வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, November 10, 2010

குண்டக்க மண்டக்க - 1

[ பார்த்திபன் - கல்யாண தரகர், வடிவேலு – மாப்பிள்ளை ]

வடிவேலு : ஊருல எல்லாரும் பொண்ணு பாக்குற... எனக்கும் ஒரு பொண்ணு பாரேன்...
பார்த்திபன் : எப்படி உனக்கு பொண்ணு திரிஷா மாதிரி இருந்தா பொதுமா...?

வடிவேலு : ஐயோ வேண்டாம்பா... ஒரு வாட்டி ஐஸ்வர்யா மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கினும் நிச்சதுக்கே... உன்னால என் மீண் கடையே போச்சு... சுமாரா பொண்ணு இருந்தா சொல்லு...
பார்த்திபன் : சரி இவ்வளவு தூரம் கேக்குற... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வீடு இருக்கு.. உனக்காக போய் பேசுறேன்...

வடிவேலு : நானும் வரேன்..
பார்த்திபன் : ஏன்டா... இப்படி அலையுற...?

வடிவேலு : நானும் பொண்ண பார்த்த மாதிரி இருக்கும்ல..
பார்த்திபன் : சரி வந்து தொல...

வடிவேலு : ( இப்பவே சலிச்சுக்குறான்... எதோ நமக்கு கல்யாணம் ஆனா சரி....)

பெண் வீட்டில்......

பார்த்திபன் : சார்... நான் சொல்லல... ஒரு நல்ல மாப்பிள.. அது இவரு தான்...
வடிவேலு : வணக்கம்ங்க....
'பயில்வான்' ரங்கநாதன் : மாப்பிள கருப்பா இருந்தாலும் கலையாதான் இருக்கீங்க... அம்மா சாந்தி மாப்பிளைக்கு காபி கொண்டு வா....

பெண் வந்து காபி கொடுக்க...



வடிவேலு : பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
'பயில்வான்' ரங்கநாதன்: அவ எங்க வீட்டு வேலைக்காரிங்க... நா எல்லா பொண்ணையும் அம்மா தான் சொல்லுவேன்...
வடிவேலு : அப்போ பொண்டாடிய....
பார்த்திபன் : உனக்கு கல்யாணம் ஆகனும்னா... கொஞ்ச நேரம் வாய முடு...

வடிவேலு : சரிப்பா... நீயே பேசு.. ( நமக்கு கல்யான நடக்ககுறதுக்கு இவன் பேச்சு எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு...)
ரங்கநாதன் : அம்மா ஆர்த்தி... மாப்பிளைக்கு வந்து நமஸ்காரம் பணிக்கோமா...
'குண்டு' ஆர்த்தி : வணக்கம்....

வடிவேலு : வணக்கம்... (பெண்ணின் அப்பாவிடம்) எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சுருக்கு... பெரியவங்க நீங்களே நல்ல நாள பாருங்க...
'குண்டு' ஆர்த்தி : அப்பா..நான் அவருக்கிட்ட ஒரு விஷயம் பேசனும்...
ரங்கநாதன்: கல்யாணத்துக்கு அப்புறம் பேசும்மா...

பார்த்திபன் : எதோ பொண்ணு ஆசப்படுது.... ( வடிவேலுவிடம் ) டேய்... பொண்ணுக்கிட்ட பக்குவம்மா பேசு..
வடிவேலு : சரிப்பா... பொண்ணுங்க கிட்ட எனக்கு பேச தெரியாதா....

'குண்டு' ஆர்த்தியும், வடிவேலு தனியாக மாடியில்....

'குண்டு' ஆர்த்தி: என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா...?
வடிவேலு : பிடிச்சதுனால தானே கல்யாணதுக்கு தேதி பார்க்க சொன்னேன்..

'குண்டு' ஆர்த்தி : என்னக்கும் உங்கள பிடிச்சிருக்கு... கல்யாணதுக்கு அப்புறம் நமகிட்ட எந்த ஒலிவு மறைவும் இருக்க கூடாதுனு நினைக்குறேன்...
வடிவேலு : அடி கிருப்புள்ள... நானும் அதையே தான் நினைச்சேன்... கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள இவ்வளவு பொருத்தம் பாரு...

'குண்டு' ஆர்த்தி : உங்ககிட்ட ஒரு உண்மைய சொன்னா... எங்க அப்பாகிட்ட சொல்லமாடிங்கல...

வடிவேலு : நம்ம விஷயத்த நமக்குள்ள தான் இருக்கும்... உங்க அப்பா கூட நமக்கு மூனாவது மனுஷன் போதுமா...தைரியமா சொல்லு...

'குண்டு' ஆர்த்தி : எனக்கு மூனு மாசம்...
வடிவேலு : அடி சிருக்கி... எல்லா பொம்பளையும் வயசு குறைச்சு சொல்லுவாங்கனு தெரியும்... நீ இவ்வளவு குறைச்சு சொல்லுற...

'குண்டு' ஆர்த்தி : நான் சொன்னது வயசுயில்ல.... என் வயத்துல வளர கருவ....
வடிவேலு : ( அ...ஆ.... இந்த பார்த்திபன் பைய வழக்கம் போல பிரச்சனையில மாட்டிவிட்டானே... சரி சமாளிப்போம்... )

வடிவேலு : இதோ பாரும்மா... நான் ஒன்னும் தியாகி கிடையாது... உங்க அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்த நிருத்த சொல்றேன்...
'குண்டு' ஆர்த்தி : நீங்க என்ன கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்ல... இந்த விஷயத்த எங்க அப்பா கிட்ட சொல்லாதீங்க...

'குண்டு' ஆர்த்தி காலில் விழுந்து கண்ணீர் சிந்த...

வடிவேலு : சரி..விட்டு.. சொல்ல... எனக்கும் உனக்கும் ஒன்னுமில்ல போது நான் ஏன் சொல்ல போறேன்...
'குண்டு' ஆர்த்தி : என் வயத்துல வளர கருவுமேல சத்தியம் பண்ணுங்க...

வடிவேலு : என்னது.... வயத்துல வளர குழந்த மேல சத்தியம் பண்ண முடியாது... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ...
'குண்டு' ஆர்த்தி : (அழுதபடி) இப்போ நீங்க சத்தியம் பண்ணலனா.... என் சாவுக்கு நீங்க தான் காரணம் லெட்டர் எழுதி நான் தற்கொலை செஞ்சிக்குவேன்...

வடிவேலு : அடிபாவி புள்ள... ஒரு கல்யாண பண்ணிக்க ஆச பட்டதுக்கு என்ன கொலை கேஸ்சுல மாட்டவச்சிடுவ போலிருக்கு...
'குண்டு' ஆர்த்தி : சத்தியம் பண்ணுறீங்களா இல்லையா....

வடிவேலு : ஏம்மா... இப்படி அதட்டி பேசுற.... சத்தியம் தானே... பண்ணுறேன்... உன் வயத்துல வளர குழந்த மேல சத்தியமா நீ கற்பமா இருக்குறத உங்க அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் போதுமா....

(இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ....)

பார்த்திபன் : வாடா... என்ன பொண்ணுகிட்ட மனசு விட்டு பேசுனியா...

கடுப்பான வடிவேலு.... மெதுவாக பார்த்திபனிடம்...
வடிவேலு : யோவ்... பொண்ணு மூனு மாசம் கற்பமா இருக்கு... எப்படியாவது கல்யாணத்த நிருத்து...

பார்த்திபன் : அப்படியா…! பொண்ணு கற்பமா இருக்கு சொல்லியே கல்யாணத்த நிருத்துறேன்...
வடிவேலு : ஏன் உயிருக்கு வேட்டு வைக்காம விட மாட்டியா... அப்படி சொன்னா அவ தற்கொல பண்ணி..அதுக்கு நான் தான் காரணம் லெட்டர் எழுதி செத்துபோவேனு மிரட்டுரா.. நீ தான் எதாவது ஐடியா பண்ணி நிருத்தனும்....

பார்த்திபன் : என்ன நம்பிட்டேல.. விடு நான் பார்த்துகுறேன்....
வடிவேலு : உன்ன நம்புறேன்... எப்போவும் போல இப்பவும் என்ன கவுத்துடாத...

பார்த்திபன் : சரி... நான் இருக்கேன்... (ரங்கநாதனிடம் ) சார்... மாப்பிளைக்கு எவ்வளவு பொடுவீங்க...
ரங்கநாதன் : எதோ என் சத்திக்கு முடிஞ்சது.... ஒரு இருபது சவரன் நகை, நான் இருக்குற வீடு அவ்வளவு தான் என்னால முடியும்..
பார்த்திபன் : அட என்னங்க நீங்க... மாப்பிள்ளை கலையா இருக்காரு நீங்களே சொல்லிட்டீங்க... ஒரு நூறு சவரன் நகை, காரு, பங்கலா மாதிரி வீடு கொடுத்தா நல்ல இருக்கும்...
ரங்கநாதன் : அவ்வளவும் பண்ணனும் ஆச தான்... ஆனா பணம் இல்ல தம்பி...

வடிவேலு : பணம் இல்லாத நீ எய்யா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் நினைக்குற.... உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது...போய்யா...
ரங்கநாதன் : டாய் எவ்வளவு தைரியமிருந்தா... போலீஸ் காரண் கிட்ட வரதட்சனைய கேப்ப....முடியாதுனு திமார வேற பதில் சொல்லுற... என் பொண்ண நீ கல்யாணம் பண்ணலைனாலும் பரவில்ல...உன்ன மாதிரி ஆ ள உள்ள போடனும். நடடா ஸ்டேஷனுக்கு...



வடிவேலு : ஐயா...ஐயா.. உங்க கிட்ட உண்மைய சொல்லிடுறேன்... நீங்க எல்லா பொண்ணுங்களையும் அம்மா கூப்பிடுறீங்க... ஆனா ஒருத்தன் உங்க பொண்ண ‘அம்மா’ ஆக்கிடான்... உங்க பொண்ணு மூனு மாசம்...
ரங்கநாதன் : ஜெயில போடுவேன் பயந்து என் பொண்ண பத்தி தப்பா பேசுற... உன்ன ஸ்டேஷன் போய் அடிக்கிறத விட... உன்ன இங்கையே அடிச்சாதான் ஏன் கோபம் திரும்...

வடிவேலு : ஐயோ..அடிக்காதிங்க..அடிக்காதிங்க...பார்த்திபா...காப்பாத்து...
பார்த்திபன் : சார்...நீங்க எவ்வளவு பெரிய அதிகாரி... இப்படி பண்ணலாம்மா...

வடிவேலு : அப்படி நியாயம் கேளு...
பார்த்திபன் : இப்போ இவன அடிச்சா...இவன் சொன்னது உண்மை ஆயிடும்... ஸ்டேஷன் கொண்டு போய்யி நல்ல அடிங்க... இல்ல போர வழியில என் கவுண்டர் பண்ணுங்க...

வடிவேலு : அடபாவி... என்ன பொணமா ஆக்காம விடமாட்டான் போல... (மெதுவா எஸ்கேப் அயிடுவோம்...)
வேலைக்காரன் : ஐயா..நம்ம ஆர்த்தி அம்மா தூக்கு மாட்டி செத்துடாய்யா.
ரங்கநாதன் : என் பொண்ண தப்பா பேசி தற்கொல செஞ்சிக்க வெச்சிடியடா....

வடிவேலு: ஐயோ..ஐய் ஐயோ.. நான் எதுவும் பண்ணல... பார்த்திபா...(பார்த்திபன் அங்கு இல்லை) அடபாவி... என்ன பிரச்சனையில மாட்டிவிட்டு நீ தப்பிச்சிடியே...

வேலைக்காரன் : சாவுக்கு காரணம் வடிவேலுனு லெட்டர் எழுதி வச்சிடு தான் செத்துருக்காங்கய்யா...
வடிவேலு : ஆ.... இப்போ கொலை பழி வேறைய்யா.... ஆள விடுங்கடா சாமி....
ரங்கநாதன் : உன்ன கொள்ளாம்ம விடமாட்டேன்.......

(இது ஒரு மறுபதிவு)

1 comment:

THOPPITHOPPI said...

செம செம செம

LinkWithin

Related Posts with Thumbnails