வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 29, 2010

Reaction and Response



ஹோட்டலில் ஒரு பெண் மீது கரப்பான்பூச்சி அவள் மீது விழ, கத்தி ஆரபாட்டம் செய்துவிட்டாள். கத்தக்கள்ளி, குச்சுபுடி என்று பல நடனங்கள் ஆடியும் அவள் உடலில் இருந்து அது அகரவில்லை. அவள் பக்கத்தில் இருக்கும் கணவன் தட்டி விட, அந்த கரப்பான் இன்னொரு பெண் மீது பவ்வியமாக அமர்ந்தது.

அந்த பெண் செய்தது இரண்டு மடங்கு நடனமாடி கரப்பான்பூச்சி தள்ளிவிடுகிறாள். அந்த கரப்பான் காபி கப் எடுத்து வரும் சர்வர் மீது கால் மேல் கால் போடாத குறையாக ஏறிக்கொண்டது.

அவன் அசரவில்லை. பொறுமையாக இருந்தான். அதன் அசைவுகளை தீவிரமாக கவனித்தான். தன் கையில் காபி கப்பை வைத்துவிட்டு, அது தப்பிக்க முடியாத நேரம் பார்த்து பிடித்து தூக்கி வெளியே ஏறிந்தான்.

அந்த ஹோட்டலில் நடந்த கலாட்டாவுக்கும் கரப்பான்பூச்சிக்கும் ஏதாவும் சம்மந்தமுண்டா ? இல்லை.

கரப்பான்பூச்சி தூக்கி ஏறிய சர்வர் காட்டிய நிதானத்தை அந்த இரண்டு பெண்மணிகள் காட்டவில்லை.

எந்த பிரச்சனையையும் நம் உடனே எதிர்விளைவை காட்டுவதிற்கு பதிலாக நாம் பொறுமையாக கையாள வேண்டும்.

வீட்டில் அப்பா திட்டுயதும், வாடி சென்று குழந்தைகள் அழுகிறது.

முதலாளி நம்மை திட்டிய பிறகு வேலையில் கோபத்தை காட்டி மேலும் தவறுகள் செய்கிறோம். நாம் தவறுகள் செய்வதற்கும், நம்மை திட்டியவர்களுக்கு எந்த சம்மந்தமில்லை. நாம் காட்டிய எதிர்விளைவு தான் காரணம்.

மேல் குறிப்பிட்ட பிரச்சனையில் பெரிதாக தெரிந்தது. காரணம், அந்த பெண் எதிர்விளைவை உடனே காட்டியது தான். சர்வர் பொறுமையாக கையண்டதால் பிரச்சனை மேலும் வளராமல் இருந்தது.

வரி விலக்கில்லாத ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால்

We should not react in life, we should always respond.
Reactions are always instinctive whereas responses are always intellectual


***

மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சந்திருவுக்கு நன்றி :)

Wednesday, October 27, 2010

மின்னஞ்சலில் வந்த நகைச்சுவை

ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் " நெத்து நா தாஜ் ஹோட்டல்ல நாஸ்தா துண்ணேன்"

"மெய்யாலுமா !" என்று வியந்தான் இரண்டாம் பிச்சைக்காரன்.

"நெத்து ஒரு மவ ராசன் 100 ரூபா பிச்ச போட்டாரு. அந்த தூட்ட வச்சு சோலா ஹோட்டல்ல 1000 ரூபாய்க்கு துண்ணேன். சப்லையரு தூட்ட கேட்க இல்ல சொன்னேன்."

" அடி பின்னியிருப்பாங்களே ! "

" இரண்டு அடி அடிச்சு போலீஸ்கிட்ட விட்டுட்டாங்க "

"அப்புறம் ??"

" என் கிட்ட இருந்த 100 ரூபா கொடுத்தேன். விட்டுட்டான் "

***

கணவன் மனைவி இடையே பெரிய சண்டை.

கோபத்தில் மனைவி தன் அம்மாவிடம் போனில், " எனக்கும் அவருக்கும் மறுபடியும் பெரிய சண்ட. நா உன் கூட வந்திருக்கேன்" என்றாள்

" இல்லம்மா... ! உன் புருஷன் செஞ்ச தப்புக்கு வருத்தப்படனும். நா வந்து உன் கூட தங்குறேன் " என்றாள்.

***


கடவுளை கேட்டால் எதுவும் கிடைக்கும் என்று அம்மா சொல்ல, அப்பாவிடம் கேட்க பயந்து கார்த்திக் என்ற சிறுவன் ஐந்நூறு ரூபாய் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதினான்.

ஆனால், எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ரொம்ப நேரம் யோசித்தான். எந்த அட்ரஸ் போட்டால் சீக்கிரம் போகும் என்று யோசித்து கடைசியில் நிதியமைச்சருக்கு அனுப்புகிறார். அவர் அலுவலகத்தில் கடிதத்தை பார்த்து நிதி அமைச்சருக்கு தெரிவிக்கின்றனர்.

சிறுவன் மனது புண் படக்கூடாது என்பதற்காக கடவுள் பெயரில் இர நூறு ரூபாய் அனுப்பி வைக்கிறார்.

கொஞ்ச நாட்களில் அந்த சிறுவனிடம் இருந்து பதில் வருகிறது. நிதி அமைச்சர் ஆர்வமாக திறந்து படித்தார்.

அன்புள்ள கடவுளுக்கு,

நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்தது.

எதற்கும் வரி போடும் அரசாங்கம், நீங்கள் அனுப்பிய ஐந்நூறு ரூபாய்க்கு ரூ.300 வரி வாங்கி கொண்டு தான் அனுபியிருக்கிறார்கள்.

அன்புடன்,
கார்த்திக்

Tuesday, October 26, 2010

காதல் கவிதைகள்

இயற்கை செய்த
க்ளோனிங்
அவள் மேல் விழுந்த
மழைத் துளி !

**

உன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த
வைரமாலை கரைந்து விட்டதாக சொன்னாய் !
என் காதலை புரிந்து கொள்ளாத உனக்கு
என் கண்ணிர் துளியா தெரிய போகிறது !

**



உள்ளங்கையறித்தால்
பணம் வருமாம்
யார் சொன்னது ?
புதையல் நீ கை கொடுத்ததால்
எனக்கு
கை ரேகையே வந்தது !!

**

அதே புன்னகை
அதே காதல்
அதே மோகம்
அறுபது வயதில்... !

**

என் வீட்டு
எதிரே வந்த பிறகு
காலியாய் இருந்த
என் டைரி பக்கங்கள்
கவிதை வாசித்தது !!

**
என் பழைய கவிதைகளை
காட்டிய போது
ஒவ்வொரு பக்கமும்
தனியாக வருகிறது
என்று சொன்னாய் !

நன்றி கெட்ட கவிதை
எழுதியவனை விட்டுவிட்டு
எழுத தூண்டிய
உன்னை தேடி வருகிறது !!

Thursday, October 21, 2010

காவலன் – படம் பார்க்காதவனின் விமர்சனம்

பதிவுலகில் முதல் முறையாக படம் வெளிவரும் இரண்டு வார முன்பே வரும் விமர்சனம்.

எப்படியாவது ஒரு பணக்காரனுக்கு காவல்க்காரனாக வேண்டும் என்பது அர்ஜூனின் லட்சியம். அதனால், தன் ஹீரோயிசத்தை பயன்படுத்தி பெரிய தலைகளை கவர நினைக்கிறான். அவன் செய்யும் ஹீரோயிசம் எல்லாம் காமெடி பீஸாய் போகிறது.

பெரிய தாதாவாக இருந்து ரௌடிசத்தை விட்டு தன் குடும்பத்தோடு வாழும் ராஜ்கிரணுக்கு காவலனாக முயற்சிக்கிறான் அர்ஜூன். ராஜ்கிரண் மறுத்தும், பெரிய சிபாரிசுடன் வருகிறான். வேறு வழி இல்லாமல் அர்ஜூனை காவலனாக வேலைக்கொடுக்கிறார் ராஜ்கிரன். ஒரு சந்தர்ப்பத்தில் ராஜ்கிரண் உயிரை காப்பாற்றுகிறான் அர்ஜூன். அதனால், தன் மகள் மீராவின் காவலனாக அர்ஜூனை இருக்க சொல்கிறார்.



மீராவும், அவன் தோழி மித்ராவும் செல்லும் இடமெல்லாம் காவல்காக்கிறேன் என்ற பெயரில் அர்ஜூன் பின் தொடர்கிறான். அவன் தொல்லை தாங்க முடியாத இருவரும் முகம் தெரியாத பெண்ப் போல் அர்ஜூனின் செல்லுக்கு போன் செய்கிறார்கள். அர்ஜூனை காதலிப்பதாக சொல்கிறாள் மீரா. ஆரம்பத்தில் விளையாட்டாக போக ஒரு கட்டத்தில் அர்ஜூன் போன் பேசும் பெண்ணை காதலிக்கிறான். மீராவும் அர்ஜூனை காதலிக்க தொடங்குகிறாள். அர்ஜூன் காதலிப்பது தன்னை தான் என்று மீரா சொல்ல வரும் போது ராஜ்கிரண் அர்ஜூனை தன் மகளை காதலிப்பதை அறிந்து அடிக்கிறான். அர்ஜூனை காப்பாற்ற மீரா ராஜ்கிரணிடம் அர்ஜூன் காதலிப்பது தன் தோழி மித்ரா என்கிறாள். அர்ஜூனும் தன்னிடம் போனில் பேசியது மித்ரா என்று நினைத்துக் கொள்கிறான். மித்ராவும் வேறு வழியில்லாமல் தன் தோழிக்காக அர்ஜூனின் கரத்தை பிடிக்கிறாள்.

சில வருடங்களுக்கு பிறகு.... அர்ஜூனின் மனைவி மித்ரா இறந்துவிடுகிறான். இறப்பதற்கு முன் தன் மீராவைப் பற்றி தன் டைரியில் எழுதி வைத்ததை அர்ஜூனின் மகன் படிக்கிறான். மீராவை பார்க்க வேண்டும் என்று அர்ஜூனிடம் கேட்க, முதலில் மறுக்கும் அர்ஜூன் பிறகு சம்மதிக்கிறான். ( kuch kuch hota hai படம் ஞாபகம் வந்தால் நான் பொருப்பில்லை )

அர்ஜூன் தன் மகனோடு மீராவை பார்க்க வருகிறான். அர்ஜூனும், மீராவை இணைந்தார்களா ? அவர்கள் காதலுக்கு ராஜ்கிரண் சம்மதித்தாரா ? என்பது தான் மீதி கதை.

தீபாவளியில் வெளியாகும் 'காவலன்' படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

அர்ஜூனாக விஜய். தன் முந்தைய படங்களில் ஹீரோயிசம் என்ற பெயரில் காமெடி செய்தவர், இதில் காமெடி என்ற பெயரில் ஹீரோயிசம் செய்திருக்கிறார். செயற்கைத்தனமாக இருக்கிறது. கதையே இல்லாமல் சுறா, வேட்டைக்காரன் நடித்தவர் கொஞ்சம் கதை இருக்கிற படத்தை தேர்வு செய்திருக்கிறார். அதற்காக பாராடியாக வேண்டும்.

மலையாளத்தில் திலீப் இயல்பாக செய்த நகைச்சுவையை விஜய் சில இடங்களில் படு மொக்கையாக்கி விட்டார்.

மீராவாக அசின். பல இடங்களில் முதிர் கன்னியாக தெரிகிறார். அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் தயாராகிவிட்டார் என்று தோன்றுகிறது.

அசினின் தோழியாக 'சூர்யன் சட்டக் கல்லூரி' நாயகி மித்ரா. மலையாளத்தில் செய்த அதே பாத்திரத்தை ஏற்று, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

வேட்டி, சட்டையில் வந்த ராஜ்கிரணை கோர்ட், சூட் போட்டு அழகு பாத்திருக்கிறார்கள். ஆனால், பேச்சில் அதே கிரமாத்து நடை தான். அசினின் அம்மாவாக ரோஜா. 'நெஞ்சினிலே' படத்தில் விஜய்யுடன் ஆட்டம் போட்டவர், இதில் அவருக்கு அத்தையா...!! நினைக்கவே கொடுமையாக இருக்கிறது.

மலையாளப்படத்தில் ரீமேக் என்பதால் பல இடங்களில் மலையாள வாசம் இருக்க தான் செய்கிறது.

விமரசனத்துக்கு உதவியது :

பாடிகார்ட் ( மலையாளப்படம்)
விஜய் , அசின் முந்தைய படங்கள்
காவலன் படத்தின் வேலை செய்தவர்களின் பேட்டி


படம் பார்க்காமல் விமர்சனம் எழுதியதை கண்டிக்க நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

சொந்த கற்பனையில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என்று வெளி மொழி படங்களை ரீமேக் செய்தால், படம் பார்க்காமல் விமர்சனம் எழுதுபவர்கள் வரத்தான் செய்வார்கள்.

Friday, October 15, 2010

மகாபுல்வெளி : ஆன்டன் செகாவ்

உலக இலக்கிய ஆளுமைகள் உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, கோகல், புஷ்கின், துர்கனேவ் என்று தொடரும் இந்த பெரிய பட்டியலில் செகாவ் மிகவும் முக்கியமானவர்.

ஜனவரி 29, 1860 அன்று ஆன்டன் செகாவ் பிறந்தார். தன் பெற்றோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் கிரேக்கம் கற்க கிரேக்க பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், கிரேக்க தேர்வில் இவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. ருஷ்ய மொழியில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். பள்ளிப்படிப்பு முடித்து மருத்துவம் படிக்க மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

குடும்ப சுவை, படிப்புக்கு பண தேவை, பொருளாதார உதவிக்காகவும் பணம் திறட்ட தான் செகாவ் எழுத தொடங்கினார். அவருடைய அரும்பு எழுத்துகளுக்கு ஒரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. Oskolki என்ற முன்னனி பதிப்பகத்தில் எழுத செகாவுக்கு வாய்ப்புகிடைத்தது. அந்த பதிப்பகத்திற்காக பல சிறுகதை எழுதினார்.

அவர் எழுதிய The Huntsman சிறுகதைக்கு அன்றைய காலத்தில் பெரிய எழுத்தாளராக கருதப்படும் க்ரிங்ரோவின்ச் அவரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அவரின் பாராட்டு மேலும் பல சிறுகதை எழுத தூண்டியது.

A Dreary Story, The Murder, Peasants போன்ற சிறுகதைகள் எழுதியோடு The Seagull என்ற நாடகத்தை எழுதியிருக்கிறார். ஆனால் அவரை அதிகம் புகழ் உச்சியில் கொண்டு சென்றது என்றால் ‘Steppe’ கதை தான்.

Severny Vestnik (The Northern Herald) என்ற பத்திரிகையில் Steppe’ கதை பிரசுரமானது.

ஒன்பது வயது சிறுவன்யின் பயணம் தான் கதையின் கரு. பெற்றோரை இழந்த ஒன்பது சிறுவன் தன் மாமாவுடன் ரயிலில் பயணம் செய்கிறான். பயணத்தில் அவன் சந்திக்கும் பாதரியார், பெண், இன்னும் சில நண்பர்கள், குதிரை பயணம் என்று ஒரு பயணத்தின் கதையாக செல்கிறது. சிறுவனின் பயணத்தில் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று சில இடங்களில் செகாவ் கவிதை நடையில் அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நாவல் வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதை என்று ‘Steppe’ கருதப்படுகிறது. Steppe’ கதைக்கு கிடைத்த வரவேற்பு, Ivanov என்ற நாடகத்தை செகாவ் எழுத உத்வேகமாக இருந்தது.




இன்று பல இலக்கியவாதிகளின் பார்வையில் ஆன்டன் செகாவ் மாஸ்டர் பீஸ்ஸாக சொல்லுவது என்ற நாவலை தான். இதை ம.ந.ராமசாமி திறம்பட தமிழில் 'மகபுல்வெளி' என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.

புத்தகத்தை வாங்க.... இங்கே


செகாவின் ஆளுமையை பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ‘செகாவின்மீது பனிபெய்கிறது' என்ற நூலை எழுதியிருக்கிறார்.

மகாபுல்வெளி :
ஆன்டன் செகாவ்
ரூ.80, பக் : 192
தமிழில் : ம.ந.ராமசாமி

Wednesday, October 13, 2010

இரத்த சரித்திரத்தின் கதை !

சீமான்களை எதிர்த்து நிலப்போரட்டத்தில் குதித்த ராமுல்லையாவை, நில முதலாளியான நாராயண ரெட்டி கொலை செய்கிறான். தன் தந்தை மரணத்திற்கு காரணமாக இருந்த நாராயண ரெட்டி, நர்சன்னா ரெட்டி என்று ஒரு குடும்பத்தையே போட்டு தள்ளுகிறான் பரிடலா ரவிந்திரா சௌத்ரி. தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள மாமா வீட்டுக்கும் வரும் ரவி, அவர் மகள் சுனிதாவை திருமணம் செய்துக் கொள்கிறான். தன் தோழர்களின் உதவியோடு அவன் இருக்கும் பகுதியில் கிரானைட் இருப்பதை கண்டு பிடிக்கிறான். அது தான் அவன் வாழ்க்கை திருப்புமுனையாக இருக்கிறது.



தெலுங்கு தேச கட்சியில் இணைந்து எம்.எல்.ஏவாகிறான். அதன் பின் அனந்தபுர மாவட்டத்தை தன் கையில் வைத்துக் கொள்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட கங்குல சூர்யநாராயண ரெட்டி என்கிற சூரி (நாராயண ரெட்டி யின் மகன்) ரவியை பழிவாங்க நினைக்கிறான்.

ரவியை கொல்ல ரிமோட் கன்ட்ரோல் கார் பாப் வைத்து கொலை செய்ய நினைக்கிறான் சூரி. ஆனால், ரவி அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து விடுகிறான். ஆனால், துரதிஷ்டவசமாக 26 பேர்கள் அதில் இறக்கிறார்கள். நாற்பதுக்கு மேல் படுகாயம் ஏற்ப்படுகிறது. இதனால், சூரிக்கு கோர்ட் ஆயுள் தண்டை வழங்குகிறது.

மாநில ஆட்சி தெலுங்கு தேச கட்சியிடம் இருப்பதால் ரவிக்கு பாதுகாப்பு பலமாகிறது. அவனை கொலை செய்யாமல் விட போவதில்லை என்ற வேட்கையில் சூரி இருக்கிறான். காரணம், 1983ல் நாராயண ரெட்டியை கொன்ற ரவி, 1993 சூரியின் குடும்பத்தின் உள்ள ஆறு பேரைக் கொன்று இருக்கிறான். அதன் கோபம் அவனை கொலை செய்ய எட்டு வருடங்களாக போராடுகிறான்.

2004 தேர்தலில், ரவி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. ரவி கொடுக்கப்பட்ட பாதுகாப்பு நான்கு பேராக குறைகிறது. அவனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் சூரியால் கொல்லப்படுகின்றனர். அரசாங்கத்திடம் முறையிட்டும் ரவி சரியான பாதுகாப்பு கிடைக்கவில்லை.

24-1-2005 கட்சி மீட்டிங் முடிந்து திரும்பும் போது சூரியின் தோழர்களால் ரவி சுட்டுக் கொள்ளப்படுகிறான்.

இது ராம்கோபால் வர்மாவிடன் 'ரத்த சரித்திரம்' படத்தின் கதை மட்டுமல்ல.... ராயல் சீமா பகுதியில் நடந்த உண்மையான கதையும் இதுவே !!



அந்திராவில் இருக்கும் ராயல் சீமா பகுதி பாக்ஷனிசம் (factionism) பெயர் போன ஒன்று. கடப்பா, அனத்தப்பூர், குர்நூல் போன்ற மாவட்டங்களில் வெட்டு, குத்து, கொலை சர்வ சாதரனம். சாயல்சீமா பகுதியை வைத்து எத்தனையோ தெலுங்கு படங்கள் பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வெற்றிப் பெற்றுயிருக்கிறது. தமிழில் இறக்குமதியும் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து எந்த மசாலாவும் இல்லாமல் ராயல்சீமா பகுதியின் அரசியலை படமாக வருகிறது 'இரத்த சரித்திரா'.

பொதுவாக ராம்கோபால் வர்மாவின் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கும். ஹீரோசியம் இல்லாமல் ரியலிசமாக இருக்க வேண்டும் எடுக்கும் காட்சிகளில் மெனக்கெட்டு படமாக்குபவர் தான். ஆனால், வன்முறை தூண்டும் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப யோசிக்கும் போது அவர் மட்டும் ஏன் வன்முறையை நம்பி படம் எடுக்கிறார் என்று தெரியவில்லை. நான் வன்முறை படங்களை பெரிதாக பார்ப்பதில்லை. இருந்தும், இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

ஒரு ட்ரெய்லரை திரும்ப திரும்ப பார்த்தேன் என்றால் அது 'இரத்த சரித்திரம்' தான். காரணம், இந்த படத்தின் கதை பின்னனி. இன்னொன்று சூரியாவின் குரல்.

இதன் கதை பின்னனியை ஆராய்ந்தால் ஆந்திராவின் ராயல்சீமாவின் அரசியல் முகம் வெளுத்துவிடும்.

நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்தவன், தெலுங்கு தேச பார்டியின் முக்கியமான பொருப்பில் இருப்பவன், ஆந்திராவின் மந்திரியாக இருந்தவன். இது தான் பரிடலா ரவிந்திரா பற்றி பத்திரிக்கை சொல்லும் செய்திகள். ஆனால், தன் தந்தை ராமுல்லையா வழியை தன் வாழ்க்கையையும் ஒரு நக்ஸ்லைட்டாக தொடங்கியிருக்கிறான். தன் பாதுகாப்பாக்காக அரசியலில் சேர்ந்தவன். ரெட்டி குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியினர் என்று பலரை கொலை செய்திருக்கிறான்.

சூரியநாராயண ரெட்டி... அவன் மீது பல கற்பழிப்பு வழக்கு இருக்கிறது. இருப்பத்தியாரு பேரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து ஜனவரி, 2010 ஜெயிலில் இருந்து வெளியே வந்திருக்கிறான். சௌத்ரிகளுக்கும், ரெட்டிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியை ஆராய்ந்தால் ஆந்திராவில் இருந்து பல கதைகள் எடுக்கலாம்.

ரத்த சரித்திரம் படத்தில் ரவி பாத்திரத்தை விவேக் ஓப்ராய்யும், சூரி பாத்திரத்தை சூர்யாவும் நடிக்கிறார்கள். இரண்டு கதாநாயகர்கள் நடிப்பதால் சினிமா தர்மப்படி இரண்டு கொலையாளியின் வாழ்க்கை வடிவத்தை நியாயப்படுத்துவது போல் திரையில் காட்டலாம். ஆனால், இருவரும் பக்கா ரௌடிகள் என்பது உண்மை. அதற்கான தகவல்கள் இன்னும் கீழ் இருக்கும் தளத்தில் பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Paritala_Ravindra
http://royalchowdarys.wetpaint.com/page/Paritala+Ravindra+chowdary
http://www.rediff.com/news/2005/jan/28syed.htm
http://www.indianexpress.com/old/ie/daily/19971124/32850643.html
http://cbi.nic.in/pressreleases/PRelease2005/p27apr5.htm



நேதாஜி, பகத் சிங் போன்றவர்களை பற்றி படம் எடுக்க வேண்டாம். சுந்திரப்போராட்டம், சரித்திரப்படங்களும் எடுக்க வேண்டாம். ஆனால், குறைந்த பட்சம் ரௌடிகளை நாயகர்களாக சித்தரித்து அவர்கள் கொலை வாக்காளத்து வாங்கும் படங்களை என்னவென்று சொல்லுவது. இதை பதிவாக போட்ட என்னை என்ன சொல்லுவது :)

Monday, October 11, 2010

தேசியக் கொடி

சுதந்திர இந்தியாவின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு குழு அமைக்கப்பட்டது.

1906ல் இருந்து 1947 ஜூலை 21 வரை நமது கொடி பல்வேறு உருவ அமைப்புகளில் இருந்தது.

1947 ஜூலை 22 ஆம் தேதி அரசியல் சபையில்தான் தற்போதுள்ள தேசியக் கொடியை நேரு அறிமுகப்படுத்திப் பேசினார்.

தற்போதுள்ள தேசியக் கொடியை முடிவு செய்த குழுவில் இருந்தவர்கள்.

1. டாக்டர். ராஜேந்திர பிரசாத்
2. அபுல் கலாம் ஆசாத்
3. ராஜாஜி
4. திருமதி.சரோஜினி நாயுடு
5. கே.எம்.முன்ஷி
6. கே.எம்.பணிக்கர்
7. Dr.B.R.அம்பேத்கர்
8. பிராங் அத்தோணி
9. பட்டாபி. சீதாராமைய்யா
10. ஹிராயால் சாஸ்திரி
11. சத்யநாராயண சின்கா
12. பல்தேவ் சிங்
13. எல்.என்.குப்தா



நேரு கூறியதாவது:

1.நமது தேசியக் கொடி கதர்ட்துணியில் இருக்க வேண்டும்.
2. கொடியின் நீள அகலம் இரண்டிற்கு மூன்று 2:3 என்ற விகிதத்தில் இருக்கும்.
3.மேல்பட்டையில் செங்காவி நிறம் இருக்கும்.
4.நடுவில் வெண்மையாக இருக்க வேண்டும்.
5.அடிப்பகுதி பச்சை நிறமுள்ளதாக இருக்கும்.
6.கொடியின் நடுப்பகுதியில் 24 ஆரக்கால்களும் கூடிய,ஓர் ஆழ்நீல நிறத்தில் சக்கரம் மேல் பகுதியையும் ,கீழ்ப்பகுதியையும் தொடாதவாறு வடிவமைக்க வேண்டும்.இது அசோகரால் அமைக்கப்பட்ட சாரநாத் சிம்மஸ் தூபியைக் குறிக்கும் அசோக ம்ன்னர் ஆட்சி,இந்திய ஆட்சியில் முன்னுதாரணம் கொண்டது.உலகலாவிய நற்பெயர் பெற்றது.
7.கொடியின் மேற்புறம் செங்காவி நிறத்துடன் பறக்கவிடப் படவேண்டும்.தலைகீழாகப் (பச்சைநிற்ம்மேல் பகுதியில்)பறக்கவிடக்கூடாது.
8 கொடியில் விள்ம்பரமோ,பொன்மொழியோ கூடாது.
9.கொடியைப் பைகளாக ,மேஜை விரிப்புகளாக வேட்டி சேலைச் கரைகளால் பயன்படுத்த்ப்பட்டது.
10.சூரியன் உதிக்கும் நேரத்தில் ஏற்றி, அஸ்தமனம் ஆகும்போது இறக்கிவிட வேண்டும்.

நன்றி:செங்கரும்பு,ஆகஸ்ட்,2010

Friday, October 8, 2010

சவால் சிறுகதை : டைமண்ட்

நெற்றில் இரத்தம் சொட்ட சொட்ட இருந்தாலும் காமினி அழகாக இருந்தாள். அவளை காப்பாற்ற மருத்துவமனையில் வேலை செய்பவர்களை உதவிக்கு அழைத்தான் சிவா.

ஒருவன் ஸ்டெச்சர் கொண்டு வர, சிவா காமினியை படுக்க வைத்தான்.

"காமினி...! உனக்கு ஒண்ணுமாகாது. நா உன்ன எப்படியும் காப்பாத்துவேன்" என்று கத்தியப்படி அவளுடன் சென்றான் சிவா.

ஸ்டெச்சர் ஐ.சி.யூ வந்ததும் டாக்டர் சிவாவை நிறுத்தினார்.

"நீங்க உள்ள வரக் கூடாது "

"டாக்டர் ! என் ஓய்ப்ப எப்படியாவது காப்பாத்துங்க...?"

"டோன்ட் வொரி.... நாங்க பாத்துக்குறோம் " என்று டாக்டர் ஆறுதல் கூறி அவளை ஐ.சி.யூ அறைக்கு அழைத்து சென்றனர்.

பதற்றத்துடன் சிவா வெளியே நிற்க, டாக்டரும், நர்ஸூம் காமினிக்கு சிகிச்சையை பார்த்தனர்.

"சிஸ்டர் ! பெஷன்ட் உடம்புல இருக்குற பிலட்ட தொடைங்க... "

" டாக்டர்.... ! பீரித்திங் விட சிரமப்படுறாங்க..."

" மாஸ்க் எடுத்து மாட்டுங்க…! அப்புறம் ஹார்ட் பீட் வயர் எடுத்து அவங்க உடம்புல பிக்ஸ் பண்ணுங்க....”

"பெரிசா காயம் இருக்குற மாதிரி தெரியல... எதுக்கு இதெல்லாம் "

"மேடம் ! இங்க நீங்க டாக்டரா ! நான் டாக்டரா.... மாசம் ஆன உங்களுக்கு சம்பளம் தரனும்ல... எப்படி தரது. இப்படி சின்ன அடி வந்தவங்கள... பெரிசா காட்டினா தான் நாலு காசு பார்க்க முடியும்."

நர்ஸ் பேசாமல் இருந்தார்.

கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. காமினி இயல்பாக முச்சு விட தொடங்கினாள்.

" ஓ.கே சிஸ்டர். பக்கத்து ரூம்ல இருக்குற மந்திரிய கவனிங்க..."

" அவருக்கு தான் ஒண்ணுமில்லையே டாக்டர்" !

" ஹார்ட் அட்டாக் சொல்லி படுத்திருக்காரு. இப்படி எதாவது கவனிச்சா தான் பத்திரிகைக்காரங்க நம்புவாங்க... கிளம்பும் போது அவரும் நம்பள நல்ல கவனிப்பாங்க...”

டாக்டர் சொன்னும் சிஸ்டர் வெளியே சென்றார். கொஞ்சம் நேரத்தில் ரவுன்ட்ஸ் செல்ல டாக்டர் வெளியே வந்தார். பதட்டமாக இருந்த சிவாவுக்கு ஆறுதல் கூறி சென்றார்.

கண்ணாடி வழியே சிவா காமினியை பார்த்தான்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

எல்லாம் சிவாவின் திட்டப்படி சரியாக செய்தாள் காமினி.

**

சிவா என்றைக்கும் எந்த விஷயத்திலும் சொதப்பியதில்லை என்ற நம்பிக்கை பரந்தாமனுக்கு இருந்தது. கூடவே, காமினி சென்று இருக்கிறாள். எந்த கவலையும் இல்லாமல் பரந்தாமன் வெளிநாட்டு விருந்தாளிகளை கவனிப்பதில் இருந்தான்.

ஆனால், நேரமாக ஆக பரந்தாமனுக்கு பயம் பற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் டைமண்ட் வரவில்லை என்றால் வெளிநாட்டு வியாபாரிகள் சென்றுவிடுவார்கள். உள்ளூர் வியாபாரிகள் கேட்கும் விலையை கொடுத்தால் பெரிதாக லாபம் இருக்காது. இதை விற்க சிரமப்பட வேண்டும். சிவாவின் செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது.

**



வருமான வரிக்கு பயந்து மாஜி மந்திரி மாரடைப்பு என்று சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு இல்லாமல், பல கோடி மதிப்புள்ள டைமண்ட்டை தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தார். போலீஸ் ஏமாற்றி, யாருக்கும் சந்தேக வராமல் இருக்க ஒரு பொய்யான விபத்தை ஏற்ப்பட்டுத்தி சிவா, காமினி மருத்துவமனையில் நுழைந்தனர்.

யார் கண்ணிலும் படாமல் இருக்க அந்த மாஜி மந்திரி டைமண்ட்டை பாத்ரூமில் வைத்திருப்பதாக அவனின் காரியதர்சி பரந்தாமன் கூட்டத்திற்கு உளவு சொல்லியிருப்பதை வைத்து அதை கொள்ளையடிக்க சிவா திட்டம் போட்டு மருத்துவமனைக்கு வந்திருக்கிறான். கிடைக்கும் லாபத்தில் 20% அந்த காரியதர்சிக்கு தர வேண்டும்.

ஐ.சி.யூவின் ஜன்னலில் வெளியே இருந்து மந்திரி ரூம்மின் பாத்ரூம் ஜன்னலுக்கு செல்ல முடியும். சிஸ்டர் மந்திரியை மருத்துவம் பார்க்கும் சமயத்தில் பாத்ரூம்மில் இருக்கும் டைமண்ட்டை எடுத்துவிட வேண்டும்.

இரண்டே நிமிடத்தில் மந்திரி பாத்ரூம் கண்ணாடியை அகற்றி பாத்ரூம்க்குள் நுழைந்தாள்.

அவர்களுக்கு உளவு சொன்னவர் ப்ளஷ் டாங்க்கில் வைத்திருப்பதை சொன்னதால், காமினிக்கு அதை எடுக்க அதிக நேரம் பிடிக்கவில்லை.

சிஸ்டர் மந்திரி சிகிச்சை பார்த்து வெளியே செல்லவும் , காமினி டைமண்டுடன் பாத்ரூம்மில் இருந்து குதிக்கவும் சரியாக இருந்தது.

**
" பரந்தாமன் ! எனக்கு முக்கியமான வேலை இருக்கு..." என்று சொல்லி விருந்தில் இருந்து முக்கிய வாடிக்கையாளர் ஒருவர் செல்ல இருந்தார்.

" இருங்க...! இன்னும் முக்கியமான சரக்கு வரல... அத பார்த்தீங்கன வாங்காம விடமாட்டீங்க..."

" ஓ.. அப்படியா..! வெய்ட் பண்ணுறேன்" என்று சொல்லி அந்த வாடிக்கையாளர் செல்போனில் காலதாமதமாக வருவதை கூறிக் கொண்டு இருந்தார்.

சிவா, காமினி எப்படியும் டைமண்ட்டோடு வருவார்கள் என்ற நம்பிக்கையில் பரந்தாமன் தன் வாடிக்கையாளர்கள் எல்லோரையும் வர வழைத்து விட்டான்.

பரந்தாமனுக்கு டென்ஷன் ஏறிக் கொண்டே இருந்தது.

**
காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை தன் ஜாக்கெட்டில் போட்டுக் கொண்டு முகத்தை மறைத்தப்படி மருத்துவமனை விட்டு வெளியே வந்தாள். நோயாளிகளில் அலறல், உறவினர்களின் கதறலுக்கு நடுவில் நோயாளி வேடத்தில் வந்து சென்ற காமினியை யாரும் கவனிக்கவில்லை.

அவர்களின் திட்டப்படி சிவா மருத்துவமனைக்கு வெளியே காரில் இருந்தான். காமினி சுற்றம் பார்த்து காருக்குள் நுழைந்தாள்.

" சிவா ! இந்த டைமண்ட் " என்று அவன் கையில் காமினி கொடுத்தாள்.

புன்னகைத்தப்படி சிவா காமினி கையில் இருக்கும் டைம்ண்டை வாங்கினான்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"டமால்" என்று காரில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது.

**
இரண்டு முக்கிய வியாபாரிகள் வெளியே செல்ல தொடங்கினர்.

இனி அந்த டைமண்டை விற்க முடியாது என்ற நம்பிக்கை இழக்கும் போது காமினி அறைக்குள் நுழைந்தாள். ஆனால், அவளுடன் சென்ற சிவாவும், மற்றவர்களும் வரவில்லை.

" காமினி ! டைமண்ட் என்ன ஆச்சு ? சிவா எங்கே ?? " என்று பல கேள்விகள் உள்ளுக்குள் ஓடியது.

" டைமண்ட் எடுத்து வரும் போது சிவாவ போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க... நா மட்டும் டைமண்ட்டோட தப்பிச்சேன் " என்றாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை ஆசையாய் வாங்கி பார்த்தான். தன்னை இன்னும் சில நிமிடங்கள் இந்த டைமண்ட் கோடிஸ்வரனாக்க போகிறது என்ற பூரிப்பில் இருந்தான்.

தீடிர் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒளித்தது.

அந்த அறையை சுற்றி போலீஸ் வலைத்தனர். காமினி, பரந்தாமனோடு அவனின் வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

காமினி மட்டும் தனியாக பெண் போலீஸ் அழைத்து சென்று ஐ.ஜி முன் நிறுத்தினர்.

" கமான் காமினி ! யூ டன் ஒன்ஸ் அகேன்"

" தாங்க் யூ ஸார் !"

"எவ்வளவு வருஷம எத்தன உளவாளி வச்சும் கண்டுப்புடிக்க முடியாத கொள்ள கூட்டத்த மூனு மாசத்தில கண்டு புடிச்சு கொடுத்துட்ட..."

மூன்று மாதங்களாக அவர்கள் கூட்டத்தில் நெருங்கி பழகி உளவு சொன்ன காமினி தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிவாவை சுட்ட விபரத்தை ஐ.ஜிக்கு விளக்கினாள்.

Thursday, October 7, 2010

சத்யஜித் ரே – ஒரு எளிய அறிமுகம்

“காமிராவுடனும், நடிகர்களுடனும் வேலை செய்வது என்பது சினிமா பற்றிய பனிரெண்டு புத்தகங்கள் கற்றுக் கொடுத்ததை விட அதிகமாகக் கற்றுத் தந்தது.
- சத்யஜித் ரே”


ஆஸ்கர் என்று தெரியாத இந்தியர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று இந்தியர்களுக்கான முதல் ஆஸ்கரை காட்டியவர் சத்யஜித் ரே.



ஓவியராக தன் வாழ்க்கை தொடங்கி இயக்குனர் என்ற அவதாரம் எடுத்து எழுத்தாளராகவும் பவனி வந்த 'சத்யஜித் ரே' பற்றிய புத்தகம் இது. அவருடைய வாழ்க்கை குறிப்புகள், பெட்டி, சிறுகதை, ரேவை பற்றி திரைப்பரபல பார்வைகள் என்று இந்த புத்தகம் செல்கிறது.

ஒவ்வொரு இயக்குனரும் திரைக்கதை அவர்களுக்கு என்று ஒரு வழி வைத்திருப்பார்கள். சத்யஜித் ரே அடிப்படையில் ஓவியர் என்பதால் ஓவியம் வரை பிறகே தன் அந்த காட்சிக்கான திரைக்கதையை அமைப்பாராம்.

சோவியத் திரைப்பட மேதை ஐசன்ஸ்டைன் சினிமா ‘எப்படி எடுக்கப்பட வேண்டும்’ என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு விட வேண்டும் என்று சொன்னார். ரேயின் சினிமாக்களோ முன்கூட்டியே சித்திரங்களாகவே வரையப்பட்டுவிடும். இந்த சித்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, ரே தனது ஒவ்வொரு காட்சியையும் எடுத்து விடுவார்.

படத்திற்கான உடை அலங்காரங்கள், காட்சி அமைப்புகள், விளம்பர அமைப்புகள் ஆகிய அனைத்தையும் ரே படங்களாகவே வரைந்து வைத்துக் கொள்வார். எனவே, ரே எனும் ஓவியரின் முழுபாதிப்பும் அவரது சினிமாவின் மீது இருந்தது.

நார்த் ஒயிட்ஹெட் என்று தத்துவவாதி "எல்லாக் கலைகளுக்குமே இரண்டு
முக்கிய நோக்கங்கள் உள்ளன. 1. உண்மை. 2 அழகு. இதன் இரண்டும் சத்யஜித் ரே படங்களில் நாம் பார்க்க முடியும்.

பதே பாஞ்சாலி நாவலுக்கு அட்டை படம் வரைந்தவர் சத்யஜித் ரே அதை படமாக எடுக்கவும் முடிவு செய்தார். ‘இயற்கை இருக்கிறது. அதை ஏன் திரித்துக் கூற வேண்டும்' என்று தன் படத்தின் எல்லா காட்சிகளையும் இயற்கை அழகிலே எடுத்து முடித்தார்.

சிறுவர்களுக்கான படங்கள் எடுக்க முன் உதாரணமாக இருந்தவர் சத்யஜித் ரே என்றால் மிகையாகாது.

இன்று இந்தியாவில் இருந்து வந்த முதல் உலகப் படம் என்றால் 'பதேர் பாஞ்சாலி' என்று சொல்கிறார்கள். ஆனால், பல வளர்ச்சிகள் அடைந்த சினிமாத்துறையில் இன்னும் அந்த படத்தை மட்டுமே நாம் பெருமை அடித்துக் கொள்கிறோம் என்பதில் வேதனையாக இருக்கிறது.

படம் ஓடுற மாதிரி எடுப்பவர்கள், கொஞ்சம் சத்யஜித் ரே வைப் போல் பார்க்கிற மாதிரி எடுத்தால் நன்றாக இருக்கும்.

**
கட்டுரைக்கு உதவிய நூல்

சத்யஜித் ரே - இந்திரன்
ஆருத் புக்ஸ் 4/1,
ராஜாஜி அவென்யூ அனெக்ஸ்
வளசரவாக்கம், சென்னை - 87

Wednesday, October 6, 2010

சவால் சிறுகதை : உளவாளி

உயிர் போகும் ஆபத்தான வேலை தான். ஆனால், இதில் இருக்கும் த்ரில் எதிலும் இல்லை. சேஸிங், டபிள் க்ராஸ், கொலை எல்லாம் இந்த மூன்று மாதத்தில் கிடைத்த அனுபவம் எந்த பெண்ணுக்கும் கிடைத்திருக்காது. காமினிக்கு கிடைத்திருக்கிறது. ஆண்களுக்கு இணையாக சண்டை போடக் கூடியவள். சாகசத்திலும் கெட்டிக்காரி. ஆதானலே பரந்தாமன் கள்ளக்கடத்தல் கூட்டத்தில் முக்கியமான ஆளாக கருதப்பட்டாள்.

காமினி சீக்கிரம் அந்த கூட்டத்தில் முக்கிய அங்கமாக கருத்தப்பட்டதற்கு இன்னொரு காரணம். சிவா. பரந்தாமனுக்கு அடுத்து அந்த கூட்டத்தில் தலைவனாக இருப்பவன். காமினியை பார்த்த மாத்திரத்தில் அவள் அழகால் கவரப்பட்டவன். ஒரே வாரத்தில் அவளிடம் காதலை சொல்லி, அவள் சம்மதம் பெற்றவன்.

வருடக்கணக்கில் அந்த கூட்டத்தில் இருக்கும் ஆண்களுக்கு கூட தெரியாத ரகசியம் எல்லாம் சிவா மூலம் காமினிக்கு தெரிந்தது. சில சமயம் சிவா சொல்ல மறுத்தாலும், காமத்தின் உச்சத்திற்கு அவனை அழைத்து சென்று உண்மையை வாங்கிவிடுவாள்.

இருவருக்கும், திருமணம் தான் நடக்கவில்லை என்றாலும் இருவரும் கணவன், மனைவியாக தான் இருந்தனர். பரந்தாமனின் அன்புக்கு பாத்திரமாக சிவா இருந்ததால் இன்றைய முக்கியமான கொள்ளையில் சிவாவுடன் காமினியை அனுப்பியிருந்தான். அந்த டைமண் மட்டும் வந்துவிட்டால் கொள்ளையடிக்கும் தொழிலே முழுக்கு போட்டுவிடலாம். அதை வாங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து தனது க்ளைட் எல்லோரையும் வரவேற்கும் விழாவில் பெரிய தொகையை ஏலத்திற்கு விட வேண்டும் என்ற திட்டம் போட்டான் பரந்தாமன்.

சிவா என்றைக்கும் எந்த விஷயத்திலும் சொதப்பியதில்லை என்ற நம்பிக்கை பரந்தாமனுக்கு இருந்தது. கூடவே, காமினி சென்று இருக்கிறாள். எந்த கவலையும் இல்லாமல் பரந்தாமன் வெளிநாட்டு விருந்தாளிகளை கவனிப்பதில் இருந்தான்.

ஆனால், நேரமாக ஆக பரந்தாமனுக்கு பயம் பற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் டைமண்ட் வரவில்லை என்றால் வெளிநாட்டு வியாபாரிகள் சென்றுவிடுவார்கள். இதை விற்க சிரமப்பட வேண்டும். சிவாவின் செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இரண்டு முக்கிய வியாபாரிகள் வேலையிருப்பதாக சொல்லி வெளியே சென்றனர்.

இனி அந்த டைமண்டை விற்க முடியாது என்ற நம்பிக்கை இழக்கும் போது காமினி அறைக்குள் நுழைந்தாள்.

ஆனால், அவளுடன் சென்ற சிவாவும், மற்றவர்களும் வரவில்லை.

" காமினி ! டைமண்ட் என்ன ஆச்சு ? சிவா எங்கே ?? " என்று பல கேள்விகள் உள்ளுக்குள் ஓடியது.

" டைமண்ட் எடுத்து வரும் போது சிவாவையும், மத்தவங்களையும் போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க... நா மட்டும் டைமண்ட்டோட தப்பிச்சேன் " என்றாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை ஆசையாய் வாங்கி பார்த்தான். தன்னை இன்னும் சில நிமிடங்கள் இந்த டைமண்ட் கோடிஸ்வரனாக்க போகிறது என்ற பூரிப்பில் இருந்தான்.

தீடிர் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒளித்தது.

அந்த அறையை சுற்றி போலீஸ் வலைத்தனர். காமினி, பரந்தாமனோடு அவனின் வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

காமினி மட்டும் தனியாக பெண் போலீஸ் அழைத்து சென்று ஐ.ஜி முன் நிறுத்தினர்.

" கமான் காமினி ! யூ டன் ஒன்ஸ் அகேன்"

" தாங்க் யூ ஸார் !"



"எவ்வளவு வருஷம எத்தன உளவாளி வச்சும் கண்டுப்புடிக்க முடியாத கொள்ள கூட்டத்த மூனு மாசத்தில கண்டு புடிச்சு கொடுத்துட்ட..."

" அதுக்கெல்லாம் சிவா என் மேல வச்சிருந்த பைத்தியக்கரமான காதல் தான் காரணம்"

"குட்... எப்படி அவன் உன் மேல இந்த அளவுக்கு காதல் வளர்த்துக்கிட்டான் "

" வெரி சிம்பிள். ஐ ஹெட் செக்ஸ் வித் ஹிம். அது தான் அவன் என் மேல் அதிக நம்பிக்கை வளர்த்துக்கிட்டான்"

" ஒரு கொள்ளக்காரனோடு உன் கற்ப இழக்குற அளவுக்கு நீயும் அவனும் பழகுன..."

" வெரி பன்னி... இந்த காலத்துல கற்பு பத்தி பேசுறீங்க. எந்த உளவாளிக்கும் இல்லாத ஆயுதம் பெண் உளவாளிக்கு இருக்குதுனா அது அவளோட அழகு தான். அத பயன்படுத்துனா தான் மதிப்பு" என்று புன்னகையோடு காமினி கூறினாள்.

" ஓ.கே. அது உன்னோட சொந்த விஷயம். உன்ன அரஸ்ட் பண்ணும் போது தப்பிக்க முயற்சி பண்ண. சுட்டுட்டோம்னு சொல்லி உங்க கூட்டத்த நம்ப வைக்கனும். இல்ல உனக்கு பிண்ணாடி பிரச்சையை வரும்.”

" அவங்க அத நம்புவாங்கனு நினைக்கிறீங்களா.."

" கொஞ்சம் கஷ்டம் தான். பரந்தாமனுக்கு உன் மேல சந்தேகம் வர வாய்ப்பிருக்கு"

"நாளைக்கு சிவாவோட என்னையும் கோர்ட்க்கு கூட்டிட்டு போகும் போது நான் தப்பிக்கிறேன். ஒரு போலீஸ் வச்சு என்ன சிவா முன்னாடி சுட சொல்லுங்க..."

"குட்...இதுவும் நல்ல ஐடியா தான்."

" இன்ஸ்பெட்டர் வெங்கட் கிட்ட நம்ப திட்டத்த பத்தி சொல்லுறேன். அவர் தான் நாளைக்கு உங்களோட கோர்ட்டுக்கு வராரு..."

" ஓ.கே.."

மீண்டும் காமினி கையில் விலங்கு மாட்டி கைதி போல் அழைத்து சென்றனர்.

அடுத்த நாள்.

சிவா, பரந்தாமனோடு காமினியும் கையில் விலங்கு மாட்டி சைதை கோர்ட்டுக்கு அழைத்து செல்ல வேனில் ஏற்றினர். மவுன்ட் ரோட் சிக்கலில் ஐ.ஜி திட்டப்படி காமினி கையில் விலங்கோடு ஓட தயாரானாள். சிவா, பரந்தாமன் போலீஸ் சுற்றியிருந்ததால் காமினியிடம் எதுவும் பேச முடியவில்லை.

நந்தனம் சிக்னல் வந்தது. காமினி ஓட தயாராக இருந்தாள். பச்சை விளக்கு வரும் இரண்டு நொடி இருக்கும் போது ஓடினாள்.

டமால்.... தூப்பாக்கி வெடித்தது.

துப்பாக்கி தோட்டா காமினி மார்பில் பாய்ந்தது. வெங்கட்டை அடித்து சிவா அவனின் துப்பாக்கியால் காமினியை சுட்டான். சிவாவும், பரந்தாமனுக்கு துப்பாக்கி காட்டி தப்பித்தனர்.

காமினியின் உயிருக்கு ஆபத்தில்லை. மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

" ஒண்ணும் பிரச்சன இல்ல... மார்பு குறிப்பார்த்து சுடுற நினைச்சு தோள் பட்டையில தான் சுட்டிருக்கான். ஒரு மணி நேரத்து கண் முழிச்சிடுவாங்க..." என்று டாக்டர் ஐ.ஜியிடம் சொன்னார்.

" தப்பிச்சு போன கொள்ளக்காரங்களால எந்த நேரத்துலையும் இவளுக்கு ஆபத்துவரலாம். போலீஸ் புரட்டக்ஷன் கொடுக்க நீங்க அனுமதிக்கனும்.

" ஓ.. ஷுர்..." என்றார் டாக்டர்.

காமினியின் மயக்கம் தெளிந்தது.

மூன்று மாதமாக சிவாவோடு நெருங்கி பலகியவள். அவன் தன்னை கொள்ளாமல் விடமாட்டான். மருத்துவமனை காவலை மீறி தன்னை எளிதாக கொன்றுவிடுவான். இங்கு இருப்பது எந்த நேரத்திலும் ஆபத்து என்று நினைக்க தொடங்கினாள்.

ஐ.ஜி, டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

இரண்டு வருடங்களாக உளவாளி வேலை செய்திருக்கிறேன். காட்டிக் கொடுத்தது நான் தான் என்ற சந்தேகம் யாருக்கும் வந்ததில்லை. சிவாவுக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்ற குழப்பத்தில் ஒரு ஆட்டோவில் ஏறினாள்.

"பெஸ்ட் நகர் போப்பா " என்ற போது அதிர்ந்து விட்டாள் காமினி.

ஆட்டோ டிரைவர் வேடத்தில் சிவா.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

பத்தடி தூரத்தில் பரந்தாமனிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இருந்தான் இன்ஸ்பெட்டர் வெங்கட்.

Tuesday, October 5, 2010

காதல் கவிதைகள் !

காதல் என்ற போக்கிஷத்தை
கொடுக்க வந்தேன்
நட்பு என்ற பூட்டைப்போடு
முட வைத்தாய் !

கள்ள சாவி போட்டு
திறக்க நினைத்தேன்
உன் வசீகர பார்வையில்
நீயே திறந்து விட்டாய் !!




**
உன் புகைப்படம் என்று
வெள்ளை நிற அட்டையை நீட்டினேன்

நீ செல்லமாக முறைத்து பார்த்தாய்

"போட்டோ எடுக்கும் போது
சிரிக்காதே சொன்னேன் கேட்டியா !"

**

வெள்ளை, சிவப்பு
இரண்டு அணுக்கள் இல்லாமல்
புதிய அணுக்கள் தோன்றுதடி
உந்தன் காதலால் !

**
உன் நகங்களுக்கு
நெயில் பாலிஷூடன் வந்தேன்

நீ நகங்கள் வெட்டப்பட்ட
விரலை காட்டினாய் !

நேற்று
உன் நகத்தால் கீரப்பட
காயத்தை நான் ரசித்தேன் !

இன்று
நீ எனக்காக
உன் நகத்தை துறந்தாய் !

Monday, October 4, 2010

வெற்றிப் பயணம்

'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் ஜாலியான குறும்படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இந்த குறும்படத்தில் படம் எடுக்க முயற்சிப்பது போல் சில இடங்களில் நாமும் சிரிக்க முயற்சிக்க வேண்டியதாக இருக்கிறது. கூட்டு முயற்சியில் நண்பர்களில் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதை ஒரளவு ரசிக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

Sunday, October 3, 2010

எந்திரன் மற்றும் ரஜினி பழைய படங்கள்

முதல் முறையாக சன் டி.வி படத்தை தியேட்டரில் பார்த்தேன்.

படத்தின் கதை.... எல்லோருக்கு தெரிந்திருக்கும். மனிதனின் உணர்ச்சிகள் எந்திரத்திற்கு கொடுக்கும் போது அது எவ்வளவு வன்மமாக நடந்துக் கொள்ளும் என்பதை ஷங்கர் காட்டியிருக்கிறார்.(நல்ல வேளை, மெசேஜ் சொல்ல வேண்டும் என்று கோர்ட் காட்சியை நீண்ட நேரம் இழுக்கவில்லை)கிளைமாக்ஸ், பாடல் காட்சியில் தனது பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் ஷங்கர்.

ரஜினி அறிமுக பாடலில்லை. பன்ச் டையலாக் இல்லை. ஸ்டைல் இல்லை. முழுக்க முழுக்க இயக்குனர் ஷங்கரின் படமாக தான் 'எந்திரன்' இருந்தது.



நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி கதையின் நாயகனாக நடித்த படம் என்று சொல்லலாம். 'ஆறில் இருந்து அறுபது வரை', 'முள்ளும் மலரும்' படங்களில் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்தது போல் இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். அதுவும் 'காயத்ரி', 'ஆடு புலியாட்டம்' படத்தில் பார்த்த வில்லன் ரஜினியை 'ரோபோ' கதாபாத்திரத்தில் பார்க்க முடிந்தது.

இதுவரை லாஜிக் இல்லாமல் எத்தனையோ படத்தில் ரஜினி செய்ய ஹீரோயிசத்தை 'ரோபோ' என்ற லாஜிக் பாத்திரத்தில் ஹீரோயிசத்தை காட்டியுள்ளார். குறிப்பாக, எந்திரகளுக்கு நடுவில் விஞ்ஞானி ரஜினியை தேடும் போது ரஜினி நடிப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

ரஜினியே கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு மற்ற நடிகர்களும் அதைப்போல் செய்ய தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கணிப்பொறியைக் கூட காதலிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராயை கிழவியான பிறகு அழகாக காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரை விட்டால் இந்த அளவுக்கு கூட அழகான நாயகி இல்லை என்பதால் நமக்கு வேறு வழியில்லை. ( ரஜினிக்கு பொருத்தமாக இருக்க அப்படி செய்தார்களோ என்னவோ !)

பாடல்கள்... இரண்டு பாடல்கள் தான் நன்றாக இருந்தாலும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.

ரோபோ பாத்திரம் ஐஸ்வர்யாவிடம் காதலை சொல்லும் போதும், லீவ், வேலை நிறுத்தம் பற்றி விஞ்ஞானி ரஜினியிடம் பேசும் போது, 'காதல் ரத்து' என்ற புதிய வார்த்தையை ஊடலில் பயன்படுத்தும் போதும் என்னையும் அறியாமால் 'சுஜாதா' கண் முன் வந்து நிற்க்கிறார். முழுக்க முழுக்க அவர் வசனம் எழுதியிருந்தால் இந்த படத்தை இன்னும் அதிகமாக ரசித்திருப்போமோ என்று தோன்றியதியது. மனிதனுக்கும், எந்திரத்திற்கும் ஒப்பீட்டு வசனம் இவரை தவிர இவ்வளவு அழகாக யாராலும் எழுத முடியாது. (சுஜாதா ஸார்... வீ மிஸ் யூ !!)

படத்தின் முதல் காட்சி திரையிடும் முன்பே முன் பதிவு, ஆடியோ டி.சி, வெளினாட்டு உரிமை, மற்ற மாநில உரிமை என்று சன் டி.விக்கு 200 கோடி வசூலாகிவிட்டதாக ஒரு நண்பர் சொன்னார். இனிமேல், என்ன தான் நவீனத்துவம், பின் நவீனத்துவ விமர்சணம் எழுதினாலும் படம் சன் டி.விக்கு லாபம் தான். ( லாபத்தில் 'சுறா', 'வேட்டைக்காரன்' போன்ற நல்ல படங்களை தைரியமாக வாங்குவார்கள்).

குடும்பத்தோடு ஜாலியாக பார்க்க வேண்டிய படம். மூன்று மணி நேரம் நன்றாக ரசிக்க முடிந்தது.

சுருக்குனு...

தன் மகள் திருமணத்திற்கு வந்தால் போக்குவரத்து பாதிக்கும் என்று ரசிகர்களை அழைக்காத ரஜினி, விடியற்காலை 3:30 மணிக்கு பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை ரஜினி எதுவும் சொல்லவில்லையே ! தனது பட வியாபாரத்திற்காக பொது மக்களை மறந்துவிட்டாரோ !

எங்கோ ஒருவர் 'வருங்கால முதல்வர் ரஜினி' என்று கோஷம் போட்டார். இன்னுமா இவர் அரசியலுக்கு வருவாரு நம்புறாங்க..

Friday, October 1, 2010

நான் கண்ட சீனா

நடிகர் ராஜேஷ்

திரைப்பட நடிகர் இரண்டு முறை சீனாவுக்கு சென்ற தனது பயணக் கட்டுரையை தொகுப்பாக கொண்டுவந்துள்ளார்.

கம்யூனிச கொள்கை கொண்ட சீனா மேற்கத்திய கலாச்சாரத்தில் மயங்கி வருவதாக வரும் செய்திகளை இந்த புத்தகம் மேலும் உறுதி செய்கிறது.

உலகில் அதிக மக்கள் தொகை அதிக உள்ள சீனா நாட்டில் போலீஸ்காரர்கள் மிகக் குறைவாக இருப்பதை சொல்லும் போது வியப்பாக உள்ளது. குற்றங்கள் அதிகம் நடக்காதது தான் இதற்கு காரணம் என்று சொல்லுகிறார்.( மெற்கத்திய கலாச்சாரம் வளர்ந்து விட்டால், அதிக போலீஸ்காரர்கள் தேவைப்படும். )

சீனாவில் ஆறு மாடிகள் வரை லிஃப்ட்கள் கிடையாதாம். அவர்களுக்கு தொப்பை இல்லாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லுகிறார்கள்.

ரூ.10,000 மதிப்புள்ள ஹோட்டல் அறையின் வாடகை சீனாவில் ரூ.2000 தான் வாடகை. 2 நபர்கள் தங்கும் அறையின் வாடகை ரூ.850 என்றால், ஒருவர் மட்டும் தங்கும் அறைக்கு ரூ.1300 இருக்குமாம். ஒருவர் மட்டும் தங்கும் அறையில் அதிக வசதிகள் இருப்பது தான் காரணமாம்.

மத்திய நேர உணவு இடைவேளையில் வாடிக்கையாளர் வராத சமயத்தில் கடையில் வேலை செய்பவர்கள் நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் தூங்குவார்களாம். வேலை செய்கிற பெண்களில் சிலருக்கு சிறு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளும் அந்த கடைகளிலேயே ஒரு ஓரத்தில் தூங்கின்றன.

சீனர்கள் விலையை அதிகம் ஏற்றி விற்பனை செய்வதில்லை என்ற சொல்லும் வியாபாரி, இந்தியர்கள் எந்த பொருளை வாங்கினாலும் பேரம் பேசி வாங்குபவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் இருப்பதை காட்டியுள்ளது.

சந்தேகமே இல்லாமல் பள்ளிப்பாட புத்தக நடையில் எழுதியிருக்கிறார். தேர்வு படிப்பது போல் படிக்க வேண்டிய கட்டாயத்தில் வாசகன் தள்ளப்படுவது தடுக்க முடியாது. போதுவாக , பயணக்கட்டுரை எழுத்தாளரோடு நாமும் சேர்ந்து பயணிக்கும் அனுபவம் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த புத்தகத்தில் அவர் பயணம் மேற்க்கொண்ட இடத்தின் பற்றின தகவல் மட்டுமே அறிந்துக் கொள்ள முடிகிறது. நம்மால் சேர்ந்து பயணிக்க முடியவில்லை.

ரூ.45, பக் : 96
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

LinkWithin

Related Posts with Thumbnails