வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, October 5, 2010

காதல் கவிதைகள் !

காதல் என்ற போக்கிஷத்தை
கொடுக்க வந்தேன்
நட்பு என்ற பூட்டைப்போடு
முட வைத்தாய் !

கள்ள சாவி போட்டு
திறக்க நினைத்தேன்
உன் வசீகர பார்வையில்
நீயே திறந்து விட்டாய் !!




**
உன் புகைப்படம் என்று
வெள்ளை நிற அட்டையை நீட்டினேன்

நீ செல்லமாக முறைத்து பார்த்தாய்

"போட்டோ எடுக்கும் போது
சிரிக்காதே சொன்னேன் கேட்டியா !"

**

வெள்ளை, சிவப்பு
இரண்டு அணுக்கள் இல்லாமல்
புதிய அணுக்கள் தோன்றுதடி
உந்தன் காதலால் !

**
உன் நகங்களுக்கு
நெயில் பாலிஷூடன் வந்தேன்

நீ நகங்கள் வெட்டப்பட்ட
விரலை காட்டினாய் !

நேற்று
உன் நகத்தால் கீரப்பட
காயத்தை நான் ரசித்தேன் !

இன்று
நீ எனக்காக
உன் நகத்தை துறந்தாய் !

1 comment:

நிலாமதி said...

அழகான் காதல்.

LinkWithin

Related Posts with Thumbnails