வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, August 7, 2012

அணு உலை எதிர்ப்பு தினம்


ஐன்ஸ்டின் தான் கண்டுபிடித்த அணு ஆயுதத்தை பயன்ப்படுத்த வேண்டாம் என்று எவ்வளோ முயன்றும், அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென் அணு ஆயுதத்தை ஹிரோஷிமா மீது இன்று(அகஸ்ட் 6, 1945) தான் பயன்ப்படுத்தினார். தன் வாழ்நாள் முழுக்க செய்த பாவத்திற்கு, அணு ஆயுதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார் ஐன்ஸ்டின்.

அனைத்து நாடுகளுக்கும் யூரேனியத்தை அளிக்கும் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு அணு உலைக் கூட இல்லை. வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் அணு கைவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். காரணம், ஹிரோஷிமா அணு குண்டு உலகிற்கு ஏற்ப்படுத்திய பாதுப்பு.

நேற்றோடு ( ஆகஸ்ட் 6) ஹிரோஷிமா குண்டு வெடிப்பு நிகழ்ந்து 67 ஆண்டுகள் ஆகிறது. அதை நினைவூட்டு வகையில் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகே “அணு உலை” எதிர்ப்புக்கான கூட்டம் நடந்தது.

இரண்டாம் உலகப் போரில் எத்தனையோ மாற்றுதிறனாளிகளை உருவாக்கிறது. அவர்களுக்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் போது, தெரிந்தே நாம் ஏன் அணு உலை மூலம் இன்னும் மாற்றுதிறனாளிகளை உருவாக்க வேண்டும் என்ற கேள்விகள் ஏழுப்பப்பட்டது.

தங்களைப் போல் மற்றவர்களும் மாற்றுதிறனாளிகளாகக் கூடாது என்று இவர்களின் போராட்டம் வெற்றிப் பெற வேண்டும். இவர்களுக்கு இருக்கும் சமூக உணர்வு இரண்டு கை, கால் இருந்து... எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கும் எனக்கு குற்றவுணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வைக்கும் பகிர்வு... நன்றி...

LinkWithin

Related Posts with Thumbnails