வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, March 20, 2012

அந்த மூன்று பெண்கள் - 10

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8 அத்தியாயம் 9

‘பி.ஏ படிப்பே வேண்டாம்’ என்று சொன்ன நான் இப்போது’ பி.எல் படிக்க வேண்டும்’ என்று சொல்கிறேன். கல்லூரி வாழ்க்கை ஒருவனை எப்படி எல்லாம் மாற்றும், அவன் செல்லும் பாதை எப்படி நிர்ணய்கும் என்பதை அனுபவ புர்வமாக உணர்ந்தேன். ஹோட்டல் நிர்வாகம் என்ற குறுகிய வட்டத்தத்திற்குள் சிக்க நான் விரும்பவில்லை. பணக்காரர்களிடம் அடைக்கலமாக இருக்கும் சட்டத்தை ஏழைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியம் மனதில் ஆழமாய் பதிந்தது.

ராமா மாமா என்றுமே என் விருப்பத்திற்கு தடை சொன்னதில்லை. அப்படியே அவர் மறுத்தாலும் அது என் நன்மைக்காக தான் இருக்கும் என்று எனக்கு தெரியும். பி.எல் படிப்புக்கு மாமா சம்மத்தித்தாலும் அம்மா சம்மதிக்கவில்லை. எனக்கு திருமணம் செய்து பேரன், பேத்தி பார்க்க வேண்டும் என்பது அவரின் ஆசை. ஆனால், மாமா எனக்கு சாதகமாக இருந்ததால் 'வழக்கிஞர்' படிப்பு படிக்க வீட்டில் அனுமதிகிடைத்தது.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படிக்க விண்ணப்பம் போட்டேன். சென்னையில் பரூக் வாத்தியார் வேலை செய்வதால் அங்கு தங்கி படிக்க பிரச்சனை இருக்காது. சமிபத்தில் தான் அவன் அம்மா ஆயிஷாவையும் அழைத்து சென்றான். அதனால், வீட்டு சப்பாடு கிடைக்கும். இதை எல்லாம் அம்மாவிடம் சொன்ன பிறகு முகம் மலர்ந்தது. இல்லை என்றால் பையன் வெளியூரில் சாப்பாடிற்கு கஷ்டப்படுவான் என்று என்னுடனே சென்னைக்கு வந்தாலும் வந்திருப்பார்.

நான் எதிர்பார்த்தது போல் கல்லூரியில் இருந்து நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது.முதல் முறையாக அம்மாவை விட்டு தனியாக செல்கிறேன். படிக்க இடம் கிடைத்தால் மூன்று வருடம் அம்மா,மாமா இருவரையும் விட்டு தனியாக இருக்க வேண்டும். சமூகத்தொண்டு என்று லட்சியம் மனதில் வந்த பிறகு சிறு சிறு பிரிவுகளை தாங்கி தான் ஆக வேண்டும். மாமா பஸ்ஸில் ஏற்றிவிட என்னோடு வந்தார். பஸ் நிலையம் வர அம்மாவுக்கு மனம் வரவில்லை. அப்பா இறந்த பிறகு நான் தான் உலகம் என்று இருந்தவர், என் பிரிவு அவருக்கு பெரிய துயரத்தை கொடுக்கும் என்பது சந்தேகமில்லை.

மாமாவுக்கு கை அசைத்தப்படி பஸ்ஸில் சென்றேன். கொஞ்ச தொலைவில் சென்றவுடன் கண் அசதியாக இருந்தது. இரவு முழுக்க அம்மா,மாமாவிடம் பேசியதால் சரியாக தூங்கவில்லை. தூங்கிவிட்டேன். விழித்த போது பஸ் சென்னை பாரிமுனையில் வந்து நின்றது.

என்னை அழைத்து செல்ல பரூக் பாரிமுனை பஸ் நிலையத்தில் காத்திருந்தான். தன் நன்றி கடன் திற்பதிற்கு சந்தோஷம் அவன் முகத்தில் தெரிந்தது.

"என்னடா எப்படி இருக்க. பஸ் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது ? என்று மலர்ந்த முகத்துடன் கேட்டான்.

" நல்ல இருக்கேன். அம்மா எப்படி இருக்காங்க...?" என்று அவன் அம்மா பற்றி கேட்டேன்.

"ம்...நல்ல இருக்காங்க. வா போவோம்" என்று பரூக் சொன்னான். இருவரும் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறினோம். ரிக்ஷாக்காரன் 'பேமாளி, 'சோமாரி' என்று குறுக்கே நடந்து சென்றவர்களை திட்டியப்படி சைக்கிள் ரிக்ஷாவை இழுத்தான். ரிக்ஷாக்காரன் பேசுவது உண்மையான சென்னை பாஷை என்று பரூக் என்னிடம் சொன்னான். கொஞ்ச நேரத்தில் பரூக் வீடு வந்தது.

சைக்கிள் ரிக்ஷாவிற்கு பணம் பரூக் தான் கொடுத்தான். என்னை செலவு செய்ய விடவில்லை. பரூக்கின் அம்மாவும் என்னை அன்போடு கவனித்து உணவெல்லாம் பரிமாறினார். சென்னைக்கு வந்ததை போன் போட்டு ஹோட்டலில் இருக்கும் மாமாவிடம் சொன்னேன்.

ஒரு நாள் போனதே தெரியவில்லை. நேர்முக தேர்வுக்கு தயாரானேன். பரூக் சொன்னப்படி சைக்கிள் ரிக்ஷாவிலே ஏறி அம்பேத்கர் சட்ட கல்லூரியில் இறங்கினேன். பலர் நேர்முக தேர்வுக்காக வெளியே காத்துக் கொண்டு இருந்தனர். ஒவ்வொருவராக உள்ளே சென்று கொண்டு இருந்தனர். இப்போது என் முறை.

நான் உள்ளே நுழைந்தேன். அங்கு என்னை கேள்வி கேட்க மூவர் இருந்தனர். ஒருவர் நான் படித்த பள்ளி, கல்லூரி விபரங்களை மட்டும் கேட்டார். இன்னொருவர் என் குடும்ப பின்னனியை பற்றியும், நான் படித்த பி.ஏ தமிழில் இருந்தும் கேள்விகள் கேட்டார். எதோ கல்லூரியின் பேராசிரியர் தான் கேட்டார். அவர்கள் கேட்ட கேள்விக்களுக்கு சரியானா பதிலை தான் சொன்னேன். நேர்முக தேர்வு முடிந்ததும் பரூக் வீட்டுக்கு வந்துவிட்டேன். மாலை நேரம் பள்ளி முடிந்தது பரூக் வீட்டுக்கு வந்திருந்தான்.

பரூக் சென்னையை சுத்திக் காட்டுவதற்காக அழைத்து சென்றான். எல்.ஐ.சி கட்டிடம், ரிப்பன் கட்டிடம், ஸ்பென்ஸர் பிலாசா போன்ற இடங்கள் எனக்கு புதிதாக இருந்தது. சிதம்பரத்தில் இருந்தவரை இது போன்ற கட்டிடங்களை நான் பார்த்தில்லை. பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டு வந்தேன்.

என்னை சென்னை கடற்கரைக்கு பரூக் அழைத்து சென்றான். அங்கு நான் அண்ணா சமாதியை பார்த்தேன். மாமா பேச்சுக்கு பேச்சு 'அண்ணாவை போல வரனும்னா நல்ல படிக்கனும்' சொல்லுவார். அவர் பாதம் பட்ட மண்ணிலே அந்த உணர்வு வந்துவிட்டது. கடல்கரை காற்றுக்கும், சிதம்பரம் அருகில் இருக்கும் கடலூர் காற்றுக்கும் பெரிய வித்தாயசம் ஒன்றுமில்லை. இப்படி ஒரு சில நாட்கள் உருண்டோடின.

நேர் முக தேர்வில் தேர்வானவானவர்களின் பெயர்களை கல்லூரி வளாகத்தில் ஒட்டியிருந்தனர். ஒவ்வொரு பெயராக பார்த்தேன். "பரணி, பத்மா, சிதம்பரம், சின்னமணி, சின்னதம்பி...." என்று ஒவ்வொரு பெயரும் பார்த்து கொண்டு இருந்தேன். என் பெயர் மட்டும் அதிலில்லை. நான் அதிர்ந்துவிட்டேன்.

நான் தேர்வாகவில்லையா, இதற்காகவா இத்தனை போராட்டம் செய்து தேர்வு எழுதினேன். அம்மாவுக்கும், மாமாவுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன். தேர்வாகாமல் ஊருக்கு சென்றால் பார்ப்பவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன். அப்போது இன்னொரு பட்டியல் ஒட்டியிருப்பதை ஒருவன் சொன்னான். அங்கு சென்று பார்த்தேன்.

“அருணாச்சலம், அறுமுகம், பானுசந்தர், சித்ரா, சந்திரசேகர், சார்லஸ்…“ என்று படித்துக் கொண்டே இருந்தேன். மீண்டும் ஒரு முறை படித்தேன். " சித்ரா, சந்திரசேகர்,...." என்று இருந்தது. நான் தேர்வாகிவிட்டேன். நான் வழக்கறிஞராக போகிறேன். படிப்பறிவு இல்லாத எங்கள் குடும்பத்தில் முதல் 'வழக்கறிஞர்' நான் தான்.

நான் தேர்வானதை வீட்டுக்கு போன் போட்டு சொன்னேன். பரூக்குக்கும், அவன் அம்மாவுக்கும் இனிப்பு வாங்கி கொடுத்தேன். கல்லூரி ஆரம்பிக்க ஒரு மாதம் இருப்பதால் சிதம்பரம் சென்று வந்தேன். ஊருக்கு சென்றவுடன் மாமாவும், அம்மாவும் என்னை வாரி அணைத்துக் கொண்டனர். மாமா என்னை ஹோட்டலில் வேலை செய்யவிடவில்லை. ஒரு மாதம் நிம்மதியாக இருக்க சொன்னார். கல்லூரி தொடங்கிய பிறகு படிப்பு தான் முதல் கவனமாக இருக்கும். அப்போது எப்படி இது போல் சுதந்திரமாக இருக்க முடியும்.

ஒரு மாதம் போனதே தெரியவில்லை. இரவு பஸ் பிடித்து சென்னைக்கு சென்றேன். காலையில் பஸ் சென்றது. பரூக் இன்று பள்ளிக்கு சீக்கிரம் செல்ல வேண்டிய வேலையிருந்ததால் என்னை அழைத்து செல்ல அவன் வரவில்லை. பஸ் நிலையத்தில் வெளியே வரும் போது அவசரமாக ஒரு பெண் என் மீது இடித்தாள்.

"ஸாரி..தெரியாம இடிச்சிட்டேன்..." என்று பயந்த குரலில் அந்த பெண் மண்ணிப்பு கேட்டாள்.

"பரவாயில்ல" என்று சொன்னேன்.

அவளை ஒரு மோட்டர் கார் வந்து அழைத்து சென்றது. அம்மா பக்கத்தில் இல்லாததுனால் என்னவோ முதல் முறையாக ஒரு பெண் மீது ஈர்ப்பு. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன் என்பதை அவள் மோட்டார் காரில் சென்ற போது தான் உணர்ந்தேன். வீடு விட்டால் ஹோட்டல் என்று இருந்த நான் இப்படி ஒரு சலனமடைந்ததில்லை.

அவள் சென்ற பிறகு நான் பரூக் வீட்டுக்கு செல்ல தொடங்கினேன். எந்த சிரமமும் இல்லாமல் அவன் வீட்டை அடைந்தேன். பரூக் காலையிலே பள்ளிக்கு சென்று விட்டான். அவன் அம்மா காபி, சாப்பாடு எல்லாம் கொடுத்து என்னை வழி அனுப்பினார்.

இன்று நான் 'வழக்கறிஞர்' பட்டம் பெருவதற்காக முதல் நாள் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறேன். வகுப்பரையை விசாரித்து வகுப்புக்குள் நுழைந்தேன்.

நான் வருவதற்கு முன்பே என்னை வரவேற்பதற்காக ஒரு தேவதை பெண் இருக்கையில் முன் வரிசையில் இருந்தாள். அவள் நான் பஸ் நிலையத்தில் பார்த்த அதே 'பெண்' தான். சிவப்பு சேலை கட்டிக் கொண்டு அம்மன் போல் தெரிந்தாள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails