வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 18, 2013

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் – 4: ஜெர்மானியர்கள் நடத்திய யூத இனப்படுகொலை

பாகம் - 1, பாகம் -2, பாகம் -3 

யாரோ ஒரு கும்பல் ஒரு தலைவரை கொல்லப்படுகிறார் என்றால் அந்த குழுவுக்கு எதிராக அந்த தலைவர் செயல்ப்படுகிறார் என்று அர்த்தம். அல்லது அந்த குழுவுக்கு எதிரான கொள்கைக்கு ஆதரவு அளிக்கிறார் என்று அர்த்தம். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, லிங்கன் என்று எல்லா அரசியல் கொலைகளும் இந்த இரண்டு காரணங்களில் அடங்கிவிடும். மூன்றாவது ஒரு காரணம் இருக்கிறது. கொலை முயற்சி வெற்றி பெற்றால் பெரும்பாலும் இந்த காரணங்கள் வெளியே தெரிவதில்லை. ( உதாரணத்திற்கு, சஞ்சய் காந்தி மரணம்). அதே கொலை முயற்சி தோல்வி அடைந்தால் அதற்கான காரணம் வெளியே தெரிய வரும், அப்படி கொலை முயற்சி தோல்வி அடைந்ததில் ஹிட்லருக்கு தன்னை சுற்றி இருப்பவர்கள் புரிய வைத்தது.

ஹிட்லரை கொல்ல நினைத்தது யூதர்களோ, கம்யூனிஸ்டுகளோ, நேச நாட்டு உளவாளிகளோ இல்லை. ஹிட்லருடன் பக்க பலமாக இருந்த ஜெர்மனிய ஜெனரல். அதிஷ்டவசமாக ஹிட்லர் தப்பினாலும், அவருடன் இருக்கும் சில பாதுகாவலகளும், இராணுவ தளபதிகளும் கொல்லப்பட்டார்கள்.

அந்த சம்பவத்துக்கு பிறகு ஹிட்லரின் அழிவை விரும்புபவர்கள் ஏராளமான அதிகாரிகளும் இராணுவ தளபதிகளும் இருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் நிரூபணாமாகியிருக்கிறது. ஆனால், அந்த தளபதிகள் போருக்கு எதிரானவர்கள் என்பதை ஆராய வேண்டும்.

மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுப்பதாக இருந்தால், ஹிட்லரின் தளபதிகள் யூத உயிர்களை கொல்லுவதற்கு பல தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்திருக்க மாட்டார்கள். வதை முகாம்களுக்கு ஹிட்லர் எள் என்றால் எண்ணெய்யாக நின்று இருக்க மாட்டார்கள். ஹிட்லரின் கட்டளைக்கு ஆதரவு தெரிவிக்காமல் போராட்டமோ, கிளர்ச்சியிலோ யாரும் இறங்கவில்லை. ஹிட்லரின் கட்டளையை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும் சேர்த்து தான் யூதர்கள் மேல் செலுத்தினார்கள்.


ஹிட்லர் தவறு செய்யவில்லை, அவர்கள் தளபதிகள் தவறு செய்தார்கள் என்கிறீர்களா ? என்று கேட்கலாம். அப்படி சொல்லவில்லை. ஒரு நல்ல திட்டத்தை அரசு கொண்டு வருவதாக அதை செயல்படுத்த அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிதாக இருக்கும் போது யூத அழிவு திட்டத்தை எப்படி அவ்வளவு கட்சிதமாக நிறைவேற்ற முடிந்தது என்பதை யோசிக்க வேண்டும்.

இன்று, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை எடுத்துக் கொள்வோம். ராஜபக்ஷே என்ற தனி மனிதனை எதிர்த்தா போராட்டம் நடக்கிறது. ராஜபக்ஷே இல்லை என்றால் தமிழர்களுக்கு விடிவுக்காலம் பிறந்துவிடுமா ? பல வருடங்கள் மேல் நடக்கும் ஈழப் போராட்டத்தில் எத்தனையோ அதிபர், பிரதமர்கள் சந்தித்துவிட்டார்கள். யாரும் தமிழர்கள் உயிர்களை மதிக்கவில்லை என்பது தான் உண்மை. தங்கள் நாட்டிலே பல உயிர்கள் இறப்பதை எந்த சிங்கள கட்சியோ, அமைப்போ எதிர்த்து பேசவில்லை. ஆக, சிங்களர்களின் எண்ணத்தை ராஜபக்ஷே பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறார். தமிழர்களின் இனப்படுகொலையில் ‘ராஜபக்ஷே’ என்ற தனிமனிதன் மீது சிங்களர்கள் தப்பித்துவிட முடியாது.

அதேப் போல், யூத இனப்படுகொலையில் ‘ஹிட்லர்’ என்ற தனி மனிதன் மீது ஒட்டு மொத்த பழியையும் போட முடியாது. யூத இனப்படுகொலையை நடத்தியது ஜெர்மனியர்கள்…. ஹிட்லர் என்ற தனிமனிதன் அல்ல.

கொலைவெறி, யூத வன்மம் கொண்ட ஜெர்மனிய இராணுவ தளபதிகள் ஹிட்லரை கொன்று அமைதியா கொண்டு வந்திருப்பார்கள் ? இன்னொரு இராணுவ அதிகாரியை சர்வதிகாரியாக பதவியில் அமர்த்தி நேச நாடுகளோடு உடன்படிக்கை செய்து மேலும் பல கொடுமைகள் செய்திருப்பார்கள்.

ஹிட்லர் மீது இருக்கும் மிக பெரிய பழியே யூத இனப்படுகொலை தான். ஆனால், இந்த பழியை ஒட்டுமொத்த ஜெர்மானியர்கள் சுமக்க வேண்டும், ஹிட்லர் என்ற தனிமனிதனில்லை என்பதை விளக்கியிருக்கிறேன்.

தமிழர்கள் ஒரு பக்கம் இனப்படுகொலையில் இறக்கிறார்கள். பலர் இனப்படுகொலைக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இவன் என்ன காலவதியான யூத இனப்படுகொலைக்கும், அதுவும் ஹிட்லருக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கிறான் என்பதை உங்கள் உள் உணர்வு கேட்பது புரிகிறது. முந்தைய இனப்படுகொலையின் சரியான புரிதல் இல்லாமல் இருந்ததற்கான காரணம் தான், இன்று இனப்படுகொலை உலகமயமாக்கி விட்டது. இன்று, ஒவ்வொரு கண்டத்திலும் இனப்படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. நடந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், இனப்படுகொலைக்காக ஹிட்லர் மட்டும் தான் இதில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

உயிருடன் இருந்து இனப்படுகொலையில் எத்தனையோ பேர் செய்துக் கொண்டு இருக்கிறார்கள். ஐ.நா முதல் கொண்டு பல உலக நாடுகள் அமைதியாக இருக்கிறது. இவர்களை காட்டிலும் ஹிட்லர் நல்லவர் தான்.

**

குறிப்பு :

ஒரு பக்கம் இனப்படுகொலை பற்றி கட்டுரை எழுதுபவன், இன்னொரு பக்கம் யூத இனப்படுகொலை செய்த ஹிட்லருக்கு ஆதரவாக எழுதுகிறான் என்று நீங்கள் என்னை விமர்சிக்கலாம். இனப்படுகொலையை எந்த உருவத்தில் நடந்தாலும் அதை என்னால் ஆதரிக்க முடியாது.

யூத இனப்படுகொலையின் நம்முடைய தவறான புரிதலும், ஹிட்லரையே நல்லவராக்கிவிட்டவர்கள் இன்றைய அரசியல் சூழலில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவே "ஹிட்லரும் நல்லவர் தான்" என்ற தொடரின் நோக்கம். 


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails