என் மனைவி அவனை டி.வி. பார்க்க விடக் கூடாது என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

( எனக்கு கோபத்தை விட என் மகன் மீது பொறாமை தான் அதிகமாக இருந்தது.)

***

என் மகன் பள்ளியில் சி.டியில் ரைம்ஸ் போட்டு சொல்லிக் கொடுப்பார்கள். என் மகனுடன் ஆருஷ் என்ற பையன் படிக்கிறான். ஆருஷ்யின் பெற்றோர் வழக்கறிஞர் என்பதால் என்னவோ அவனுக்கு தமிழ் ஆர்வம் அதிகம். தமிழ் ரைம்ஸ் போட்டால் கேட்பானாம். இங்கிலீஷ் ரைம்ஸ் போட்டால் கேட்காமல் விளையாட போவானாம்.

என் மனைவி அந்த பையனைப் பற்றி சொல்லும் அவன் மீது மதிப்பே வந்துவிட்டது. அவனை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

அதே பள்ளியில் இன்னொரு மாணவன், தமிழ் ரைம்ஸ் போட்டால் காதை மூடிக் கொள்வானாம். இங்கிலீஷ் ரைம்ஸ் போட்டால் தான் கேட்பானாம். அந்த பையனின் பெற்றோர் சிறுவயதில் இருந்தே இங்கிலீஷ் பாடல் போட்டு தாய்மொழியை மறக்கடித்துத்திருப்பார்கள் என்று மனைவியிடம் சொன்னேன்.

"அந்த பையன் தாரகேஷ் " என்றாள்.

(நல்ல வேளை என் தாய்மொழி தெலுங்கு தான்.)

Monday, August 9, 2010

படித்ததும் பார்த்ததும் - 9.8.10

'எந்திரன்' பாடல் வெளியீட்டு விழாவில் படத்திற்கு 150 கோடி செலவு செய்ததாக சங்கர் கூறியிருந்தார். விளம்பரம், பாடல் வெளியீட்டு என்று இன்னும் போஸ்ட் பிரோடக்ஷன் வேலையில் 20, 30 கோடி செலவு செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறதாம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழியில் வெளியாகும் படங்களுக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட் கிடையாது என்று கருத்து நிலவிவருகிறது. அதற்கான விடை செப்டம்பர் மாதம் தெரிந்துவிடும்.

**

திரும்ப வராத கடந்த காலம்
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துகள்களில் அடிக்கடி கேள்ப்படும் எழுத்தாளரின் பெயர் 'தஸ்தயேவ்ஸ்கி'. நூலகங்களுக்கு சென்ற போது தஸ்தயேவ்ஸ்கியின் 'திரும்ப வராத கடந்த காலம்' புத்தகம் கிடைத்தது. கற்பனை உலகில் வாழும் இளைஞன் ஓர் இரவில், நாஸ்தென்கா என்ற பெண்ணை பார்க்கிறான். அவர்களுக்குள் ஏற்ப்படும் உரையாடல் அடுத்த மூன்று நாள் இரவு அவளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. மூன்றாவது நாளில் நாஸ்தென்காவின் காதலை கேள்விப்படும் அந்த இளைஞன், அடுத்த நாள் இரவு தன் காதலை சொல்கிறான். இறுதியில் அவள் காதலை ஏற்ற்க் கொள்கிறாளா என்பது முடிவு. நான்கு இரவுகள் நடக்கும் கதையில் இருவருக்கு நடக்கும் உரையாடல் கவிதை நடையில் உள்ளது. ஆரம்பத்தில், கற்பனை உலகில் வாழும் போது வீடு, மரம் அவனிடம் பேசுவது போன்ற வரிகள் அஃறினைக்கு கூட உயிர் கொடுத்திருக்கிறார்.

விலை : 60, பக்:112
பரத் பதிப்பகம்
1-A, விஸ்வாஸ் ப்ளாட்ஸ்
2,3, பிள்ளையார் கோயில் தெரு,
நெசப்பாக்கம், சென்னை - 78
Pக்: 24719795

***

ஒரு படம் பண்ணனும்

நாளைய இயக்குனர்களுக்கு இன்ஸ்பிரேஷக்காக நின்ஜா டீம் இயக்கிய படம். தன்னமிக்கையை பற்றி சொல்லும் ஒரு நகைச்சுவை குறும்படம். விரைவில் 'கருணா'வுக்கு ரசிகர் மன்றம் இணையத்தில் தொடங்கினாலும் தொடங்குவார்கள் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு மனிதன் இயல்பாக சிரிக்க வைக்கிறார்.

Friday, August 6, 2010

முன்னனி நாயகர்களின் நகைச்சுவை அனிமேஷன் !!

பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் முன்னனி நாய்கர்களை பகடி செய்வதுப் போல் பேசுவார்கள். நடந்து காட்டுவார்கள். ஆடுவார்கள். முதன் முறையாக விளம்பரத்துக்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் முன்னனி நாயகர்களை கலாய்த்திருப்பது அல்டிமேட் நகைச்சுவை. குறிப்பாக, விஜயகாந்த் அனிமேஷனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது.

Rajini Power --- Watch him do the ultimate !!!



Syscom Vijayakanth's Comedy


gsmani2@gmail.com

'Pokkiri' விஜய் டான்ஸ்

Thursday, August 5, 2010

ஓரின சேர்க்கை - உலக தொண்டு நிறுவனங்கள்

மலேரியா, பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா போன்ற முக்கிய வியாதிகளுக்கு மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கமே பொருப்பேற்றுகிறது. டி.வி, போஸ்ட்டர், ரேடியோ என்று விளம்பரப்படுத்தி மக்களுக்கு நோய்களை பற்றி விளக்குவார்கள். அதே போல், எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்றபடுத்துவதற்கு அரசாங்கத்தோடு தனியார் தொண்டு நிறுவனங்களும் லாபம் நோக்கமில்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி மக்களுக்கு வியாதிகள் பற்றி புரியவைப்பதாகட்டும், நல்ல திட்டங்களை கொண்டு செல்வதாகட்டும் தொண்டு நிறுவனங்களில் பங்கு கண்டிப்பாக உண்டு.

உயிரை குடிக்கும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வும், உடல் உறவு பற்றி பாதுகாப்பைப் பற்றி பேசும் தொண்டு நிறுவனங்கள் இருப்பது போல் ஓரின சேர்கை பற்றி மக்களுக்கு புரிய வைக்கவும், அவர்களும் மனிதர்கள் என்று விளக்கவும் சில தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்கள் கே, லெஸ்பியன் என்று யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வதில்லை. கௌன்சிலிங் முறையில் அவர்கள் கே, லெஸ்பியன் என்று தெரிந்த பிறகே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி கே, லெஸ்பியன் இல்லாதவர்கள், தங்களை தவறாக கே, லெஸ்பியன் என்று நினைத்துக் கொண்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப படுகிறார்கள்.



உலகளவில் ஓரின சேர்க்கைக்காக ஒரு சில தொண்டு நிறுவனங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.

International Lesbian and Gay Association ( ILGA)
International Lesbian Information Service ( ILIS)
International Gay and Lesbian Human Rights Commission ( IGLHRC)
International Lesbian, Gay, Bisexual, Transgender and Queer Youth and Student Organisation (IGLYO)
International Lesbian, Gay, Bisexual, Transgender & Intersex Law Association (ILGLaw)

உலகிலே அதிக கே, லெஸ்பியன் கொண்ட தொண்டு நிறுவனக்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தில் தான் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 118 கே, லெஸ்பியன் அமைப்புகள் உள்ளது.

International Lesbian, Gay, Bisexual, Trans and Intersex Association (ILGA)

இன்று 600க்கும் மேற்பட்ட கே, லெஸ்பியன் அமைப்பினரை அங்கத்தினராக கொண்ட அமைப்பு. கே, லெஸ்பியன் எதிராக நடத்தப்படும் வன்முறைகள், கொடுமைகள், உரிமை மறுப்பு போன்ற விஷயங்களில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. இன்று உலகளவில் 110 நாடுகளுக்கு மேல் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

கே, லெஸ்பியன் அமைப்புகளில் UN ECOSOC (Economic and Social Council) வின் லாபம் நோக்கமற்ற தொண்டு நிறுவனம் என்ற அங்கிகாரம் பெற்ற முதல் தொண்டு நிறுவனம் ILGA தான்.

அதன்பின் உலகத்தில் உள்ள 3000 கே, லெஸ்பியன் அமைப்பினர் இதில் அங்கத்தினராக உருவாகினார்கள். ஆனால், ஒரு சில காரணத்தால் அடுத்த வருடமே ECOSOC கொடுத்த அங்கிகாரத்தை திரும்ப பெற்றது. அதன் பிறகு, தனியாகவும், மற்ற அமைப்பினருடனும் சேர்ந்து ECOSOC அங்கிகாரத்தை பெற முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இழந்த அங்கிகாரம் மீண்டும் கிடைக்கவில்லை.

இருந்தும், இந்த அமைப்பு செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை.

International Lesbian Information Service (ILIS)

ஒரு கொள்கை தான். ஆனால், கருத்தளவில் வேறுபடுவதால் பல சங்கங்கள், கட்சிகள் உருவாகுவது போல் கே, லெஸ்பியன் போராடும் தொண்டு நிறுவனங்களில் கூட வெவ்வேறாக அமைப்பாக செயல்படுகிறது.

ILGA இயங்குவதில், உறுப்பினர் சேர்வதில் ஒரு சில நிபந்தனைகள் உள்ளது. இதில் உறுப்பினராக தொண்டு நிறுவனங்கள் செக்ஸ் மற்றும் நிற பிரச்சனைகள் முன் நிறுத்தி செயல்பட வேண்டும். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற கே அமைப்பினர் (GASA - Gay Association of South Africa) செக்ஸ் பிரச்சனைகளில் காட்டிய முக்கியதுவத்தை நிறவெறி பிரச்சனைகளில் காட்டவில்லை. அதனால், அவர்கள் உறுப்பினர் ஒரு வருடத்திற்கு ரத்து செய்தது.

கே உறுப்பினர் சேர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை லெஸ்பியன் உறுப்பினர்கள் சேர்ப்பதில் காட்டவில்லை என்ற கருத்து வேறு இருந்தது. ILGA வில் இருந்த அதிருப்தியால் 1982 ல் இத்தாலியில் உள்ள டூரின் என்ற இடத்தில் கூட்டம் நடத்தினார்கள். அதில், பல லெஸ்பியன் பெண்கள் சேர்ந்து ILIS என்ற அமைப்பை தொடங்கினர்.

ஆரம்பித்த வேகத்தில் துண்டு பிரசுரம், பிரச்சாரம் என்று மேற்கொண்ட 'ILIS' அமைப்பு, அதன் பின் பெரிதாக செயல்படாமல் போய்விட்டது.

International Gay and Lesbian Human Rights Commission (IGLHRC)

ரஷ்யயர், அமெரிக்கர் கே, லெஸ்பியன் கூட்டமைப்பால் 1990 ல் இந்த அமைப்பு உருவானது. ஆரம்பத்தில் ரஷ்யாவில் நடக்கும் மனித உரிமைக்கு மட்டும் குரல் கொடுத்து வந்த அமைப்பு பின்பு அமெரிக்கா, ஆப்ரிகா, ஆசியா என்று உலகளவில் பரவ தொடங்கியது. கே, லெஸ்பியனுக்காக வுக்காக உழைக்கும் தோழர் / தோழிகளுக்கு இந்த அமைப்பு ஆண்டு தோறும் பரிசு வழங்குகிறது. ஜூலை 19, 2010 அன்று இந்த அமைப்புக்கு ECOSOCவின் லாபம் நோக்கமற்ற தொண்டு நிறுவனம் என்ற அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.

International Lesbian, Gay, Bisexual, Transgender and Queer Youth and Student Organisation (IGLYO)

1984ல் ஐரோப்பிய பகுதியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மாணவர்கள், இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு ஐரோப்பிய பகுதியில் கே, லெஸ்பியன் பற்றி உரிமைகள், பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள்.

International Lesbian, Gay, Bisexual, Transgender & Intersex Law Association (ILGLaw)

கே, லெஸ்பியன், இருபால் உறவு வைத்துக் கொள்பவர், பால் மாறியவர்கள் மட்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளாமல் சட்டம் படித்தவர்கள், சட்டத்துறை சம்மந்தப்படவர்களையும் இதில் உறுப்பினராக சேரலாம். ஓரின சேர்கையாளர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவதில் முதன்மையாக திக ழ்கிறது.

இந்தியாவில் செயல் பட்டுவரும் கே, லெஸ்பியன் தொண்டு நிறுவனங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication
http://www.sayoni.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=8&Itemid=54
http://en.wikipedia.org/wiki/International_Lesbian_and_Gay_Association
http://en.wikipedia.org/wiki/International_Lesbian,_Gay,_Bisexual,_Transgender_and_Queer_Youth_and_Student_Organisation

http://en.wikipedia.org/wiki/International_Lesbian,_Gay,_Bisexual,_Transgender_%26_Intersex_Law_Association

Tuesday, August 3, 2010

கவிதை : விழித்தெழு தமிழா விழித்தெழு !

அன்று,
தமிழில் எழுதினால்
'புரட்சி' என்ற அங்கிகாரம் கொடுத்து
கைது செய்து சிறையில் அடைத்தான் !
இன்று,
தமிழில் எழுதினால்
விலைப்போகாது என்று
தமிழனே குப்பையில் எறிகிறான் !

அன்று,
வெள்ளைக்காரன் கூட
தமிழில் பேச முயற்சித்தான் !
இன்று,
தமிழனே தமிழை மறந்து
ஆங்கிலம் பேசுகிறான் !

அன்று -
'தமிழ்' தமிழனை தட்டி எழுப்பியது !
இன்று -
'தமிழ்' தமிழனுக்கு இன்னொரு ஒரு மொழியானது !

அன்று - தமிழ் புரட்சியை தூண்டியது !
இன்று - தமிழ் அரசியலானது !

தமிழ் நாட்டில் பிறந்ததால்
தன்னை தமிழன் என்கிறான் !
தமிழ் பேசும் மற்ற நாட்டினறின்
புர்வீகத்தை ஆராய்கிறான் !
பணத்திற்காக எழுதிவிட்டு
'புரட்சி' என்று சட்டம் பேசுகிறான் !
அமாவாசையில் பௌர்ணமி நிலவு
பற்றி சித்தாந்தம் பேசுகிறான் !

இன்னும்,
மிதம் இருக்கும்
தமிழ் உணர்வை தட்டி எழுப்ப
சிதரிக்கிடக்கும்
எச்சங்களை ஒன்று திரட்டி
அலைகளாக மாற்றுவோம் !

விழித்தெழு தமிழா விழித்தெழு !


( 31.7.10 அன்று ஜெர்மன் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் வாசித்த கவிதை. )

Monday, August 2, 2010

படித்ததும் பார்த்ததும் - 2.8.10

எமர்ஜன்சி காலத்தில் உணவு பொருள் வீணாக்கக்கூடாது என்ற சட்டம் கொண்டுவந்தார்கள். திரைப்படத்தில் சண்டை காட்சியில் பழம், பால் கீழே கொட்டுவது போன்ற காட்சிகளை தவித்து போலி உணவு பொருட்களை தான் பயன்படுத்துகிறார்கள். இப்படி உயிர் வாழ தேவையான உணவு பொருளை போராட்டம் என்ற பெயரில் யாருக்கும் பயன்படுத்தாமல் வீணாக்கியிருக்கிறது 'சிவ சேனா' கட்சி. மும்பையில் நடந்த ஒரு போராட்டத்தில் தங்கள் எதிர்ப்பை காட்ட 50,000 லிட்டர் பாலை கீழே கொட்டியுள்ளது. பசியால் தினமும் இந்தியாவில் ஐம்பதுக்கு மேற்பட்ட பேர் இறப்பதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகிறது. இது போல், உணவு பொருளை வீணாக்குபவர்கள் மீது கட்சி பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசும், மத்திய அரசும் என்ன செய்துக் கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.

மேலும் படிக்க


***

எவ்வளவோ பண்ணுறோம் இத பண்ணமாட்டோமா

ஒரு அமெச்சூர் குறும்படம். உடல் எடை குறைப்பதை நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள். என்னை போல் குண்டாக இருந்தவர்கள் உடல் எடை குறைக்க பட்டபாடை பார்க்கும் போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.



***

இணையத்தில் புத்தகம் வாங்க வணிக தளம்


புத்தக கடை வைத்திருப்பவர்கள் வணிக தளம் வைத்திருப்பது தேவையான ஒன்றாக மாறிவருகிறது. இதில், நம் பதிவு நண்பர் 'டிஸ்கவரி புக் பெலஸ்' வேடியப்பன் அவர்கள் ஒரு தளம் தொடங்கியிருக்கிறார்.இனி பதிவர் புத்தகம் வாங்க கே.கே நகர் போக தேவையில்லை. இணையத்தில் வாங்கலாம்.

அந்த தளத்தை பார்க்க

LinkWithin

Related Posts with Thumbnails