வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, September 27, 2010

நேரு முதல் நேற்று வரை

ப.ஸ்ரீ. ராகவன்



ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆவதற்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் பல இருக்கிறது. தகவல், அறிவியல், தொழினுட்பம் என்று பல விஷயங்களை பற்றி கேள்வி ஞானமாவது இருந்திருக்க வேண்டும். ஒரு வருடம் கடுமையாக உழைக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் தவிர எதை பற்றியும் நினைத்துக் கூட பார்க்க கூடாது. இப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பலர் சொல்லும் கருத்துகள் இவை. ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிறகு எப்படி இருக்க வேண்டும், எப்படி மேலான்மை வளர்த்துக் கொள்ள வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பாடுப்பட வேண்டும் என்று சொல்லக் கூடிய புத்தகங்கள் எதுவும் இல்லை.அந்த குறையை இந்த புத்தகம் போக்கியுள்ளது.

ஓய்வு பெற்ற ப.ஸ்ரீ. ராகவன் அவர்களின் ப்ரோபைலே வியக்க வைக்கிறது. மாநில அரசியல் , மத்திய அரசியல் முதல் ஐ.நா வரை பார்த்தவர். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி போன்ற முக்கிய பிரதமர்களிடம் பணியாற்றியவர்.


ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தன் வாழ்க்கையை தொடங்கியதால் வங்காளிகள் பற்றிய தனது அனுபவத்தை அதிகம் பதிய வைத்திருக்கிறார்.

* கண்ணெதிரில் நடக்கும் அநீதியையும் அதிகார வர்க்கத்தின் இறுமாப்பையும் இரக்க மின்மையையும் பொறுத்துக் கொள்ளும் குணம் வங்காளிகளுக்குக் கிடையாது.

* அதிகார தோரனையில் கட்டளையிட்டு அவர்களிடம் வேலை வாங்க முடியாது. ' ஒருவர் முதுகை ஒருவர் தட்டி கொடுத்து தான் வேலை வாங்க முடியும்.
மனிதர்களுக்கான நிறைகுறைகள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், அவர்கள் மிருகங்களாக நடந்துக் கொள்ளமாட்டார்கள்.

* தமிழ் நாட்டில் அதிகார வர்க்கத்தினர் காட்டும் கொடுமைகளையும், சமூக அவலங்களின் சாட்டையடிகளையும் நாம் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். வங்காளிகளுக்கு அந்த தாழ்வு மனப்பான்மை கிடையாது.அதுதான் வித்தியாசம்.

அதே போல், அவர் பணியாற்றிய பிரதமர்கள் பற்றியும் இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஜோதிபாசு பிறகு ஒரு மாநிலத்தில் தொடர்ந்து அதிக ஆண்டுகளுக்கு முதலவராக இருந்தவர் பி.சி.ராய் அவர்கள். 12 ஆண்டுகளுக்கு முதல்வராக இருந்தவர் நாள் முழுவது உழைத்தபோதும், காலையிலும், மாலையிலும் இரண்டு மணி நேரம் ஏழைகளுக்கு அவர் வீட்டில் இலவச சிகிச்சை செய்துவந்தார்.

இந்திரா காந்தி சிறு சிறு விஷயங்களுக்கு கூட அமைச்சர்களை விட அதிகாரிகளை தான் அதிகம் நம்பினார்.

இன்னும், சில இடங்களில் காங்கிரஸின் சாயலை மறைமுகமாகவும், நேரடியாகவும் கிலித்திருக்கிறார்.

**

1994ஆம் ஆண்டு டி.என்.சேஷன் தன் பணிகால அனுபவங்களை அடங்கிய புத்தகத்தில், அவர் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில், அண்ணாதுரை அவர்கள் அமெரிக்க உளவகமான சி.ஐ.ஏயின் கைப்பாவையாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார் என்ற தோனியில் எழுதினார். அந்த புத்தகத்தை திராவிட கடசிகள் தடை செய்ய உச்ச நீதிமன்றம் வரை சென்றனர்.

ஒரு கலெக்டருக்கு புலனாய்வு நிறுவனத்தின் எந்தத் தகவலும் எந்த விதத்திலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிய வேண்டிய தேவை எழுந்தால் கூட, மத்திய உளவுத் துறைக்குத் தெரியாதது மதுரை கலெக்டருக்கு தெரிந்திருக்க முடியாது. பல வருடம் முன் நடந்த சம்பவத்தை இந்த புத்தகம் மூலம் ஞாபகப்படுத்திருக்கிறார். இந்த புத்தகத்தில் இது தேவையா என்று தோன்றுகிறது.

**
ஐ.ஏ.எஸ் குறித்து சுவையான தகவல்கள்

கணவன், மனைவி இருவரும் ஐ.ஏ.எஸ்யில் இருப்பவர்களாக இருந்தால், கூடுமான வரை ஒரே இடத்தில் வேலைகளுக்கு நியமிப்பது என்ற கொள்கையை அரசு கடைப்பிடிக்கிறது.

பல மாவட்டங்களில் போக்குவரத்து வாகனங்கள் கிடையாது என்பதால் 1980ஆம் ஆண்டு வரை ஐ.ஏ.எஸ் பயிற்சியில் குதிரை ஏற்றம் மிக முக்கியமான பயிற்சியாக இருந்தது.

**

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மிக முக்கியமான பங்கு ஒரு புதிய திட்டம் வகுப்பது என்றால், அமைச்சர்களுக்கு துறை சார்ந்த தகவல், அதன் பாதுப்புகள், அதன் அடிப்படியில் எடுக்க வேண்டிய முடிவுகளைப் பற்றி அறிவுரை கூற வேண்டும். அதன் பாதிப்பு, தாக்கங்களை பற்றி அமைச்சருக்கு எடுத்துக்கூற, எழுத்தில் தர அதிகாரிக்கு உரிமை உண்டு. அதையும் மீறி அமைச்சர் செயல்பட விரும்பினால், அதற்கான காரணங்களை விளக்கமாக அமைச்சர் எழுதிக் கையெழுத்திட வேண்டும். அந்த உத்தரவை மதித்து நிறைவேற்றுவது அதிகாரியின் கடமை.

இறுதி அத்தியாயத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அறிவுரை கூறுபதாக இருந்தாலும், அவருக்கும் உள்ளுக்குள் இருந்த பயம் தெரிகிறது.

இப்போது இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பணி அனுபவத்தை பற்றி எழுதினால் அதில் பெரும் பகுதி ஊழல் பற்றியதாக இருக்கும். சிலர் ஊழலில் மந்திரிகளையே மிஞ்சியவர்கள். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை இந்த நூல் சொல்லுகிறது.

நூலை வாங்க... இங்கே

ரூ.150, பக்: 256
கிழக்கு பதிப்பகம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails