வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, March 14, 2012

அந்த மூன்று பெண்கள் - 9

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டது போல் ஓவென்று அழுதனர். தங்கள் எதிர்காலம் என்னாகும் என்பது அஞ்சியப்படி பல முகங்கள் வெறுமையாக இருந்தன. பலர் லாரி, பஸ் பிடித்து சென்னை பட்டினத்திற்கு சென்று கடைசியாக 'அண்ணா'வை பார்க்க துடித்தனர். முதல்வரின் இறுதி யாத்திரையில் பார்க்க பலர் படை எடுத்ததால் பஸ்ஸில் கூட்டங்கள் நிறம்பி வழிந்தன. உள்ளே நிற்கும் இடமில்லாதவர்கள் பஸ் மேல ஏறிக்கூட பயணம் செய்ய தயாராக இருந்தனர். 'தமிழ் நாடு' என்று பெயரிட்டவர் தன் பெயரை மட்டும் பூமியில் விட்டு ஏன் சென்றார் என்று உரிமையோடு அண்ணாவின் படத்தை பார்த்து கேட்டனர்.

அண்ணா மிக பெரிய சகாப்தம். அதற்கு மற்றவர்கள் 'அண்ணா' என்று கண்ணீர் சிந்துவதில் பலர் மனதில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார். இறுதியாக அண்ணாவை பார்க்க பலர் சென்று கொண்டு இருக்கும் போது, மாமா மட்டும் 'அண்ணா'வை பார்க்க நினைக்கவில்லை. மாணிக்கம் மாமாவுக்கும் 'அண்ணா'வை மிகவும் பிடிக்கும். அவர் சென்னை பட்டினத்திற்கு தான் சென்றுக் கொண்டு இருந்தார். ராமா மாமாவை அழைத்த போது அவர் வர மறுத்து விட்டார்.

" அந்த மனுஷன போட்டோவுல கம்பீரமா பார்த்து பழகி போச்சு. இன்னும் அவர் பேசுனது காதுல கேட்குது. இப்போ நாலு பேரு அவர தூக்கிட்டு போறத என்னால் பார்க்க முடியாது" என்று சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழுதார்.

முதல்வர் மரணத்திற்காக ஹோட்டலுக்கு கூட விடுமுறை கொடுத்து விட்டோம். அம்மாவும், நானும் மாமாவை சமாதானம் செய்வதே பெரும் போராட்டமாக இருந்தது.

"டேய் ராமா ! இப்போ பார்த்தா தான் உண்டு. வாடா..." என்று மாணிக்கம் மாமா கடைசியாக அழைத்தார்.

" என் மனசுல இன்னும் 'அண்ணா' உயிரோட இருக்கார். அவர் உடம்ப பார்த்து என் மனசுல இருக்குறவர சாகடிக்க விரும்பல... நீ போ " என்று சொல்லி அறைக்குள் சென்று விட்டார்.

மாணிக்கம் மாமாவும் அவரை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அவர் தன் நண்பர்களுடன் சென்னை பட்டினத்துக்கு சென்றார்.

மூன்று நாட்களாக ஹோட்டல் திறக்கவில்லை. உணவகம் வைத்த காலத்தில் கூட விடுமுறை என்று ஓய்வெடுத்ததில்லை. ஆனால், 'அண்ணா' அவர்களின் மரணம் மாமாவை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இதற்கு மேல் ஹோட்டல் முடியிருந்தால் நன்றாக இருக்காது என்பதால் நானே திறந்து ஹோட்டல் நடத்தினேன். அம்மா மாமாவை வீட்டில் பார்த்து கொண்டு இருந்தார். வியாபாரம் கொஞ்சம் சுமாராக இருந்தது. 'அண்ணாவின் மரணத்துக்காக வானொலியில் கூட சோகமான கீதங்களே ஒலித்தன.

இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னை பட்டினத்தில் இருந்து மாணிக்கம் மாமா வீட்டுக்கு வந்தார். 'அண்ணா'வை தகணம் செய்ததை பற்றியும், அவருக்கு இறுதி மரியாதையை பற்றியும் கண்ணில் நீர் தழும்ப கூறினார். மாமாவும் துக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர் சொன்னதை கேட்டுக் கொண்டு இருந்தார்.



" பாவம் வாத்தியாரு ! தலையில அடிச்சிட்டு தாங்க முடியாம அழுதாரு." என்றார்.

'வாத்தியாரு' என்று சொன்னவுடன் 'எம்.ஜி.ஆர்' பற்றி தான் சொல்கிறார் என்று புரிந்து கொண்டேன். 'அண்ணா' மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்று அவர் படங்கள் பார்க்கும் போதே எல்லோருக்கும் தெரியும்.

"அண்ணா உடம்புல விழுந்து விழுந்து அழுதும் போது யாராலம் தாங்க முடியல. சினிமால எல்லாரையும் சந்தோஷப்படுத்தின மனுஷன் அன்னைக்கு அழுது பார்த்தேன்" என்று 'அண்ணா'வின் பிரிவை பற்றி ஏங்கிய எம்.ஜி.ஆரை பற்றி சொல்வதை புரிந்துக் கொண்டேன்.

மாணிக்கம் மாமா சொல்ல மாமா அடக்கி வைத்திருந்த துக்கத்தை அழுது தீர்க்க தொடங்கினார். நானும், அம்மாவும் அவர் அழுவதை தடுக்கவில்லை. ஒரு முறை வாய்விட்டு அழட்டும். மனதில் இருக்கும் துக்கம் குறையும். மீண்டும் பழைய மாமாவை நான் பார்க்க வேண்டும். என் மாமா இப்படி பார்க்க என்னால் முடியவில்லை.



அண்ணா அவர்கள் இறந்து ஒரு மாதம் மேலாகிவிட்டது.

பி.ஏ தேர்வு முடிவுகள் வந்தது. நானும், பரூக்கும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம். நான் தேர்ச்சி பெற்றதை விட பரூக் தேர்ச்சி பெற்றது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாடியிருந்த மாமா என்னுடைய தேர்வு முடிவு அவருக்கு சந்தோஷத்தை கொடுத்தது. மாமாவும் இயல்பானா நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். மாமா, அம்மா காலில் விழுந்து அசிர்வாதம் வாங்கி கொண்டேன்.

மாமா வழக்கம் போல் காலையில் ஹோட்டல் திறந்து வியாபாரத்தை கவனிக்க தொடங்கினார். நான் மாமாவுக்கு உதவியாக ஹோட்டலில் வேலை செய்துக் கொண்டு இருந்தேன். அப்போது, பரூக் கையில் இனிப்போடு ஹோட்டல்க்குள் வந்தாள். சந்தோஷமான செய்தியுடன் வந்திருக்கிறான் என்று அவனை பார்த்தாலே தெரிந்தது.

" டேய் சந்திரா ! எனக்கு சென்னை பட்டினத்துல வாத்தியார் வேலை கிடைச்சிருக்கு" என்றான்.

அவன் வாப்பாவின் பிரிவுக்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்ட இவன் குடும்பம் இந்த வேலையால் ஒரளவு குணப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டேன். மாமாவும் அவன் கையில் இருக்கும் இனிப்பை எடுத்துக் கொண்டு அவனுக்கு வாழ்த்துக் கூறினார்.

" அடுத்த வாரம் நான் சென்னை பட்டினத்துக்கு போனும். ஒரு மாசத்துல இடம் பார்த்து அம்மாவை கூட்டிட்டு போய்டுவேன். அது வரைக்கும் அம்மாவ பத்திரமா பார்த்துக்கோடா.." என்று உணர்ச்சி முகுந்த குரலில் பேசினான்.

"உங்க அம்மாவும் எனக்கு அம்மா மாதிரி தான். நான் பார்த்துக்கிறேன்." என்று அவனுக்கு ஆறுதல் கூறினேன். மாமாவும் பார்த்து கொள்வதாக கூறினார். எங்கள் மேல் நம்பிக்கை வைத்து தைரியாமாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தான்.

திடீர் என்று மனதில் ஒன்று தோன்றியது. " பரூக் !" என்று சென்று கொண்டு இருந்தவனை அழைத்தேன். நான் அழைப்பதை பார்த்து பரூக் திரும்பி வந்தான். என் கையில் இருந்த பணத்தை அவன் சட்டை பையில் வைத்தேன்.

" எனக்கு பணம் வேணாம்" என்று மறுத்து சட்டை பையில் இருந்து எடுத்து கொடுத்தான்.

" புது ஊருக்கு போற. தங்கனும், துணி எடுக்கனும், சாப்பாட்டு செலவு… இப்படி எவ்வளவு இருக்கு வச்சிக்கோடா… !" என்று சொல்லி கொடுத்தேன்.

இதற்கு முன் தேர்வுக்கு பணம் கொடுத்ததை அவனால் திரும்பி கொடுக்க முடியவில்லை என்று வருந்திக் கொண்டு இருந்தவனிடம் மேலும் பணம் கொடுத்தது வருத்தமாக தான் இருந்தது. நான் கொடுக்கும் பணம் கண்டிப்பாக அவனுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை.

" டேய் கடனாவது வாங்கிக்கோ. முதல் மாசம் சம்பளம் வந்ததும் திருப்பி கொடு. போதுமா ! " என்றேன். மலர்ந்த முகத்தோடு பரூக் என்னை கட்டி அணைத்துக் கொண்டான். பதில் எதுவும் பேசாமல் நான் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு சென்றான்.

பரூக்கை பஸ்ஸில் சென்னை பட்டினத்திற்கு நான் தான் சென்று வழியனுப்பினேன். இரண்டு நாளுக்கு ஒரு முறை பரூக் அம்மாவை பார்த்து விட்டு வருவேன். அவர்களுக்கும் நான் வந்து பார்த்து செல்வதில் ஒரு சந்தோஷம். அவர் கணவர் மரணத்திற்கு பிறகு என்னால் தான் தங்கள் குடும்பம் வாழ்கிறது என்று அடிக்கடி சொல்லுவார்.

இப்போது தான் தேர்வு முடிவு வந்தது போல் இருந்தது. அதற்குள் பரூக்க்கு வேலை கிடைத்து சென்னைக்கு சென்று விட்டான்.

பரூக் சென்ற பிறகு எனக்கு ஒரே பொழுபோக்கு 'ஹோட்டல்' தான். பி.யூ.சியோடு படிப்பை நிருத்த வேண்டும் என்று இருந்தேன். பி.ஏ தமிழ் படித்த பிறகு மேலும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போதே மாமாவிடம் சொன்னால் தான் உண்டு. ‘இல்லை’ என்றால் அம்மா மாமாவிடம் சொல்லி என் திருமணத்து வரன் பார்க்க ஆரம்பித்து விடுவார்.

நேராக மாமாவிடம் சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் சற்று நேரம் யோசித்தார்.

" என்ன படிக்கனும் ஆசைப்படுற...?" என்று கேட்டார். எந்த அறிவுரையோ, தயக்கமோ அவர் காட்டவில்லை. என் ஆசைப்படி என்னை படிக்க அவர் தயாராக இருந்தார்.

முன்பே என்ன படிக்க வேண்டும் என்று தீர்மாணித்துவிட்டேன். இந்த படிப்பு படித்தால் எனக்கும், இந்த சமுகத்திற்கும் பயன்படும். அந்த படிப்பை தான் நான் படிக்க போகிறேன்.

" வக்கில்"

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails