வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, October 8, 2012

உலக சினிமா - ஓர் பார்வை

ஏழைகளுக்காக பணக்காரர்களால் தயாரிக்கப்படும் ஒரே பொருள் ‘சினிமா’. சினிமாவில் மட்டும் தான் ஏழை பணக்காரனை முந்தி செல்கிறான். காட்சிப்படுத்தும் போதாகட்டும், வசனம் எழுதும் போதாகட்டும், பாடல் இசை அமைக்கும் போதாகட்டும் அடித்தட்டு ரசிகர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.


 பணக்காரர்களில் ஆதரவு இல்லை என்றாலும் அடித்தட்டு ரசிகர்களின் விசில் சத்தம் போது ஒரு படத்தை வியாபார ரிதியாக வெற்றி பெற வைப்பதற்கு. ஆனால், இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள படங்கள் வியாபாரத்திற்காக எடுக்கப்படவில்லை. தங்கள் நாட்டில் நடந்ததை பதிவு செய்யவும், வரலாறு நிகழ்வுகளை நினைவு கூறவும், தனி மனித உணர்வுகளை கொள்ளப்படுவதையும் எந்த ஒழிவு மறைவும் இன்றி காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்கள்.

இதில் வரும் பத்தொன்பது படங்களையும் கண்டிப்பாக மூன்று, நான்கு பக்கத்தில் அடக்கி விடமுடியாது. ஒவ்வொரு படங்களை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு தனி புத்தகமே எழுதலாம். வானத்தில் இருக்கும் நிலவை கண்ணாடியில் பிடித்து நிலவை ரசிக்கும் குழந்தையின் முயற்சி தான் இந்த புத்தகம்.

’கல்வெட்டு பேசுகிறது’ மாத இதழில் ‘உலக சினிமா’ கட்டுரைகளுக்கு தனி இடம் ஒதுக்கி கொடுத்த இதழின் ஆசிரியர் சொர்ணபாரதி அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். தொடர் வந்துக் கொண்டு இருக்கும் போதே புத்தகம் போட சம்மதித்த கௌதம் பதிப்பகத்தார் சந்திரசேகர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இந்த புத்தகம், உலக சினிமாவுக்கான அறிமுகம் மட்டுமே. உண்மையான அனுபவத்தை படம் பார்த்து உணருங்கள்.

 அன்புடன்,
குகன்

**

விரைவில் வெளிவர இருக்கும் "உலக சினிமா - ஓர் பார்வை" நூலுக்கு, நான் எழுதிய என்னுரை.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அறிமுகத்திற்கு நன்றி சார்...

LinkWithin

Related Posts with Thumbnails