வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, September 10, 2012

கல்லூரி டைரியில் காதல் கவிதை !

எதற்கோ என் புத்தக அலமாரியில் புத்தகங்களை தேடி, எதோ பழைய புத்தகத்தை புரட்ட , அது கல்லூரி வகுப்பில் நோட்ஸ் எடுத்த டைரியாக இருந்தது.

எந்த வகுப்பில் உட்கார்ந்து எழுதிய கவிதை (?) என்று ஞாபகமில்லை. எந்த பெண்ணை நினைத்து எழுதினேன் என்று நினைவில் இல்லை. (ஒன்றா இரண்டா சொல்வதற்கு ?) . எல்லோவற்றிக்கும் மேலாக இது கவிதையா என்ற சந்தேகம் இப்போது படிக்கும் போது தோன்றியது.

சரி ! ஆனது ஆகட்டும். எத்தனையோ மொக்கை பதிவுகளில் நடுவில் என் கல்லூரி கவிதை (?) ஒரு பக்கம் இருந்து விட்டு போகட்டும்.

***

மௌனம் என்பது மொழி
சொன்ன கவிஞர்கள் நூறு உண்டு !
அது என்னைக்ம்கொள்ளும் ஆயுதம்
கண்டேன் உன்னிடத்தில் இன்று

ஒரு பெண் போனால் இன்னொரு பெண்
என்று இது வரை நான் இருந்தேன்
உன்னை பார்த்த பின்பு
மற்ற பெண்கள் பொய் என்று உரைத்தேன் !

பனித்துளிப் போல எந்தன் காதல்
பகலில் என்றும் தெரிவதில்லை
இரவில் மட்டும் கனவில்
எந்தன் காதல் தினம் தொல்லை !

**

பெண்கள் மனம் தேடுவது
காதலா ? நட்பா ?
ஆண்கள் மனமோ அறிவதில்லை.

நட்பை தேடினால் காதலை விரும்பும்
காதலை தேடினால் நட்பை விரும்பும்
புதிர் போடும் புதிர் நீங்கள் !

விலகிச் சென்றால் விரும்பி வரும்
விரும்பி சென்றால் விலகிப் போகும்
புரியாத வினாத்தாள் நீங்கள் !

விடை அறிந்த வினாக்களே !
எங்களை விரும்ப வைக்கும்
இயந்திரம் நீங்கள் !

உங்கள் மனம் தேவை என்ன ?
தெளிவாய் சொல்லிவிடுங்கள் !
ஆண்கள் தேடும் தேடலுக்கு
நீங்கள் கொஞ்சம் ஓய்வுக் கொடுங்கள் !

பெண்கள் அறிய நினைத்த அறிஞர்கள்
தலை நரைத்தே மடிந்தான் !
வாழுக்கின்ற இளைஞர்கள் நாங்களோ !
மடிவதற்காகவே பெண்களை தேடுகின்றான் !

2 comments:

நம்பள்கி said...

த.ம. 1

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லது...

ரசிக்கும்படி இருக்கிறது...

LinkWithin

Related Posts with Thumbnails