வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 20, 2012

துப்பாக்கி : விஜய் படத்தின் கதையல்ல

”காவேரி... ஹரி..” என்று வீரிட்டப்படி தூக்கத்தில் இருந்து எழுந்தான் அஸ்வின். யாரோ தன் வீடு புகுந்து தன் மனைவி, மகனை துப்பாக்கியால் சுடுவது போல் இருந்தது.

அஸ்வின் விழித்து எழுந்த போது காவேரி ஹரியை ஸ்கூலுக்கு துணி மாட்டிக் கொண்டு இருந்தாள்.

“ சீக்கிரம் எழுந்திறீங்க... என்ன இவ்வளவு நேரம் தூக்கம். ஹரிய ஸ்கூல்ல விடனும்” கத்தியபடி காவேரி வீட்டு வேலை செய்தாள்.

“குட் மார்னிங் டாடி.. “ ஹரி ஸ்கூலுக்கு ஷூ மாட்டிக் கொண்டு இருந்தான்.

“என்ன இவ்வளவு சீக்கிரம் ஸ்கூலுக்கு...?”

“டாடி... இப்ப டைம் 8 ஆவுது...”

“வாட்... 9 மணிக்கு கமிஷனரை மீட் பண்ணனும் “ என்று சொல்லி அவசர அவசரமாக பல் விளக்கி குளித்தான். 8.20 க்குள் தன் காலை கடனையெல்லாம் முடித்துக் கொண்டு வெள்ளை, கருப்பு பெண்ட் போட்டுக் கொண்டான். தன் துப்பாக்கியை இருப்பில் சொருகி, அதற்கு மேல் கருப்பு ஜாக்கெட் ஒன்றை மாட்டான்.

”டாடி எனக்கு உங்க துப்பாக்கி சுடுறதுக்கு... சொல்லி தரீங்களா ? “

“ உனக்கு எதுக்கு துப்பாக்கி ஷூட் பண்ணுறது...?”

”நீ இல்லாத போது யாராவது வந்தா... நான் சண்டை போடுறதுக்கு...”

“ என்ன மீறி உங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது...” என்று ஆசையாய் சொன்னப்படி தன் மகனுக்கு முத்தம் கொடுத்தான்.

“காவேரி... நான் களம்புறேம். கமிஷ்னர் எனக்காக வெயிட் பண்ணுவாரு...”

”கொஞ்சம் சாப்பிட்டு போங்க...”

அஸ்வின் செல்போன் மணி ஒளித்தது.

“அஸ்வின் களம்பியாச்சா... உங்களுக்காக வழக்கமா மீட் பண்ணுற ரெஸ்டாரண்ட்ல வெயிட் பண்ணுறேன். இன்னும் ஹாப் நவர்ல பெரிய ஆபிஸர் எல்லாம் வருவாங்க... நீங்க இல்லாம நல்ல இருக்காது...”

“ஒகே ஸார்.... இன்னும் 10 நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்...” என்று சொல்லி போனை வைத்தான்.

“சாரிம்மா...! நான் சாரோட சாப்பிடுறேன். இன்னைக்கு ஹரிய ஆட்டோவில நீ ஸ்கூல்ல விட்டுடு..” என்று தன் போலீஸ் ஜிப்பில் ஏறினான்.

”டாடி...டாட்டா “ ஹரி கை அசைக்க அஸ்வின் கை அசைத்தப்படி வண்டியில் சென்றான்.



*

சுற்று புறம் பார்த்து, சற்று பதட்டத்துடன் ரெஸ்டாரண்ட்க்குள் நுழைந்தான்.

“குட் மார்னிங் சார் !”

“வெரி குட் மார்னிங் “ நாற்காலியில் அமர சொல்லுவது போல் கை காட்டி பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான் அந்தோனி.

“யுவர் ஆர்டர் ப்ளிஸ்” என்று வெய்ட்டர் நிற்க, “10 மினிட்ஸ் “ என்றான் அந்தோனி.

பசியிருந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் அஸ்வின்.

“சார்.. இந்த ஹோட்டல... தந்தூரி சிக்கன் நல்லா இருக்கும்”

அந்தோனி பேப்பர் படித்தப்படி தலையசைத்து, மீண்டும் பேப்பர் படித்தான்.

“கிரில் சிக்கன் கூட ரொம்ப நல்லா இருக்கும்”
“ம்ம்ம்..” என்று சொன்னப்படி மீண்டும் பேப்பர் படித்தான்.

“சாப்பிட்டு...சுடா காபி குடிச்சா..ரொம்ப சூப்பரா இருக்கும்”

படித்துக் கொண்டு இருந்த பேப்பரை எடுத்து வைத்து, “ஹாப் கிரில் சிக்கன் கொண்டு வாப்பா..” என்று வையிட்டரிடம் சொன்னார்.

“சரி..! ஏதாவது கத சொல்லு...” என்றார் அந்தோனி.

ஒன்றும் புரியாமல் விழித்தவாரு அஸ்வின் இருந்தான்.

“எப்படியும் சிக்கன் வர வரைக்கும் ஏதாவது பேசி என்ன பேப்பர் படிக்க விட மாட்ட. பேசாம ஒரு கதை சொல்லு..”

“ஒரு ஹாணஸ்ட் போலீஸ் ஆபிஸர்...”

“அக்‌ஷன் ஸ்டோரியா...?”

“அக்‌ஷன், செண்டிமெண்ட்...”

“ம்.. சொல்லு...”

“ துத்துக்குடியில பெரிய ரௌடிய போலிஸ் குருப்போட போய் நம்ம ஹீரோ அரஸ்ட் பண்ணுறாரு. அடுத்த நாள் அந்த ரௌடிய கோர்ட் கூட்டிட்டு போகும் ஒரு கேங் போலீஸ் வேன் அட்டாக் பண்ணுறாங்க. இரண்டு போலீஸ்காரங்க மேல் தலையில பலமான அடி. நம்ப ஹீரோ கன் எடுத்து இரண்டு பேரு ஷூட் பண்ணுறாரு... அதுல அந்த பெரிய ரௌடியும் ஒருத்தன்”

“என்னையா அக்‌ஷன் மட்டும் தான் இருக்கு. செண்டிமெண்ட் இல்ல..!”

“இருங்க.. நம்ப ஹீரோ ஹூட் பண்ணதுல அந்த ரௌடி செத்துட்டான். ஒரு வாரம் களிச்சு ஹீரோவுக்கு கமிஷ்னர் பார்ட்டி வைக்குறாங்க.. அந்த நேரத்துல, அந்த ரௌடியோட மச்சான் மதுரையில இருந்து பெரிய ரௌடி படைய வச்சி சரியா 10 மணிக்கு ஹீரோ வீட்டுல அடிக்க சொல்லுறான். ஹீரோவோட ஒயிப், பையன் செத்துடுறாங்க..”

“உடனே.. நம்ம ஹீரோ அந்த ரௌடியோட மச்சான கொல்லுறானா...?”

“இல்ல... ஒரு வருஷமா வேலைக்கு போகமா.. அவங்க செத்த அதே நாள்ல, அதே நேரத்துல, அன்னைக்கு போட்டிருந்த அதே ட்ரெஸ் போட்டுட்டு கொல்லனும் வெயிட் பண்ணுறான். அவன்கிட்டையே வேலை சேர்ந்து அவன் கூட இருந்த ஒவ்வொருத்தரையும் பிரித்து அவங்களை கொள்ளுறான்.

" அன்னைக்கு மட்டும் அந்த நேரத்துல, அவன் வீட்டுல இருந்திருந்தா அவங்கள சாக விட்டுருக்க மாட்டான்”

அந்தோனிக்கு சேலசாக எதோ போறி தலையில் தட்டுவது போல் இருந்தது.

9:59 மணி இருந்து சரியாக 10 மணியடிக்க...

தன் இடிப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து அஸ்வின் அமரை சுட்டுக் கொலை செய்கிறான்.

”டாடி எனக்கு உங்க துப்பாக்கி சுடுறதுக்கு... சொல்லி தரீங்களா ? “ என்று தன் மகன் அவனிடம் கேட்டது அவன் காதில் ஒளித்துக் கொண்டே இருந்தது.

தன் செல்போன் எடுத்து, “ கமிஷ்னர் சார் ! என்னோட லாங் லிவ் இன்னையோட முடியுது. நான் மறுபடியும் வேலையில ஜாயின் பண்ணுறேன்” என்ற சொன்னபடி நடந்தான்.

***

ஒரு குறும்படத்திற்காக சொன்ன கதை, படம் எடுக்காததால் சிறுகதையாக மாற்றிவிட்டேன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails