வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, April 26, 2013

அந்த மூன்று பெண்கள் (2) - 8

எம்.ஜி.ஆர் முதல்வரானதை கொண்டாட தெருவோரம் இருந்தவர்கள் எல்லாம் பட்டாசு வெடித்து கொண்டாடினர். எனக்கு நல்லது நடக்கும் போது தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கின்றது என்பது போல் தெரிந்தது. முதல் நாள் பள்ளியில் ரகுவை விட்டேன். முதல் நாள் என்பதால் அரை நாள் தான் பள்ளி வகுப்பு இருந்தது. ஜோசப்பிடம் சொல்லிவிட்டு என் மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.



தன் பள்ளியில் நடந்தை எல்லாம் அம்மாவிடமும், சிவகாமியிடம் சொல்லிக் கொண்டு இருந்தான். அம்மா அவன் பேசும் போதெல்லாம் "உங்க மாமா இப்படி தான் பேசுவாரு" என்று சொல்வார். அம்மா ஒரு முறை கூட அப்பாவை பற்றி சொல்லவேயில்லை. மாமா அந்த அளவிற்கு அப்பாவை மறக்கடித்து குடும்பத்தை பார்த்திருகிறார்.

சீனியர் முத்தையாவிடம் சேர்ந்து ஒரு வருடத்தில் தனி அலுவலகம் வைக்க வேண்டும் என்று நானும் ஜோசப்பும் முடிவு செய்திருந்தோம். ஆனால், நீதிதுறையில் எல்லாம் ஒரே ஆண்டில் எப்படி கற்பது ? நான்கு வருடம் கலித்து இப்போது எங்களுக்கு தனி அலுவகம் வைக்க முடிவு செய்தோம்.

அலுவலத்திற்காக பல இடங்கள் பார்த்தோம். சில இடங்களில் வாடகை அதிகமாக இருந்தது. வாடகை சரியான இடத்தில் 'வழக்கறிஞருக்கு இடமில்லை' என்றனர். நான் என்ன தீண்டதகாதவர்களா தெரியவில்லை. வழக்கறிஞருக்கு இடம் கொடுத்தால் பிரச்சனை தன்னுடன் வைத்துக் கொள்வது போல் ஒரு சிலர் நினைக்கிறார்கள்.

பல அலைச்சலுக்கு பிறகு, எங்களுக்கு எழும்பூர் அருகே இடம் கிடைத்தது. மாத வாடகை ஆற நூறு ரூபாய். இரண்டு நாற்காலி, மேஜை எல்லாம் வைத்து எங்கள் அலுவலகத்தை அமைத்தோம். ஒரு அலமாரியில் எங்களுக்கு தேவையான சட்ட புத்தகங்களையும் அடுக்கி வைத்தோம்.

ஜோசப் கடவுள் நம்பிக்கை இருப்பவன் என்பதால் அவன் நாற்காலிக்கு மேல் சிலுவையில் அறைந்த இயேசு படம் மாட்டினான். எனக்கு நாற்காலிக்கு மேல் பெரியார், அண்ணா படத்தை மாட்டி வைத்தேன். அலுவலகம் அமைத்து விட்டோம். இனி வழக்குகள் தான் வர வேண்டும்.

எங்கள் சீனியரும் வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தன்னிடம் வரும் கட்சிகாரர்களை எல்லாம் எங்களிடம் அனுப்பி அவர் உதவி செய்தார். அதனால், புது அலுவகம் வைத்ததும் சீனியரால் எங்களுக்கு கட்சிக்காரர்கள் வர தொடங்கினர்.

முதல் நட்பு, முதல் காதல், முதல் முத்தம்.... எப்படி இதை எல்லாம் மறக்க முடியாதோ முதல் முதலில் நமக்கு கிடைத்த வேலையும் மறக்க முடியாது. நாங்கள் அலுவலகத்தை ஆரம்பித்து எங்களுக்கு வந்த முதல் வழக்கு 'சொத்து விவகாரம்'.

வழக்கு போட்டவர் என் கட்சிக்காரர் மகாதேவன். அவரின் அப்பா தேவராஜனின் வப்பாட்டியான சுந்தரிக்கு எதிராக வழக்கு. தேவராஜன் இறக்கும் போது எந்த உயிலும் எழுதாததால் சொத்துக்காக மகாதேவனுக்கும். சுந்தரிக்கும் பிரச்சனை. சிவில் வழக்கு. எப்படியும் குறைந்தது பத்து வருடம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், எங்கள் முதல் வழக்கை அவ்வளவு நாள் நீடிக்க எங்களுக்கு விருப்பமில்லை.


சட்டப்படி தேவராஜனின் சொந்துக்களுக்கு என் கட்சிக்காரர் மகாதேவன் தான் வாரிசு. தன் சந்தோஷத்திற்காக வைத்துக் கொண்ட சுந்தரி எக்காரணத்தாலும் வாரிசாக நியமிக்க முடியாது. தேவராஜன் மூலம் சுந்தரிக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை. குறிப்பிட்டு எந்த சொத்தும் சுந்தரி மேல் உயில் எழுதாததால் எல்லா சொத்துகளும் மகாதேவனுக்கு தான் சென்று அடைய வேண்டும். அடையும். அது தான் சட்டம்.

தேவையில்லாமல் பிரதிவாதி சுந்தரி சொத்தில் பங்கு கேட்டு எதிர் வழக்கு போட்டுருப்பது நேரத்தையும், பணத்தையும் விரணயம் செய்வது போல் ஆகும். அவளின் வக்கிலும் வழக்கில் வெற்றி பெறலாம் என்று நம்ப வைத்து அவளிடம் இருந்து அதிக பணம் வாங்குவதிலும், வாய்தா வாங்குவதிலும் தான் கவனமாக இருந்தான். தீர்ப்பு என்று வந்தால் மகாதேவனுக்கு தான் ஆதரவாக இருக்கும் என்று தெரிந்தும் அந்த வக்கில் முடிந்தவரை சுந்தரியிடம் இருந்து பணத்தை கரந்தான்.

நானும், ஜோசப்பும் சுந்தரியிடம் தனியாக மகாதேவனுகாக பேச சென்றோம். அப்போது அவளுடைய வக்கில் எங்களை பேச விடவில்லை. வேறு வழியில்லாமல் அந்த வக்கிலை வைத்தே சுந்தரியிடம் சமாதானம் பேசினோம். அவள் கேட்கவில்லை. வழக்கு கோர்ட் ஹியரிங்க்கு(Hearing) வந்தது.

சுந்தரி மகாதேவனின் அப்பா தேவராஜனை சட்டப்புர்வமாகவோ, சம்பிரதாய முறைப்படியோ திருமணம் செய்யவில்லை. இவர்கள் சேர்ந்து வாழ்ந்ததை சொல்ல இரண்டு சாட்சிகளை எதிர் கட்சி வக்கில் கொண்டு வந்தார். நான் இவர்களை ‘Hearsay evidence’ என்று சொல்லி வாதாடினேன்.

Hearsay evidence என்றால் தனக்கு நேரடியாகச் செய்தி அறியாது, பிறர் கூற அது பற்றிக் கேள்விப்படுதல் ஆகும். சிவில் வழக்குகளில் இது போன்ற சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படாது. எல்லாம் பத்திரத்தில் இருந்தால் தான் நீதிபதி ஏற்றுக் கொள்வார்.

சுந்தரி, தேவராஜன் சேர்ந்து வாழ்ந்ததற்கு குழந்தைகளோ, உறவினர்களோ என்று வேறு சாட்சிகள் இல்லை. எதிர் கட்சி கொண்டு வந்த இரண்டு சாட்சிகளும் பலவீனமானது என்று சொல்லி நீதிபதி வேறு ஆதாரங்களை கேட்டார். வழக்கம் போல் எதிர்கட்சி வக்கில் தனக்கு நேரம் வேண்டும் என்று சொல்லி வாய்தா வாங்கினார்.

எதிர்கட்சி வக்கில் சுந்தரியிடம் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தை பார்த்ததாக ஒரு பொய் சாட்சியை தயார் செய்ய சொன்னார். ஆனால், சுந்தரிக்கு பொய் சாட்சி ஏற்பாடு செய்வதில் கொஞ்சம் பயம் இருந்தது. எதிர் கட்சி வக்கில் 'பொய் சாட்சி இல்லை என்றால் இந்த வழக்கில் வெற்றி பெற முடியாது' என்று கூறிவிட்டார். அப்போது தான் சுந்தரி தன் வழக்கில் பலவீனமாக இருப்பதை உணர்ந்தாள்.

பிரதிவாதி சுந்தரி எங்கள் அலுவலகத்திற்கு வந்து தான் போட்ட வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறினாள். அதற்கு தான் தங்கி இருக்கும் வீட்டை மட்டும் தனக்கு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையும் வைத்தாள். நான் இதை என் கட்சிக்காரர் மகாதேவனிடம் சொன்னேன். முதலில் சுந்தரிக்கு ஒரு பைசா கூட கொடுக்க முடியாது என்று முரண்டு பிடித்தார். நான் மகாதேவனிடம் " உங்க பக்கம் தான் நியாயம் இருக்கு. இருந்தாலும் இந்த கேஸோட தொடர்ந்தா, சொத்த உங்க பேரன் பிள்ளைங்க தான் அனுபவிக்க முடியும். அதனால கொஞ்ச விட்டு கொடுங்க ! " என்றேன்.

நான் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த மகாதேவன் சுந்தரி இருக்கும் வீட்டை மட்டும் அவளுக்கு விட்டு கொடுத்தார். அதற்கு சுந்தரி மற்ற சொத்துக்களில் தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கு சம்மந்தமில்லை என்று எழுதிக் கொடுத்தாள். குறுகிய காலத்தில் நாங்கள் எடுத்த சிவில் வழக்கை வெற்றிகரமாக முடித்தோம். எங்கள் முதல் வெற்றியை சீனியர் முத்தையா அவர்கள் வாழ்த்தினார். மகாதேவனும் நல்ல பீஸ் கொடுத்ததோடு இல்லாமல், தன் வியாபாரத்திற்கு லீகல் அட்வைஸராக எங்களை நியமித்தார்.

முதல் வழக்கு சிவில் வழக்காக இருந்ததால் என்னவோ எங்களுக்கு வந்த பெரும்பாலான வழக்குகள் சிவில் வழக்குகளாகவே இருந்தன.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails