வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, December 20, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - 6

நான் இப்படி சொன்னதும் அம்மா கண்கள் சிவந்தது. இதுவரை அவரை எதிர்த்து எதையும் செய்ய வேண்டும் என்று நினைத்ததில்லை. பி.ஏ படிப்பு வேண்டாம் என்று சொன்ன போது கூட மாமாவுக்காக படிக்க சம்மதித்தேன். இப்போது அம்மா 'வேண்டாம்' என்று சொன்ன பெண்ணை போட்டோ கூட பார்க்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறேன்.

 " என்னடா...! ராசியில்லாத பொண்ணு இந்த குடும்பத்துக்கு மருமகளா வரணுமா....?" என்று ரௌத்திர குரலில் கத்தினார்.

" ராசி எல்லாம் ஒண்ணும் கிடையாது. எல்லாம் நம்ப மனசு தான். அது மட்டுமில்ல ! மாமா இந்த பொண்ணு எனக்கு பொருத்தமா இருக்கும்னு வேற சொல்லியிருக்காரு...." என்று சொல்லி இழுத்த போது அம்மா முகம் மாறியிருந்தது. என் வீடு ஒரு நிமிடத்தில் நிசப்தமாக இருந்தது.

"அவரோட கடைசி ஆசை. இது கூட நான் நிறை வேத்தலைன்னா. நாம மனுஷங்களே இல்லமா...." என்றேன்.

மாமாவின் கடைசி ஆசை என்றுவுடன் அம்மா பதில் எதுவும் சொல்லவில்லை. அதே சமயம் அந்த ‘ராசியில்லாதவள்’ என்ற எண்ணம் அவர் மனதில் அழமாய் பதிந்து விட்டது.

மாணிக்கம் மாமா அந்த குடும்பம் சொல்லி கொள்ளும் படி வசதி இல்லை என்றும், சீர் வரிசை எல்லாம் பெரிதாக செய்ய முடியாது என்று எல்லாம் சொன்னார். இதுஎல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. என் மனதில் இருந்த ஒரு நிபந்தனை மட்டும் சொன்னேன். அதற்கு பெண் வீட்டார்கள் சம்மதித்தால், உடனே திருமணம் என்றேன்.

என் திருமணம் தாலியில்லாமல் 'சுய மரியாதை' திருமணமாக இருக்க வேண்டும்.

அம்மா, மாணிக்கம் மாமா இதற்கு மறுப்பு தெரிவித்தும் என் எண்ணத்தில் உறுதியாக இருந்தேன். என் திருமணத்தில் தாலி, சடங்கு எதுவும் இருக்க கூடாது.

" உங்க மாமா போனதும் அப்புறம் எல்லாம் உன் இஷ்டப்படி செய்யுற" என்று சொல்லி கோபமாக அறைக்குள் சென்றார். மாணிக்கம் மாமா எதுவும் பேசமால் பெண் வீட்டார்களிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக சொல்லி சென்றார்.

இரண்டு நாள் கலித்து மாணிக்கம் மாமா வீட்டுக்கு வந்து, பெண் வீட்டில் 'சுய மரியாதை' திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாக கூறினார்.

"என்னது தாலியில்லாத கல்யாணத்துக்கு சரி சொல்லுறாங்களா... என்ன குடும்பம் இது !" என்று முகத்தை சுளித்து கொண்டு அம்மா கேட்டார்.

" அங்க பொம்பளைங்க யாரும் இல்ல. பொண்ணுக்கு அப்பா மட்டும் தான். அவரும் தி.க இருக்குறவரு. சுய மரியாதை கல்யாணம்னு சொன்னவுடனே அவருக்கு சந்தோஷம். மாப்பிளைய பார்த்தே ஆகனும் துடிச்சாரு...." என்று பெண் வீட்டில் நடந்ததை ஒவ்வொன்றாக மாணிக்கம் மாமா சொன்னார்.

" தாலிக்காக ஒவ்வொரு பொண்ணும் விரதம் இருக்காங்க. நீங்க எல்லாம் தாலியில்லாம கல்யாணம் பண்ணுறத சொல்லுறீங்க..." என்ற அம்மா கோபமாக கேட்டார்.

மாணிக்கம் மாமா எதுவும் பேசவில்லை. உள்ளே இருந்த வெளியே வந்து, " யாரும் தாலிக்காக விரதம் இருக்குறது இல்ல. புருஷனுக்காக தான் விரதம் இருக்காங்க. பொண்ணுங்க விரதம் இருக்குறது புருஷன் இருந்தா போதும். தாலி தேவையில்ல...." என்றேன். என் நாத்திக வாதத்தை கேட்டவுடன் அம்மாவுக்கு கோபம் தலைக்கேறியது. மாணிக்கம் மாமா முன்பு என்னை திட்ட அம்மாவுக்கு மனம் வரவில்லை.

 "எப்படியோ செஞ்சிட்டு போங்க !!" என்றப்படி அம்மா உள்ளே சென்றார். எப்படியோ நான் நினைத்தது போல் எந்த பிரச்சனையில்லாமல் 'சுய மரியாதை' நடக்க பெண் வீட்டார் சம்மதித்துவிட்டனர்.

 என் திருமணத்தை பாலசுந்தரம் ஐயா தான் நடத்தி வைக்க வேண்டும். அவர் தான் என் மனதில் 'பகுத்தறிவு' பற்றிய விதையை மனதில் போட்டார்.’ பெரியா’ர் சொற்பொழிவை கேட்க வைத்து முழு பகுத்தறிவாதியாக என்னை மாற்றினார். எனக்கு அவர் திருமணம் நடத்தி வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.

 நான் கும்பகோணத்திற்கு சென்று என் திருமணத்தை பற்றி சொன்னேன். 'சுய மரியாதை' திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என்று சொன்னவுடன் சந்தோஷப்பட்டார். நடத்தி வைக்கவும் சம்மதித்தார்.

எங்கள் வீட்டில் நிச்சயதார்த்தம், சீர்வரிசை, அர்ச்சகர், அக்னி குண்டம் என்று எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க 'சுய மரியாதை'யுடன் நடக்கும் முதல் திருமணம் என்னுடையது தான். எனக்கு மனைவியாக வர போகிறவளை திருமணத்தன்று தான் பார்த்தேன். நல்ல அழகு. அவள் கண்களில் கணிவும், பணிவும் நன்றாக தெரிந்தது. ரம்யாவிடம் இப்படி ஒரு பார்வை இருந்ததா என்ற சந்தேகம். இப்போழுது அவளை பற்றிய நினைப்பு எதற்கு ? இனி என் வாழ்நாள் முழுக்க பயணம் செய்ய போகிறவள் இவள் தான்.... இந்த 'சிவகாமி' என்ற என் புது தேவதை.

பாலசுந்தரம் ஐயா திருமண பத்திரம் படித்து முடித்ததும், நானும், சிவகாமி 'ஒன்றாய் வாழ்வதாக' உறுதி மொழி எடுத்து திருமண பத்திரத்தில் கையெழுத்து போட்டோம். என் சுயமரியாதை திருமணத்திற்கு நான் எதிர்பார்த்தது போலவே, எங்கள் வீட்டில் இருந்து சொந்தங்கள் பலர் வரவில்லை. நண்பர்கள் தான் அதிகப் பேர் வந்திருந்தார்கள். என் மரியாதை இழந்து சொந்தங்களை வரவழைப்பதை விட, சுயமரியாதையோடு இருப்பது மேல் என்ற எண்ணம் வழுவாக இருந்தது.

எங்கள் திருமணம் முடிந்ததும் முதலில் அம்மா காலில் தான் விழுந்தேன். தான் விதவை என்று முதலில் ஒதுங்கிய அம்மா, பிறகு எங்களை ஆசிர்வதித்தார். என் மாமானார் என்னை பார்த்து பெருமை பட்டுக் கொண்டார். தங்கள் மகள் திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததை நினைத்து பூரிப்படைந்தார்.

 என்னதான் 'சுய மரியாதை' திருமணம் செய்துக் கொண்டாலும், தன் மருமகளுக்கு ஆரத்தி எடுத்து தான் என் அம்மா வரவேற்றார். சாமிப்படத்துக்கு பூ போட்டு விளக்கேற்ற சொன்னார். என் மனைவிக்கும் கடவுள் பக்தி அதிகம் என்று நினைக்கிறேன். அம்மா சொல்ல சொல்ல மறு பேச்சு பேசாமல் முன்பே பழகியவள் போல் எல்லா வேலைகளை செய்தாள். அவள் தந்தை தான் பகுத்தறிவாளர். ‘அவளில்லை’ என்பதை பார்த்துமே புரிந்து கொண்டேன்.

முதல் இரவு எங்கள் வீட்டுலே இருக்கட்டும் என்று மாமனாரிடம் முன்பே சொல்லியிருந்ததால், எங்கள் வீட்டு படுக்கையறை தேவையான அழங்காரம் செய்து இருந்தனர். என் திருமணத்து வந்த பரூக், ஜோசப் தம்பதியர்களாக வந்திருந்தனர். அவர்களிடம் பேசி கொண்டு இருந்தேன். இன்று இரவே அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர்களை வழி அனுப்பி விட்டு வீட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தேன். எனக்கு முன்பே என் மனைவி அங்கு இருந்தாள். நல்ல நேரம் முடிவதற்குள் அறைக்குள் போக வேண்டும் என்பது அம்மாவின் கட்டளையாம்.

 கொஞ்சம் பதட்டமாகவே அவள் காணப்பட்டாள். நானும் பதட்டமாக தான் இருந்தேன். ஒரு தலை காதல் தவிர வேறு எந்த அனுபவமும் இல்லை. என்ன பேசுவது, எதில் இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. முதலில் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

 "ம்ம்.. சிவகாமி ! என்ன பயமா இருக்கா...." என்றேன்.

 " அப்படியில்ல...! உங்களுக்கு.... " என்று கிண்டலாக கேட்டாள்.

இவள் அமைதியான பெண்ணா ? .... சந்தர்ப்பம் கிடைத்தால் கேலியும், கிண்டலும் செய்யும் பெண்ணா ? என்று என் மனதில் கேட்டுக் கொண்டேன்.

 "கொஞ்சம் பயமா தான் இருக்கு...." என்றேன்.

பயம் இருந்தாலும் அதை தைரியமாக சொல்லும் மனம் பக்குவம் என்னிடம் உண்டு. என் பயத்தை தைரியமாகவே சொன்னேன். முதலில் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு தலை காதலை சொன்னேன். முதலிரவு அன்று அவள் அழகை பற்றி பேசாமல் என்னை பற்றி உண்மைகளை அவள் தெரிந்து கொண்டால் வாழ்க்கை சுமுகமாக போகும். இந்த இரவு கசப்பாக இருந்தாலும் வர போகும் எல்லா இரவுகளும் இனிக்கும்.

என் ஒரு தலை காதல் கதை கேட்டவுடன் அவள் முகம் வாடிவிட்டது. அவளை பிரிந்து வந்த காரணத்தை சொன்னாலும், நாம் தான் கணவர் மனதில் முதலில் குடி புகுந்தோம் என்ற விருப்பம் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும். அது பொய்யாகி போனது அவள் முகத்தில் தெரிந்தது.

நான் அவளை பார்த்து, " கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய ஒரு தலை காதல் இருக்கலாம். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தலை காதல் இருக்க கூடாது. கணவன், மனைவி இரண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் விரும்பினா தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் " என்றேன்.

அறை முழுக்க நிசப்தமாக இருந்தது. முதலிரவு அறைப் போல் இல்லை. இன்று தான் முதன் முதலில் இருவரும் சந்தித்தோம். இன்றே ‘உறவு’ வைத்து கொள்ள முடியும் என்பது எனக்கு அபத்தமாக இருந்தது. அதே சமயம் முதலிரவில் மனைவி ஒன்றும் செய்யாமல் இருக்க முடியவில்லை. அவளை அணைத்து முத்தமிட்டு படுத்துக் கொண்டேன். முதல் முறையாக வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கேன். அந்த உணர்ச்சியிலே அவளிடம் எல்லை தாண்ட வேண்டும் போல் இருந்தது. என் ஒரு தலை காதலில் அதிர்ச்சியில் இருப்பவளை என்னால் கட்டாயப்படுத்த முடியவில்லை.

இரண்டு நாள் சென்றது. சிவகாமி கோயிலுக்கு போக வேண்டும் என்றாள். நம்பிக்கையில்லாத இடத்துக்கு சென்று என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மறுத்தேன். அவளுடைய அப்பாவும் என்னை போல் நாத்திகன் என்பதால் நிச்சயம் அவரோடு அவள் கோயிலுக்கு சென்றியிருக்க மாட்டாள். திருமணம் ஆன புதிதில் கணவனோடு கோயிலுக்கு போக வேண்டும் என்று எல்லா பெண்களுக்கும் ஆசையிருக்கும். முதலிரவில் அவளை வாடியது போல் மீண்டும் வாடி நின்றாள்.

வாடிய அவள் முகத்தை பார்க்க எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு நிமிடம் யோசித்தேன். கோயிலுக்கு வருவதாக சம்மதித்தேன். என் சிவகாமிக்காக....!!! 

என்னை பொருத்தவரை கோயிலில் இருப்பது 'கல்' தான். தன்னை திருடர்களிடம் இருந்து காப்பாற்ற தெரியாத கறுப்பு கல். அவ்வளவு தான். ஆனால், அந்த கல்லை வணங்குவதில் சிவகாமிக்கு எவ்வளவு சந்தோஷம். இதுவரை தன் தோழிகளுடன் தான் கோயிலுக்கு சென்றியிருக்கிறாள். முதல் முறையாக ஒரு ஆண் துணையோடு கோயிலுக்கு வருவதை சொன்னாள். அதுவும் நான் சம்மதிப்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லையாம். அவளை கோயிலுக்கு அழைத்து வந்த சந்தோஷத்தில் என்னிடம் பேசிக் கொண்டே இருந்தாள். நான் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு மாதம் உருண்டோடியது. அவள் மனம் ஒரு நிலையடைந்து எங்களுக்கு சந்தோஷமும், இயல்பான தம்பதியர்கள் போல் நாங்களும் வாழ தொடங்கினோம்.

மாமா இறந்த பிறகு ஹோட்டலை சரியாக பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் முடிவைத்திருந்தோம். என்னால் மீண்டும் ஹோட்டல் வேலை எல்லாம் எடுத்து செய்ய முடியும் என்று தோன்றவில்லை. வழக்கறிஞர் வேலை தான் செய்வதென்று முடிவெடுத்து விட்டேன். ஹோட்டலை பார்க்கும் போதெல்லாம் மாமா சமையல் அறைக்கு செல்வது, கல்லா பெட்டியில் இருந்து பணம் வாங்குவது போல் தெரிந்தது. அங்கு இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் மாமாவை தான் நினைவுப்படுத்தியது.

அம்மாவிடம் ஹோட்டலை விற்று விட்டு சென்னைக்கு போகலாம் என்று சொன்னேன். முதலில் அம்மா சம்மதிக்கவில்லை. நான் கட்டாயப்படுத்திய பிறகு சம்மதித்தார். இவ்வளவு நாள் எங்களை வாழ வைத்த ஹோட்டலை விற்று தருமாறு மாணிக்கம் மாமாவிடம் சொன்னேன். சிதம்பரத்தில் நன்றாக போன ஹோட்டல் என்பதால் இரண்டே நாளில் வாங்குபவரை அழைத்து வந்தார்.

நான் வழக்கறிஞராகி எழுதும் முதல் பத்திரம் எங்கள் ஹோட்டல் விற்பதனை பத்திரம் தான். ஹோட்டலை ஐம்தாயிரத்திற்கு விற்றோம். ஜோசப்பிடம் சென்னையில் ஒரு வீடு வாங்க சொல்லியிருந்தேன். அவனும் சென்னைக்கு ஒதுக்கு புறமான அண்ணா நகரில் ஒரு வீடு விலைக்கு இருப்பதாக சொன்னான். அங்கு சென்று வர மாமாவின் புல்லட் இருப்பதால் ஒதுக்குபுரமாக அந்த வீட்டை வாங்குவதாக ஜோசப்பிடம் கூறினேன். 


ஹோட்டல் விற்ற பணத்தில் சென்னையில் வீடு வாங்கி அங்கே குடிபுகுந்தோம். நானாவது மூன்றாண்டுகள் இங்கே படித்திருக்கேன். ஆனால், அம்மா திருமணமானதில் இருந்து சிதம்பரதை விட்டு வந்த்தில்லை. முதல் முறையாக சிதம்பரத்தை விட்டு வருகிறாள். அதுவும் நிரந்தரமாக வருகிறாள். இவ்வளவு நாள் வாழ்ந்த ஊரை மனமில்லாமல் காலி செய்து வந்தோம். ஆனால், மாமாவின் நினைவுகள் எங்களோடு தான் வந்தது.

அண்ணா நகர் வீட்டில் முதல் அடி வைத்ததும் முதல் இடி சத்தம் கேட்டது. 'பெரியார் இறந்து விட்டார்' என்று தலையில் அடித்து கொண்டு பலர் அழுதனர்.

Tuesday, December 18, 2012

சாதத் ஹசன் மாண்டோவின் நூற்றாண்டு !!!

கடந்த ஞாயிறு (16.12.12) மாலை 4 மணிக்கு, பிரசாத் லேப் கல்லூரி அரங்கில் சாதத் ஹசன் மாண்டோவின் நூற்றாண்டு நினைவையூட்டி அவரது சிறுகதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டது.

இந்திய – பாகிஸ்தான் பிரிவினை முன் பிறந்த படைப்பாளியான மாண்டோ, அரசியல் சூழ்நிலையால் பாகிஸ்தான் நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. பிரிவினை முன்பு 3 முறையும், பிரிவினை பிறகு பாகிஸ்தானில் 3 முறையும் தனது படைப்புக்காக சிறை சென்றுள்ளார்.

பிரிவினைப் போது ஏற்ப்பட்ட வலியும், வேதனைகள் மட்டுமல்லாமல், வன்முறையில் ஈடுப்பட்டவர்களின் குற்றவுணர்வையும் தனது படைப்பின் பிரதிபலித்திருக்கிறார்.

தன்ஷ் ( A String)

குற்றவுணர்வோடு ஒரு மனிதன் குளிப்பதுப் போல் காட்சி தொடங்குகிறது. ஒரு பெண்ணின் அலறல் சத்தமும், அவளை மானபங்கம் படுத்தும் உருவம் வந்து வந்துப் போகிறது. தலைக்கு குளிக்கும் போது அந்த பெண்ணின் வீட்டில் நகைகளை திருடுகிறான். வேறொருவன் அந்த பெண்ணை கற்பழித்து, அவளது சகோதரனை கொலை செய்கிறான். நகையை திருடி செல்லும் போது, நிர்வாணமான பெண்ணின் உடலை பார்த்தும், அவனும் அந்த பெண்ணை புணர்கிறான்.

மீண்டும் அவன் தலைக்கு குளிப்பது போல் காட்சி வருகிறது. திருடிய நகையை தன் மனைவியிடம் கொடுத்து குளிக்க செல்கிறான். இங்கிருந்து முதல் காட்சியோடு படம் தொடர்கிறது. அவன் குளிக்க குளிக்க தண்ணீர் இரத்தமாக மாறுகிறது. தன் முகத்தை எவ்வளவு தெய்த்தும், அவன் மனதில் இருக்கும் குற்றவுணர்வை நீக்கமுடியவில்லை.

அவன் மனைவி திருடிய நகையில் தன்னை அழங்கரித்துக் கொள்கிறாள். அவள் அவனிடம் நெருங்கும் போது, குற்றவுணர்வில் அவளை உதாசினப்படுத்துகிறான். அவள் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு, வேறொரு பெண்ணுடன் இருந்தாய்யா என்று கேட்க அவன் “ஆமாம்” என்கிறான். கோபத்தில் கத்தியால் அவள் தனது கணவனின் கழுத்தை வெட்ட, இறக்கும் தருவாயில் “அவள் இறந்திருந்தாள்” என்று சொல்லி இறக்கிறான்.

 இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போது ஆண்கள் அயுதங்களால் இறந்தார்கள் என்றால், பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டே இறந்தார்கள். எத்தனையாவது நபர் கற்பழிக்கும் போது அந்தப் பெண் இறந்திருப்பால் என்று சொல்ல முடியாத அளவுக்கு மத மும், குரோதமும் பலரது தலையில் ஏறி இருந்தது. அப்படி இறந்ததே தெரியாமல் புணர்ந்த ஒருவன், புணர்ந்து முடித்த பிறகு அந்தப் பெண் இறந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் மிருகமான மனதில் கொஞ்சம் மனிதத்தன்மை ஏட்டிப்பார்க்கும் போது குற்றவுணர்வாக மாறுகிறது. அதை இந்த குறும்படத்தில் தெளிவாக காட்டுகிறது.



காரமாட் (The Miracle)

மூட நம்பிக்கைகள் எல்லா மதத்திலும் இருக்கிறது என்பதை உணர்த்தும் குறும்படம்.

1947ல் இந்திய – பாகிஸ்தான் பிரிவினைப் போது ஒரு இஸ்லாமியன் ஒரு இந்து வியாபாரியை கொன்று, அவன் கடையில் இரண்டு மூட்டை சக்கரையை திருடி தனது வீட்டுக்கு கொண்டு வருகிறான். காவலர்கள் திருடிய பொருளை யார் வீட்டில் இருந்தாலும் அவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்வதை கேட்கிறான். பயத்தில் இரண்டு மூட்டை சக்கரையை கிணற்றில் போட்டு, மறைந்துக் கொள்ள நினைக்கும் போது கினற்றில் விழுந்து இறக்கிறான்.

அடுத்து நாள் குழந்தைகள் தண்ணீரை குடித்து இனிப்பாக இருப்பதை கூறுகிறார்கள். 'அல்லா' இறந்தவனை அனுப்பி கசப்பான தண்ணீரை இனிப்பாக மாற்றினார் இறந்த இஸ்லாமியனை தொழுகிறார்கள்.

பாவிகளை மனிதர்கள் தான் கடவுளாக்குகிறார்கள். கடவுளில்லை. என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.


 Tob Tek Singh ( தோப் டேக் சிங்) 

பாகிஸ்தானின் இருக்கும் மனநல காப்பகத்தில் நடக்கும் கதை. இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று ஒன்றும் புரியாமலையே தங்களை இந்துஸ்தான் என்றும், பாகிஸ்தான் என்றும் பிரித்துக் கொண்டு மனநோயாளிகள் பேசுகிறார்கள். விளையாடும் போது கூட இரண்டு அணிகளும் இதையே பெயராக வைத்து விளையாடுகிறார்கள். அவர்களில் ஒருவனான பிசன் சிங் யாருடனும் ஒட்டாமல் 'தோப் டேக் சிங்' செல்ல வேண்டும் என்கிறான். அவனது மகள் வந்து பார்க்கும் போது கூட தோப் டேக் சிங் செல்ல வேண்டும் என்கிறான்.

இறுதியில் இந்து மற்றும் சீக்கிய மனநோயாளிகளை இந்திய எல்லையில் விட்டுவிட்டு பாகிஸ்தான் காவலாளிகள் செல்கிறார்கள். பிசன் சிங் தோப் டேக் சிங் செல்ல விரும்புவதாக சொல்ல, காவலாளி “அது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. நீ இந்தியாவுக்கு போ !” என்று எல்லையில் விடுகிறார்கள்.

"ஒரு பக்கம் இந்திய முள்வேலி கம்பிகள், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் முள்வேலி கம்பிகள். இரண்டுக்கும் நடுவில் உறங்குகிறது  தோப் டேக் சிங் என்று" சொல்லி, அவன் அங்கையே மயங்கி கீழே விழுகிறான்.

பிரிவினை போது உயிரை விட்டவர்களை விட தனது சுயத்தை இழந்தவர்கள் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குறியது என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.


திற 

சாதத் ஹசன் மாண்டோவின் “Khol do” (Open it) என்ற சிறுகதையை குறும்படமாக எடுத்திருக்கிறார் பிரின்ஸ் அவர்கள்.

குஜராத் மதக்கலவரத்தில் தனது மகள் சகினாவை தேடுகிறார் தந்தை. முகாமில் இருக்கும் சேவாக்காரர்களிடம் உதவி கேட்கிறார். அவர்களும் அந்த பெண்ணை கண்டுபிடித்து முகாமுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அவள் தந்தை இருக்கும் முகாமுக்கு அழைத்து செல்லப்படவில்லை. அந்தப் பெண்ணின் தந்தையிடம் இன்னும் பெண் கிடைக்கவில்லை என்கின்றனர்.

நினைவற்ற ஒரு பெண்ணின் உடல் மருத்துவ முகாமுக்கு வருவதை அந்த தந்தை கேள்விப்பட்டு செல்கிறார். அவள் தனது மகள் ‘சகினா’ என்று பார்த்ததும் அடையாளம் காண்கிறார். மருத்துவர் அந்த தந்தையிடம் “ஜன்னல் கதவை திறங்கள் காற்று வரட்டும்” என்று சொல்ல, மயங்கிய நிலையில் அந்த பெண் காதில் "திற" என்ற வார்த்தை மட்டும் விழுகிறது. அந்த பெண் தனது பெண்ணுருப்பை திறந்து காட்ட செல்கிறாள். கரச் சேவகர்கள் அவளை கற்பழிக்கும் போது ‘திற’ என்று கூறிய வார்த்தைகளோடு சிவப்பாடையில் காட்டியப்படி படம் முடிகிறது.

பூட்டிய மனிதனின் உள்ளத்தை திறப்பது போன்ற கருத்துள்ள படம் என்று நினைத்தால், இறுதிக் காட்சியில் திறக்கப்படும் இடம் நம்மை கண் கலங்க வைக்கிறது. சாதத் ஹசன் மாண்டோ இந்திய - பாகிஸ்தான் பிரிவினை வைத்து எழுதிய கதைக்களனை குஜராத் மதக் கலவரப்பின்னனியில் எடுத்திருக்கிறார் இயக்குனர் பிரின்ஸ்.

காலங்கள் மாறினாலும், பின்னனி மாறினால் மனிதனுக்கு இருக்கும் மிருக குணமும், அதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் வலியும் மாறுவதில்லை என்பதை இந்த குறும்படம் சொல்கிறது.

ராஜாங்கத்தின் முடிவு

ஒரு அறையில் தொலைப்பேசியும், ஒரு மனிதனை வைத்து குறும்படத்தை ஸ்வாரஸ்யமாக எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள். எந்த வேலைக்கும் செல்லாமல், கிடைக்கும் இடத்தில் தங்கக் கூடியவனாக இருக்கும் கதாநாயகன் ரவி ஒரு வாரம் தன் நண்பன் வெளியூருக்கு சென்றுயிருப்பதால் அவன் அலுவலகத்தில் தங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

கற்பனை உலகத்தில் வாழும் ரவி, நடைமுறை வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்கிறான். அப்போது, அந்த அலுவலக தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொள்ள, அவர்கள் இருவருக்குள் நட்பு உருவாகிறது. பல சமயம் ரவி அந்த பெண்ணை வெறுப்பெற்றுவது போல் பேசுகிறான். அந்தப் பெண்ணின் பெயரையோ, எண்ணையோ ரவி கேட்கவில்லை. ஆர்வமில்லாமல் இருந்தவன், அவள் அழைக்காமல் இருக்கும் சமயத்தில் தவிக்கிறான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தவனுக்கு, அந்தப் பெண்ணின் குரல் அவனை மிகவும் பாதித்திருக்கிறது.

ரவியின் நண்பன் தொலைப்பேசியில் ஊர் திரும்புவதாக சொல்ல, அதை கவலையுடன் அந்தப் பெண்ணிடம் கூறுகிறான். அவன் இராஜாங்கம் முடியப்போகிறது என்று கவலையாக சொல்ல, அன்றைய தினம் தன்னை தொடர்புக் கொள்ளும் எண்ணை தருவதாக சொல்கிறாள். இரண்டு நாளுக்கு ஊருக்கு செல்வதாக சொல்லி அழைப்பு தூண்டிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு நாள் கலித்து அந்தப் பெண் தொலைப்பேசியில் அழைக்க, ரவி இன்றோடு தன் ராஜாங்கம் முடிவதாக சொல்லி அழைப்பை தூண்டித்து இறக்கிறான். தொலைப்பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும் போது படம் முடிகிறது.

கற்பனை உலகிற்கும், நிஜ உலகிற்கும் நடுவில் வாழும் மனிதர்களுக்கு சமர்ப்பணம் என்று இந்தப்படத்தை முடித்திருக்கிறார்கள். படத்தின் முடிவில் ரவி பாத்திர இறந்ததற்கு காரணம் காட்டவில்லை என்ற கேள்விக்கு வேண்டுமென்றே சொல்லவில்லை. அந்த பாத்திரம் வாழ்வதற்கான அர்த்தமில்லாதப் போது இறப்பதற்கான காரணம் தேவையற்றதாக இருக்கிறது இயக்குனர் கூறினார்.

இந்த ஐந்து குறும்படங்களை திரையிட்ட அருணுக்கும், தமிழ் ஸ்டுடியோவிற்கும் நன்றிகள் பல....!!

Wednesday, December 12, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 5

உலகத்திலே மிக கஷ்டமான அவஸ்தையான ஒன்று என்னவென்றால் நாம் அதிகம் நேசிப்பவர்களை வெறுப்பது தான். நாம் எந்த அவளவுக்கு ஒருவரை நேகிக்கிறோமோ அவர் நம்மை ஏமாற்றும் போது அந்த அளவிற்கு கோபம், வெறுப்பும் அதிகமாகிவிடுகிறது. அந்த நபரிடம் வெறுப்பை காட்டும் போதெல்லாம் நாம் முன்பு அவர்கள் மீது வைத்திருந்த அன்பு வந்துக் கொள்ளும். இப்படி ஒரு அவஸ்த்தையை தான் நான் அனுபவித்தேன்.

எனக்கு அவள் மீது நம்பிக்கை இல்லாமல் போனது. அவள் தன் தோழிக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறாள். கேவலம் ஒரு புத்தகத்திற்காக திருடியாக மாறுவாள் என்று நினைக்கவில்லை. இதை பற்றி அவளிடம் கேட்கவும் எனக்கு மனமில்லை. முடிந்தவரையில் அவளிடம் பேசாமல் தவிர்ப்பது தான் நல்லது. ஒரு வேளை கோபத்தில் என் மனதில் இருந்த காதலை கூட கொட்டி விட்டால், அதனால் தான் தன் மீது பழி போடுகிறான் என்று விஷயத்தை திருப்பிவிட்டாலும் விடுவாள்.

உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம். ‘பார்ப்பனர்களை நம்பக் கூடாது’ என்ற எண்ணம் மனதில் மேலும் ஆழமாக பதிந்தது. இப்படி சொல்வதால் நான் ஜாதி வெறி பிடித்தவன் என்று நினைக்க தோன்றும். நான் எல்லா மத இனத்தவர்களிடமும் அன்பாக பழக்கூடியவன். என் நண்பர் பரூக், ஜோசப் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். என்னை 'பையா' என்று அழைக்கும் 'பாத்திமா' வேறு மதம். இரண்டு ஆண்டுகளாக 'பாய்' வீட்டில் தான் தங்கி படித்திருக்கிறேன். எல்லா மதத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கும் போது ஏன் பார்ப்பனர்களின் சுயநலவாதிகளாகவே இருக்கின்றனர்.

இரண்டு ஆண்டு படிப்பு முடிந்து மூன்றாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை. இது தான் இறுதி ஆண்டு. இந்த வருடம் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாமாவின் கட்டளை. ரம்யா மீது இருந்த காதல் உயிர்யில்லாமல் போனது. படிப்பு முடித்தபின் கல்யாணத்தை பற்றி யோசிக்கலாம் என்று இருந்து விட்டேன்.

ரம்யா கண்ணில் எதிர்படும் போதெல்லாம் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்று விடுவேன். என் சிரிப்பு முகத்தளவு மட்டுமே தெரிந்தது. அவளிடம் பேச எந்த விருப்பமும் இல்லை. அப்படியே அவள் பேச வந்தாலும் ஒரு வார்த்தையில் பதில் அளித்து விடுவேன். அவளும், லக்ஷ்மியும் சேர்ந்து வந்தால் ‘ஆளுங்கட்சியின் மேலுள்ள வெறுப்பினால் எதிர்கட்சிக்கு ஓட்டுப் போடுவது’ போல் நான் அவளிடம் பேச்சை குறைத்து லக்ஷ்மியிடம் பேசுவேன். இப்படியே தொடர்ந்துக் கொண்டு இருந்ததில் அவளும் என்னிடம் பேச குறைத்துக் கொண்டாள். நாங்கள் இருவரும் அறிமுகமானவர்கள். அவ்வளவு தான். ‘எங்களுக்குள் எதுவும் இல்லை’ என்று எனக்குள் சொல்லி நானே நம்ப தொடங்கினேன். அவளும் அப்படியே நடந்துக் கொண்டாள்.

பல போட்டி, பொறாமை, கோபங்களுக்கு நடுவில் இறுதி ஆண்டு படிப்பை படித்து முடித்தேன். இனி என் வாழ்நாளில் ரம்யாவை சந்திக்க கூடாது என்று தீர்மானமாக இருந்தேன்.

ஜோசப், ஜாஸ்மின் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக கூறினார்கள். அவர்கள் காதலுக்கு வாழ்த்து தெரிவித்து, திருமணத்துக்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன்.

இந்த மூன்று ஆண்டுகளில் பரூக்கின் அம்மா சாப்பாடு என்னால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. பாத்திமாவின் சகோதர பாசத்தையும் அளவிட முடியாது. பரூக் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் பாரதியார் எழுதிய ஒரு வரி ஞாபகம் வரும்.

"இங்கிவினை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்". 

என் வாழ்நாள் முழுக்க இவர்கள் என்னுடனே இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒரே வீட்டில் இரண்டு பேரின் குடும்பமும் வாழ வேண்டும் என்ற ஆசை பிறந்தது. பரூக்கின் அம்மாவிடம் ஆசி பெற்றுக் கொண்டேன். பாத்திமா கண்ணில் நீர் நிரம்ப என்னை வழி அனுப்பி வைத்தாள்.

"பையா! எங்கள மறந்திட மாட்டீங்ளே...."

" நீங்க எப்போது என் கூடவே இருப்பீங்க.... எப்படி என்னால மறக்க முடியும் " கண்ணில் நிறம்ப பதில் சொன்னேன்.

பரூக் என்னை வாரி கட்டி அணைத்துக் கொண்டான். அவன் சிதம்ரத்தை விட்டு செல்லும் போது எனக்கு இந்த அளவுக்கு துயரம் வரவில்லை. ஆனால், இப்போது இந்த குடும்பத்தை விட்டு பிறிவது நினைத்தால் வேதனையில் வெந்து போகின்றேன். பிரிய முடியாமல் பிரியாவிடை பெற்றுக் கொண்டு பஸ் நிலையத்திற்கு சென்றேன்.

" நல்ல சாப்பிடுப்பா. உடம்ப பத்திரமா பார்த்துக்கோ..." என்று பரூக் அம்மாவின் குரலில் நான் பஸ் ஏறும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பரூக் என்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டான். கண்ணில் நீர் நிறம்ப பஸ்ஸில் ஏறி சிதம்பரத்திற்கு சென்றேன்.

மாத விடுமுறைக்கு வந்து கொண்டு இருந்த நான் மீண்டும் நிரந்தரமாக சிதம்பரத்தில் தங்க வந்துவிட்டேன். அதுவும் ஒரு வழக்கறிஞராக !!

பல லட்சிய கனவுகளுடன் என் ஊரில் கால் வைத்தேன். அம்மாவை ராணி போல் வாழ வைக்க வேண்டும். என்னக்காக மாமா வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஹோட்டலை விற்றுவிட்டு அவரை உட்கார வைத்து சோறு போட வேண்டும். இனி அவர் உழைக்கவே கூடாது. ஓய்வு தான் எடுக்க வேண்டும். இப்படி பல ஆசைகளோடு சைக்கிள் ரிக்ஷாவை நோக்கி சென்றேன்.

நான் வீட்டுக்கு செல்ல சைக்கிள் ரிக்ஷா பேசிக் கொண்டு இருக்கும் போது மாணிக்கம் மாமா மருந்து கடையில் மருத்து வாங்கி கொண்டு சென்றார். நீண்ட நாள் பிறகு இன்று தான் அவரை பார்க்கிறேன். சென்ற விடுமுறை கூட அவரை நான் பார்க்கவில்லை. வெளியூர் போய்யிருந்ததாக மாமா சொல்லியிருந்தார்.

" என்ன மாணிக்கம் மாமா ! எப்படி இருக்கீங்க.... போனவாட்டி கூட உங்கள பார்க்க முடியல..." என்று மலர்ந்த முகத்தோடு பேசினேன்.

அவர் கண்கள் அழுது சிருத்துக் கொண்டது போல் இருந்தது. அவர் உறவினர்களுக்கு உடல் சரியில்லாமல் இருக்கும் என்று நினைத்தேன். கையில் மருந்தெல்லாம் வைத்திருந்தார்.

" இப்ப தான் ஊருல இருந்து வந்தியா...." என்றார்.

 " ஆமா ..."

 " நல்ல வேல. நீ என் கூட வா..." என்று கை பிடித்து அழைத்து சென்றார்.

நான் என் துணி மணியை வீட்டில் வைத்து விட்டு வருகிறேன் என்று சொல்லியும் என்னை விடவில்லை. அவர் என்னை 'நடராஜர் மருத்துவமனை'க்கு அழைத்து சென்றார். ஏன் இப்படி செய்கிறார் என்று புரியவில்லை. எப்போதும் பேசி குழப்புபவர், இப்போது செய்கையால் குழப்பினார். எதாவது சொல்ல போகிறாரா, காட்ட போகிறாரா... எனக்கு குழப்பம் தான் அதிகமானது. ஒரு முறையாவது இவர் தெளிவாக எந்த வேலையும் செய்யமாட்டாரா என்று நினைத்துக் கொண்டேன்.

மருத்துவமனையில் நுழைந்தவுடன் அம்மா கண்ணில் தழும்ப நின்றுக் கொண்டு இருந்தார். என்னை பார்த்ததும் கட்டி பிடித்து அழுதார். அப்பா இறந்த போது எப்படி கட்டி பிடித்து அழுதோரோ அதே போல் இருந்தது. அம்மா எதுவும் பேசமால் அழுதுக் கொண்டே இருந்தார்.

" உங்கள் மாமாவுக்கு மாரடைப்பு. நேத்து ராத்திரி தான் ஆஸ்பத்திரியில சேர்த்தோம்" என்றார். மாணிக்கம் மாமா சொன்னவுடன் திடுக்கிட்டேன்.

அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என்னை தனியாக விட்டு ஓய்ந்து போககிறார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

மாணிக்கம் மாமா என்னை தனியாக அழைத்து சென்று, " நானே உனக்கு தகவல் கொடுக்கனும்னு இருந்தேன். டாக்டர் காப்பத்த முடியாதுனு சொல்லிட்டாரு. அம்மாவுக்கு நீ தான் ஆருதல் சொல்லனும்..." என்றார்.

"ஐயோ...ஐயோ..." என்று புழம்ப வேண்டும் போல் இருந்தது. யாரை உட்கார வைத்து வாழ்நாள் முழுக்க சாப்பாடு போட்டு ராஜா மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேனோ அவர் நிரந்தரமாக படுக்கப்போககிறார் என்று சொன்னால் எனக்கு எப்படி இருக்கும். அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல நான் இருக்கிறேன். எனக்கு ஆறுதல் யார்...?

அப்பா இறந்த பிறகு மாமா தான் எங்களை வாழ வைத்தார். அப்பா இருந்திருந்தால் கூட எங்களை இப்படி கவனித்திருக்க மாட்டார் என்று பல முறை நினைத்திருக்கிறேன். அவர் வாழ்நாள் முழுக்க எங்களுக்கு செய்த உதவியில் திரும்பி செய்ய வாய்ப்பில்லாமல் செய்துவிட்டாரே...!

என் தலை அடித்துக் கொண்டு "ஐயோ...ஐயோ...." என்று அழுதேன். அம்மா மாமாவின் மரணத்தை பற்றி சொன்னதும் பிரஷர் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். டாக்டர் அம்மா உடலை பார்த்து ஒரு நாள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க சொன்னார். மாமாவை பிணமாக பார்க்கும் சக்தி என்னகே இல்லாத போது அம்மாவால் எப்படி பார்க்க முடியும். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மாமாவுக்கு நடக்க வேண்டிய காரியங்களை கவனித்தேன்.

"கடமைய முடிச்சிட்டுச்சு இவரு பாட்டுக்கு போய்ட்டாரே. இவருக்கு அப்படி என்ன அவசரம். அவருக்கு செய்யனும்னு நினைச்சது எல்லாம் எப்போ செய்ய முடியும்" என்று மாணிக்கம் மாமாவிடம் சொல்லி புலம்பினேன்.

மாமாவின் உடலை சாஸ்த்திரப்படி தகனம் செய்ய சில செய்ய சொன்னார்கள். இப்போது எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஆனால், மயக்க நிலையில் அம்மாவுக்கு இது தெரிந்தால் தாங்கிக் கொள்ள மாட்டார். கோபத்தில் என்ன செய்வார் என்று சொல்ல முடியாது. என் கொள்கைக்காக சாஸ்த்திரங்களை மதிக்காமல் தகனம் செய்தால், மாமா இறந்ததை விட பெரிய வலியை அம்மாவுக்கு கொடுப்பது போல் இருக்கும். எனக்காக வாழ்ந்த ஒரு உயிருக்கு என் கொள்கையை விட்டு கொடுப்பதில் எனக்கு பெரிதாக தெரியவில்லை. அப்படி தவறு என்று யார் சொன்னாலும் கவலையில்லை. என் மாமாவை அடக்கம் செய்ய சொன்ன இறுதி சடங்குகளை, சாஸ்த்திரங்களை செய்து அவர் உடலை மயானத்தில் தகனம் செய்தேன்.



என்னைப் போல் திராவிடக் கொள்கை ஏற்றுக் கொண்டவர்கள் இப்படி தான் பல இக்கட்டானா நிலைமை சந்தித்திருப்பார்களா ? அவர்கள் எல்லாம் எப்படி இதில் இருந்து மீண்டு இருப்பார்கள் ? சுற்றத்தின் வற்புருத்தலால் பழைய சாஸ்திரங்களை செய்யும் போது, திராவிட கொள்கை ஏற்றுக் கொண்டவர்கள் எப்படி எல்லாம் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள் ? கடவுளை வணங்குபவர்கள் கடவுள் சோதிப்பதாக சொல்வார்கள். ஆனால், திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சுற்றியிருப்பவர்கள் சோதனை செய்கிறார்கள்.

மாமா படத்திற்கு முன்பு விளக்கேற்றி அழுதப்படி அமர்ந்திருந்தேன். மருத்துவமனையில் இருந்து அம்மா மாமா படத்தை பார்த்து கதறி அழுதார்.

"கடைசி வரைக்கும் அவர் முகத்த பார்க்காம பண்ணிட்டீங்களே...." என்று சொல்லி என் தொடையில் படுத்து அழுதார். என் அம்மாவுக்கு நான் அம்மாவாக இருந்து ஆறுதல் சொன்னேன். இப்போது எனக்கென்று இருக்கும் ஒரே சொந்தம் அம்மா மட்டும் தான்.

மாமா இறந்து ஒரு வாரம் மேலானது. மாணிக்கம் மாமா கையில் ஒரு போட்டோவோடு வீட்டுக்கு வந்தார். அவரை உள்ளே வரவழைத்து உட்கார சொன்னேன். தன் கையில் இருக்கும் போட்டோவை அம்மாவிடம் கொடுத்தார்.

" இந்த பொண்ணு தான் ராமா சந்திருவுக்கு பொருத்தமா இருக்கும்னு சொன்னான். சம்மந்தம் பேசுறதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு...." என்றார்.

" வேண்டாம் அண்ணே. வேற பொண்ணு பாருங்க. இந்த பொண்ண பார்த்த நேரம். என் அண்ணனே என்ன விட்டு போய்ட்டார்" என்று சொல்லி தன் கையில் இருந்த போட்டோவை மாணிக்கம் மாமாவிடம் கொடுத்தார்.

எனக்கு ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது. அம்மா, மாமா எனக்கு எது செய்தாலும் நன்மைக்காக தான் செய்வார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கை அவர்கள் மீது வைத்திருக்கிறேன். ஆனால், இப்போது இது பேசுவது தவறாக கூட இருக்கலாம். சொல்வது சரி என்று என் மனதில் பட்டது.

" மாணிக்கம் மாமா ! அந்த பொண்ணே கல்யாணம் பண்ணிக்கிறேன். பேசி முடிச்சிடுங்க " என்றேன்.

Wednesday, December 5, 2012

தமிழனும் இந்தியனே ! - எதிர்வினை



அன்பிற்குரிய குகனுக்கு,

என் உடல் நிலை சற்று சரியில்லாததால் நிகழ்ச்சிக்கு வர இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உணர்ச்சிகளின் வெளிபாடு கவிதையாகிறது. பீரிட்டு கிளம்பும் பிரவாகப் பெருக்கை ஒரு வடிவத்துக்குள் அமைப்பது கவிதை. இவ்வுல்கில் எத்தனையோ தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கலாம். அதன் பாதிப்பு கவிதையாகக் வெடிக்கலாம். பாரதி எப்படியெல்லாம் பாடியுள்ளான். பூனைக்குட்டியிலிருந்து பூகோலப்படத்தில் காணப்படும் நாடுகளை எல்லாம் தொட்டுவிட்டான். வசன கவிதைக்கு வழிகோலியவனும வந்தான். வாழையடி வாழையாக வரும் கவிஞர் கூட்டம் வரவேற்ப்பிற்க்குறியதே !

"தமிழனும் இந்தியனே! " என்னும் கனியன்செல்வராஜின் நூலை நாகரத்னா பதிப்பகம் வேளியிட்டுள்ளது. அட்டையைப் பார்த்தால் வலைஞர்களின் கவலையைக் கண்முன் நிறுத்தும் கருத்தைக் கொண்ட நூலோ அல்லது உழைப்பாளிகளின் அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் நூலோ என எண்ணத்தோன்றுகிறது.

64 பக்கங்களில் 29 கவிதைகள் இடம் பெற்றுள்ளன . பெயருக்கேற்றபடி முதல் கவிதை நன்றாக உள்ளது. "நீயும் கடவுளாகலாம்" நல்ல சிந்தனை. "தொடரும் பாவத்தின் நீட்சிகள்" என்ற கவிதையின் கடைசி வரிகள் நன்று.

கண்ணகி சிலைக்குப்பின்னாலேயே ஏதேதோ நடக்கும் போது "காந்திசிலைக்குப்பின் நடப்பதற்க்கென்ன? தமக்கையின் துயரம் தம்பிமூலம் பெற்றோர்க்குத் தெரிய வேண்டாம் எண்ணும் தவிப்பை விழி பேசியவார்த்தைகளில் உணரமுடிகிறது. அன்பான மனைவியின் மடிமீது தலைவைத்துப் படுத்தலே அனைத்துக் கவலைகளையும் மறந்து நிம்மதியாக தூங்களாம். புனர்ந்தாக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆசிரியரின் இரண்டாவது ஆவது கவிதை நூல் என அறிகிறேன்.

எளிய தமிழ் சொற்கள் ஏராளமாய்க் கொட்டிக்கிடக்கையில் ஆங்கிலச் சொற்களை நாடுவது தேவையில்லை. "மொழியே நம்முடைய அடையாளம்" என்று பாடலாசிரியர் யுகபாரதி அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சொல்லப்படும் பொருள் தெளிவாகவும் எளிதில் விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆசிரியரின் முயற்சியையும் ஆர்வத்தையும் பாரட்டுகிறேன்.

 நாகரத்னா பதிப்பகம் மக்களுக்குப் பயன்படும் தரமான நூல்களை எப்போதும் போல் தொடர்ந்து வெளியிட வாழ்த்துகிறேன். 

அரிமா இளங்கண்ணன் 
 வழக்கறிஞர் 
16/11/12

Tuesday, December 4, 2012

அந்த மூன்று பெண்கள் (2) - அத்தியாயம் - 4

ஆறு மாதம் பிறகு மீண்டும் அந்த மூன்று பெண்கள் நாவல் தொடர்கிறது....!!!
**
"அந்த மூன்று பெண்கள்" நாவலை முழுவதும் வாசிக்க

'கடவுள் இல்லை' என்று யாரும் யாரையும் ஏமாற்றுவதில்லை. 'கடவுள் உண்டு' என்று சொல்பவர்கள் தான் ஒருவனை ஒருவன் ஏமாற்றிக் கொள்கிறான். கடவுள் இல்லை என்று சொல்பவன் தன் கருத்தை மற்றவர்கள் மீது தினிப்பதில்லை. பிரச்சாரம் மற்றுமே செய்கிறான். ஆனால், 'கடவுள் உண்டு' என்று சொல்பவர்கள் கடவுளை வணங்க கட்டாயப்படுத்துகிறார்கள். கடவுளை வணங்கவில்லை என்று 'சாமி கண்ண குத்தும்' என்று சிறுவயதிலே பயமுறுத்துகிறார்கள்.

தெளிவான மனதோடு இரண்டாம் ஆண்டு சட்ட கல்லூரி வகுப்பில் எடுத்து வைத்தேன். முடிவு எடுத்து விட்டேன். 'கடவுளை வணங்க போவதில்லை', 'கோயிலுக்கு செல்ல போவதில்லை' இது தான் என் முடிவு. நான் ஒரு முழுமையான நாத்திகனாக மாறிவிட்டேன் என்று என்னால் உணர முடிந்தது.

வகுப்புக்குள் நுழைந்தவுடன் ரம்யா, லக்ஷ்மி தான் என் கண்ணில் பட்டார். இருவரையும் பார்த்து சிரித்து விட்டு என் இடத்திற்கு சென்று அமர்ந்தேன். ஜோசப், ஜாஸ்மின் வகுப்பு தொடங்கும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு உள்ளே வந்தனர். வகுப்பில் பாடத்தை கவனமாக குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தேன். என்னை அறியாமல் சில சமயம் ரம்யாவை பார்த்தேன். விரும்பும் பெண்ணை கொள்கைக்காக வெறுக்கும் ஒரே முட்டாள் நானாக தான் இருப்பேன் என்று நினைத்துக் கொண்டேன்.

பார்ப்பனர்கள் எல்லாம் இப்படி என்று முடிவுக்கு வந்த பிறகு ரம்யா மட்டும் விதிவிளக்காக எப்படி இருக்க முடியும். இனி ரம்யாவோடு தொடர்ந்து பேசலாமா ? வேண்டாமா ? என் மனதில் பட்டி மன்றமே நடத்தினேன். தீர்ப்பு கிடைக்கும் வரை அவளோடு பேசலாம் என்று தீர்ப்பை ஏற்றுக் கொண்டேன்.

வகுப்பு நடக்கும் போது ரம்யா என்னை திரும்பி திரும்பி பார்த்தாள். ஒரு மாதம் கலித்து என்னை பார்த்த ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு என் மீது காதல் வந்திருக்குமோ என்ற ஆசையும் மனதில் இருந்தது. கொள்கைக்கும், காதலுக்கும் நடுவில் போராட்டமே நடத்தினேன்.

வகுப்பு முடிந்ததும் ரம்யாவே என்னிடம், ' சந்திரு ! எப்படி இருக்க...? லீவ் எல்லாம் எப்படி போச்சு...? " என்று என்னை பற்றி விசாரித்தாள்.

" நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க... லீவ்ல என்ன பண்ண ? ".

" நான் புதுசா என்ன பண்ண போறேன். சாண்டில்யன் எழுதின 'கடல் புறா' புஸ்தகம் படிச்சேன். அவ்வளவு தான்." என்றாள்.

அவளாக பேச தொடங்கட்டும். ஒவ்வொரு முறையும் நான் ஒரு கேள்வி கேட்பதும், அதற்கு அவள் பதில் சொல்வதுமாக தான் எங்கள் சந்திப்பு இருந்தது. முதல் முறையாக அவள் என்னிடம் கேள்வி கேட்டுயிருக்கிறான். இது அப்படியே தொடர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

" ஆமா, லீவ்ல என்ன பண்ண...?" என்று கேட்டாள்.

"ரொம்ப நாள் கலிச்சு அம்மா கையால சாப்பிட்டேன். ஃபிரண்டோட கும்பகோணம் போனேன். அங்க 'பெரியார் பார்த்தேன். அவர் பேசுனது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..." என்று அவளிடம் சொன்னேன். வேண்டுமென்றே பெரியாரை பற்றின பேச்சை அவள் முன் எடுத்தேன்.

திராவிட கொள்கையை பற்றி அவளுடைய எண்ணம் என்னவென்று தெரிந்துக் கொள்ள ஆசையாக இருந்தது.

"என்ன பெரியார் பேச்ச போய் நல்லா இருக்குனு சொல்லுற..." என்று முகத்தை சுலித்துக் கொண்டு கேட்டாள்.

‘பெரியார் பேச்சை நன்றாக இல்லை’ என்றால் யார் பேச்சை நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியும். அவர் பேச்சை கேட்க எத்தனை பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் பேச்சை கேட்டது என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். அவள் இப்படி சொன்னவுடன் எனக்கு கோபம் தலைக்கேறியது.

" அவர் இல்லனா பொண்ணுங்க படிப்பப்பத்தி நினைச்சு கூட பார்த்திருக்க முடியாது. " என்றேன்.

"கடவுள் இல்லனு சொல்லுறவருக்கு வக்காளத்து வாங்குற..." என்று இழுத்து எதோ சொல்ல வந்தாள். அவள் சொல்வதை முடிக்க விடாமல், நான் " நா இப்ப இருந்தே வக்கில். அதான் நல்லவங்களுக்கு வக்காளத்து வாங்குறேன்" என்றேன்.

அவள் வாதத்தை தொடர விரும்பவில்லை. என்னிடம் பேசாமல் சென்று விட்டாள். இரண்டாம் ஆண்டு, முதல் நாளே இப்படியானதும் கொஞ்சம் சூடாக தான் இருந்தது. இருந்தாலும், ‘பெரியார்’ மீது எந்த அளவுக்கு எனக்கு பற்று வந்திருக்கிறது என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

பரூக் வீட்டில் கல்யாண வேலை எல்லாம் பரபரப்பாக நடந்தது. மணபெண் பாத்திமா வாணியம்பாடி ஊரை சேர்ந்தவள். மணபெண் வீட்டார்கள் எல்லாம் சென்னைக்கு வரவழைத்து 'நிக்கா' நடத்தினர். பரூக் புது மாப்பிள்ளையாகி விட்டான். இதற்கு மேல் அவன் வீட்டில் நான் தங்கினால் புது தம்பதியர்களுக்கு சங்கடமாக இருக்கும்.

நான் செய்த உதவிக்கு பரூக் என்னை அவன் வீட்டில் தங்க வைத்தான். அதே நன்றி அவன் மனைவியிடம் நான் எதிர் பார்ப்பது நியாயமில்லை. முன்பே ஜோசப்பிடம் ஒரு வீடு பார்க்க சொல்லியிருந்தேன். அவனும் எனக்கு ஒரு வீடு பார்த்து வைத்திருப்பதாக சொன்னான்.

'நிக்கா' முடிந்த கையோடு அவனிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வான் என்பதால் நான் செல்வதை பற்றி எதுவும் அவனிடம் சொல்லவில்லை. நான் அவன் வீட்டில் இருந்தது பெண் வீட்டாரை கவனித்துக் கொள்ள உதவியாக இருந்தது. நிக்கா முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. மணபெண் பாத்திமாவின் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லாம் வாணியம்பாடிக்கு சென்றனர்.

" பரூக் ! என் காலேஜ் பிரண்ட் ஜோசப் எனக்கு ஒரு தனி ரூம் பார்த்திருக்கான். நான் அங்க போய் தங்கிடலாம் இருக்கேன்..." என்றேன்.

அவன் அம்மா ஆயிஷா என்னை புரியாமல் பார்த்தார். " என்னடா ஆச்சு...! நிக்காவுல யாராவது உன்ன தப்பா பேசுனாங்களா....இல்ல உன்ன சரியா நடத்தலையா...." என்றான்.

"ச்சச்சே.... இது நம்ம வீட்டு கல்யாணம். என்ன யார் கவனிக்கனும். நான் எல்லாரையும் கவனிச்சேன்." என்றேன்.

"அப்புறம் எதுக்கு என்ன விட்டு தனியா போய் தங்குறேனு சொல்லுற...."

"இல்லடா ! உனக்கு கல்யாணமாடிச்சு. உங்களுக்கு தனிமை தேவப்படும். நான் இருந்தா நல்லா இருக்காது. அதான்...." என்று இழுத்தேன்.

அப்போது பரூக்கின் மனைவி பாத்திமா, " பையா ! நீங்க சொல்லுறத பார்த்தா நாங்க தனி குடுத்தனம் போகனும்னு சொல்லுற மாதிரி இருக்கு..." என்றாள். அவள் என்னை 'அண்ணன்' நினைத்தோடு மட்டுமில்லால் 'அண்ணன்' உரிமையில் பேசியதை என்னால் உணர முடிந்தது.

"நா இந்த வீட்டுக்கு வந்தது வாழுறதுக்கு. அவர் கூட இருக்குறவங்கள பிரிக்கிறதுக்கு இல்ல. நீங்க இப்போ போனா என்னால தான் நீங்க வீட்ட விட்டு போணீங்கனு அவரு என் கிட்ட சரியா பேசமாட்டாரு..." என்றாள்.

பரூக், அவனின் அம்மாவை விட அவன் மனைவி பாத்திமாவின் அன்பு கட்டளையில் இருந்து என்னால் தட்டி கலிக்க முடியவில்லை. நான் அவர்களோடு தங்க சம்மதித்தேன். மறு நாள், கல்லூரியில் ஜோசப்பிடம் நான் புது வீட்டுக்கு வரவில்லை என்பதை தெரிவித்தேன். அப்போது தன் புத்தகம் காணோம் என்று ஜாஸ்மின் அங்கும், இங்கும் தேடிக் கொண்டு இருந்தாள். தன் புத்தகத்தை பற்றி லக்ஷ்மி, ரம்யாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். பெண்கள் உட்காரும் ஒவ்வொரு இடமாக தேடி பார்த்தாள்.



" என்ன ஆச்சு ஜாஸ்மின். என்ன தேடுற..." என்று ஜோசப் அவள் தேடுவதை பற்றி கேட்டான்.

" என்.டி.கப்பூர் எழுதுன 'மெர்க்கன்டைள் லா' பூக் வச்சிருந்தேன். காணோம். நாளைக்கு முக்கியமான நோட்ஸ் எடுக்கனும். இப்ப என்ன பண்ணுறதுனு தெரியல்ல..." என்று பதரினாள்.

விலை உயர்ந்த புத்தகம். ஜாஸ்மின் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. பாவம் எந்த இடத்தில் புத்தகம் வைத்தாளோ தெரியவில்லை.

" இதுக்கு போய் ஏன் அழுவுற. என் கிட்டையும் என்.டி.கப்பூர் புக் இருக்கு. தரேன்." என்று அவளை சமாதானம் சொல்லி ஜோசப் அழைத்து சென்றான். அவர்கள் சென்றவுடன் நான் வழக்கம் போல் பஸ் நிலையத்துக்கு சென்றேன். 

அங்கு ரம்யா, லக்ஷ்மி இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தேன். ரம்யாவிடம் இருந்து லக்ஷ்மி ஒரு புத்தகம் வாங்கினாள். அந்த புத்தகம் பார்த்ததும் அதிர்ந்தே விட்டேன்.

 அது ஜாஸ்மின் வைத்திருந்த என்.டி.கப்பூரின் 'மெர்க்கன்டைள் லா' புத்தகம் !!

LinkWithin

Related Posts with Thumbnails