வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 29, 2012

கேட்காமல் கிடைக்குமா ?

நேற்று, அபிராமியில் ரூ.25/- மிராண்டா பெப் பாட்டிலை ரூ.33 என்றார்கள். சண்டை போடாமல் பில் மட்டும் தான் கேட்டேன். முதலில் தர மறுத்தார்கள். பிறகு, ரூ.28வாது தர சொன்னார்கள். 40 ரூபாய் கூட தருகிறேன், எனக்கு பில் வேண்டும் என்றேன். எங்கோ ஒருவர் வந்து மிராண்டா 25 ரூபாய் தான், புது ஆள் தெரியாமல் சொல்லிவிட்டார் என்று சமாளித்தார். குடும்பத்துடன் சென்றதால், வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. ரூ.25 கொடுத்து விட்டு வந்தேன்.

குற்றவுணர்வு எனக்குள் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது.

கண்டிப்பாக இவர்கள் எல்லோருக்கும் எம்.ஆர்.பி யை விட அதிகமாக தான் விற்க போகிறார்கள். நமக்கான உரிமையை ஒவ்வொரு முறையும் போராடி தான் பெற வேண்டுமென்றால், கண்டிப்பாக இது ஜனநாயகம் இல்லை. தியேட்டர், பஸ் ஸ்டான்ண்ட், டாஸ்மார்க் யில் எம்.ஆர்.பி யை விட அதிகமாக பொருளை விற்க பயப்பட வேண்டும்.

வன்முறையில்லாமல் எப்படி செய்ய வேண்டும் ? கேட்டால் கிடைக்கும் என்பதை விட கேட்காமல் கிடைக்கும் நிலை வருமா ?

Tuesday, March 27, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 1

முதல் பாகம்

பாகம் - இரண்டு : அத்தியாயம் - 1

சட்டக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் போது யார் மீது தெரியாமல் இடித்தேனோ அவளே என் வகுப்பில் ஒருத்தியாக இருப்பாள் என்று நினைத்து பார்க்கவேயில்லை. ஒரு பக்கம் சாயலில் 'சரோஜா தேவி' போல் தெரிந்தாள். அவளை பார்த்ததும் நான் எம்.ஜி.ஆராக மாறிவிட்டேன். 'அன்பே வா' கனவு பாடல் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' நாங்கள் இருவரும் சேர்ந்து பாட வேண்டும் போல் இருந்தது. முதல் பார்வை, முதல் சந்திப்பு, முதல் ஸ்பரிசம் என்று முதலாம் ஆண்டினேலே கனவில் மிதக்க தொடங்கிவிட்டேன். 'தமிழ்' படித்த எனக்கு கனவு வந்த கவிதைக்கு பஞ்சமாயிருக்க போகிறது.

“வஞ்சி நாண இடைக்கு, மடநடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க, அடியன்ன
கஞ்சம் நீரில் ஒளிப்பக் கயலுகப்
பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள்”


சீதை நீராடும் போது அவளின் மெல்லிய இடையைக் கண்ட வஞ்சிக்கொடியானது வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள, நடையழகைப் பார்த்ததும் அன்னப்பறவைகள் பயந்து ஒதுங்கிக்கொள்ள, கால்களைப் பார்த்து வெட்கி தாமரை நீருக்குள் மறைந்து கொள்ள, கண்களைக் கண்ட மீன்கள் ஓட, பஞ்சை விட மென்மையான பாதங்களை உடைவது போல் இருக்கும் என்று “கம்பராமயணத்தில்” கம்பன் வர்ணிப்பார். இந்த பெண் நீருக்குள் இறங்க தேவையில்லை. நீராட நினைத்தாலே போதும். கம்பன் சொன்ன அத்தனை வர்ணனைகளும் சீதையை விட இவளுக்கு நன்றாக பொருந்தும்.

அவளை பார்த்து ஒரு கவிதை சொல்ல வேண்டும். அப்போது என் பின்னால் இருந்து ஒரு குரல்...

" மிஸ்டர்... ! க்லாஸ் ஸ்டார்ட் அயிடுச்சு. போய் உக்காருங்க...." என்று பேராசிரியர் கூறினார்.

அவளை பார்த்த சந்தோஷத்தில் சிலையாக நின்று விட்டேன். புது வகுப்பில் எங்கு எனக்கென்று ஒரு இடம் பார்த்து உக்கார வேண்டும். பள்ளியில் ஒரு வாரம் ஒரே இடத்தில் உக்கார்ந்து விட்டால் அது தான் நம் நிரந்தர இடம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால், கல்லூரியில் அப்படியில்லை. நினைத்த மாத்திரத்தில் எந்த இடத்தில் வேண்டுமாலும் உட்காரலாம். ஆனால், பேராசிரியர் வந்த பிறகு ஏதாவது ஒரு இடத்தில் உக்கார நினைக்கும் போது இடம் தான் கிடைக்கவில்லை.

கண்ணாடி போட்ட ஒருவன் தன் அருகில் உக்காரும்படி சைகை செய்தான். இப்போதுக்கு உக்கார இடம் கிடைத்ததே பராவியில்லை என்று அந்த இடத்தில் சென்று அமர்ந்தேன்.

" ஹாய் ! ஐ எம் ஜோசப். யூவர் நேம்...." கண்ணாடி அணிந்தவன் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான்.

" சந்திரு....." என்றேன்.

" ஃபெச்சுலர் டிகிரி என்ன படிச்சிங்க...." என்று ஜோசப் கே ட்க, பக்கத்தில் இருந்து அதட்டும் குரலில் "சைலன்ட்" என்று வந்தது. நாங்கள் இருவரும் பேசாமல் அமைதியாக இருந்தோம்.

பி.ஏ. தமிழ் படித்த எனக்கு இந்த சட்ட படிப்பு வகுப்பரை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பி.ஏ படிப்பில் எல்லோரும் தமிழில் தான் பேசுவோம். பேராசிரியர் சுத்த தமிழில் தான் பேசுவார். அவர் பேசும் தமிழை பார்த்து தான், அதில் பாதியளவில் எங்கள் தமிழ் வளர்ந்தது. ஆனால், இங்கு ஆங்கிலம் கலந்த தமிழில் தான் பேசவேண்டும். முடிந்தால், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினால் நல்லது. காரணம், நீதி மன்றத்தில் வாதம் செய்வதாக இருந்தாலும், பத்திரமாக இருந்தாலும் பெரும்பாலும் ஆங்கில மொழிதான் தேவை. அதனாலே அங்கில மொழிக்கு முன்னுரிமை இருப்பதை உணர்ந்தேன்.

பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்க ஜோசப் பெண் இருக்கையில் அமர்ந்து இருக்கும் பெண்களையே உற்று பார்த்தான். எனக்கு அடி வயிற்றில் என் தேவதையை பார்க்கிறானோ என்ற பொறாமை எழுந்தது. நல்ல வேலை, குறிப்பாக மஞ்சல் சேலை அணிந்த பெண்ணை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அந்த பெண்ணும் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை அவனை திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"அடபாவி.... வந்த முதல் நாளே கண்களால் தூது விடுகிறானே" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

நமக்கு சிவப்பு தேவதை பிடிக்கும் போது, அவனுக்கு மிஞ்சல் நிற சேலை பெண் தேவதையாக தெரிந்திருக்கலாம். என் அடி மடியில் கை வைக்காதவரை சரி தான்.

வகுப்பு முடிந்ததும் என் தேவதையும், ஜோசப் பார்த்துக் கொண்டு இருந்த பெண்ணும், இன்னொருத்தியும் வெளியே சென்றார்கள். எனக்கும் அவர்கள் பின்னால் போக வேண்டும் போல் இருந்தது. முதல் நாளில் ஒரு பெண் பின்னால் செல்வதை யாராவது பார்த்தால் படிப்பு முடிக்கும் வரை என் பெயர் அவ்வளவு தான். வேறு வழியில்லாமல் ஜோசப்புடன் கல்லூரி சிற்றூண்டி விடுதிக்கு சென்றேன்.

" என்ன சாப்புடுற...." என்று ஜோசப் ஒருமையில் கேட்டான். காலையில் தான் சந்தித்தோம். அதற்குள் ஒருமையில் அழைக்கும் நண்பன் போல் பேசினான். அவன் ஒருமையில் பேசிய பிறகு நான் மட்டும் 'வாங்க', 'போங்க' என்று மரியாதையாக பேசினால் நன்றாக இருக்காது.

" ஒரு தோச சொல்லு " என்று ஒருமையில் பதிலளித்தேன்.

எனக்கு தோசையும், அவனுக்கு சாப்பாடும் சொன்னான். கொஞ்ச நேரத்தில் நாங்கள் சொன்னது வந்து விட்டது. இருவரும் சாப்பிட்டு கொண்டே எங்கள் குடும்பத்தை பற்றி பேசி கோண்டோம். அவன் தாத்தா வெள்ளையர் என்பதும், இந்திய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை சொன்னான். நானும் என் குடும்பத்தை பற்றி அவனிடம் சொன்னேன்.

நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது மஞ்ச சேலை பெண் எங்கள் அருகில் வந்தாள்.

" என்ன ஜோசப்..! பார்த்தும் பார்க்காத மாதிரி இருக்க....?" என்றாள். இவர்கள் முன்பே அறிமுகமானவர்கள் என்பது அந்த பெண் பேசுவதிலே தெரிந்துக் கொண்டேன். அந்த பெண்ணோடு எனது தேவதையும் நின்று கொண்டு இருந்தாள்.

" அப்படியெல்லாம் இல்ல ஜாஸ்மின். பொண்ணுங்க நீங்க பேசிட்டு இருக்கீங்க. நான் எப்படி நடுவில் வந்து பேச முடியும் ?" என்று அவள் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டான். குறும்பு புன்னகையோடு அவளும், அவளின் தோழிகளும் எங்களுடன் அமர்ந்தனர். நாங்கள் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து கொண்டு இருந்தோம்.

" ம்ம்... இப்படியே ஒருத்தர் முஞ்சி ஒருத்தர் பார்த்திட்டு இருந்தா போர் அடிக்கும். ஏதாவது பேசு.." என்று ஜாஸ்மின் பேச்சை தொடங்கினாள்.

நான் அவளை புன்முருவலோடு பார்த்தேன்.

" ஓ.கே. என் பேரு ஜோசப். ஜாஸ்மினோட அத்த பையன். படிப்பு முடிச்சதும் எங்க இரண்டு பெருக்கும் கல்யாணம்" என்று ஜாஸ்மின் தோழியர்களிடம் அறிமுகம் செய்துக் கொண்டான்.

எனக்கு வியப்பாக இருந்தது. கல்லூரிக்கு வந்து காதலை கண்டு பிடிப்பவர்களில் மத்தியில் காதலர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க வந்திருக்கிறார்கள். அதுவும் பெற்றோர் சம்மதத்துடன். இவர்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்து என்னை பற்றி சொல்ல தோன்றியது. ஆனால், அதற்குள் ஜாஸ்மின் எதோ பேச ஆரம்பித்தாள்.

" என் பேரு ஜாஸ்மின். ஜோசபோட கஸின்" என்றாள்.

ஜோசப் மாதிரியே அவளும் இருக்கிறாள். அடுத்தவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் இவர்களே பேசுவதற்கு நான் ஏன் இங்கு உக்கார வேண்டும் என்று தோன்றியது. என் தேவதை அருகில் உட்கார சந்தர்ப்பம் கிடைத்தும் அவள் பெயர் தெரியாமல் எப்படி செல்வது. கொஞ்சம் இடைவேளை விட்டாலும் மீண்டும் ஜோசப் பேச தொடங்கிவிடுவான் என்பதால் அவரசரமாக நான் பேசினேன்.

" என் பேரு சந்திரசேகர். பி.ஏ தமிழ். சிதம்பரத்துல இருந்து வரேன். இங்க பிரண்ட் வீட்டுல இருந்து படிக்கிறேன்." என்று என் தேவதையை பார்த்து சொன்னேன். அப்போது தான், அடுத்து தன்னை பற்றி சொல்வாள் என்று அற்ப சந்தோஷம். என் எண்ணம் புரிந்து கொண்டு அவளும் பேச வாயெடுத்தாள்.

" என் பேரு ரம்யா ராமானுஜம். பி.ஏ ஹிஸ்ட்ரி. அப்பா, அம்மா ஸ்ரீ ரங்கத்துல இருக்கா. இங்க ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்." என்று என்னை பார்த்து சொன்னாள். அவள் பெயரும், தோரணையும் ஐய்யர் ஆத்து பெண் என்ற சொல்லவே வேண்டியதில்லை. அவள் 'ஐயர்' பெண் என்று தெரிந்து மனம் அவளை ஏன் பார்க்க தோன்றியது என்று தெரியவில்லை.

நான் அசைவம். அதுவும் இப்போது 'பெரியார்', 'அண்ணா' என்று அவர் புத்தகங்களை விரும்பி படிப்பவன். எனக்கு 'பிராமின பெண்ணுடன் காதல் வேண்டுமா என்று தோன்றியது. ஆனால், காதல் என் எண்ணத்தை வென்றது.

"என் பேரு லஷ்மி. பி.ஏ இங்க்லீஷ். எங்க ஆத்து மைலாப்பூர்ல இருக்கு….." என்றாள்.

எனக்கு ராம்யாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. நான் அவளிடன் ஒன்று கேட்டு அதற்கு அவள் என்னை பார்த்து பதில் சொல்ல வேண்டும். அதே சமயம், பள்ளிக்கூடத்திலிருந்து பாஸ் ஆகி வந்து, புதிதாக கல்லூரியில் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி, அற்ப சுகதுக்காக அலையும் பைத்தியக்கார ஆண் என்று என்னை நினைக்ககூடாது. என்ன கேட்கலாம், எதை பற்றி கேட்கலாம்.... யோசி சந்திரு...யோசி....!

" ரம்யா உங்களுக்கு என்ன பிடிக்கும் " மனதில் தோன்றியதை கேட்டுவிட்டேன். ஜோசப் என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். மூன்று பெண்கள் இருக்க குறிப்பாக அவளை பார்த்து கேட்டதும் அவனுக்கு என் மீது சந்தேகம் ஏற்படுத்தியிருக்கும்.

" எனக்கு புத்தகம் படிக்கிறது ரொம்ப புடிக்கும். குறிப்பாக கல்கி கதைகள், சாண்டில்யன் நாவல்கள் ரொம்ப விரும்பி படிப்பேன்." என்றாள்.

எனக்கும் புத்தகங்கள் என்றால் பிடிக்கும். ஆனால், கல்கி, சாண்டில்யன் மீது அவ்வளவோ ஈடுபாடில்லை. புத்தகம் விரும்பிகள் என்ற புள்ளியில் இணைந்த எங்கள் சிந்தனை ஒருவரின் அபிமானி என்பதில் வேவ்வேறாக தெரிந்தோம்.

ரம்யா சொன்னவுடன் ஜோசப், ஜாஸ்மின், லக்ஷ்மி என்று அவரவர் தங்கள் விருப்பத்தை சொன்னார்கள். இப்படியே பேசிக் கொண்டதில் அவரவர் வீட்டுக்கு செல்லும் நேரம் நெருங்கி விட்டது. நாங்கள் அனைவரும் விடை பெற்றுக் கொண்டோம். இறுதிவரை யாரும் என் விருப்பத்தை பற்றி கேட்கவில்லை.

Wednesday, March 21, 2012

ஊழல்

அன்-ரிசர்வ் பெட்டியில் இடம் பிடிக்க வரிசையாக அவரவர் கையில் பெட்டியுடன் நின்றுக் கொண்டு இருந்தார்கள். இடம் பிடிப்பது முடியாத காரியம் கூட்டத்தை பார்த்தவுடன் புரிந்துக் கொண்டேன். நிற்க இடம் கிடைத்தால் நல்லது என்று தோன்றியது.

என் முன் நிற்பவர் ஒரு நாளிதழ் படித்துக் கொண்டு இருந்தார். ரயில் வரும் வரை படிக்கலாம் என்று அவரிடம் பேப்பர் கேட்டேன். தான் படிப்பதை என்னிடம் கொடுத்து, வாரப் புத்தகத்தை படிக்க எடுத்தார்.

“பெருசா நியூஸ் இல்ல சார். எல்லா பக்கமும் லஞ்சம், ஊழல் தான். இத காசு கொடுத்து வாங்கி படிக்கனும்னு தலையில எழுதியிருக்கு...”

” அப்போ எதுக்கு பேப்பர் வாங்குனீங்க...?”

”நாமல எப்படி ஏமாத்துனாங்கனு தெரிஞ்சிக்க வேண்டாம் !!!”



அவரை பார்த்தால் எந்த கட்சியும் சேர்ந்தவில்லை என்று தோன்றியது. சராசரி பிரஜையின் கோபம் தான் அவரிடமும் இருந்தது. வெள்ளை வேட்டி, கட்டம் போட்ட சட்டை. பார்ப்பதற்கு கிராமத்து ஆள் போல் தெரிந்தார். ரயிலில் வந்ததும் அடித்து பிடித்து ஏறினேன். கூட்டத்தில் அந்த மனிதர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

விழுப்புரம் வந்ததும் தன் குடும்பத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்தேன். அந்த மனிதரை அழைத்து வாங்கின பேப்பரை கொடுத்து டீ குடிக்க அழைத்தேன்.

"உக்கார இடம் கிடச்சுதா ?"

"மேல ஏறினதும் எட்டு பேருக்கு இடத்த போட்டுடேன்." என்று பெருமையாக சொன்னார்.

"அவ்வளவு இடம் புடிச்சிங்களே ! யாரும் சண்டைக்கு வரலையா ?"

"இரண்டு மூனு பேரு கத்துனாங்க.. நான் காதுல வாங்கிக்கல " என்றார்.

“சாதான ஆள் நீங்க... உங்க குடும்பத்துக்கு இத்தன இடத்த புடிக்கும் போது. பதவியில இருக்குறவன் செஞ்ச மட்டும் ஏன் உங்களுக்கு கோபம் வருது ? " என்றேன். சிரித்துக் கொண்டு அவர் எந்த பதிலும் சொல்ல வில்லை. இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் ஊழல் செய்வார் என்றே தோன்றியது.

Tuesday, March 20, 2012

அந்த மூன்று பெண்கள் - 10

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8 அத்தியாயம் 9

‘பி.ஏ படிப்பே வேண்டாம்’ என்று சொன்ன நான் இப்போது’ பி.எல் படிக்க வேண்டும்’ என்று சொல்கிறேன். கல்லூரி வாழ்க்கை ஒருவனை எப்படி எல்லாம் மாற்றும், அவன் செல்லும் பாதை எப்படி நிர்ணய்கும் என்பதை அனுபவ புர்வமாக உணர்ந்தேன். ஹோட்டல் நிர்வாகம் என்ற குறுகிய வட்டத்தத்திற்குள் சிக்க நான் விரும்பவில்லை. பணக்காரர்களிடம் அடைக்கலமாக இருக்கும் சட்டத்தை ஏழைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியம் மனதில் ஆழமாய் பதிந்தது.

ராமா மாமா என்றுமே என் விருப்பத்திற்கு தடை சொன்னதில்லை. அப்படியே அவர் மறுத்தாலும் அது என் நன்மைக்காக தான் இருக்கும் என்று எனக்கு தெரியும். பி.எல் படிப்புக்கு மாமா சம்மத்தித்தாலும் அம்மா சம்மதிக்கவில்லை. எனக்கு திருமணம் செய்து பேரன், பேத்தி பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசை. ஆனால், மாமா எனக்கு சாதகமாக இருந்ததால் 'வழக்கிஞர்' படிப்பு படிக்க வீட்டில் அனுமதிகிடைத்தது.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படிக்க விண்ணப்பம் போட்டேன். சென்னையில் பரூக் வாத்தியார் வேலை செய்வதால் அங்கு தங்கி படிக்க பிரச்சனை இருக்காது. சமிபத்தில் தான் அவன் அம்மா ஆயிஷாவையும் அழைத்து சென்றான். அதனால், வீட்டு சப்பாடு கிடைக்கும். இதை எல்லாம் அம்மாவிடம் சொன்ன பிறகு முகம் மலர்ந்தது. இல்லை என்றால் பையன் வெளியூரில் சாப்பாடிற்கு கஷ்டப்படுவான் என்று என்னுடனே சென்னைக்கு வந்தாலும் வந்திருப்பார்.

நான் எதிர்பார்த்தது போல் கல்லூரியில் இருந்து நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது.முதல் முறையாக அம்மாவை விட்டு தனியாக செல்கிறேன். படிக்க இடம் கிடைத்தால் மூன்று வருடம் அம்மா,மாமா இருவரையும் விட்டு தனியாக இருக்க வேண்டும். சமூகத்தொண்டு என்று லட்சியம் மனதில் வந்த பிறகு சிறு சிறு பிரிவுகளை தாங்கி தான் ஆக வேண்டும். மாமா பஸ்ஸில் ஏற்றிவிட என்னோடு வந்தார். பஸ் நிலையம் வர அம்மாவுக்கு மனம் வரவில்லை. அப்பா இறந்த பிறகு நான் தான் உலகம் என்று இருந்தவர், என் பிரிவு அவருக்கு பெரிய துயரத்தை கொடுக்கும் என்பது சந்தேகமில்லை.

மாமாவுக்கு கை அசைத்தப்படி பஸ்ஸில் சென்றேன். கொஞ்ச தொலைவில் சென்றவுடன் கண் அசதியாக இருந்தது. இரவு முழுக்க அம்மா,மாமாவிடம் பேசியதால் சரியாக தூங்கவில்லை. தூங்கிவிட்டேன். விழித்த போது பஸ் சென்னை பாரிமுனையில் வந்து நின்றது.

என்னை அழைத்து செல்ல பரூக் பாரிமுனை பஸ் நிலையத்தில் காத்திருந்தான். தன் நன்றி கடன் திற்பதிற்கு சந்தோஷம் அவன் முகத்தில் தெரிந்தது.

"என்னடா எப்படி இருக்க. பஸ் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது ? என்று மலர்ந்த முகத்துடன் கேட்டான்.

" நல்ல இருக்கேன். அம்மா எப்படி இருக்காங்க...?" என்று அவன் அம்மா பற்றி கேட்டேன்.

"ம்...நல்ல இருக்காங்க. வா போவோம்" என்று பரூக் சொன்னான். இருவரும் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறினோம். ரிக்ஷாக்காரன் 'பேமாளி, 'சோமாரி' என்று குறுக்கே நடந்து சென்றவர்களை திட்டியப்படி சைக்கிள் ரிக்ஷாவை இழுத்தான். ரிக்ஷாக்காரன் பேசுவது உண்மையான சென்னை பாஷை என்று பரூக் என்னிடம் சொன்னான். கொஞ்ச நேரத்தில் பரூக் வீடு வந்தது.

சைக்கிள் ரிக்ஷாவிற்கு பணம் பரூக் தான் கொடுத்தான். என்னை செலவு செய்ய விடவில்லை. பரூக்கின் அம்மாவும் என்னை அன்போடு கவனித்து உணவெல்லாம் பரிமாறினார். சென்னைக்கு வந்ததை போன் போட்டு ஹோட்டலில் இருக்கும் மாமாவிடம் சொன்னேன்.

ஒரு நாள் போனதே தெரியவில்லை. நேர்முக தேர்வுக்கு தயாரானேன். பரூக் சொன்னப்படி சைக்கிள் ரிக்ஷாவிலே ஏறி அம்பேத்கர் சட்ட கல்லூரியில் இறங்கினேன். பலர் நேர்முக தேர்வுக்காக வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். ஒவ்வொருவராக உள்ளே சென்று கொண்டு இருந்தனர். இப்போது என் முறை.

நான் உள்ளே நுழைந்தேன். அங்கு என்னை கேள்வி கேட்க மூவர் இருந்தனர். ஒருவர் நான் படித்த பள்ளி, கல்லூரி விபரங்களை மட்டும் கேட்டார். இன்னொருவர் என் குடும்ப பின்னனியை பற்றியும், நான் படித்த பி.ஏ தமிழில் இருந்தும் கேள்விகள் கேட்டார். எதோ கல்லூரியின் பேராசிரியர் தான் கேட்டார். அவர்கள் கேட்ட கேள்விக்களுக்கு சரியானா பதிலை தான் சொன்னேன். நேர்முக தேர்வு முடிந்ததும் பரூக் வீட்டுக்கு வந்துவிட்டேன். மாலை நேரம் பள்ளி முடிந்தது பரூக் வீட்டுக்கு வந்திருந்தான்.

பரூக் சென்னையை சுத்திக் காட்டுவதற்காக அழைத்து சென்றான். எல்.ஐ.சி கட்டிடம், ரிப்பன் கட்டிடம், ஸ்பென்ஸர் பிலாசா போன்ற இடங்கள் எனக்கு புதிதாக இருந்தது. சிதம்பரத்தில் இருந்தவரை இது போன்ற கட்டிடங்களை நான் பார்த்தில்லை. பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டு வந்தேன்.

என்னை சென்னை கடற்கரைக்கு பரூக் அழைத்து சென்றான். அங்கு நான் அண்ணா சமாதியை பார்த்தேன். மாமா பேச்சுக்கு பேச்சு 'அண்ணாவை போல வரனும்னா நல்ல படிக்கனும்' சொல்லுவார். அவர் பாதம் பட்ட மண்ணிலே அந்த உணர்வு வந்துவிட்டது. கடல்கரை காற்றுக்கும், சிதம்பரம் அருகில் இருக்கும் கடலூர் காற்றுக்கும் பெரிய வித்தாயசம் ஒன்றுமில்லை. இப்படி ஒரு சில நாட்கள் உருண்டோடின.

நேர் முக தேர்வில் தேர்வானவானவர்களின் பெயர்களை கல்லூரி வளாகத்தில் ஒட்டியிருந்தனர். ஒவ்வொரு பெயராக பார்த்தேன். "பரணி, பத்மா, சிதம்பரம், சின்னமணி, சின்னதம்பி...." என்று ஒவ்வொரு பெயரும் பார்த்து கொண்டு இருந்தேன். என் பெயர் மட்டும் அதிலில்லை. நான் அதிர்ந்துவிட்டேன்.

நான் தேர்வாகவில்லையா, இதற்காகவா இத்தனை போராட்டம் செய்து தேர்வு எழுதினேன். அம்மாவுக்கும், மாமாவுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன். தேர்வாகாமல் ஊருக்கு சென்றால் பார்ப்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன். அப்போது இன்னொரு பட்டியல் ஒட்டியிருப்பதை ஒருவன் சொன்னான். அங்கு சென்று பார்த்தேன்.

“அருணாச்சலம், அறுமுகம், பானுசந்தர், சித்ரா, சந்திரசேகர், சார்லஸ்…“ என்று படித்துக் கொண்டே இருந்தேன். மீண்டும் ஒரு முறை படித்தேன். " சித்ரா, சந்திரசேகர்,...." என்று இருந்தது. நான் தேர்வாகிவிட்டேன். நான் வழக்கறிஞராக போகிறேன். படிப்பறிவு இல்லாத எங்கள் குடும்பத்தில் முதல் 'வழக்கறிஞர்' நான் தான்.

நான் தேர்வானதை வீட்டுக்கு போன் போட்டு சொன்னேன். பரூக்குக்கும், அவன் அம்மாவுக்கும் இனிப்பு வாங்கி கொடுத்தேன். கல்லூரி ஆரம்பிக்க ஒரு மாதம் இருப்பதால் சிதம்பரம் சென்று வந்தேன். ஊருக்கு சென்றவுடன் மாமாவும், அம்மாவும் என்னை வாரி அணைத்துக் கொண்டனர். மாமா என்னை ஹோட்டலில் வேலை செய்யவிடவில்லை. ஒரு மாதம் நிம்மதியாக இருக்க சொன்னார். கல்லூரி தொடங்கிய பிறகு படிப்பு தான் முதல் கவனமாக இருக்கும். அப்போது எப்படி இது போல் சுதந்திரமாக இருக்க முடியும்.

ஒரு மாதம் போனதே தெரியவில்லை. இரவு பஸ் பிடித்து சென்னைக்கு சென்றேன். காலையில் பஸ் சென்றது. பரூக் இன்று பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டிய வேலையிருந்ததால் என்னை அழைத்து செல்ல அவன் வரவில்லை. பஸ் நிலையத்தில் வெளியே வரும் போது அவசரமாக ஒரு பெண் என் மீது இடித்தாள்.

"ஸாரி..தெரியாம இடிச்சிட்டேன்..." என்று பயந்த குரலில் அந்த பெண் மண்ணிப்பு கேட்டாள்.

"பரவாயில்ல" என்று சொன்னேன்.

அவளை ஒரு மோட்டர் கார் வந்து அழைத்து சென்றது. அம்மா பக்கத்தில் இல்லாததுனால் என்னவோ முதல் முறையாக ஒரு பெண் மீது ஈர்ப்பு. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன் என்பதை அவள் மோட்டார் காரில் சென்ற போது தான் உணர்ந்தேன். வீடு விட்டால் ஹோட்டல் என்று இருந்த நான் இப்படி ஒரு சலனமடைந்ததில்லை.

அவள் சென்ற பிறகு நான் பரூக் வீட்டுக்கு செல்ல தொடங்கினேன். எந்த சிரமமும் இல்லாமல் அவன் வீட்டை அடைந்தேன். பரூக் காலையிலே பள்ளிக்கு சென்று விட்டான். அவன் அம்மா காபி, சாப்பாடு எல்லாம் கொடுத்து என்னை வழி அனுப்பினார்.

இன்று நான் 'வழக்கறிஞர்' பட்டம் பெருவதற்காக முதல் நாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறேன். வகுப்பரையை விசாரித்து வகுப்புக்குள் நுழைந்தேன்.

நான் வருவதற்கு முன்பே என்னை வரவேற்பதற்காக ஒரு தேவதை பெண் இருக்கையில் முன் வரிசையில் இருந்தாள். அவள் நான் பஸ் நிலையத்தில் பார்த்த அதே 'பெண்' தான். சிவப்பு சேலை கட்டிக் கொண்டு அம்மன் போல் தெரிந்தாள்.

Monday, March 19, 2012

கூடுகள் சிதைந்தபோது :அகில்

அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ சிறுகதை தொகுப்புக்கு பிறகு நான் படித்த ஈழ சிறுகதை நூல் ‘கூடுகள் சிதைந்தபோது’. ஈழத்தின் புனைக்கதை என்று சொல்ல மனம் வரவில்லை. எங்கோ ஈழத்தில் அல்லது கனடாவில் இப்படி நடந்திருக்கும் என்று தோன்றும் அளவிற்கு கதைகள் உள்ளது. இந்நூலில் மோத்தம் பதிநான்கு கதைகள்.

1.வலி
கனடாவில் வாழும் ஈழ தமிழன் மயூரன் அசைவம் இல்லாமல் உணவு இறங்காது. ஹாக்கியில் கனடா வெல்ல வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு கனடா வாசியாக மாறிவிட்டவன். அவன் அசைவம் சாப்பிடுவதை கைவிடும் காரணத்தை சொல்லும் கதை.

2. அம்மா எங்கே போகிறாய் ?
ஈழத்தில் விசாலாட்சியிடம் பாசமாய் இருந்த மகன், மகள் கனடாவில் தங்களுக்கென்று குடும்பம் வந்ததும் சுயநலமாக மாறுகிறார்கள். விசாலாட்சியின் பென்ஷன் பணத்திற்காக இருவரும் உருமை கோருகிறார்கள். இறுதியில் விசாலாட்சி என்ன முடிவு எடுக்கிறாள் ?
என்பது தான் கதை.



3. பதவி உயர்வு
பிரிகேடியர் சில்வா சிங்கள இராணுவத்தில் ஜென்ரல் பதவி அடைய பல உயிர்களை கொன்றவன். அவன் மகன் அசோகா சில்வாவுக்கு உயிரின் அருமையஒ உணர்வது தான் கதை.

4. ரேடியோப்பெட்டி
முதுமைக் காதலுக்கு நினைவுச் சின்னமாக இருக்கும் ரேடியோப்பெட்டியை இயங்க வைக்க துடிக்கும் ஒரு மூதாட்டியின் முயற்சியும், அவரது காதலும் தான் கதை.

5 பெரிய கல் வீடு
சிங்கள இராணுவத்தால் ஈழத்தில் எத்தனையோ வீடுகள் போலிவு இழந்துள்ளது. பல கல்வீடுகள் கல்லாக மாறுயுள்ளது. அவர்களின் குண்டுகளுக்கு தப்பிய பெரிய கல்வீடு உரிமைக்காக வேண்டுவதே கதை.

9. கூடுகள் சிதைந்தபோது
இந்த நூலின் தலைப்பில் அமைந்த கதை. நெஞ்சை நெகிழ வைக்கும் களம். சிங்கள குண்டுகளுக்கு பயந்து தன் அன்பு மனைவி, குழந்தை பிணத்தை விட்டு ஓடிவந்தவனின் குற்றவுணர்வுடன் புலம்புகிறான். தான் தப்பி வந்ததை நினைத்து தன்னை தானே நொந்துக் கொள்கிறான்.

12. அண்ணாநகரில் கடவுள்

இந்த நூலின் சென்னையை கதைக்களமாக கொண்ட ஒரே கதை. படிக்கும் போது புதுமைபித்தனின் கதை ( ‘கடவுளும், கந்தசாமியும்’ என்று நினைக்கிறேன்), கடவுள் படம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அண்ணாநகரில் இறங்கிய கடவுள் மனிதர்கள் நம்பாமல் புறக்கணிப்பது தான் கதை.

ஓர் இதயத்திலே, உறுத்தல் போன்ற கதைகள் வேறு களத்தில் படித்த ஞாபகம் இருந்ததால் என்னை பெரிதாக கவரவில்லை.

கண்ணீர் அஞ்சலி, கிறுக்கன், இது இவர்களின் காலம், வெளியில் எல்லாம் பேசலாம், தேடல் போன்ற சிறுகதைகளை நூல் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்.

பல கதைகள் கனடாவை கதைக்களமாக கொண்டுள்ளது. ஈழத்தைப் பற்றி பல பதிவுகள் நூலாக வந்துள்ளது. ஆனால், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் கதையை பதிவு செய்யும் நூல் மிக அறிதாக உள்ளது. புனைக்கதை மூலம் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) பதிவு செய்துள்ளார். இவர் 1991 இல் புலம்பெயர்ந்து இந்தியா, இலண்டன் ஆகிய நாடுகளில் சில காலங்கள் வசித்து தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். www.tamilauthors.com என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார்.

34 பக்கங்கள் அணிந்துரை, என்னுரை என்று வாசகன் படித்து விட்டு முதல் கதையை படிக்க வேண்டியதுள்ளது. 3 பேரின் அணிந்துரை அவசியம் அற்றது என்று தோன்றுகிறது.

கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களில் வாழ்க்கையை "கூடுகள் சிதைந்தபோது" சிறுகதை நூல் மூலம் பதிவு செய்த அகிலின் முயற்சி பாராட்டியாக வேண்டும்.

இந்த நூலை வாங்க.... இங்கே.

கூடுகள் சிதைந்தபோது
அகில்
பக் : 184, விலை. 120/-
வம்சி புக்ஸ்
19, டி.எம் சாரோன்
திருவண்ணாமலை,
செல் : 94448 67023, 04175-251468

Wednesday, March 14, 2012

அந்த மூன்று பெண்கள் - 9

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டது போல் ஓவென்று அழுதனர். தங்கள் எதிர்காலம் என்னாகும் என்பது அஞ்சியப்படி பல முகங்கள் வெறுமையாக இருந்தன. பலர் லாரி, பஸ் பிடித்து சென்னை பட்டினத்திற்கு சென்று கடைசியாக 'அண்ணா'வை பார்க்க துடித்தனர். முதல்வரின் இறுதி யாத்திரையில் பார்க்க பலர் படை எடுத்ததால் பஸ்ஸில் கூட்டங்கள் நிறம்பி வழிந்தன. உள்ளே நிற்கும் இடமில்லாதவர்கள் பஸ் மேல ஏறிக்கூட பயணம் செய்ய தயாராக இருந்தனர். 'தமிழ் நாடு' என்று பெயரிட்டவர் தன் பெயரை மட்டும் பூமியில் விட்டு ஏன் சென்றார் என்று உரிமையோடு அண்ணாவின் படத்தை பார்த்து கேட்டனர்.

அண்ணா மிக பெரிய சகாப்தம். அதற்கு மற்றவர்கள் 'அண்ணா' என்று கண்ணீர் சிந்துவதில் பலர் மனதில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். இறுதியாக அண்ணாவை பார்க்க பலர் சென்று கொண்டு இருக்கும் போது, மாமா மட்டும் 'அண்ணா'வை பார்க்க நினைக்கவில்லை. மாணிக்கம் மாமாவுக்கும் 'அண்ணா'வை மிகவும் பிடிக்கும். அவர் சென்னை பட்டினத்திற்கு தான் சென்றுக் கொண்டு இருந்தார். ராமா மாமாவை அழைத்த போது அவர் வர மறுத்து விட்டார்.

" அந்த மனுஷன போட்டோவுல கம்பீரமா பார்த்து பழகி போச்சு. இன்னும் அவர் பேசுனது காதுல கேட்குது. இப்போ நாலு பேரு அவர தூக்கிட்டு போறத என்னால் பார்க்க முடியாது" என்று சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழுதார்.

முதல்வர் மரணத்திற்காக ஹோட்டலுக்கு கூட விடுமுறை கொடுத்து விட்டோம். அம்மாவும், நானும் மாமாவை சமாதானம் செய்வதே பெரும் போராட்டமாக இருந்தது.

"டேய் ராமா ! இப்போ பார்த்தா தான் உண்டு. வாடா..." என்று மாணிக்கம் மாமா கடைசியாக அழைத்தார்.

" என் மனசுல இன்னும் 'அண்ணா' உயிரோட இருக்கார். அவர் உடம்ப பார்த்து என் மனசுல இருக்குறவர சாகடிக்க விரும்பல... நீ போ " என்று சொல்லி அறைக்குள் சென்று விட்டார்.

மாணிக்கம் மாமாவும் அவரை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அவர் தன் நண்பர்களுடன் சென்னை பட்டினத்துக்கு சென்றார்.

மூன்று நாட்களாக ஹோட்டல் திறக்கவில்லை. உணவகம் வைத்த காலத்தில் கூட விடுமுறை என்று ஓய்வெடுத்ததில்லை. ஆனால், 'அண்ணா' அவர்களின் மரணம் மாமாவை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இதற்கு மேல் ஹோட்டல் முடியிருந்தால் நன்றாக இருக்காது என்பதால் நானே திறந்து ஹோட்டல் நடத்தினேன். அம்மா மாமாவை வீட்டில் பார்த்து கொண்டு இருந்தார். வியாபாரம் கொஞ்சம் சுமாராக இருந்தது. 'அண்ணாவின் மரணத்துக்காக வானொலியில் கூட சோகமான கீதங்களே ஒலித்தன.

இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னை பட்டினத்தில் இருந்து மாணிக்கம் மாமா வீட்டுக்கு வந்தார். 'அண்ணா'வை தகணம் செய்ததை பற்றியும், அவருக்கு இறுதி மரியாதையை பற்றியும் கண்ணில் நீர் தழும்ப கூறினார். மாமாவும் துக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர் சொன்னதை கேட்டுக் கொண்டு இருந்தார்.



" பாவம் வாத்தியாரு ! தலையில அடிச்சிட்டு தாங்க முடியாம அழுதாரு." என்றார்.

'வாத்தியாரு' என்று சொன்னவுடன் 'எம்.ஜி.ஆர்' பற்றி தான் சொல்கிறார் என்று புரிந்து கொண்டேன். 'அண்ணா' மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்று அவர் படங்கள் பார்க்கும் போதே எல்லோருக்கும் தெரியும்.

"அண்ணா உடம்புல விழுந்து விழுந்து அழுதும் போது யாராலம் தாங்க முடியல. சினிமால எல்லாரையும் சந்தோஷப்படுத்தின மனுஷன் அன்னைக்கு அழுது பார்த்தேன்" என்று 'அண்ணா'வின் பிரிவை பற்றி ஏங்கிய எம்.ஜி.ஆரை பற்றி சொல்வதை புரிந்துக் கொண்டேன்.

மாணிக்கம் மாமா சொல்ல மாமா அடக்கி வைத்திருந்த துக்கத்தை அழுது தீர்க்க தொடங்கினார். நானும், அம்மாவும் அவர் அழுவதை தடுக்கவில்லை. ஒரு முறை வாய்விட்டு அழட்டும். மனதில் இருக்கும் துக்கம் குறையும். மீண்டும் பழைய மாமாவை நான் பார்க்க வேண்டும். என் மாமா இப்படி பார்க்க என்னால் முடியவில்லை.



அண்ணா அவர்கள் இறந்து ஒரு மாதம் மேலாகிவிட்டது.

பி.ஏ தேர்வு முடிவுகள் வந்தது. நானும், பரூக்கும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம். நான் தேர்ச்சி பெற்றதை விட பரூக் தேர்ச்சி பெற்றது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாடியிருந்த மாமா என்னுடைய தேர்வு முடிவு அவருக்கு சந்தோஷத்தை கொடுத்தது. மாமாவும் இயல்பானா நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். மாமா, அம்மா காலில் விழுந்து அசிர்வாதம் வாங்கி கொண்டேன்.

மாமா வழக்கம் போல் காலையில் ஹோட்டல் திறந்து வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார். நான் மாமாவுக்கு உதவியாக ஹோட்டலில் வேலை செய்துக் கொண்டு இருந்தேன். அப்போது, பரூக் கையில் இனிப்போடு ஹோட்டல்க்குள் வந்தாள். சந்தோஷமான செய்தியுடன் வந்திருக்கிறான் என்று அவனை பார்த்தாலே தெரிந்தது.

" டேய் சந்திரா ! எனக்கு சென்னை பட்டினத்துல வாத்தியார் வேலை கிடைச்சிருக்கு" என்றான்.

அவன் வாப்பாவின் பிரிவுக்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்ட இவன் குடும்பம் இந்த வேலையால் ஒரளவு குணப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டேன். மாமாவும் அவன் கையில் இருக்கும் இனிப்பை எடுத்துக் கொண்டு அவனுக்கு வாழ்த்துக் கூறினார்.

" அடுத்த வாரம் நான் சென்னை பட்டினத்துக்கு போனும். ஒரு மாசத்துல இடம் பார்த்து அம்மாவை கூட்டிட்டு போய்டுவேன். அது வரைக்கும் அம்மாவ பத்திரமா பார்த்துக்கோடா.." என்று உணர்ச்சி முகுந்த குரலில் பேசினான்.

"உங்க அம்மாவும் எனக்கு அம்மா மாதிரி தான். நான் பார்த்துக்கிறேன்." என்று அவனுக்கு ஆறுதல் கூறினேன். மாமாவும் பார்த்து கொள்வதாக கூறினார். எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தைரியாமாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான்.

திடீர் என்று மனதில் ஒன்று தோன்றியது. " பரூக் !" என்று சென்று கொண்டு இருந்தவனை அழைத்தேன். நான் அழைப்பதை பார்த்து பரூக் திரும்பி வந்தான். என் கையில் இருந்த பணத்தை அவன் சட்டை பையில் வைத்தேன்.

" எனக்கு பணம் வேணாம்" என்று மறுத்து சட்டை பையில் இருந்து எடுத்து கொடுத்தான்.

" புது ஊருக்கு போற. தங்கனும், துணி எடுக்கனும், சாப்பாட்டு செலவு… இப்படி எவ்வளவு இருக்கு வச்சிக்கோடா… !" என்று சொல்லி கொடுத்தேன்.

இதற்கு முன் தேர்வுக்கு பணம் கொடுத்ததை அவனால் திரும்பி கொடுக்க முடியவில்லை என்று வருந்திக் கொண்டு இருந்தவனிடம் மேலும் பணம் கொடுத்தது வருத்தமாக தான் இருந்தது. நான் கொடுக்கும் பணம் கண்டிப்பாக அவனுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை.

" டேய் கடனாவது வாங்கிக்கோ. முதல் மாசம் சம்பளம் வந்ததும் திருப்பி கொடு. போதுமா ! " என்றேன். மலர்ந்த முகத்தோடு பரூக் என்னை கட்டி அணைத்துக் கொண்டான். பதில் எதுவும் பேசாமல் நான் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு சென்றான்.

பரூக்கை பஸ்ஸில் சென்னை பட்டினத்திற்கு நான் தான் சென்று வழியனுப்பினேன். இரண்டு நாளுக்கு ஒரு முறை பரூக் அம்மாவை பார்த்து விட்டு வருவேன். அவர்களுக்கும் நான் வந்து பார்த்து செல்வதில் ஒரு சந்தோஷம். அவர் கணவர் மரணத்திற்கு பிறகு என்னால் தான் தங்கள் குடும்பம் வாழ்கிறது என்று அடிக்கடி சொல்லுவார்.

இப்போது தான் தேர்வு முடிவு வந்தது போல் இருந்தது. அதற்குள் பரூக்க்கு வேலை கிடைத்து சென்னைக்கு சென்று விட்டான்.

பரூக் சென்ற பிறகு எனக்கு ஒரே பொழுபோக்கு 'ஹோட்டல்' தான். பி.யூ.சியோடு படிப்பை நிருத்த வேண்டும் என்று இருந்தேன். பி.ஏ தமிழ் படித்த பிறகு மேலும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போதே மாமாவிடம் சொன்னால் தான் உண்டு. ‘இல்லை’ என்றால் அம்மா மாமாவிடம் சொல்லி என் திருமணத்து வரன் பார்க்க ஆரம்பித்து விடுவார்.

நேராக மாமாவிடம் சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் சற்று நேரம் யோசித்தார்.

" என்ன படிக்கனும் ஆசைப்படுற...?" என்று கேட்டார். எந்த அறிவுரையோ, தயக்கமோ அவர் காட்டவில்லை. என் ஆசைப்படி என்னை படிக்க அவர் தயாராக இருந்தார்.

முன்பே என்ன படிக்க வேண்டும் என்று தீர்மாணித்துவிட்டேன். இந்த படிப்பு படித்தால் எனக்கும், இந்த சமுகத்திற்கும் பயன்படும். அந்த படிப்பை தான் நான் படிக்க போகிறேன்.

" வக்கில்"

Monday, March 12, 2012

ப்ளாஸ்டிக்கும், பவர் கட்டும் !!!

கடந்த வாரம் சொந்த வேலையாக கூடுவாஞ்சேரிக்கு ரயிலில் சென்று இருந்தேன். கூடுவாஞ்சேரி ரயில் இறங்கியதும் டீ சாப்பிட்டு கிளம்பலாம் என்று ஒரு டீ கடைக்கு சென்றோம். சிறு ப்ளாஸ்டிக் கப்பில் டீ கடைக்கார அம்மா கொடுத்தார்.

"என்ன அம்மா ! ப்ளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது அரசு சொல்லுதே ! நீங்க இன்னுமா ப்ளாஸ்டிக் கப்புல டீ தரீங்க. பேப்பர் கப்பல தரக்கூடாதா ?" என்றேன்.

" எல்லா இடத்துலையும் ப்ளாஸ்டிக் ஒழிச்சிட்டாங்களா !!" என்று சிரித்தப்படி கேட்டார்.

நாம் வாங்கும் பொருட்கள் ப்ளாஸ்டிக் கவர் பேக்கிங்வோடு வருகிறதே தவிற, டீக்கடை, உணவு விடுதி, இலவசமாக ப்ளாஸ்டிக் கவர் கொடுப்பதை தவிர்ப்பது போன்றவற்றை தீவிரமாக பின்பற்றுகிறோம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், நகர் புறப்பகுதியில் ப்ளாஸ்டிக் கப் எப்போது போல் புழகத்தில் தான் உள்ளது. அதை விட பெரிய அதிர்ச்சி எதிரில் இருந்த போர்ட் பார்த்ததும் வந்தது.



மேல் இருக்கும் எந்த அளவுக்கு அழகாக வார்த்தைகள் எழுதப்பட்டதோ மிக அழுக்கு படிந்த அதிகமான ப்ளாஸ்டிக் குப்பை கொட்டி இருந்தது.



" இந்த போர்ட் இங்க இருக்கே. அதுக்காவது ப்ளாஸ்டிக் பயன்படுத்தாம இருக்க கூடாதா ?" என்றேன்.

" நாலு மணி நேரம் பவர் கட்டுனு சொல்லி. இன்னும் 6 - 7 மணி நேரம் பவர் கட் பண்ணுறாங்க. அவங்கள விடவா நாங்க பண்ணுறோம்." என்றார்.

கோவை, திருச்சி நண்பர்களிடம் விசாரித்ததில் 6 - 7 மணி நேரம் பவர் கட் இருப்பதாக கூறினர். நாலு மணி நேரம் பவர் கட் என்பது வேறும் பெயர் அளவிற்கு மட்டுமே என்று கூறினர்.

ப்ளாஸ்டிக் பயன்பாட்டிற்கும், பவர் கட்டுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், ஒருவரை ஒருவர் குறைச் சொல்ல சம்மந்தப்படுத்தப்படுகிறது.

அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்களுக்கு ஏற்ப்படும் அசௌகர்யத்தை அரசு விரைவில் போக்க வேண்டும். இதை இரண்டும் நடக்காத வரையில் ஒருவரை ஒருவர் பழிப்போடும் படலம் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

Wednesday, March 7, 2012

அந்த மூன்று பெண்கள் - 8

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7

பேராசிரியர் பாலசுந்தரம் அவர்களின் பேச்சு என்னை மிகவும் பாதித்தது. "கடவுள் இருக்கிறா ?" என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வளர தொடங்கியது. பெரியார், அண்ணாதுரை புத்தகங்களை தேடி தேடி படித்தேன். கடவுளுக்கு எதிராக அவர்கள் சொல்லும் வாதங்கள் அப்படியே என்னால் ஏற்க முடியாவிட்டாலும், அதில் இருக்கும் உண்மை புரிந்தது. மெல்ல மெல்ல நாத்திகத்தை நோக்கி செல்வதை என்னால் உணர முடிந்தது.

ராமா மாமாவுக்கு 'பெரியார்' என்றாலே பிடிக்காது. ஆனால், அண்ணாதுரையை பிடிக்கும். இருவரும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறார்கள். இதில் ஒருவர் பிடிக்க , இன்னொருவர் பிடிக்காமல் போனாது எப்படி என்று தான் புரியவில்லை. மாமாவுக்கு அண்ணாதுரையை பிடித்தாலும், கடவுளை தினமும் வணங்குபவர்.அவர் கொள்கையை பின் பற்றாவிட்டாலும், அவருடைய பேட்டியையும், படத்தையும் விரும்புவார். இதனால், அண்ணாதுரை புத்தகதை தைரியமாக என்னால் வீட்டுக்கு எடுத்து வந்து படிக்க முடிக்கந்தது. பெரியார் புத்தகத்தை வீட்டுக்கே எடுத்துவர மாட்டேன்.

நான் நாத்திகத்தை நோக்கி சென்றாலும், மாமாவுக்காக கடவுளை வணங்கி கொண்டு தான் இருந்தேன். 'கடவுள் இல்லை' என்று தைரியாமாக சொல்லும் நிலையில் நானில்லை. உண்மை சொல்வதென்றால், 'கடவுள் இருந்தால் என்ன ? இல்லை என்றால் என்ன ?' என் வேலை நான் தான் பார்க்கனும். வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. கடவுள், கோயில் என்று நேரத்தை வீணாக்க கூடாது’ என்பதையும் முடிவு செய்தேன்.

முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் கொண்டு வந்த புது சட்டம் ஒவ்வொரு நாளிதழில்களும் பரபரப்பாக பிரசுரம் செய்திருந்தனர். அந்த சட்டத்தை பற்றி தெரிந்துக் கொள்ளவே எல்லா நாளிதழ்களும் விற்று தீர்ந்தது. சிதம்பர தீட்சதர்கள் கடுமையாக அந்த சட்டத்தை விமர்சித்தனர். அப்படி என்ன தான் சட்டம் கொண்டு வந்திருக்கிறார் என்று நானும் நாளிதழ் வாங்கி படித்தேன். அந்த சட்டத்தின் பெயர் 'சுயமரியாதை திருமண சட்டம்'.

திருமணமான பெண்கள் என்றாலே அவர்களுக்கு அடையாளம் தாலி தான். அது இல்லாமல் திருமணம் இதுவரை நடந்ததில்லை. அப்படியே தாலியில்லாமல் திருமணம் நடந்தாலும் அந்த திருமணத்துக்கு சட்டப்படி அங்கிகாரமில்லை. முதலமைச்சர் தாலி இல்லாமல் நடக்கும் திருமணத்துக்கு சட்டப்படி அங்கிகாரம் கொடுத்திருக்கிறார். தாலி திருமணத்துக்கு எவ்வளவு முக்கியம். ஏன் முதலமைச்சர் இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தை கொண்டு வந்து ஏன் பலரின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்

நான் நாளிதழ் படிக்கும் போது மாமா என் அருகில் வந்து படிக்கும் செய்தியை பார்த்தார்.

" என்ன மருமகனே ! அண்ணா கொண்டு வந்த புது சட்டத்த பத்தி படிக்கிறீயா...?" என்று கேள்வி கேட்டு அருகில் அமர்ந்தார்.

"ஆமா ! எதுக்கு இந்த மாதிரி சட்டம். தாலி ஒரு பொண்ணுக்கு எவ்வளவு முக்கியம். அது இல்லாம திருமண நடத்தாலம்னு சொல்லுறார்." என்று அவரிடன் சொன்னேன்.

" மருமகனே ! ஒரு காலத்துல திருமணம் ஆன ஆம்பளைங்க கால்ல மெட்டி போடுவாங்க. இப்போ யாரும் போடுறது இல்ல. கல்யாணம் அன்னைக்கு மெட்டி போட்டுட்டு அப்புறம் கலட்டுறாங்க. அதே மாதிரி தாலி கொண்டு வரனும் நினைக்கிறாரு. இதுல என்ன தப்பு இருக்கு." என்றார்.

எனக்கு கல்லூரி மேல் மாடியில் இருந்து கீழே குதிப்பது போல் இருந்தது. எப்போதும் அண்ணாவின் கொள்கையை ஏற்காத மாமா முதல் முறை அவர் கொண்டு வந்த சட்டத்துக்கு ஆதரவாக பேசினார். வைத்த கண் மாறாமல் மாமாவையே பார்த்தேன்.

" தாலி இல்லாம கல்யாணம் நடந்தா, புருஷனுக்கு ஏதாச்சு ஆனா கூட இந்த சமுதாயத்துல எப்பவும் போல ஒரு பொண்ணால நடமாட முடியும். கல்யாணமாகி, புருஷன் செத்து தாலி இல்லாம நடந்து போனா பொண்ணுங்கள இந்த சமுதாயம் எவ்வளவு கஷ்டப்படுத்தும்னு எனக்கு தெரியும். உங்க அம்மா எவ்வளவு அவமானம் பட்டாங்கனு அவளுக்கு தெரியும்." என்று உருக்கமான குரலில் பேசினார்.

விதவையான அம்மா சில சமயம் நடக்கும் போது தெருவில் இருந்து ஒதுங்கிக் கொள்வார். உணவகம் வைத்த காலத்தில் காலையில் அந்த பக்கமே போகமாட்டார். மதியம் தான் செல்வார். காலையில் 'விதவை' முகத்தில் விழிக்க பலர் யோசிப்பார்கள் என்பதற்காக அம்மா இப்படி செய்திருக்கிறார் என்பதை இப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

" தாலி ஒண்ணு இல்லனு வச்சிக்கோ. சமுதாயத்துக்கு முன்னாடி விதவ பொண்ணும், கல்யாணமான பொண்ணும் ஒரே மாதிரி தான் தெரிவாங்க. அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். இது தான் நா புரிஞ்சிக்கிட்டது." என்று அண்ணாவின் சுயமரியாதை சட்டத்தை விளக்கினார்.



மாமாவின் விளக்கம் ‘பேராசிரியர் பாலசுந்திரம் வகுப்பு எடுக்கவில்லை என்ற குறையை திற்ந்தது. படிக்காத மாமாவே இவ்வளவு விளக்க கொடுக்கும் போது, முதலமைச்சர் அவர்கள் எவ்வளவோ யோசித்து தான் இந்த சட்டத்தை கொண்டு வந்திருப்பார். இந்த சட்டம் அமளுக்கு வந்தால் ‘அம்மா’ போன்ற விதவை பெண்கள் தைரியமாக சமுதாயத்தில் நடமாடலாம் என்று புரிந்துக் கொண்டேன்.

மெதராஸ் மகாணம் 'தமிழ் நாடு' மாற்றப்பட்டதாக இன்னொரு சட்டம். ஒவ்வொரு நாளும் அண்ணா அதிரடியான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மனதால ஆசைப்பட்டேன். அதே போல் மாமாவின் ஹோட்டல் வியாபாரம் நன்றாக வளர தொடங்கியது.

கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை நானும், பரூக்கும் தீவிரமாக எங்கள் வீட்டில் படித்து கொண்டு இருந்தோம். அப்போது மாணிக்கம் மாமா வந்து பரூக்கை அவன் வீட்டுக்கு அழைத்து போக சொன்னார். அவன் என் வீட்டில் படிப்பது இந்த மாணிக்கம் மாமாவுக்கு என்ன வந்தது என்ற கோபப்பட்டேன். இப்போது என்ன செய்து என்னை குழப்ப போகிறார் என்று தெரியவில்லை. அவர் என்னை தனியாக அழைத்து விஷயத்தை சொன்னார். அதிர்ந்தே விட்டேன். இதை எப்படி பரூக்கிடம் சொல்ல போகிறேன் என்று புரியவில்லை.

மாமாவிடம் புல்லட்டை வாங்கி கொண்டு பரூக்கை அவன் வீட்டில் விட்டேன். அவன் வீடு வரும் வரை அவனிடம் விஷயம் சொல்லவில்லை. அவனுடைய வாப்பா பாட்ஷா பாய் இறந்திருந்தார். அவருடைய உறவினர்கள் எல்லாம் அவன் வீட்டு முன் நிறம்பி இருந்தனர்.

"வாப்பா... என்ன விட்டு போய்ட்டியே வாப்பா..." என்று கத்தி அழுதான்.அவன் அம்மா ஆயிஷா நிலை குலைந்து போனாள். பரிட்சை சமயத்தில் பரூக் வாப்பாவின் மரணத்தை எப்படி சமாளிக்க போகிறான் என்று புரியவில்லை.

தலையில் குல்லா அணிந்தவர்கள் இஸ்லாமிய மந்திரத்தை சொன்னப்படி பரூக்கின் வாப்பாவை தூக்கி சென்றனர். பரூக்கின் வாப்பாவின் தகனம் முடிந்து எல்லோரும் அவன் வீட்டுக்கு வந்தோம்.

ஒரு முறை பரூக்கிடம் அவன் தந்தை அவர்களுடன் இருப்பதை வைத்து "உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு" என்று சொல்லியிருக்கிறேன். நான் சொன்னதாலே என்னவோ இப்போது பரூக்கின் தந்தை அவனுடன் இல்லை. அவன் தந்தை மரணத்தை விட இன்னொரு பெரும் கஷ்டமான விஷயம் அவன் பரிட்சைக்கு பணம் கட்ட வேண்டும்.

பரூக்கின் வாப்பா எதோ வீட்டு வாடகையில் காலத்தை நடத்தி வந்தார். அவர் தகனத்துக்கான செலவு எல்லாம் கடன் வாங்கி தான் பரூக் செய்தான். அவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ளும் படி யாருமில்லை. நண்பன் என்று என்னை தவிற பரூக்குக்கு யாரும் கிடையாது. என்னிடம் உதவி கேட்க ரொம்ப யோசித்தான். அவனுடைய வாப்பா பலரிடம் கடன் வாங்கியிருந்தாலும், அவன் இது வரை யாரிடமும் கடன் வாங்கியதில்லை.

அவன் என்னிடம் கடன் கேட்க மாட்டான் என்று தெரிந்து கொண்டேன். இந்த தேர்வு எழுதி முடிந்தால் கையில் பி.ஏ பட்டம் வாங்கி விடலாம். கௌரவம் பார்த்து அவன் என்னிடம் உதவி கேட்கவில்லை. ஆனால், இதை பார்த்து அமைதியாக இருந்தால் நான் உண்மையான நண்பனில்லை. மாமாவிடம் சொல்லி அவன் பரிட்சைக்கு பணம் வாங்கினேன். அந்த பணத்தை அவன் கையில் கொடுத்தால் வாங்க மறுப்பான் என்று நன்றாக தெரியும். அதனால், அந்த பணத்தை நேராக அவன் பெயரில் பரிட்சைக்கு பணம் கட்டி ரசிதை அவன் அம்மாவிடம் கொடுத்தேன்.

மாலை நேரம் பரூக் என் வீட்டுக்கு வந்தான். பரூக்கின் அம்மா ஆயிஷா நான் பரிட்சைக்கு பணம் கட்டியதை அவனிடம் சொல்லியிருக்கிறார் என்று புரிந்துக் கொண்டேன். அவன் வாயில் இருந்து 'நன்றி' என்ற வார்த்தை வரவில்லை. அந்த வார்த்தையால் என் நட்பை அந்நியப்படுத்தவில்லை. அவன் எதிர்பார்க்காத ஆளிடம் இருந்து எதிர்பார்க்காத உதவி கிடைத்திருக்கிறது.

அப்போது மாமா வந்தார். " வா பரூக் ! பரிட்சைக்கு பணம் கட்டுனியா..." என்றார்.

" ரொம்ப நன்றி மாமா... இந்த உதவிய என்னைக்கும் நா மறக்க மாட்டேன்".

"பரவாயில்ல... அப்பா இல்லாத குடும்பம் எப்படி கஷ்டப்படும்னு எனக்கும், சந்திருவுக்கு நல்லா தெரியும். நல்லப்படியா படிச்சு முன்னுக்கு வா..." என்று சொன்னார். இந்த பணத்தை எப்படியும் எனக்கு தருவதாக பரூக் சொன்னான். நான் எதுவும் சொல்லவில்லை. அந்த பணத்தை சம்பாதிக்க அவனுக்கு நல்ல வேலை கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டேன். அப்போது தான் அவனால் குடும்பத்தை காப்பாற்ற முடியும்.

எப்படியோ பெரும் பாடு பட்டு மூன்று வருட படிப்பை நானும், பரூக்கும் முடித்தோம். அடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவை பற்றி யோசிக்கவில்லை. தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு என்று பல புத்தகங்கள் படித்த எங்கள் அறிவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

இருவரும் மாமாவின் ஹோட்டல்லுக்கு சென்றோம். அந்த சமயத்தில் வானொலி ஒரு அதிர்ச்சியான செய்தி. நானும், பரூக்கும் உரைந்து போனாம். சாப்பிட வந்தவர்கள் பலர் ஸ்தம்பித்து நின்றனர்.

"ஐயோ போச்சே...போச்சே..." என்று தலையில் அடித்து கொண்டு மாமா அழுதார். என்னால் மாமாவுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. அவர் இப்படி அழுது நான் பார்த்ததில்லை.

முதலமைச்சர் ‘அண்ணாதுரை’ அவர்கள் அகால மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் அந்த செய்தி !!

Thursday, March 1, 2012

சூரியன் பெற்ற சூழல் பூமி !!



மிசாவை ஈசியாய் பார்த்தவர் !
ஜார் மன்னர் ஆட்சியை ஓழித்த
புரட்சியாளரின் பெயர் கொண்டவர் !
உடல் அறுபது என்றாலும்
இருபது போல் உழைப்பவர் !
இளைஞர் பலர் இருந்தாலும்
என்றும் இளைஞர் அணி தலைவர் !!

ஊழல் குற்றம் சொல்பவர்களுக்கு
ஊழ்வினை சரியாய் இருப்பதில்லை
அவர்கள் பார்த்த ஜாதகமே
அவர்களுக்கு பாதகமாகிறது !
ஆனால்,
பெரியார் சொன்ன பகுத்தறிவு
கட்சி களப்பணியில் தெரிகிறது !
கோயில் வாசல் மிதிக்காமல்
மக்கள் நலப்பணியில் கால் செல்கிறது !

உம் நேற்றைய வெற்றி
திராவிடத்தின் பெருமையை உணர்த்தியது !
உம் தற்காலிக தோல்வி
ஆரியத்தின் ஆதிக்க வெறியை காட்டுகிறது !

தமிழகத்தின் முதல் துணை முதல்வரே !
பல வெற்றிகள் கண்ட உமக்கு
கட்சியின் தோல்வி தற்காலிகமே !
எதிரியிடம் பதவியிருப்பது
பல சமயம் உமக்கு பலமே !
சுதந்திரமாய் செயல்பட
பதவி ஒரு முள்கீரிடமே !

ஆட்சிப் பொருப்பில் இருக்கும் போது
கட்சியில் சேர்த்த இளைஞர்களை விட
எதிர்வரிசையில் இருக்கும் போது
சேர்ந்த இளைஞர்கள் தான் அதிகம் !
அதை மீண்டும் உணர்த்த போவது
உம் 60வது பிறந்தநாளே !!!!

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!!

LinkWithin

Related Posts with Thumbnails