வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, October 26, 2010

காதல் கவிதைகள்

இயற்கை செய்த
க்ளோனிங்
அவள் மேல் விழுந்த
மழைத் துளி !

**

உன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த
வைரமாலை கரைந்து விட்டதாக சொன்னாய் !
என் காதலை புரிந்து கொள்ளாத உனக்கு
என் கண்ணிர் துளியா தெரிய போகிறது !

**



உள்ளங்கையறித்தால்
பணம் வருமாம்
யார் சொன்னது ?
புதையல் நீ கை கொடுத்ததால்
எனக்கு
கை ரேகையே வந்தது !!

**

அதே புன்னகை
அதே காதல்
அதே மோகம்
அறுபது வயதில்... !

**

என் வீட்டு
எதிரே வந்த பிறகு
காலியாய் இருந்த
என் டைரி பக்கங்கள்
கவிதை வாசித்தது !!

**
என் பழைய கவிதைகளை
காட்டிய போது
ஒவ்வொரு பக்கமும்
தனியாக வருகிறது
என்று சொன்னாய் !

நன்றி கெட்ட கவிதை
எழுதியவனை விட்டுவிட்டு
எழுத தூண்டிய
உன்னை தேடி வருகிறது !!

1 comment:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாத்தேன் இருக்கு..

LinkWithin

Related Posts with Thumbnails