வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, November 16, 2010

சத்திய சோதனை

இந்திரா பார்த்தசாரதி

இ.பா புத்தகங்கள் என்றால் அரசியல் பகடி செய்யும் எழுத்துக்கள் தான். ’வேதப்புரத்து வியாபாரிகள்’ அபத்தங்களாக சம்பவங்களை கோர்க்கப்பட்டு தற்கால அரசியல்வாதிகளை நக்கலடித்திருப்பார்.’ஏசுவின் தோழர்கள்’ நாவலில் போலிஷ் நாட்டோடு அரசியலோடு இந்தியாவை ஒப்பிட்டு செய்திருப்பார். ‘சுதந்திர பூமி’ நாவலில் ஒரு சமையல்க்காரன் அரசியல்வாதியான கதையை சொல்லியிருப்பார். இதில் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கொள்கையை பகடி செய்திருப்பார். இந்த மூன்று அரசியல் நாவலை கட்டுரையாகக் கூட எழுதியிருக்கலாம். ஏன் நாவலாக எழுதினார் படித்து முடித்த பிறகு தோன்றியது ? கட்டுரையில் சொல்ல வேண்டியதை கதாப்பாத்திரங்களின் விவாதம் மூலம் சொல்லியிருப்பார்.

மிக எளிமையான எழுத்து, அதிக வர்ணனையில்லாத நடை என்பதால் இவரின் மூன்று புத்தங்களை படித்திருக்கிறேன். இ.பாவின் ‘சத்திய சோதனை’ நான் படித்த நான்காவது புத்தகம். இதுவும் அரசியலை பற்றிய சமக்கால நாவல் தான்.

மகாத்மா காந்தி சுயசரிதையின் தலைப்பைக் கொண்ட புத்தகம் தவிர அவரின் சுயசரிதைக்கும், இந்த நாவலுக்கும் எந்த சம்மந்தமில்லை. காந்தியிருந்திருந்தால் தன் புத்தகம் பெயர் இதற்கு வைத்தற்காக மான நஷ்ட வழக்கு போட்டிருப்பார். அவர் இல்லை என்ற தைரியத்தில் இந்த தலைப்பு வைத்துவிட்டார்கள் போல.

தமிழ் அகராதியில் ‘அரசியல்’ என்றால் நாட்டை நிர்வாகிக்கும் கலை. ஆனால் நாம் பயன்ப்படுத்துவது...? தந்திரம், ஏமாற்றுவது, முகமூடி, காலை வாரிவிடுவது, மாட்டிக் கொள்ளால் இருப்பதற்கு... போன்ற காரியங்களுக்கு மாற்றுப் பெயராக தான் இருக்கிறது.

பிரும்மநாயகம் என்ற அரசியல்வாதியின் சுயசரிதை எழுத கோஸ்ட் ரைட்டராக வரும் வாசுதேவன், அவர் செகரெட்டியாக சேருக்கிறான். அங்கு அவருடன் வாசுதேவனுக்கு கிடைக்கும் அனுபவம், அரசியல் தந்திரமும் அவனை பிரம்மிக்க வைக்கிறது. பிரம்மநாயகம் வேட்பாளராக நிருத்திய பிரம்மநாயகத்தின் நண்பர் தணிகை கொலைச் செய்யப்படுகிறார். தணிகையின் கொலை அரசியலுக்காக செய்யப்பட்டதா ? பிரும்மநாயகம் பங்குயிருக்குமா ? என்று பல சந்தேகங்கள் வாசுதேவன் மனதில் ஓடுகிறது. இறுதியில், கொலை பழி வாசுதேவன் மேல் படியாக சந்தர்ப்பங்கள் அமைக்கிறது. அதில் வாசு எப்படி மீண்டான் என்பதை புத்தகம் வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலே சரியான குடிநீர் வசதிகூட இல்லாம இருக்கிறவங்க சதவிகிதம் தெரியுமா உங்களுக்கு ? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க ?’

‘சாராயம் கொடுங்க’

’அரசாங்கத்துக்கு உங்க சிபாரிசு இதுதானா ?’

‘என் சிபாசிசு இல்லேய்யா. அரசாங்கம் இதைத்தானே இப்போ செய்திட்டு வருது ?”


**

’படிச்சு முடிச்சாச்சு. வேலை தேடிக்கிட்டிருக்கேன்.’

வேலை தேடுவானேன் ? கட்சியிலே சேர்ந்திடு !’


’வேதப்புரத்து வியாபாரிகள்’, ‘ஏசுவின் தோழர்கள்’ நாவலில் இருந்த இ.பாவின் அரசியல் நகைச்சுவை இதில் குறைவு தான். எழுத்தாளன் கண்ணோட்டத்தில் நடக்கு கதை இன்னும் அரசியல் நகைச்சுவை கலந்திருக்கலாம்.

தன் முந்தைய நாவலில் திராவிட அரசியலை பகடி செய்தவர், இதில் வன்னிய அரசியலை பகடி செய்திருக்கிறார். குடி பழக்கம் இல்லாதவனாக பேசும் தலைவன் அந்தரங்க நண்பனோடு குடிப்பது போல் அமைத்திருக்கிறார்.

பார்ப்பனிய அரசியல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி இவர் ஒரு நாவல் எப்போ எழுதப்போகிறார் ??

சமகால அரசியல் நாவல் வரவேற்க ஒன்று தான். இ.பா நாவல் ஒரு தலை பட்சமாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

நூல் வாங்க... இங்கே


ரூ.100 , பக் : 136
கிழக்கு பதிப்பகம்

2 comments:

Unknown said...

Very nice flow.Good article

மணிபாரதி said...

Submit your blog/site here www.ellameytamil.com

LinkWithin

Related Posts with Thumbnails