வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, June 28, 2012

நாமும் மரமும் !



மரத்தின் கையில்
உருவான நாற்காலியில் அமர்ந்து
எப்படி சொல்லுவது
மரத்தை வெட்டாதீர்கள் என்று !

புகை மண்டலத்தை உருவாக்கும்
இரு சக்கர வாகனத்தில் சென்று
எப்படி பறப்ப போகிறேன்
சுகாதார வாழ்க்கையை பற்றி

மரத்தின் எச்சத்தில்
உருவான காகிதத்தில்
எப்படி எழுதுவது
இயற்கையைக் காப்போம் என்று

பசிக்கும் மனிதன்
சாப்பிட போவது பழமா ? பணமா ?

மரம் பொருட்காட்சியில்
பார்க்கும் பொருளாகுமோ ?
அது நினைவு சின்னமாகுமோ ?
மனிதன் மரணத்திலும்
மரம் தான் எரிய வேண்டுமா ?

கேள்விகளிலே குற்றவுணர்வோடு
பயணிக்கும் நாம்
ஒன்றுக்காவது விடை காண்போமா ?

1 comment:

சசிகலா said...

மனிதன் மரணத்திலும்
மரம் தான் எரிய வேண்டுமா ?
நியாயமான கேள்வி..

LinkWithin

Related Posts with Thumbnails