வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, July 25, 2011

காதல் கவிதைகள் !

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
நாம் சதுரங்கம் விளையாடும் போது !

*

உன் ஒவ்வொரு குறுந்தகவலும்
உன் விரல் ஸ்பரிசத்தை கொடுக்கிறது
உன் ஒவ்வொரு அழைப்பும்
பிரிவின் சுகத்தை மறக்க வைக்கிறது !

*

பல புத்தகங்களை படித்த
மனநிறைவு கொடுக்கிறாய்
உன்னிடம் பேசும் போது !

*

உன்னிடம் பேசிப் பழகும் போது
கடவுளுக்கு ‘நன்றி’ சொல்லி
ஆத்திகனாகிறேன் !
சண்டையிட்டு பிரியும் போது
கடவுளை மறுத்து பேசும்
நாத்திகனாகிறேன் !

*

நீ கொடுக்கும்
சக்கரையில்லாத தேநீரை
சுவைத்து குடிக்கிறேன்
உன் புன்னகையில்
அரைகிலோ சக்கரை இருப்பதால் !

LinkWithin

Related Posts with Thumbnails