வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, March 4, 2011

ப(பி)டித்த தத்துவங்கள் !

சதுரங்கத்தில் எல்லா காய்களும் முன்னே கொண்டு செல்பவன் வெற்று பெறுவதில்லை. சில காய்களை பின்னுக்கு தள்ளினால் தான் முன்னேறி வெற்றி கிடைக்கும்.

**

தனிமையில் இருக்கும் போது
சிந்தனையில் கவனமாக இரு !
கூட்டத்தில் இருக்கும் போது
வார்த்தையில் கவனமாக இரு !

**

அன்பை வெளிப்படுத்தும் முன் யோசிக்காதே
கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறக்காதே !
-விவேகானந்தர்

**

உனக்கு விதிமுறைகளை பிடிக்கவில்லை என்றால்
அதை பின்பற்று, சிகரத்தை தொடு
விதிமுறைகளை மாற்றியமை !

**

சூரியன் போல் பிரகாசமாக ஓளிர வேண்டும் என்றால்
சூரியன் போல் எரிவதற்கு தயாராக இருக்க வேண்டும்
- அப்தூல் கலாம்

**

என் முதுக்கு பின் பேசுபவர்களைப் பற்றி
நான் கவலைப்படுவதில்லை
காரணம்,
அவர்களை விட இரண்டு அடி
நான் முன் நிற்கிறேன் !

**

நீ வேகமாக நடக்க வேண்டும் என்றால்
தனியாக நட !
நெடுந்தூரம் நடக்க வேண்டும் என்றால்
மற்றவர்களோடு சேர்ந்து நட !!

**

2 comments:

எல் கே said...

முதல் தத்துவம் பிடித்த ஒன்று

ADMIN said...

அனைத்து த்த்துவங்கள் அருமை.. அனைவருக்கும் பயன்படும்.. பதிவிட்டமைக்கு நன்றி!அப்படியே நமது வலைப்பூவையும் எட்டிப்பார்த்துவிட்டு போகலாமே..www.thangampalani.blogspot.com

LinkWithin

Related Posts with Thumbnails